என் மலர்
இந்தியா

VIDEO: 100 காலியிடங்கள்.. ஐடி நிறுவன வசாலில் வேலைக்காக காத்துக்கிடந்த 3000 இன்ஜினீயரிங் பட்டதாரிகள்
- 100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக வாக்-இன் நேர்காணல் நடந்துள்ளது.
- இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாசல் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மக்கள் தொகையில் கணிசமான அளவு இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியாவில் வேலையின்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை (ஐடி) வேலைக்காக இளைஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வேலைக்காக ஐடி நிறுவன வாசலைக் கடந்து சாலை வரை வரிசையில் நின்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை தளமாகக் கொண்ட ஒரு ஐடி நிறுவனத்திற்கு வெளியே 3,000 க்கும் மேற்பட்ட இன்ஜினீயரிங் பட்டதாரிகள் வாக்-இன் நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
100 ஜூனியர் டெவலப்பர் பதவிகளுக்காக ஆட்சேர்ப்புக்காக நிறுவனம், வாக் -இன் நேர்காணலுக்கு அழைப்பு விதித்திருந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் அங்கு படையெடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் விவாதப் பொருளாக மாறி வருகிறது.






