என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Metro train"
- சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
- 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
சென்னை :
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயிலில் ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரெயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதிலிருந்து பொது மக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரெயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரெயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதேபோல், 2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளார்கள்.
ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.
மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில், இன்று "Vijay Antony 3.0 -இன்னிசை கச்சேரி" நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள் ஏராளமானோர் இசை கச்சேரியில் பங்கேற்க ஆவலுடன் இருந்தனர்.
இந்நிலையில், காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டடை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் இன்று நடைபெற இருந்த இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மற்றொரு நாளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேதி விபரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், " சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆண்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
— vijayantony (@vijayantony) December 28, 2024
இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.
புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு, இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தென்னிந்தியாவின் முன்னணி ஊடக தயாரிப்பு நிறுவனமான Noise and Grains Private Limited உடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்தது.
அதன்படி, "Insider" or "District" தளங்கள் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளுடன் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மட்டுமே இந்த ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணம் வழங்கப்படும் என்றும் இந்த முன்பதிவு செய்யப்பட்ட டிஜிட்டல் டிக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் எந்த ஒரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு மிக அருகில் உள்ள மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு சென்று திரும்ப முடியும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரெயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-
சென்னை 28 டிசம்பர் 2024 (இன்று) மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கல்லூரி மைதானத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "விஜய் ஆண்டனி 3.0 - லைவ் இன் கச்சேரி, எதிர்பாராத சூழ்நிலைகளால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நிகழ்ச்சிக்கான மெட்ரோ பயண டிக்கெட்டுகளை ரசிகர்கள் இன்று பயன்படுத்த முடியாது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கமான கால அட்டவணைப்படி மட்டுமே கிடைக்கும்.
M/s Noise & Grains Private Limited மூலம் மேற்கொண்டு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Urgent Press Statement Vijay Antony 3.0 - Live in Concert in Chennai CancelledDue to unforeseen circumstances,the highly anticipated "Vijay Antony 3.0 - Live in Concert, Chennai." which was scheduled for 28th December 2024(today) at the AM Jain College Grounds, Meenambakkam…
— Chennai Metro Rail (@cmrlofficial) December 28, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
- அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.
2024 அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில்…
— Chennai Metro Rail (@cmrlofficial) November 4, 2024
- சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
- இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் பிப்ரவரி 2023-இல் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் அடையாறு ஆற்றின் கீழ் 300 மீட்டர் நீளத்திற்கு 10-13 மீட்டர் தரைமட்டத்திற்கு கீழ் செல்கின்றன. காவேரி மற்றும் அடையாறு என்ற இரண்டு பூமி அழுத்த சமநிலை (Earth Pressure Balancing - EPB) சுரங்கம் தோண்டும் இயந்திரகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளன. காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு அடையாறு நிலையத்தை வந்தடைந்தது.
இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம், சுரங்கத்தின் அடிப்பகுதி பாறை மற்றும் மேற்பகுதி மணல்போன்ற கலப்பு புவியியல் நிலைமைகளைக் கடந்து வந்துள்ளது. மேலும், அடையாறு ஆற்றின் சிலபகுதிகளின் கீழ் கடினமான பாறைகளின் வழியாகவும் சுரங்கப்பாதையை அமைத்தது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு சுரங்கம் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளுக்கு மட்டும் 178 நாட்கள் தேவைப்பட்டது.
காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் சில பெட்ரோல் பங்குகள், எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி, ஆந்திர சபா மருத்துவமனை, துர்காபாய் தேஷ்முக் சாலை மற்றும் அடையார் பாலம் கீழேயும் கடந்து சென்றது. இரண்டாவது சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு தற்போது அடையாறு நிலையத்திலிருந்து 277 மீட்டர் தொலைவில் உள்ளது மற்றும் நவம்பர் 2024-க்குள் அடையாறு நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொதுமேலாளர்கள் ஆண்டோ ஜோஸ் மேனாச்சேரி (சுரங்கப்பாதை கட்டுமானம்), ரவிச்சந்திரன் (சுரங்கப்பாதை கட்டுமானம்), லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் இயக்குநர் ஜெயராம், திட்ட இயக்குநர் அஹ்மத், பொது ஆலோசகர் நிறுவனத்தின் அணித்தலைவர் டோனி புர்செல், பொது ஆலோசகர் நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் சஞ்சீவ் மண்டல், சுரங்கப்பாதை நிபுணர் ஆலன் சார்லஸ்மே, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 3-ல் காவேரி எனபெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது
— Chennai Metro Rail (@cmrlofficial) September 20, 2024
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் இரண்டாம் கட்ட திட்டத்தை… pic.twitter.com/VR6wJ0vmcV
- மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னையில், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
