என் மலர்
நீங்கள் தேடியது "தேர்தல்கள்"
- பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
- நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.
புதுடெல்லி:
இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.
உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.
வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.
தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.
சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.
அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.
எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.
- எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
- டெல்லியில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 145 கோடி மக்கள்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் மிகப்பெரிய அளவில் திருவிழா போன்று நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தல்கள் முதல் உள்ளாட்சி தேர்தல்கள் வரை மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு உற்சாகம் அளித்த ஆண்டாகவே அமைந்தது.
ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரசுக்கு இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.
தலைநகர் டெல்லி மற்றும் பீகார் மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் அக்கட்சி தோல்வியே அடைந்துள்ளது.

தலைநகர் டெல்லிக்கு பிப்ரவரி மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி அசத்தியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
தொடர்ந்து 10 ஆண்டாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சியினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தலைநகரிலேயே ஒரு இடம் கூட வாங்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் தேய்ந்து வருகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதேபோல், நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்தது.
பா.ஜ.க. மகத்தான வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது. பாஜகவுக்கு 89 இடமும், கூட்டணிக்கு தலைமை தாங்கிய நிதிஷ்குமார் கட்சிக்கு 85 இடமும் கிடைத்தது.
காங்கிரஸ் கட்சி 61 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதுபோலவே, இந்தியா முழுவதும் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும் காங்கிரஸ் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றி பெறவில்லை.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிரசுக்கு இந்த ஆண்டு ராசி இல்லாத ஆண்டாகவே முடியப் போகிறது.

சிறந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி அவசியம். எதிர்க்கட்சிதான் மக்களின் பிரதிநிதியாக, அரசை விழிப்புடன் செயல்படவைக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்வதற்கு 543 தொகுதிகளில் குறைந்தது 55 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சி இல்லாமல்தான் பா.ஜ.க ஆட்சிசெய்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் 99 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக அமர்த்தியது.
பல்வேறு மாநிலங்களில் மாநில கட்சிகளுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. அப்படி இருக்கும் நிலையில், வரும் தேர்தல்களில் மாநில கட்சிகள் ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளும் குறைந்துவிடும். இதே நிலை மற்ற மாநிலங்களில் நீடித்தால், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடத்தில்கூட இந்தியா கூட்டணியில் காங்கிரசால் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம். எனவே, இதுபோன்ற சிக்கல்களை சரியாகக் கையாண்டால் மட்டுமே காங்கிரசால் மீண்டும் தீவிர அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
- பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
- நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
ஒரு கட்சியின் வலிமையையும், அந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதுதான் தேர்தல்கள். அந்த வகையில் 2014-ல் அசுர பலத்துடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா. தொடர்ந்து பல மாநிலங்களிலும் தடம் பதித்து நாடு முழுவதும் தனது வளர்ச்சியை ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தி வருகிறது.
இப்போதைக்கு அவ்வளவு எளிதில் அசைத்துவிட முடியாது என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிகளின் பிடியில் இருக்கும் மலையாள சேதத்தில் தாமரை மலர என்றுமே வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றி பாரம்பரியமான காங்கிர சுக்கும், கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தன.
2 நகராட்சிகளையும் தொடர்ந்து 2-வது முறையாக கைப்பற்றி இருக்கிறது. ஒட்டுமொத்த தேர்தல் முடிவும் காங்கிரசுக்கு புதிய நம்பிக்கையையும், இடது சாரிகளுக்கு தளர்ந்துவிடாத மனநிலையை கொடுத்தாலும் இடதுசாரிகள் மற்றும் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவில் பா.ஜ.கவும் வேகமாக வளர்ந்து வருவதை நிரூபித்துள்ளது.
எனவேதான் இந்த உள்ளாட்சி தேர்தலை 'மாற்றத்திற்கான தருணம்' என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றம் எதிர்காலத்தில் நிச்சயம் அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.
நாட்டின் தென் பகுதியில் பா.ஜ.க தனது வெற்றி சரித்திரத்தை பதிவு செய்துள்ளது என்ற பேச்சு அடங்குவதற்குள் நாட்டின் மேற்கு பகுதியையும் பா.ஜ.க தன்வசப்படுத்தி இருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று வெளியானது.
