என் மலர்
நீங்கள் தேடியது "Chennai Metro train"
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் சேவைக்கான பணிகள் நடந்து வந்தன. சென்னையில் 45 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மெட்ரோ ரெயில் அமைக்கும் திட்டத்தில் 35 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் தற்போது வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். புதிய வழித்தடத்திலும் ரெயில்கள் இயங்க இருப்பதால் கட்டணத்தை சற்று குறைக்க அதிகாரிகள் மத்தியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அதிகாரப்பூர்வ பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் ரூ.10, நங்கநல்லூர் ரோடு ரூ.20, ஆலந்தூர் ரூ.30, கிண்டி, சின்னமலை சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்னை சென்டிரல் ரூ.50, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.60, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு பஸ் நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.50, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர் ரூ.60 என கட்டணம் வசூலிக்கப்படும்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை ரூ.40, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம் ரூ.40, சென்னை சென்டிரல் ரூ.40, ஐகோர்ட்டு, மண்ணடி வண்ணாரப்பேட்டை ரூ.50, ஈக்காட்டுதாங்கல் ரூ.40, அசோக்நகர் ரூ.30, வடபழனி ரூ.20, அரும்பாக்கம் ரூ.10, கோயம்பேடு ரூ.10, திருமங்கலம், அண்ணாநகர் டவர் ரூ.20, அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர், பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து விமானநிலையம் ரூ.50, மீனம்பாக்கம் ரூ.60, நங்கநல்லூர் ரோடு ரூ.50, ஆலந்தூர், கிண்டி ரூ.50, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., ரூ.40, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.30, அரசினர் தோட்டம் ரூ.20, சென்னை சென்டிரல் ரூ.10, ஐகோர்ட்டு, மண்ணடி ரூ.20, வண்ணாரப்பேட்டை ரூ.30, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர் ரூ.50, வடபழனி ரூ.40, அரும்பாக்கம் ரூ.40, கோயம்பேடு, திருமங்கலம் ரூ.40, அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.30, ஷெனாய் நகர் ரூ.20, பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ரூ.10, பரங்கிமலை ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து விமானநிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரோடு, ஆலந்தூர் ரூ.50, கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை ரூ.40, டி.எம்.எஸ்., ரூ.30, ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ரூ.20, அரசினர் தோட்டம் ரூ.10, ஐகோர்ட்டு ரூ.10, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ரூ.20, ஈக்காட்டுதாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும்பாக்கம் ரூ.50, கோயம்பேடு பஸ் நிலையம் ரூ.40, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு ரூ.40, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி ரூ.30, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ரூ.20, எழும்பூர் 10, பரங்கிமலை ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Metrotrain
சென்னை:
சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு - ஆலந்தூர், சின்னமலை - விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை - டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலும் மெட்ரோ பயணிகள் சேவை தற்போது நடந்து வருகிறது.
பயணிகள், பொது மக்கள் இடையே மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோரெயில் நிர்வாகம் உருவாக்கிஉள்ளது.
வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகளுக்காக சிறப்பு புகைப்பட கண்காட்சி, ஓவிய கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக பல்வேறு விளையாட்டு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
சமூக, பாரம்பரியங்கள் குறித்த புகைப்பட, ஓவிய காட்சிகள் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தொடங்கி வைத்தார். மெட்ரோ ரெயில் நிலையங்களில் இதனை பொது மக்கள், பயணிகள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதி கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூருக்கு முதல் மெட்ரொ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதன் பின் விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்- பரங்கிமலை, கோயம்பேடு- நேரு பூங்கா, நேருபூங்கா- சென்ட்ரல், சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ். ஆகிய வழித்தடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே அண்ணா சாலையில் உள்ள ஏ.ஜி. டி.எம்.எஸ்.சில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு சுரங்க பாதையில் செல்லும் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. இப்பணி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இப்பணி நிறைவடைகிறது.
