search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elections"

    • சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.
    • அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பாராளுமன்ற பா.ஜனதா வேட்பாளராக நமச்சிவாயம், காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம், அ.தி.மு.க. வேட்பாளராக தமிழ்வேந்தன் போட்டியிட்டனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 26 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

    ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நடந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற போவது யார் என்பது குறித்து டீ கடை, ரியல் எஸ்டேட் அலுவலகம், வணிக நிறுவனங்கள், நண்பர்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சியினரிடையே கடும் விவாதம் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு கட்டத்தில் சூதாட்டமாக உருமாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என ஒரு தரப்பினரும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக் கனியை பறிப்பார் என இன்னொரு தரப்பினரும் பந்தயம் கட்டி வருகின்றனர். இதற்காக, லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

    இதுமட்டுமல்லாமல், வில்லியனுார் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., பெற்ற ஓட்டுகளை விட ஒரு ஓட்டாவது கூடுதலாக காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும் என ஒரு தரப்பினரும், வாய்பே இல்லை. இம்முறை வில்லி யார் தொகுதியில் நமச்சிவாயம் அதிக ஓட்டுகளை பெற்று தொகுதியில் முதலாவதாக வருவார் என எதிர்தரப்பினரும் ஆயிரக்கணக்கான ரூபாயை பந்தயம் கட்டி வருகின்றனர். இதுபோன்ற சூதாட்டம், மண்ணாடிப்பட்டிலும் களை கட்டி உள்ளது. சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் அதிக ஓட்டு களை பெற்று முன்னிலை வகிப்பார் என பலரும் பந்தயம் கட்டி வருகின்றனர்.

    இன்னொரு பக்கம், இந்த முறை சரித்திரம் மாறும் மண்ணாடிப்பட்டில் வைத்திலிங்கமே அதிக ஓட்டுகளை பெற்று சாதிப்பார் என எதிர்தரப்பினரும் பணத்தை பந்தயமாக கட்டி வருகின்றனர். அரசியல் சூதாட்டத்தில் பல லட்சம் ரூபாய் பந்தயமாக கட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தீர்வு ஜூன் 4-ந் தேதி தெரிந்து விடும்.

    • வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர்.
    • பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கோலமிடுதல், கிரிக்கெட் போட்டி, பலூன் பறக்க விடுதல் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த கழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏராளமான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்தை கோலமாக வரைந்து அதில் 1000 தீபங்கள் ஏற்றினர்.

    அப்போது வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். மேலும் ஒலி பெருக்கியில் விழிப்புணர்வு பாடலும் போடப்பட்டன.

    இந்த நூதன விழிப்புணர்வை பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.

    • சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.

    கொடைக்கானல்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.

    மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

    எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.

    இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். 

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.
    • நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி, வேட்பாளர் தேர்வு ஆகிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாரதிய ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் சில தினங்களில் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் பிரசார களத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் சார்பிலும் பங்கேற்க இருக்கும் பட்டியல் மற்றும் பிரசாரம் செய்யும் இடங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

    தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகர், பெஞ்சமின், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட் உள்பட பல நடிகர்கள் பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.

    அ.தி.மு.க. சார்பில் சிங்கமுத்து, வையாபுரி, விந்தியா, நாஞ்சில் அன்பழகன், கவுதமி, காயத்ரி ரகுராம், அனுமோகன், பபிதா, ஜெயமணி ஆகியோர் பிராசரம் செய்ய தயாராக இருக்கின்றனர். நட்சத்திர பேச்சாளர்கள் பிரசார பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    பிரசாரம் பற்றி சிங்கமுத்துவிடம் கேட்டபோது, கட்சி சார்பில் பிரசாரம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான பின்தான் யார்-யார் எங்கு பிரசாரம் செய்ய உள்ளார்கள் என்ற விபரம் தெரியவரும். தேர்தல் அறிக்கை மற்றும் பல்வேறு விசயங்கள் மற்றும் விமர்சனங்கள் தேர்தல் பிரசார களத்தில் பேச இருக்கிறோம்.

    கட்சியின் அறிவிப்பு வெளியிட்டவுடன் எங்களது பிரசார பணிகள் தொடங்கும் என கூறினார்.

    பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக நடிகைகள் குஷ்பு, நமீதா, ரஞ்சனா நாச்சியார் உள்பட பலர் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?
    • 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்ட விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர், தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திமுக துவங்கப்பட்டது வட சென்னையில் தான். எம்எல்ஏவாக, மேயராக, துணை முதல்வராக, இப்போது முதல்வராக ஆக்கியதும் வட சென்னை தான்.

    சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. சென்னையில் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளையும் திமுக அரசு ஏற்படுத்தியது தான். மேயராக இருந்தபோது மட்டுமில்லாமல், முதல்வரான போதும் மக்கள் சேவகனாக தான் செயல்படுகிறேன்.

    சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினோம். அமைச்சர் நேரு, மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை புதுப்பொலிவு பெற்று வருகிறது. வட சென்னை வளர்ச்சி திட்டங்களுக்காக முதலில் ரூ.1000 கோடி ஒதுக்கினோம். 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    குஜராத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், உடனடியாக ஹெலிகாப்டரில் சென்றார். நிதி கொடுத்தார். நான் முதல் முறையாக பிரதமரை சந்தித்தபோது, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டேன். அவர்கள் தரவில்லை.

    மத்திய அரசுக்கு நம்மிடம் இருந்து தான் அதிக நிதி போகிறது. ஒரு ரூபாய் கொடுத்தால், 25 காசுகள் தான் திருப்பி தருகின்றனர்.

    நாட்டுப்பற்று பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?

    வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் வரலாமா ? இந்தியாவை காக்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம் என்பதை மக்கள் அறிவர். தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா ?

    அதிமுக,பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவோடு கூட்டணி சேரும் கட்சிகள் பற்றி இன்னும் அதிகாரப் பூர்வமாக தெரியவில்லை.

    ஆனால் பா.ஜனதா தரப்பில் வெற்றி இலக்கை எட்ட புது புது வியூகங்களை வகுத்து வருகிறார்கள். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவதற்கான வேலைகள் நடந்து வந்தன. இந்நிலையில் அவர் டெல்லி மேல்சபை எம்.பி. யாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

    எனவே நீலகிரியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை களம் இறக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    மற்றொரு புறத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர்களையும் கண்காணித்து வருகிறார்கள். அதிருப்தியில் இருப்பவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள், மாற்று கட்சிகளில் இருந்தாலும் பிரதமர் மோடி என்ற வலிமையான தலைமை நாட்டுக்கு தேவை என்ற உணர்வுடன் இருப்பவர்கள், ஆகியோரை கண்காணித்து அவர்களில் பா.ஜனதாவுக்கு வர ஒத்துக் கொள்பவர்களை இணைப்பது இல்லாவிட்டால் தேர்தலில் அவர்களின் ஆதரவை பெறுவது என்ற அடிப்படையில் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.

    ஏற்கனவே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் 15 பேர் சமீபத்தில் டெல்லிக்கு சென்று பா.ஜனதாவில் இணைந்தனர்.

    காங்கிரஸ் கட்சியிலும் உழைப்பவர்களுக்கு பதவிகள் கிடைப்பதில்லை என்ற ஆதங்கம் மற்றும் கட்சியின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இன்மை ஆகிய காரணங்களால் பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். அவர்களை பா.ஜனதாவுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடக்கிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய தாரணியும் பா.ஜனதா பக்கம் போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

    கொங்கு மண்டலத்தில் பா.ஜனதா வலிமையோடு இருப்பது போல் அ.தி.மு.க. வும் வலிமையாக இருக்கிறது. அதற்கு வலிமையான தலைவர்களாக இருப்பது எஸ்.பி.வேலுமணியும், கே.டி.தங்கமணியும் தான்.

    ஏற்கனவே பா.ஜனதா தலைவர்களுடன் நெருங்கிய நட்பு கொண்ட அவர்கள் இருவரையும் பா.ஜனதா வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்கள். வருகிற 27-ந் தேதி பல்லடத்துக்கு வரும் பிரதமர் மோடியின் பொதுக் கூட்டத்துக்கு தேவையான உதவிகளையும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இன்று த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் மற்றும் குட்டைகளை 2-வது திட்டத்தில் இணைக்க வேண்டும். மத்திய அளவில் பெரும்பான்மையாகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளுங்கட்சியாகவும் உள்ள பாரதிய ஜனதா கட்சி, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக மற்ற கட்சிகளை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    தி.மு.க. அரசு மத்திய அரசை கண்டித்து பாராளுமன்றத்தில் நடத்தும் போராட்டம் தேர்தலுக்கான நாடகத்தை தொடங்கியதாகவே அர்த்தம். 2021 சட்டமன்றத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி யில் இருந்த கட்சிகளுடன் நட்புறவில் இருக்கிறோம்.

    மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து நாட்டின் சூழல் குறித்து ஆலோசனை நடத்தினேன். தேர்தல் கூட்டணி நிலைபாடு குறித்து வருகிற 12-ந் தேதி செயற்குழு-பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    இந்தியா கூட்டணி தொடக்கத்திலேயே முரண்பாடுடன் தொடங்கப்பட்டது. அதன் உண்மை முகத்தை மக்கள் அறிவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளி நாடு பயணம் குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
    • சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று விழுப்புரத்தில் ஆலோசனை நடத்திய அவர் இரவில் சேலத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பில் செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூட்டம் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஜி.வி.என். திருமண மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது.

    இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் பாராளுமன்ற தேர்தல் குறித்தும், அதற்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் எஸ்.கே. செல்வம், மாதேஸ்வரன், சண்முகம், சங்கர் மற்றும் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்றனர்.

    • ஈரோடு மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.
    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.

    இதையடுத்து வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் 24-ந்தேதி வரை சுமார் ஒரு மாத காலம் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

    தமிழகம் முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்கள் வாரியாக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்திக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதன் விவரம் வருமாறு:-

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாளான வருகிற 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு கோவையில் ஆலோசனை கூட்டத்தை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் தனது சுற்றுப்பணத்தை தொடங்குகிறார். அன்று மாலை நீலகிரி மாவட்டத்தில் அவர் பேசுகிறார்.

