என் மலர்
நீங்கள் தேடியது "compensation"
- 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் அறிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
- 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.
- 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில் படை எடுத்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளத்தை அழித்து வருகிறது. பாடுபட்டு பயிர் செய்து தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள மக்கா சோளம் கதிர்களை பன்றி கூட்டம் நாசம் செய்து உள்ளது. நேற்று சுமார் 5 ஏக்கர் பரப்பில் பயிர் செய்துள்ள மக்காசோளம் பயிரை முற்றிலும் பன்றிகள் நாசம் செய்து உள்ளன.
ஏக்கர் ஒன்றுக்கு உழவு கூலி, விதை, களை எடுத்தல், உரம் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் 40 ஆயிரம் ரூபாய் செலவாகி உள்ளதாகவும், இந்த 40 ஆயிரம் ரூபாயும் தற்போது இழப்பாகி உள்ளதாகவும், விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் காட்டு பன்றியிடமிருந்து விவசாய விளைநிலத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாய விளைநிலத்திற்கு வனவிலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்ளனர்
- போலீசார் சுட்டதில் உயிரிழந்த 2 வாலிபர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- உதவி காவல் ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மதுரை
மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் செயல் இயக்குநரும், மூத்த வக்கீலுமான ஹென்றி டிபேன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராமநாதபுரம் சாலையில் அமைக்கப் பட்டிருந்த சோதனைச் சாவடி அருகே, கடந்த 2010-ல் அப்போதைய காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை துப்பாக்கி யால் சுட்டதில், கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த கவியரசு (30), ஓடக்கரை பகுதியைச் சேர்ந்த முருகன் (34) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து கோட்டா ட்சியர் நடத்திய விசார ணையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, தற்காப்பு க்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்று அறிக்கை அளித்தார்.
இதனிடையே, உயிரிழந்த முரு கனின் தாய் குருவம்மாள், காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு அனுப்பினார். அந்த மனு ஏற்கப்பட்டு காவல் உதவி ஆணையாளர் வெள்ளத்துரை, அவருடன் பணியாற்றிய உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன், காவலர் ரவீந்திரன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட்டது.
மனுதாரரான குருவம்மாள் சார்பில் வக்கீல் சின்ன ராஜா, மக்கள் கண்காணிப்பகத்தின் வக்கீல்கள் பாண்டியராஜன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் வாதாடினர்.
இதையடுத்து, உயிரிழந்த கவியரசு, முருகன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரி மைகள் ஆணையம் உத்தரவிட் டது. இந்தத் தொகையில், உதவி ஆணையாளர் வெள்ளத்துரையிடம் இருந்து ரூ. 3 லட்சம், உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.1.50 லட்சத்தை சட்டரீதியாக பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
உதவி ஆணையாளர் வெள்ளத்துரை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கி சூட்டில் இறந்த முருகனின் தாய் குருவம்மாள், வக்கீல்கள் சின்னராஜா, பாண்டியராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள குமளங்குளத்தை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் சிவக்குமார் (வயது 33). இவர் ஜவுளிக்கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8.12.2018 அன்று சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே சென்ற போது, எதிரே வந்த அரசு விரைவு பஸ் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 16.9.2020 அன்று சிவக்குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.21 லட்சத்து 21 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நஷ்டஈடு தொகை வழங்காததால் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி சுபாஅன்புமணி, விபத்தில் இறந்த சிவக்குமாரின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.27 லட்சத்து 88 ஆயிரத்து 706 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு தொகை வழங்கப்படாததால் கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
- தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார்.
- ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்படவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் வசிப்பவர் வீரமணி. இவரது மனைவி பத்மாவதி. இவர் தனியார் நிறுவனத்தில், நிதி நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறிய வகை டிராக்டர் வாங்கினார். நுகர்வோரின் பங்கு தொகையாக ரூ.57 ஆயிரத்து 381 சி.ஏ.ஐ நிறுவனத்திற்கு காசோலை மூலம் செலுத்தப்பட்டது.