286 நகராட்சிகளில் 245 நகராட்சிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 நகராட்சிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது.
அதேபோல் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிகளில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 372 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்துள்ள இந்த தேர்தல் மட்டுமல்ல இந்த ஆண்டில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் பா.ஜ.கவே வெற்றி வாகை சூடி இருக்கிறது.
தலைநகர் டெல்லியை 1998-ல் பா.ஜ.க ஆண் டது. அதன் பிறகு 27 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் பா.ஜ.கவால் வெற்றிக் கனியை ருசிக்க முடியவில்லை. 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத பலத்து டன் இருந்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்.5) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க முடிவுரை எழுதியது.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளை பா.ஜ.க கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் தலைநகர் ஆட்சியை கைப்பற்றியது. ரேகா குப்தா முதலமைச்சர் ஆனார்.
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பீகார் மாநில தேர்தலிலும் பா.ஜ.க மகத்தான சாதனை படைத்தது. கடந்த மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றியது. அதுமட்டுமல்ல பீகார் மாநில அரசியல் வரலாற்றில் முதல் முறையாக 89 இடங் களை பா.ஜனதா கைப்பற்றி சாதித்தது. கூட்டணிக்கு தலைமை தாங்கும் நிதிஷ்கு மார் கட்சி 85 இடங்களை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த இடைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.கவே கோலோச்சியது. சத்தீஸ்கரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சிக ளையும் பா.ஜ.க கைப் பற்றி உள்ளது. மொத்தம் உள்ள 173 இடங்களில் 126 இடங்கள் பா.ஜ.க வசமானது.
உத்தரகண்ட் மாநிலம் பித்ரோகர் மாநகராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலிலும் பா.ஜ.கவே வென்றது.
உத்தரபிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரியில் நடந்த இடைத்தேர்தலில் சமாஜ்வாடி கட்சியை தோற் கடித்து பா.ஜ.க வென்றது.
இதே போல் ராய்ப்பூர் மாநகராட்சி தேர்தலிலும் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க 60 இடங்களை கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக இந்த மாநகராட்சியை பா.ஜ.க கைப்பற்றியது.
பொதுவாக 2025-ம் ஆண்டு பா.ஜ.கவுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டாகவே அமைந்தது. காங்கிர சுக்கு இந்த ஆண்டும் ராசி இல்லாத ஆண்டாகவே தொடங்கி முடிய போகிறது.
அடுத்ததாக பிறக்கப் போகும் புத்தாண்டில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களிலும் எந்த கட்சி சாதிக்கும்? எந்த கட்சி சறுக்கும்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் ஏற்பட்டுள்ளது. இதை மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சி மூலம் முடிவு செய் வார்கள்.
- தேர்தல்களைக் கண்காணிக்க ஈகிள் குழுவை அமைத்துள்ளது காங்கிரஸ்.
- இந்தக் குழுவில் அஜய் மக்கான், திக்விஜய சிங் உள்பட் 8 பேர் இடம்பிடித்துள்ளனர்.
புதுடெல்லி:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படுவதை கண்காணிக்க, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், தலைவர்கள் மற்றும் நிபுணர்களின் அதிகாரம் அளிக்கப்பட்ட செயல் குழுவை (EAGLE)அமைத்துள்ளார்.
இந்தக் குழுவில் அஜய் மக்கான், திக்விஜய சிங், டாக்டர். அபிஷேக் சிங்வி, பிரவீன் சக்ரவர்த்தி, பவன் கேரா, குர்தீப் சிங் சப்பல், டாக்டர்.நிதின் ரவுத், சல்லா வம்ஷி சந்த் ரெட்டி ஆகியோர் உறுப்பினர்கள் உள்ளனர்.
முதலில் மகாராஷ்டிர வாக்காளர் பட்டியல் மோசடி பிரச்சனையை எடுத்துக்கொண்டு விரைவில் தலைமைக்கு விரிவான அறிக்கையை இந்தக் குழு சமர்ப்பிக்கும். மேலும், மற்ற மாநிலங்களில் கடந்த கால தேர்தல்களையும் பகுப்பாய்வு செய்யும்.
இந்தக் குழு வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது தொடர்பான அனைத்து பிற பிரச்சனைகளையும் முன்கூட்டியே கண்காணிக்கும் என தெரிவித்தார்.