    மறுநாள் 27-ந்தேதி காலையில் திருப்பூர் மாவட்டத்திலும், மாலையில் ஈரோடு மாவட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்.

    28-ந்தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், 29-ந்தேதி கரூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் ஓ.பி.எஸ். பின்னர் சென்னை திரும்புகிறார்.


    பின்னர் ஜனவரி 3-ந் தேதி காலையில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் ஓ.பி.எஸ், மாலையில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் 4-ந்தேதியும், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தினருடன் 5-ந்தேதியும் ஆலோசனை மேற்கொள்கிறார். ஓ.பி.எஸ். சுற்றுப்பயணம் செய்யும் மற்ற மாவட்டங்கள் பின்வருமாறு:-

    6-ந்தேதி திருவண்ணாமலை, திருப்பத்தூர், 7-ந்தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, 8-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 9-ந்தேதி கடலூர், புதுவை, 10-ந்தேதி அரியலூர், திருச்சி, 11-ந் தேதி தேனி, மதுரை, 12-ந் தேதி விருதுநகர், தூத்துக்குடி, 19-ந்தேதி நெல்லை, தென்காசி, 20-ந்தேதி ராமநாதபுரம், சிவகங்கை, 21-ந்தேதி புதுக்கோட்டை, தஞ்சை, 22-ந்தேதி நாகை, மயிலாடுதுறை, 23-ந்தேதி திருவாரூர், 24-ந்தேதி குமரி மாவட்டம்.

    இந்த கூட்டங்களில் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

    • அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது.
    • மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில பா.ம.க. அவசர பொது குழு கூட்டம் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிவுறுத்தலின் படி புதுவை பா.ம.க. தலைமை அலுவலகமாக கவுண்டன்பாளையம், அன்சாரி துரைசாமி நாயக்கர் உள் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை தாங்கினார்.

    பொதுக்குழுவில் மக்க ளவைத் தேர்தலையொட்டி பா.ம.க. செயல்திட்டங்களை விளக்க மாநிலம் முழுவதும் கூட்டங்கள் நடத்துவது, கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்துவது, தொகுதி,கிராமக் கூட்டங்கள் நடத்துவது, இருசக்கர வாகன பிரச்சாரம் செய்வது, வாக்குச்சாவடி களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல் , வன்னியர் சங்க தலைவர் துரை என்ற ஜெயக்குமார், வன்னியர் சங்க துணை தலைவர் பாண்டுரங்கன், மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் தாபா சோம சுந்தரம், சமூக முன்னேற்ற சங்க பொறுப்பாளர்கள் நடேசன் , சம்மந்தம், சிவப்பிரகாசம் , பொன்னு சாமி, வன்னியர் சங்கம் செயலாளர் நாகப்பன், இளைஞர் சங்க செயலாளர் சங்கிலியன்,

    மாணவர் சங்கம் மதன் ,ஹரி மகளிர் சங்கம் மாநில செயலாளர் ஏபில் இளவரசன் , உழவர் பேரியக்கம் மாநில செய லாளர் மணிபாலன், ஜெயமூர்த்தி, அன்பு மணி தம்பிகள் படை மாநில தலைவர் பிரபாகரன், மாநில செயலாளர் பாலாஜி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் சந்தோஷ், உட்பட மாநில தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது.
    • தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது

    போபால்:

    230 உறுப்பினர்களை கொண்ட மத்தியபிரதேச மாநில சட்டசபையின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி இந்தாண்டு இறுதியில் அம்மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலை சந்திக்க ஆளும் பாரதியஜனதா கட்சி ஏற்கனவே தயாராகிவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த மாதம் 17-ந்தேதி 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா வெளியிட்டு அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.

    பாரதிய ஜனதாவை வீழ்த்த காங்கிரசும் தயாராகிவிட்டது. கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த ஆட்சி 2 ஆண்டு காலமே நீடித்தது. 2020-ம் ஆண்டு காங்கிரசை சேர்ந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் காங்கிரஸ் ஆட்சியும் கவிழ்ந்தது.

    இதையடுத்து சிவராஜ் சிங் சவுதான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. தொடர்ந்து அக்கட்சி ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாரதியஜனதா உள்ளது.

    அதே சமயம் இழந்த ஆட்சியை மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் மலர வைப்பதில் அக்கட்சி தலைவர்கள் மும்முரமாக உள்ளனர். இதற்கு பலனாக சமீபத்தில் பல பாரதியஜனதா தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி மறுபடியும் காங்கிரசில் இணைந்து வருகின்றனர். மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான ராஜேஷ் குப்தா ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் காங்கிரசில் சேர்ந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

    அதே சமயம் சில தலைவர்கள் விலகியதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பாரதியஜனதா ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இதில் மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், பாரதிய ஜனதா வெற்றிக்காக பாடுபடுவது குறித்தும் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு இன்னும் 3 மாதகாலம் இருக்கும் சூழ்நிலையில் பாரதியஜனதா தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    ×