மாதத் தவணைத் தொகை ரூ.6,470 வீதம் 12 காசோ லைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்ட நிதி நிறுவனம், பத்மாவதி கணவர் வீரமணியிடம் 10 காசோலைகளை பின் தேதியிட்டு பெற்றுக் கொண்டனர்.
2011 ஜனவரியில் டிராக்டர் கொடுத்தபோது எவ்வித ரசீதும் வழங்கவில்லை. பலமுறை நேரில் சென்று ஆவணங்களை கேட்ட போது அரசு இந்த டிராக்டருக்கு ரூ.80 ஆயிரம் மானியம் பெற்று கணக்கில் வரவு வைத்துக்கொண்டு பின்னர் ஆவணங்களை தருவதாக நிதி நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் பல ஆண்டுகள் கடந்தும் உரிய பதிவு செய்யப்பட்ட ஆர்.சி புத்தகமோ, அதன் நகலோ எதுவும் வழங்கப்–படவில்லை. ஆர்.சி என்டாஸ்மெண்ட் செலவுக்கு ரூ.3000 பெற்றுக் கொண்டு அதற்கு ரசீதும் கொடுக்கவில்லை.
அரசு மானியம் பெற்று தருவதாக கூறி நுகர்வோரின் நில ஆவணங்களை பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் நிதி நிறுவனம் எடுக்கவில்லை. கடன் முழுவதும் கட்டி முடித்தும் ஆர்.சி புத்தகத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இது குறித்து 2013-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நாமக்கல் பயனீட்டாளர் சங்கம் மூலம் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணை நடத்திய நுகர்வோர் ஆணையம் எதிர் முறையீட்டாளர்கள் இருவரும் சேர்ந்து முறையீட்டாளருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், மன உளைச்சல் இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவாக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிட்டது.
- சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.
- ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக மாநில அரசு நிதி வழங்க வேண்டும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம் நல்லோர் வேட்டங்குடி மாதானம் இடமணல் பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெற்பயிரை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறுகையில்,
மயிலாடுதுறை மாவ ட்டத்தில் வரலாறு காணாத அளவில் 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.
ஒட்டுமொத்த மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. சீர்காழி, தரங்கம்பாடி வட்டப் பகுதிகள் கடல் போல காட்சியளிக்கின்றன. மழை பெய்து ஒரு வாரம் கடந்த நிலையிலும் கிராமப் பகுதிகளில் மழை நீர் வடியவில்லை.
விளை நிலங்களில் தேங்கிய நீர் சிறிதும் வடியாத காரணத்தால் கதிர் வரக்கூடிய நிலையிலிருந்த சம்பா நெற் பயிர்கள் அனைத்தும் அழுகி மட்கும் நிலையில் உள்ளது.
இனி இந்த பயிர்கள் பிழைப்பதற்கோ, மறு உற்பத்திக்கோ வாய்ப்பில்லை.
தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்டத்தில், கடந்த 2020-21-ம் ஆண்டில் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் இடுபொருள் இழப்பீடாக வழங்கியுள்ளது.
தற்போ தைய உர விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடாக பேரிடர் மேலாண்மை திட்ட நிதியிலிருந்து மா நில அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இப்பகுதியில் புதிய வடிகால் அமைப்பதற்கான திட்டம் நிலுவையில் உள்ள தாகக் கூறப்படுகிறது.
