search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT company"

    • 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
    • இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது

    இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.

    இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.

    இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.

    இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.

    • ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.
    • இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி குமலன் ெதருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு ஆனந்தன் (23), என்ற மகனும் காவியா (19) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தன் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் கடந்த 1 வருடமாக வேலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 35 நாட்களாக வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலைகளை செய்து வந்தார். சம்பவத்தன்று செல்வராஜ், அவரது மனைவி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்.

    மகன் ஆனந்தன் மட்டும் வீட்டில் இருந்தப்படி கம்பெனி வேலை செய்து கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் செல்வராஜ் மதியம் தனது மகனுக்கு போன்செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. ஏற்கனவே ஆனந்தன் மன அழுத்தம் காரணமாக 3முறை தற்கொலைக்கு முயற்சி செய்ததால் சந்தேகம் அடைந்த செல்வராஜ் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீடு உள் பக்கமாக தாழ்போடப்பட்டு இருந்தது. இதையடுத்து ஜன்னல்வழியாக பார்த்த போது ஆனந்தன் சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே ஆனந்தன இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சூரம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×