இதையடுத்து அண்ணாசாலை டி.எம்.எஸ்.- சென்ட்ரலுக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் அவை நிவர்த்தி செய்யப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயிலை வருகிற டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டுக்கு இயக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
டி.எம்.எஸ்.-சென்ட்ரல் இடையே சுரங்க பாதையில் ஆயிரம் விளக்கு, எல்.ஐ.சி., ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய 3 ரெயில் நிலையங்கள் அமைகிறது.
தற்போது சென்னையில் மெட்ரோ ரெயில் முதல் வழித்தடத்தில் 35 கிலோ மீட்டருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 26 ரெயில் நிலையங்கள் உள்ளன.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.
பயணிகள், பொதுமக்கள் இடையே மெட்ரோ ரெயில் சேவைக்கு பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்ல தற்போது ஒரு நுழைவுப்பாதை மட்டுமே உள்ளது.
இதன் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகிறார்கள். இதனால் பயணிகளுக்கு கூடுதல் நேரம் விரயம் ஏற்படுவதால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்களை பயணிகள் தெரிவித்து வந்தனர். கூடுதலாக நுழைவுப் பாதைகள் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மேலும் 4 நுழைவுப்பாதைகள் திறக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்ட்ரல் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் பூமிக்கடியில் 3 அடுக்கு வசதிகளுடன் பிரமாண்டமாக 70 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு பயணிகளுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது.
தற்போது சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் ஒரு நுழைவுப்பாதை மட்டுமே பயணிகளுக்காக திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் பயணிகள் வசதிக்காக கூடுதலாக 4 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மூர்மார்க்கெட் வளாகம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பூங்கா நிலையம், பார்க் டவுன் நிலையம் உள்பட 4 இடங்களில் நுழைவுப் பாதைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து பயணிகள் வசதிக்காக திறக்கப்படும். பயணிகள் பொதுமக்கள் எளிதில் சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் சென்று வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #MetroTrain
சென்னை:
சென்னை நேரு பூங்கா முதல் விமான நிலையம் வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்- நேரு பூங்கா இடையேயும், சைதாப்பேட்டை ஏஜி டி.எம்.எஸ். இடையேயும் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதையடுத்து கடந்த 25-ந்தேதி முதல் இன்றுவரை மெட்ரோ ரெயிலில் பயணிகள் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இலவச பயணம் தொடர்பாக முதல் நாளில் நிறைய பேருக்கு தெரியாது என்பதால் அன்று பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. நேற்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சென்னை பயணிகளும், வெளியூரில் இருந்து வந்தவர்களும் குடும்பம் குடும்பமாக வந்து மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் மெட்ரோ ரெயில் பெட்டிக்குள் அங்கு மிங்கும் நடந்து சென்று குதூகலித்தனர்.
இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மெட்ரோ ரெயிலுக்குள் பயணித்த படியே செல்பி எடுத்துக் கொண்டனர். பயணிகள் கூட்டம் அலை மோதினாலும் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டதால் பயணிகள் பொறுமையாக காத்து நின்று அதில் ஏறி பயணித்தனர். சுற்றுலா செல்வது போல அவர்கள் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் ஏறிச் சென்று மீண்டும் அந்த இடத்துக்கே வந்து இறங்கினார்கள். கோடை விடுமுறை காரணமாக மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பயணித்தனர்.
முதல் நாளில் 50 ஆயிரம் பேர் இலவசமாக பயணம் செய்தனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலை 10 மணிவரை 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். அதாவது 3 நாளில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
இன்றுநேரம் செல்ல செல்ல பயணிகளின் வருகை அதிகரித்தது. இன்று ஒரே நாளில் மெட்ரோ ரெயிலில் இலவச பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை 1½ லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ட்ரல் முதல் விமான நிலையம்வரையும், ஏ.ஜி. டி.எம்.எஸ். முதல் விமான நிலையம் வரையும் இலவசமாக செல்லலாம் என்பதால் பயணிகள் முழு உற்சாகத்துடன் பயணத்தை மேற்கொண்டனர். #Metrotrain