அத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் தொடர்ந்து பேரிடர் பாதிக்கக் கூடிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
- பெண்ணுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஊனத்துடன் குழந்தை பிறந்ததால்
பெரம்பலூர்
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, கிருஷ்ணாபுரம் நடுவீதியை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 31). ஸ்ரீராம் வெளிநாட்டில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். ராஜேஸ்வரி கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்ப்பமாக இருந்தபோது பெரம்பலூரில் உள்ள நிரஞ்சன் நர்சிங் ஹோம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். ஸ்கேன் எடுத்தும் பார்த்துள்ளனர். ராஜேஸ்வரியிடம் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தை நல்ல ஆரோக்கியமாகவும், நன்றாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே ஆண்டு நவம்பர் மாதம் அந்த மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை முழு ஊனத்துடன் (மாற்றுத்திறனாளி) பிறந்திருந்ததால் ராஜேஸ்வரி, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். கருவுற்ற ஆரம்பம் முதல் ராஜேஸ்வரி அதே மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்தும் டாக்டர்களின் ஆலோசனையின்படி தகுந்த நேரத்தில் ஸ்கேன் மற்றும் மருத்துவ பரிசோதனையும் செய்துள்ளார். ஆனால் டாக்டர்கள் சரியாக ஸ்கேன் எடுக்காமலும், உரிய சிகிச்சை, பரிசோதனை செய்யாமலும், கவனக்குறைவால் குழந்தை ஊனத்துடன் பிறந்ததாக கூறி ராஜேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், துயரத்துக்கும், அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கும் இழப்பீடாக ரூ.15 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகையுடன் மருத்துவமனை நிர்வாகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஜவகர் மற்றும் உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணை முடிந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஜவகர் தீர்ப்பு வழங்கினார். அதில் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் ராஜேஸ்வரிக்கு மருத்துவமனை டாக்டர்களின் கவனக்குறைவாக ஸ்கேன் பரிசோதனை செய்ததாலும், மேல் சிகிச்சை முறையாக செய்யாததாலும், மருத்துவ சேவை குறைபாடு, அஜாக்கிரதையினால் பெண் குழந்தை ஊனத்துடன் பிறந்துள்ளது. அதற்கு மருத்துவமனை தான் பொறுப்பு என்று கூறி, ரூ.10 லட்சத்தை இழப்பீடாக ராஜேஸ்வரி-ஸ்ரீராம் தம்பதிக்கு கொடுக்க வேண்டும். மேலும் இந்த தொகையை 45 நாட்களுக்கு வழங்காவிட்டால் 8 சதவீத வட்டியுடன் சேர்த்து மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்."
- ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
- மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக்கல்லூரி அறிவிக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடி கிராமத்திற்கு வருகைதந்த பா.ம.க. தலைவர் அன்புமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை 950 மி.மீ, அதில் ஒரே நாளில் சீர்காழியில் 550 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் பெய்யும் பெரும் அளவு மழை நீர் வடிகாலாக மயிலாடுதுறை மாவட்டம் விளங்குகிறது.
சரிவர தூர்வாரமல் உள்ளதே இதற்கு காரணமாகும். இதனை உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்ட மாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
நாங்கள் எந்த கட்சியிலும் கூட்டணியில் இல்லை.மயிலாடுதுறைக்கு என்று புதிய மருத்துவக் கல்லூரி அறிவிக்க வேண்டும்.
ஆன்லைன் விளையா ட்டால் தமிழகத்தில் மேற்கொண்டு உயிரிழ ப்புகள் ஏற்பட்டால்அதற்கு கோப்புகளில் கையெழுத்துயிடாத தமிழக ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும்.
2026 ஆம் ஆண்டு பா.ம.க தலைமையில் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.அதற்கு ஏற்றார் போல் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படும்.
இட ஒதுக்கீட்டை நூறு விழுக்காடாக ஆக்க வேண்டும், அனைத்து சமுதாயத்திற்கும் சரிசமமாக இட ஒதுக்கீடு பிரித்து தர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, லன்டன் அன்பழகன், நல்லத்துக்குடி காமராஜ், உள்ளிட்ட முக்கிய பொருப்பாளர்கள் திரளாக கலந்துக் கொன்டனர்.
- மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதாக விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
- அதிகாரிகள் பயிர் சேதங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
தென்காசி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கண்ணையா தலைமையில் ஊத்துமலை, ராஜ கோபால பேரி, அச்சங்குட்டம், வாடியூர் மற்றும் வீராணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
வீரகேரளம் புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊத்துமலை, ராஜகோபால பேரி மற்றும் ஆலங்குளம் சுற்றியுள்ள மலையடிவாரங்களில் காட்டுப்பன்றிகள் பெரு மளவில் உள்ளன. அவை அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சேதம் அடைந்த பயிர்கள், நிலத்திற்கான இழப்பீடு தொகையும் இதுவரையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே காட்டுப்பன்றியை வனவிலங்கு சட்டத்திலிருந்து நீக்கவும், ஊத்துமலை பகுதிக்கு வடபுறம் போதிய மழை இல்லாமல் உளுந்து உள்ளிட்ட மானாவாரி பயிறு வகைகள் கருகி உள்ளன. எனவே வனத்துறை, வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறையை சேர்ந்த அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பயிர் சேதங்களை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கிட முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும்.
