search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maharashtra cm"

    • குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என உத்தரவிட்டது.
    • மகாராஷ்டிராவில் இந்த உத்தரவு வரும் மே 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

    மும்பை:

    பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014, மே 1-ம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்தது.

    வரும் மே 1-ம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர உள்ளது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்த புதிய விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் மந்திரி ஏக்னாத் ஷிண்டே தனது அலுவலகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் ஏக்நாத் கங்குபாய் சம்பாஜி ஷிண்டே என தாயார் பெயரையும் சேர்த்துள்ளார்.

    இதேபோல், மற்ற மந்திரிகளின் பெயர்ப் பலகைகளில் அவர்களின் தாயார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிராவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளார். #Dhulelynching #suspicionofchildlifters
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் கிராமமான ரெயின்பாதாவிற்கு வெளியூரை சேர்ந்த சில புதிய நபர்கள்நேற்று பேருந்தில் வந்திறங்கினர்.

    அவர்களில் ஒருவர், பேருந்து நிறுத்ததில் இருந்த குழந்தையிடம் சாதாரணமாக பேச முயற்சித்துள்ளார். ஆனால், அவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என சந்தேகித்த அப்பகுதி மக்கள் புதிய நபர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து அடித்துக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவேந்திர பட்னாவிஸ், சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். #Dhulelynching #suspicionofchildlifters
    அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஒருவார பயணமாக முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று புறப்பட்டு சென்றார். #MaharashtraCM
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அமெரிக்கா, கனடாவில் ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று புறப்பட்டு சென்றார்.

    அமெரிக்காவில் நியூயார்க், வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு செல்லும் அவர், அங்குள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை பார்வையிடுவதுடன் அந்த தொழில்நுட்பங்களை மகாராஷ்டிர மாநிலத்தில் கையாள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

    மேலும், மும்பை நகரை புனேவுடன் இணைக்கும் அதிநவீன சாலை வசதி தொடர்பான ஒப்பந்தத்தை செய்துள்ள விர்ஜின் குழுமத்தின் சான்பிரான்சிஸ்கோ நகர தலைமையகத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர், கனடா நாட்டின் மான்ட்ரியல் நகருக்கு செல்லும் பட்னாவிஸ், உள்கட்டமைப்பு மற்றும் வேளாண்மை துறைகளில் செயற்கை நுன்னறிவை பயன்படுத்துவது தொடர்பாக விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews #MaharashtraCM
    ×