என் மலர்

    நீங்கள் தேடியது "Unemployment"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.
    • வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு டிசம்பரில் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த முறைகளின் அடிப்படையில் ஆய்வுகளை நடத்துகின்றன. அவை பொதுவாக அறிவியல் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இல்லை. மேலும், இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் முறையானது, பொதுவாக சார்புநிலையைக் கொண்டுள்ளது. இத்தகைய ஆய்வுமுடிவுகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    ''வேலைவாய்ப்பு-வேலையின்மை'' பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகள், காலமுறை தொழிலாளர் குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. சமீபத்திய வருடாந்திர அறிக்கை, 2020-ம் ஆண்டு ஜூலை முதல், 2021-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்துக்கு உரியது.

    2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அறிக்கை நகர்ப்புறங்களுக்கான புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

    இந்த அறிக்கைகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 44.5 சதவீதமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் இது 43.4 சதவீதமாக இருந்தது.

    வேலையின்மை விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ல் அதே காலக்கட்டத்தில் 8.3 சதவீதமாகவும் இருந்தது. எனவே, காலமுறை தொழிலாளர்குழு கணக்கெடுப்பின் தரவுகள், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
    • 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    புதுடெல்லி

    நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.

    அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

    அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?

    நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.

    கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு 3 ஆண்டுகள் உதவித்தொகை வழங்கப்படுவதாக விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • இதற்கான விண்ணப்பத்தினை WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 45 வயது மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயது மிகாமலும் இருக்க வேண்டும். தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயில்பவராக இருக்க கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருக்க கூடாது. தங்களது பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கினை தொடங்கி இருக்க வேண்டும்.

    பொது பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தோல்வியுற்றோர் ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ரூ.300, பிளஸ்-2 மற்றும் பட்டயப்படிப்பு ரூ.400, பட்டப்படிப்பு ரூ.600 என்ற அளவில் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.

    இதற்கான விண்ணப்பத்தினை பொது பதிவு தாரர்கள் நேரிலோ, இந்த அலுவலகத்தில் பெற்றோ அல்லது WWW.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில் விண்ணப்பத்தினை விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    அனைத்துப் பிரிவு மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு கல்வித் தகுதியினை பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தால் போதுமானது. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    மேற்கண்ட உதவித் தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.
    • நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

    மடத்துக்குளம்,

    மடத்துக்குளம் ஒன்றிய பி.டி.ஓ., விடம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. கடந்த நிதியாண்டிலும் பெரும்பாலானவர்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் செய்யவில்லை.

    நடப்பு நிதியாண்டிலும் வேலை மறுக்கப்பட்டு வருகிறது.இதனால் திட்ட சம்பளத்தைவாழ்வாதாரமாக கொண்டுள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், எவ்வித வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்து, திட்ட விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி 2.2 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. #Unemployment
    புதுடெல்லி:

    மத்திய அரசு அமைப்பான தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நாட்டில் தற்போது நிலவும் வேலை வாய்ப்பின்மை பற்றி புதிதாக கணக்கெடுப்பு நடத்தி உள்ளது.

    இதற்கு முன்பு 2011-12-ல் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருந்தது. இப்போது 6 ஆண்டுக்கு பிறகு 2017-18 நிதி ஆண்டில் கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது.

    இதில் தேசிய அளவிலும் ஒவ்வொரு மாநில அளவிலும் வேலை வாய்ப்பின்மை மிகவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    தேசிய அளவில் 6 ஆண்டுக்கு முன்பு வேலை வாய்ப்பின்மை 2.3 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்து உள்ளது.



    தமிழ்நாட்டில் முந்தைய கணக்கெடுப்பின்படி வேலை வாய்ப்பின்மை 2.2 சதவீதமாக இருந்தது. அது தற்போது 7.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதாவது முந்தைய அளவை விட 5.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    நாட்டிலேயே அதிக பட்சமாக கேரள மாநிலத்தில் தான் வேலை வாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

    அங்கு 6 ஆண்டுக்கு முன்பு இதன் சதவீதம் 6.7 ஆக இருந்தது. இப்போது 11.4 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    அதற்கு அடுத்த இடத்தில் அரியானா உள்ளது. அங்கு 2.8 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 8.6 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

    வேலைவாய்ப்பின்மை அதிகம் இல்லாத மாநிலங்களில் சத்தீஸ்கர் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு 1.5 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 3.3 சதவீதமாக இருக்கிறது.

    அதேபோல மராட்டிய மாநிலத்தில் 1.0 சதவீதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை இப்போது 4.5 சதவீதமாக இருக்கிறது. #Unemployment
    ×