என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "unemployment rate"

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    • தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
    • ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சுயாதீன பொருளாதார வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசின் 5.6% வேலையின்மை விகிதம் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என 50 பொருளாதார வல்லுநர்களில் 37 பேர் தெரிவித்துள்ளனர்.

    ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் வேலை செய்பவரை வேலை உள்ளவராகக் கருதும் அரசின் வரையறை, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலையின்மையின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கடந்த பத்தாண்டுகளில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் சிலரின் செல்வம் வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது.

    ஆனால் தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அறிகுறி அல்ல என்று அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறுகிறார்.

    பிற G20 நாடுகளைப் போல இந்திய பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

    இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், வேலையின்மை இந்தியாவின் மிகப்பெரிய சவால் என்றும், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

    • ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளது.
    • டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

    2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக பா.சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2014 மற்றும் 2019 க்கு இடையில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று மாண்புமிகு பிரதமர் கூறினார்.

    பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அதற்கான தரவு அவரிடம் இருக்கும் என்று உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    அதனால், மாண்புமிகு பிரதமரிடம் சில கேள்விகளை கேட்கிறேன்.

    * தயவு செய்து அந்த அறிக்கையின் தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவில் வெளியிடுவீர்களா?

    * 2019ம் ஆண்டுடன் அதை ஏன் நிறுத்த வேண்டும்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது ?

    * ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றால், 2014- 2019ல் உருவாக்கப்பட்ட மொத்த பணிகளின் எண்ணிக்கை என்ன?

    * பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் 42 சதவீதம் ஏன்? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலை கொடுக்கவில்லையா?

    * ஐஐடியில் 2024ம் ஆண்டின் வகுப்பில் 38 சதவீதம் பேர் ஏன் இன்னும் வேலைகளில் சேர்க்கப்படவில்லை? ஐஐடி பட்டதாரிகள் டிஜிட்டல் பொருளாதாரத்தால் புறக்கணிக்கப்படுகிறார்களா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×