என் மலர்
நீங்கள் தேடியது "வேலையின்மை விகிதம்"
- தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
- ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சுயாதீன பொருளாதார வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசின் 5.6% வேலையின்மை விகிதம் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என 50 பொருளாதார வல்லுநர்களில் 37 பேர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் வேலை செய்பவரை வேலை உள்ளவராகக் கருதும் அரசின் வரையறை, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலையின்மையின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் சிலரின் செல்வம் வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது.
ஆனால் தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அறிகுறி அல்ல என்று அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறுகிறார்.
பிற G20 நாடுகளைப் போல இந்திய பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், வேலையின்மை இந்தியாவின் மிகப்பெரிய சவால் என்றும், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
- ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
- டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.
பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.
* தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?
* 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?
* ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?
* பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
* ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






