என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா முதல்வர்"

    • உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

    மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என மராட்டிய மாநில அரசு அறிவித்திருந்தது.

    இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.

    இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்றார்.

    • வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
    • காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இரண்டு பேர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.

    இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை மாநில அரசே ஏற்க உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒருவார பயணமாக முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று புறப்பட்டு சென்றார். #MaharashtraCM
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார்.

    அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

    மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர், கனடா நாட்டின் மான்ட்ரியல் நகருக்கு செல்லும் பட்னாவிஸ், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறைகளில் செயற்கை நுன்னறிவை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews #MaharashtraCM
    ×