என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி முதல் தொடக்கம்
    X

    பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி முதல் தொடக்கம்

    • சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது.
    • பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும்.

    சென்னை:

    சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி - போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது. இந்த பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழையும் ரெயில்வே வாரியம் வழங்கியது.

    இந்த நிலையில், போரூர் - வடபழனி இடையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து கடந்த 11-ந்தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.

    அப்போது, சிக்னல் அமைப்பு, தண்டவாள செயல்திறன், ரெயில் இயக்கம், உறுதித் தன்மை உள்ளிட்டவைகள் பரிசோதிக்கப்பட்டது. இதனால், பூந்தமல்லி - வடபழனி இடையில் மெட்ரோ ரெயிலை இயக்குவதற்கான அனைத்து சோதனை பணிகளையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முழுமையாக முடித்துள்ளது. இதேபோல, போரூர் - வடபழனி இடையே இம்மாத இறுதிக்குள் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி வரையிலான வழித்தடத்தில் வரும் பிப்ரவரி மாதம் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட இருக்கிறது.

    இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொண்டு வந்த சோதனை பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் குறிப்பிட்ட வழித்தடம், பயணிகள் வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பின்னர் அவருடைய ஆய்வுக் குறிப்புகள் ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதைத்தொடர்ந்து, பூந்தமல்லி - வடபழனி இடையே பயணிகள் ரெயில் சேவையை தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும். பிப்ரவரி மாதம் இவ்வழித்தடத்தில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×