மெட்ரோ ரெயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் இடையூறு இல்லாமல் ரெயில் நிலையங்களுக்கு செல்லவும் தடையின்றி மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிகளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரெயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அண்ணா நகர், சின்னமலை, வண்ணாரப்பேட்டை, அரசு எஸ்டேட், ஈக்காட்டு தாங்கல், தேனாம்பேட்டை, ஐகோர்ட்டு, ஆயிரம் விளக்கு, மண்ணடி, பரங்கி மலை, தண்டையார்பேட்டை நிலையங்களில் தலா ஒரு நகரும் படிக்கட்டும், நேரு பூங்கா, எழும்பூர், நங்கநல்லூர் சாலை, கிண்டி, ஏ.ஜி.-டி.எம்.எஸ்., தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
அண்ணாநகர் பூங்கா, நிலையத்தில் 3 நகரும் படிக்கட்டுகளும், வடபழனி மற்றும் மீனம்பாக்கத்தில் 4 நகரும் படிக்கட்டுகளும் திருமங்கலத்தில் 5 எஸ்க லேட்டர்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்த மாதத்தில் பணிகள் தொடங்கி ஒரு வருடத்தில் நிறைவடையும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்புக்கு முன்பு மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை 1.16 லட்சமாக இருந்தது. இப்போது 2.73 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன. அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் கான்கோர்ஸ் மற்றும் தெரு நிலைகளை இணைக்கும் வகையில் மேல் நோக்கி மற்றும் கீழ்நோக்கி நகரும் படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால் திட்டச் செலவை மிச்சப்படுத்த கட்டடிடம்-1 கட்டும்போது அவை நிறுவப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன. சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரெயில்கள் இயங்க இருப்பதால் கட்டணத்தை சற்று குறைக்க அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ரூ.10, நங்கநல்லூர் ரோடு ரூ.20, ஆலந்தூர் ரூ.30, கிண்டி, சின்னமலை சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்னை சென்டிரல் ரூ.50, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.60, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.50, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை ரூ.40, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் ரூ.40, சென்னை சென்டிரல் ரூ.40, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.50, ஈக்காட்டுதாங்கல் ரூ.40, அசோக்நகர் ரூ.30, வடபழனி ரூ.20, அரும்பாக்கம் ரூ.10, கோயம்பேடு ரூ.10, திருமங்கலம், அண்ணாநகர் டவர் ரூ.20, அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம் ரூ.60, நங்கநல்லூர் ரோடு ரூ.50, ஆலந்தூர், கிண்டி ரூ.50, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ரூ.40, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.30, அரசினர் தோட்டம் ரூ.20, சென்னை சென்டிரல் ரூ.10, ஐகோர்ட்டு, மண்ணடி ரூ.20, வண்ணாரப்பேட்டை ரூ.30, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் ரூ.50, வடபழனி ரூ.40, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு, திருமங்கலம் ரூ.40, அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர் ரூ.20, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ரூ.10, பரங்கிமலை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் ரூ.50, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ்., ரூ.30, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.20, அரசினர் தோட்டம் ரூ.10, ஐகோர்ட்டு ரூ.10, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ரூ.20, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.50, கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.40, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.40, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி ரூ.30, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ரூ.20, எழும்பூர் 10, பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Metrotrain
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோரெயில் நிர்வாகம் உருவாக்கிஉள்ளது.
வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக, பாரம்பரியங்கள் குறித்த புகைப்பட, ஓவிய காட்சிகள் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை பொது மக்கள், பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் மெட்ரொ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் பின் விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்- பரங்கிமலை, கோயம்பேடு- நேரு பூங்கா, நேருபூங்கா- சென்ட்ரல், சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே அண்ணா சாலையில் உள்ள ஏ.ஜி. டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சுரங்க பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இப்பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவடைகிறது.
இதையடுத்து அண்ணாசாலை டி.எம்.எஸ்.- சென்ட்ரலுக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயிலை வருகிற டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டி.எம்.எஸ்.-சென்ட்ரல் இடையே சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய 3 ரெயில் நிலையங்கள் அமைகிறது.
தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் வழித்தடத்தில் 35 கிலோ மீட்டருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 26 ரெயில் நிலையங்கள் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்ல தற்போது ஒரு நுழைவுப்பாதை மட்டுமே உள்ளது.
இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள். இதனால் பயணிகளுக்கு கூடுதல் நேரம் விரயம் ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்து வந்தனர். கூடுதலாக நுழைவுப் பாதைகள் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள் திறக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் பூமிக்கடியில் 3 அடுக்கு வசதிகளுடன் பிரமாண்டமாக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு நுழைவுப்பாதை மட்டுமே பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மூர்மார்க்கெட் வளாகம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பூங்கா நிலையம், பார்க் டவுன் நிலையம் உள்பட 4 இடங்களில் நுழைவுப் பாதைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து பயணிகள் வசதிக்காக திறக்கப்படும். பயணிகள் பொதுமக்கள் எளிதில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் சென்று வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
சென்னை:
சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.
முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain