என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலையின்மை"

    • கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.
    • தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    சென்னை:

    ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாக வேலையின்மை விகிதம் இருக்கிறது. இந்த வேலையின்மை விகிதம் என்பது வேலை செய்யத் தகுதி மற்றும் விருப்பம் இருந்தும், வேலை கிடைக்காமல் இருப்பவர்களில் சதவீதத்தை குறிக்கிறது.

    பொருளாதார மந்தநிலை, கணினி மயமாக்கல், குறிப்பிட்ட தொழிற்சாலை மூடப்படுவது, சிறந்த ஊதியத்துடன் வேலையை தேடுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் இருப்பது போன்ற நிகழ்வுகளால் இந்த வேலையின்மை விகிதம் ஒவ்வொரு மாநிலங்களிலும் அவ்வப்போது அதிகரிக்கும், குறையும். இதனை சரியாக கையாளும் மாநிலங்கள் வேலையின்மை விகிதத்தை சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஏற்றவாறு வைத்திருக்கும்.

    இதற்கான புள்ளி விவரங்களை தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்.எஸ்.ஓ.), காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பு (பி.எல்.எப்.எஸ்.) வாயிலாக ஒவ்வொரு காலாண்டுக்கும் அதாவது ஆண்டுக்கு 4 முறை அறிக்கையாக வெளியிடுகிறது.

    அதன்படி, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டுக்கான புள்ளி விவர அறிக்கையை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் வேலையின்மை விகிதம் குறித்த விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன.

    அந்தவகையில், கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டுக்கான தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் என்பது 5.7 சதவீதமாக இருக்கிறது. வேலையின்மை விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 11-வது இடத்தில் இருக்கிறது.

    அதில் முதல் இடத்தில் குஜராத் மாநிலம் உள்ளது. அங்கு வேலையின்மை விகிதம் 2.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதற்கடுத்தபடியாக கர்நாடகாவில் வேலையின்மை விகிதம் 2.8 சதவீதம் என இருக்கிறது.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேலையின்மை விகிதத்தை குறைக்க தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    அதற்கு உதாரணமாக, நடப்பாண்டின் 2-வது காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வேலையின்மை விகிதம் 5.9 சதவீதமாக இருந்து, அது 3-வது காலாண்டில் குறைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு (2024) இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வேலையின்மை விகிதம் பூஜ்ஜியம் என்ற அளவில் கொண்டு வருவதும் நல்லதல்ல. ஆனால் தமிழ்நாடு போன்ற அதிக தொழில்மயமாக்கப்பட்ட மற்றும் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலத்தில் வேலையின்மை விகிதம் 3 முதல் 5 சதவீதம் வரை என்பது உகந்த வரம்பாக பார்க்கப்படுகிறது.

    அதாவது, பொருளாதாரத்தை அதிக பணவீக்கத்திற்கு கொண்டு செல்லாமல், நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் வேலையின்மை விகிதமே சரியாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

    • பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார்.
    • கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்று விரும்புகிறார்.

    கல்வி, வேலைவாய்ப்பு பிரச்சினை குறித்து கேள்வி கேட்காமல் இருக்க இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

    பீகார் தேர்தலை முன்னிட்டு அவுரங்காபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவித்து வருகிறார்.

    உங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ரீல்களை உருவாக்குவதற்கு அடியமாக்க மோடி விரும்புகிறார். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இளைஞர்கள் தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக மோடி இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்க விருப்புகிறார்.

    நிதிஷ் குமாரும் நரேந்திர மோடியும் இந்த மாநில இளைஞர்களை வேலையின்மையில் தள்ளியுள்ளனர். மீண்டும் மீண்டும் வினாத்தாள் கசிவுகள், தகுதியான ஏழை மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கின்றன" என்று தெரிவித்தார். 

    • தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள்.
    • ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும், நிதர்சனமான உண்மைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சுயாதீன பொருளாதார வல்லுநர்களின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அரசின் 5.6% வேலையின்மை விகிதம் உண்மையான நிலையை பிரதிபலிக்கவில்லை என 50 பொருளாதார வல்லுநர்களில் 37 பேர் தெரிவித்துள்ளனர்.

    ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் வேலை செய்பவரை வேலை உள்ளவராகக் கருதும் அரசின் வரையறை, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வேலையின்மையின் உண்மையான அளவைக் குறைத்துக் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

    கடந்த பத்தாண்டுகளில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் சிலரின் செல்வம் வியத்தகு முறையில் வளர்ந்துள்ளது.

    ஆனால் தொழிலாளர்களில் பாதி பேர் 10 ஆண்டுகளுக்கு முன்பு சம்பாதித்ததை விடக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இது ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அறிகுறி அல்ல என்று அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் கூறுகிறார்.

    பிற G20 நாடுகளைப் போல இந்திய பெண்கள் வேலைவாய்ப்பில் பங்கேற்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

    இதற்கிடையே இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ், வேலையின்மை இந்தியாவின் மிகப்பெரிய சவால் என்றும், அரசுத் தரவுகள் உண்மையான நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். 

    • இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை.
    • பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.

    சீனாவைச் சேர்ந்த டிங், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களைப் பெற்றவர். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலைப் பட்டம், Peking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

    இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் காலாவதியானதால், புதிய வேலை எதுவும் கிடைக்காததால், அவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியர் நாட வேண்டியிருந்தது.

    ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூ.40,000 க்கு மேல் டிங் சம்பாதிக்கிறார்.

    "நாம் கடினமாக உழைத்தால், நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல" என்று டிங் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.    

    • பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.
    • அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

    கர்நாடகாவில் வேலை கிடக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தனக்கு தானே இரங்கல் போஸ்டர் அடித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த பிரசாந்த் ஹரிதாஸ் என்பவர் LinkedIn செயலில் 3 ஆண்டுகளாக வேலை தேடியுள்ளார்.

    அவரை எந்த நிறுவனமும் பணிக்கு எடுக்காததால், அதே செயலியில் தனக்கு தானே இரங்கல் போஸ்டரை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

    • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.
    • வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

    புதுடெல்லி :

    தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தனியார் நிறுவனம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், 2022-ம் ஆண்டு டிசம்பரில் நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகம் இருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த முறைகளின் அடிப்படையில் ஆய்வுகளை நடத்துகின்றன. அவை பொதுவாக அறிவியல் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இல்லை. மேலும், இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் முறையானது, பொதுவாக சார்புநிலையைக் கொண்டுள்ளது. இத்தகைய ஆய்வுமுடிவுகள் கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

    ''வேலைவாய்ப்பு-வேலையின்மை'' பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகள், காலமுறை தொழிலாளர் குழு கணக்கெடுப்பின் அடிப்படையில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. சமீபத்திய வருடாந்திர அறிக்கை, 2020-ம் ஆண்டு ஜூலை முதல், 2021-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலத்துக்கு உரியது.

    2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு அறிக்கை நகர்ப்புறங்களுக்கான புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

    இந்த அறிக்கைகளின்படி, 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 44.5 சதவீதமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் இது 43.4 சதவீதமாக இருந்தது.

    வேலையின்மை விகிதம் 2022-ம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 2019-ல் அதே காலக்கட்டத்தில் 8.3 சதவீதமாகவும் இருந்தது. எனவே, காலமுறை தொழிலாளர்குழு கணக்கெடுப்பின் தரவுகள், கொரோனா காலத்துக்கு முந்தைய நிலையைவிட உயர்ந்த மட்டத்தில் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.
    • இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லாதவர்களுக்கு இரட்டை அடி.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    உத்தரபிரதேசத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் குறைந்த பட்சத் தகுதியுள்ள பதவிகளுக்குக்கூட வரிசையில் நிற்கின்றனர்.

    முதலில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியே வருவது ஒரு கனவாக இருக்கிறது.

    ஆட்சேர்ப்பு முடிந்தாலும் கூட கேள்விதாள் கசிந்து விடுகிறது. தேர்வுகள் நடந்தாலும் கூட அதன் முடிவு தெரியாது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு முடிவு வந்தாலும் பணியில் சேர்வதுதை உறுதி செய்வதற்காக அடிக்கடி கோர்ட்டுக்கு செல்ல வேண்டும்.

    ராணுவத்தில் இருந்து ரயில்வே மற்றும் கல்வியில் இருந்து காவல்துறை வரை ஆட்சேர்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த லட்சக்கணக்கான மாணவர்கள் வயது முதிர்ந்தவர்களாக மாறியுள்ளனர். இந்த விரக்தியின் பிரமைக்குள் சிக்கிய மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி உடைந்து போகிறார். இவையனைத்தும் மன உளைச்சலுக்கு ஆளாகி, அவர் தனது கோரிக்கைகளை முன்வைத்து வீதியில் இறங்கும் போது, காவல்துறையினரிடம் இருந்து தடியடிகளைப் பெறுகிறார். ஒரு மாணவனுக்கு, வேலை என்பது வெறும் வருமான ஆதாரமாக இல்லாமல், அவனது குடும்பத்தின் வாழ்க்கையை மாற்றும் கனவாகவும் இருக்கிறது, இந்தக் கனவு தகர்க்கப்படுவதால், ஒட்டுமொத்த குடும்பத்தின் நம்பிக்கையும் சிதறடிக்கப்படுகிறது.இரட்டை என்ஜின் அரசு என்பது வேலையில்லா தவர்களுக்கு இரட்டை அடி.

