என் மலர்
நீங்கள் தேடியது "digital economy"
- ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
- டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.
பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.
* தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?
* 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?
* ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?
* பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?
* ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருநாள் அரசுமுறைப் பயணமாக டோக்கியோ வந்தடைந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் மந்திரிகள், உயரதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர், அங்கிருந்து இம்பரீயல் ஹோட்டலுக்கு சென்ற மோடியை ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் அன்புடன் வரவேற்றனர். அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி நேற்று யாமானாஷி நகருக்கு வந்தார்.
அங்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வை சந்தித்த மோடி, இந்தியாவில் இருந்து கொண்டுசென்ற கலைநயம் மிக்க நினைவுப் பரிசுகளை அவருக்கு அளித்தார்.
ஜப்பானின் மிகப்பெரிய சிகரத்தை கொண்ட பியூஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள யாமானாஷி நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய ரோபோட் தயாரிப்பு தொழிற்சாலையை மோடி பார்வையிட்டார். பின்னர் இருவரும் இங்குள்ள பிரபல உணவகத்தில் மதிய உணவு அருந்தினர்.
இங்குள்ள தனது ஓய்வு இல்லத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கிறார். பின்னர், இரு நாட்டின் பிரதமர்களும் இங்கிருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தலைநகர் டோக்கியோவுக்கு ரெயில் மூலம் வந்தனர்.
ஜப்பான் பிரதமருடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்திய மோடி, டோக்கியோ நகரில் வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.

ஜப்பான் நாட்டின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபல தொழிலதிபர்களையும் இன்று சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். #1GBdata #cheaperinIndia #Modiinjapan