கிடப்பில் போடப் பட்டுள்ள ரெட்டை குளம் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து தொடங்கி விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை உரு வாக்கிடும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- பாதிக்கப்பட்ட 2 பேருக்கு ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- தவறான சிகிச்சை
அரியலூர்:
அரியலூர் காந்தி நகரைச் சேர்ந்த கணேசன் மகள் எழில்செல்வி. இவரது கணவர் பிரபாகர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 28.03.2018 அன்று எழில் செல்விக்கு பிரசவ வலி எற்பட்டு, அங்குள்ள ஒரு மகப்பேறு தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மதியமே அவருக்கு குழந்தை பிறந்து உள்ளது. எனினும் அவருக்கு தொடர்ந்து ரத்தப் போக்கு ஏற்படவே, உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு 29.3.2018 அன்று எழில் செல்விக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்த அறுவை சிகிச்சையின் மூலம் அவரது கர்ப்பப்பை நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று மாலை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எழில்செல்வி பெற்றோர் தொடுத்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு, மருத்துவரின் அஜாக்கிரதையால் எழில்செல்வி உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் நிருபணமாகியுள்ளது.
எனவே உயிரிழந்த எழில் செல்வியின் 5 வயது மகளுக்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இறந்தவரின் பெற்றோர்களை காப்பாளர் கொண்டு இழப்பீடு செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
இதே போல் சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெரிடிநந்த் மனைவி சஹானா(32). இவர் தமது தாடையிலும், உதட்டிலும் வளர்ந்த முடியை அகற்றுவதற்காக தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு கடந்த 18.4.2017 அன்று அவருக்கு லேசர் சிகிச்சை மூலம் முடிகள் அகற்றப்பட்டுள்ளது. அப்போது லேசர் கருவி வெப்பம் காரணமாக சஹானா முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் சஹானா தொடுத்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் சஹானாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.50 ஆயிரம் இழப்பீடாக அவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- நிலம் கொடுத்தவர்கள் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண். 7-ல் பெங்களூர்-சேலம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக வாடிப்பட்டி வட்டத்தில், தும்பிச்சாம்பட்டி, தாதம்பட்டி, குலசேகரன்கோட்டை, தேனூர், தனிச்சியம் கிராமங்களும், மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக மதுரை தெற்கு வட்டத்தில் வடிவேல்கரை, பரவை பிட்-2, சமயநல்லூர் , தனக்கன்குளம், தட்டானூர், தோப்பூர், துவரிமான், விளாச்சேரி பிட்-1 கிராமங்களிலும், திருமங்கலம் வட்டத்தில், கப்பலூர், கொக்குலாஞ்சேரி, மறவன்குளம், மேலக்கோட்டை, நல்லமநாயக்கன்பட்டி, பழக்காபுதுப்பட்டி, செங்குளம், சிவரக்கோட்டை, உச்சப்பட்டி, குதிரைசாணிகுளம், கே.வெள்ளாகுளம், வேங்கிடசமுத்திரம் ஆகிய கிராமங்களிலும் நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நில உரிமையாளர்களில் ஒரு சிலர் இழப்பீட்டுத் தொகையை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நிலஉரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவர்களுக்கு பாத்தியப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாய நிலங்களுக்குள்ளும் கடல்நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்.
- கடல்நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோர முள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர், கடலை, கத்தரி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கத்தால் கடலில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.
மேலும் விவசாய விளை நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.
சுமார் 100 ஏக்கர் அளவுக்கு பயிர்களை கடல் நீர் சூழந்துள்ளதால் அவைகள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும்போது,
நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.
அதன் ஒரு பகுதியாக வடக்கு பொய்கைநல்லூர் பகுதியில் விவசாய நிலங்களுக்குள்ளும் கடல் நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது, உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.