    காங்கிரசின் கொள்கைகள் இளைஞர்களின் கனவுகளுக்கு நீதி வழங்கும். அவர்களின் தவத்தை வீண் போக விடமாட்டோம் என்று கூறியுள்ளார்.

    • வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது
    • அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது

    வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசால் மட்டும் சரிசெய்ய முடியாது. அனைத்து சமூக, பொருளாதார பிரச்சனைக்கும் அரசு மட்டும் தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பது தவறானது. தனியார் நிறுவனங்கள் தான் பணியமர்த்தலை செய்ய வேண்டும். தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை பெருக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    அனந்த நாகேஸ்வரனின் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "சிறு குறு தொழில் முனைவோருக்கு பதிலாக பெரிய முதலாளிகளுக்கு சலுகை கொடுப்பதிலேயே ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தால் வேலைவாய்ப்பின்மையை எப்போதுமே சரிசெய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார். 

    • வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார்.
    • டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    மக்களவைத் தேர்தல் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, ஹரியானா, ஒடிசா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று (மே 25) காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டெல்லியில் இன்று 7 மக்களவைத் தொகுதிகளுக்கு நடக்கும் வாக்குப்பதிவில் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் உற்சாகமாக வாக்களித்து வருகின்றனர்.

    அந்த வகையில் மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளி வந்துள்ள ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா மற்றும் குடும்பத்தினருடன் வாக்குச்சாவடிக்கு வந்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஜெய் பிரகாஷ் அகர்வாலுக்கு வாக்களித்தார்.

    வாக்களித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், எனது தந்தை, மனைவி மற்றும் எனது குழந்தைகள் இருவரும் வாக்களித்தனர். எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் இன்று வர முடியவில்லை. பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    மேலும் வெயில் அதிகமாக இருந்தாலும், வீட்டில் உட்கார வேண்டாம் என்று அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். தயவுசெய்து வாக்களிக்கவும் என்று கோரிக்கை விடுத்தார். கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் ஜூன் 1-ம் தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
    • 2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர்  தேர்தல் 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1-ந்தேதி என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ்- பரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சி கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்கின்றன. பாஜகவும், மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவையும் களத்தில் இருக்கின்றன. தேர்தல் தேதி நெருங்குவதால் பிரச்சாரக் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 4-ந் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

    பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனி

    காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்த பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது. எனவே இந்த விவகாரம் பிரதான பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களை மோடி ஏமாற்றி வருவதாகக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏமாற்றுதல் என்பதே ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் விஷயத்தில் பாஜக கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அண்ட் கம்பெனிக்கு இங்கிருந்து வெளியேறும் கதவை இளைஞர்கள் நிச்சயம் காண்பிப்பார்கள். கடந்த மார்ச் மாத நிலவரப்படி ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களுக்கான வேலையின்மை விகிதம் 28.2 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.

     

     

    2019 முதல் காஷ்மீரில் 65 சதவீத அரசுப் பணிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பணியில் உள்ள 60,000 அரசு ஊழியர்களுக்கும் நாளொன்றுக்கு ரூ.300ம் என்ற வீதமே வருமானம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பலருக்கு பணி உறுதி செய்யப்படாமல் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றி வருகின்றனர். விவசாயம், மருத்துவம், என அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். 

    • இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.
    • பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது.

    நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "நாட்டில் பெருகி வரும் வேலையின்மை குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த அவசர நிலை குறித்து பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு வெறும் 7.8℅ மட்டுமே. அரசு வேலை வழங்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வருவோம் என கூறிய போதிலும் கடந்த ஒரு வருட கணக்குகள் வேலையின்மை தீவிரமடைந்துள்ளதை எடுத்து காட்டுகிறது. அரசின் செயல் திட்டங்கள் தோல்வி அடைந்துள்ளதை இது சுட்டிக் காட்டுகிறது. இரயில்வே துறையில் பயிற்சி முடித்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாமல் அவதி படுகின்றனர்.

    ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் தேர்ச்சி பெற்ற 125 இளைஞர்கள் தங்கள் பணியினை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்களை அரசு தனியாருக்கு விற்று வருவதும் மக்கள் வேலையை இழப்பதற்கு காரணமாக அமைந்தது. அரசு தனது கொள்கைகளை திருத்தி படித்த இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை கிடைக்க ஆவன செய்ய வேண்டியது மிக அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.
    • ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான்.

    சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.

    பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.

    அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.

    வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.

    மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

    ×