என் மலர்
நீங்கள் தேடியது "ரத்து"
- ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
- நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27&ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க விதிகளை வகுக்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில்,''தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்'' என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது;
பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது.
பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் போது அவற்றுக்கு வருபவர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் உறுதி செய்ய வேண்டும்; பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவை ஏற்பட்டால் அழைப்பதற்கு தயாராக அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றக் கிளையின் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல லட்சம் மக்கள் பங்கேற்ற ஏராளமான மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இத்தகைய நிபந்தனைகளை தாமாக கடைபிடித்து நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வில்லை.
அதேநேரத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்களால் முறையாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படாத, காவல்துறையால் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துயர நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது பாசிசம் தலைதூக்க வழிவகுத்துவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.
மக்கள் கூடும் இடங்களில் தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ஆனால், உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தீர்ப்பைத் தொடர்ந்து தனியார் இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்களும் கட்டாயப்படுத்துகின்றனர். இதை ஏற்க முடியாது.
அரசியல் கட்சிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்களை தங்களை நோக்கி வரும்படி கட்டாயப் படுத்தக் கூடாது. ஆளில்லாத இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாத்தியமற்றது. தனியார் இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறுவது கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதற்கு நீதிமன்றங்கள் துணைபோகக் கூடாது.
ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் நோக்கம் மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வது தான். மக்கள் பணியாற்றும் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுஇடங்களில் தான் அமைக்க முடியும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அப்படித் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் இடத்தை வாங்கி அதில் தான் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால், மக்கள் நல நோக்கம் கொண்ட எந்தக் கட்சியும் கொடிக்கம்பங்களை அமைக்கமுடியாது.
ஊழல் செய்து சொத்து சேர்த்தக் கட்சிகள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதையெல்லாம் உணர்ந்து தான் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது அரசியல் கட்சிகளை முடக்கி வைக்கும் செயலாகும்.
அரசியக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதற்காக விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகள் அவற்றின் ஜனநாயகக் கடமையை செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியாது.
எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை.
எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த இபிஎஸ் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை 2 இடங்களில் நடைபெற இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
பிரசாரம் நடைபெறுவதற்கு ஒருநாளே இருக்கும் நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேகுமாரபாளையம், திருச்செங்கோடு தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.
இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.
- மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது.
- தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
அடர்ந்த காடுகளின் வழியாக செல்லும் இந்த மலை ரெயிலில் பயணம் செய்தால் அங்குள்ள உள்ள இயற்கை எழில்மிகுந்த காட்சிகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீண்ட குகைகளை கண்டு ரசிக்க முடியும்.
இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலைரெயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் இன்று காலை மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் ரோந்து சென்றனர்.
அப்போது மலை ரெயில் வழித்தடத்தின் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரெயில் பாதையில், ஹில்கிரோ பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு அங்கிருந்த பாறைகள் உருண்டு, ரெயில் தண்டவாள பாதையில் விழுந்து கிடந்தன.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ரெயில்வே உயரதிகாரிகளுக்கு தகவலளித்தனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூருக்கு செல்வதற்காக புறப்பட்டு வந்த மலை ரெயில், கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே ரெயில்வே உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும் தண்டவாளத்தில் உருண்டு விழுந்த பாறையை அப்புறப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
அப்போது தண்டவாளத்தில் கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்துவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையிலான மலை ரெயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதனையடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லார் சென்ற மலை ரெயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தொடர்ந்து மலைரெயிலில் பயணித்தவர்களுக்கு கட்டண தொகை திருப்பி அளிக்கப்பட்டது.
இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் பயணிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
நாகர்கோவில்:
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.
இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.
- கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும்.
- இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
திருப்பூர்:
ஈரோடு ரெயில் நிலையம் அருகே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்–படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இதுபோல் சேலம்-கோவை தினசரி ரெயில் (எண்.06803) சேலத்தில் தினமும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.
- கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் திட்டமிடப் பட்டுள்ள கட்டுமானப் பணிகள் காரணமாக ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரெயில் எண்:06772 கொல்லம் சந்திப்பு-கன்னியாகுமரி மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரெயில் எண்:06773 கன்னியாகுமரி-கொல்லம் சந்திப்பு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரெயில் எண்:06429 கொச்சுவேளி-நாகர் கோவில் சந்திப்பு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரெயில் எண்:06430 நாகர்கோவில் சந்திப்பு-கொச்சுவேளி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் நவம்பர் 17, 19, 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
ரெயில் எண்:16366 நாகர்கோவில் கோட்டயம் முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் நவம்பர் 17, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஒரு மணிநேரம் தாமதமாக ஓடும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.
- பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.
நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருநெல்வேலி - திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் இன்டர்சிட்டி ரெயில் ேசவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22627) ரெயில், திருநெல்வேலி- திருவனந்தபுரம் இடையேயும், மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் (வண்டி எண் 22628) ரெயில், திருவனந்தபுரம் - திருநெல்வேலி இடையேயும் வரும் 4-ந் தேதி முதல் 9 மற்றும் 14 முதல் 17-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதே வேளையில், திருநெல்வேலி ரெயில் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில், பிரசித்தி பெற்ற காந்தமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு, சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். மற்றும் தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு, வரும் பிப்ரவரி 5-ந் தேதி, தைப்பூச விழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பாக கொண்டப்படுகிறது. மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில், ரூ.40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் திருப்பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதை முன்னிட்டு, முன் கோபுரம் வர்ணம் பூசுதல், தேருக்கான பழைய மரக் கட்டைகள் அகற்றி, புதிய மரக்கட்டைகள் பொருத்தப்படுகிறது. கோவில் பகுதியில் மேல்தளம் அமைத்தல், பழைய ஆஸ்பெஸ்டாஸ் சீட் அகற்றி, பூ வேலைப்பாடுகள் அமைத்தல், கதவு, ஜன்னல் அமைத்தல், பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை கட்டுதல் போன்ற பல்வேறு பணிகள், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் இந்த ஆண்டு, தைப்பூசத்தையொட்டி, தேரோட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம் போல், தைப்பூச நாளில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி, தைப்பூசக் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது. வருகிற பிப்ரவரி 9-ந் தேதி வரை தினசரி கட்டளைதாரர்கள் மூலம் சாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வருகிற பிப்ரவரி 5-ந் தேதி, தைப் பூசத்தன்று, பால் குடம், தீர்த்தக்குடம், அபிசேகம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெறும். விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
- மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து
- சப்-கலெக்டர் நடவடிக்கை
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கைதோடு கோவில், விளாகம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 74), இவருடைய மனைவி தங்கம் (63). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் இளைய மகன் அனீஷ் (36) என்பவரோடு வசித்து வந்தனர்.
இதில் தங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அனீஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததோடு பிரதீபா (35) என்பவரை 2-வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தாய், தந்தையான தங்கத்தையும், நீலகண்டபிள்ளையையும் அனீஷ் சரியாக கவனிக்கவில்லை. வயதான காலத்தில் மகன் கவனிப்பான் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு இது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இருவரையும் வீட்டை விட்டு மகன் அனீஷ் துரத்தி விட்டார். இதனால் அவர்கள் உறவினர்கள் பராமரிப்பில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் தீர்ப்பாயத்தில் தங்கம் புகார் மனு கொடுத்தார். அதில், மகன் அனீஷ், மருமகள் பிரதீபா ஆகிய 2 பேரும் சேர்ந்து எங்களை கவனிக்காமல் வீட்டை விட்டுதுரத்தி விட்டனர்.
எனவே எங்களது எதிர்காலம் கருதி மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.
இதில் இருதரப்பு வாதங்களையும் அவர் பதிவு செய்து கொண்டார். பெற்றோரை அனிஷ் முறையாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறியுள்ளார் என நடுவர் கவுசிக் முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து தாயார் தங்கம், மகனுக்கு எழுதி கொடுத்த 7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து செய்தார். மேலும் பெற்றோரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் 'மகன் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அப்படி செய்தால் போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் ஆவணம் ரத்து செய்த உத்தரவை தக்கலை சார்பதிவாளருக்கும் அனுப்பினார்.






