search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee suicide"

    • கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (47). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்திய போது ராமநாதன் குடும்பப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததும் அதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்
    • தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

    கரூர்

    கரூர் வெங்கமேடு ஜீவா நகரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 42). இவர் ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த விஜயகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நீலகண்டன் சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி ராணி.

    இந்த நிலையில் காளியப் பனுக்கு தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியது. இதைத் ெதாடர்ந்து இருவரும் சென்னை சென்று குடித்தனம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஊருக்கு வந்து காளியப்பன் பழைய வேலையில் சேர்ந்துள்ளார்.

    பின்னர் மீண்டும் அந்த பெண்ணை பார்ப்பதற்காக சென்னை சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணுடன் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் ஊருக்கு திரும்பி வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர்கள் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாடி அறைக்கு சென்றவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஜான்சிராணி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31).
    • பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    சேலம்:

    அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள விளாம்பaட்டி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 31). இவர் கூட்டாத்துப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரி கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் அரளி விதை (விஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

    சேலம்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் மதியழகன் (வயது 35). இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், வித்தின் தர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர்.

    மதியழகன் சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மதியழகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், மதியழகன் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பலரிடம் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஷர்மிளா (வயது 30). இவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஷர்மிளா கணவர் இறந்த தூக்கம் தாளாமல் வேதனையில் இருந்து வந்தார்.

    கணவர் இறந்து விட்டதால் ஷர்மிளா அலமேலு மங்காபுரம் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது ஷர்மிளா மின்விசிறியில் தூக்கில் தூங்கினார். வெளியே சென்றிருந்த ஷர்மிளாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஷர்மிளா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஷர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஷர்மிளா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஷர்மிளாவின் தந்தை சவுந்தரராஜன் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தார்.

    சத்துவாச்சாரி போலீசார் ஷர்மிளாவின் பிணைத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
    • இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி குமலன் ெதருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஆனந்தன் (23), என்ற மகனும் காவியா (19) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் கடந்த 1 வருடமாக வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 35 நாட்களாக வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.

    மகன் ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலை செய்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் செல்வராஜ் மதியம் தனது மகனுக்கு போன்செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஏற்கனவே ஆனந்தன் மன அழுத்தம் காரணமாக 3முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீடு உள் பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல்வழியாக பார்த்த போது ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்தன இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அருகே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தலைமறைவான ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
    • வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி கல்லாங்குத்து புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31).இவர் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னசீரகாப்பாடியில் உள்ள தாபா ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த மணிகண்டன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கெண்டார்.அவரது உடலை அஸ்தம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மணிகண்டன் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு வீடியோவை பதிவுசெய்து தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் தான் வேலைபார்த்து வந்த தாபா ஓட்டலில் இருந்து ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டதாக தன்னை மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டனர்.

    மேலும் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரும் தற்போது அந்த பணத்தை தரவில்லை என்றால் போலீசில் புகார் செய்வோம் என்று கூறி மிரட்டுவதாக கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த உறவினர்கள் இறந்த மணிகண்டனின் சடலத்தை வாங்க மறுத்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மணிகண்டனின் சாவிற்கு காரணமான தாபா ஓட்டல் உரிமையாளர் உள்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாகவும், எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    தொடர்ந்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் உடலை பெற்று சென்ற இறுதி சடங்கு செய்தனர்.

    இந்த நிலையில் மணிகண்டன் தற்கொலை வழக்கை அஸ்தம்பட்டி போலீசார் திருத்தம் செய்தனர். அதில் மணிகண்டன் வேலை பார்த்த தாபா ஓட்டல் உரிமையாளர் பாலாஜி, அசோக், சுரேஷ் ஆகிய 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை தேடிய போது 3 பேரும் தலைமறைவானது தெரிய வந்தது. அவர்களை பிடிக்க செல்போன் எண்ணை வைத்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அம்பையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை அருகே உள்ள ஊர்க்காட்டை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் மருதுபாண்டி(வயது 33). கொத்தனார் வேலை செய்து வந்தார். நேற்று இரவு இவர் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். 

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். 

    இதனையடுத்து மருதுபாண்டி உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் உடலை பெற்று அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து அம்பை போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கோவை கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதி மாசாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45) கூலி தொழிலாளி. இவர் கடந்த 24-ம் தேதி மாலை நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது பேராலயம் அருகே வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மாரிமுத்து வி‌ஷம் குடித்த இடத்தில் அவர் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கடன் தொல்லை காரணமாகதான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பத்தூரில் அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பத்தூர்:

    காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகன் குமார் (வயது 42). இவர் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குமார் மருத்துவ விடுப்பில் சென்றார். விடு முறை முடிந்து நேற்று அவர் பணிக்கு திரும்பினார்.

    பணியில் சேர்ந்ததும் மனைவியிடம் பேசிய அவர் சிவகங்கை சென்று விட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இரவில் அவர் வீட்டிற்கு வரவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கால்நடை ஆஸ்பத்தி ரியை ஊழியர் திறந்தபோது அங்கு குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குடும்ப பிரச்சினை காரணமாக குமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    காதலி பேசாததால் விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் மூதாட்டி சாணிப்பவுடர் குடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிங்காநல்லூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டிக்கடை பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் சக்திவேல்(வயது 29). இவர் கோவை சிங்காநல்லூரில் உள்ள வசந்தாநகரில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் அதே ஊரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். கோவை வந்த பின்பு அந்த பெண்ணிடம் போனில் பேசி வந்துள்ளார்.

    ஆனால் கடந்த சில நாட்களாக அந்த பெண் சக்திவேலிடம் பேசவில்லை. இதனால் விரக்தியடைந்த அவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிங்கா நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அம்மாசையம்மாள் (80). இவருக்கு 2 மகள், 2மகன் உள்ளனர். கணவர் இறந்து விட்டதால் மகன் வீட்டில் வசித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென சாணிப்பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×