என் மலர்
நீங்கள் தேடியது "Schemes"
- புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது.
- எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
புதுச்சேரி:
புதுவை கம்பன் கலையரங்கில் நடந்த 4 அரசு திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுவையில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. மக்கள் எந்த எதிர்பார்ப்போடு கூட்டணிக்கு வாக்களித்தார்களோ, அந்த எதிர்பார்ப்புகளை ஒன்றன்பின் ஒன்றாக இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.
மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் துணையாக இருக்கின்றனர். புதுவையில் இன்று எல்லா திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்களே? என வயிற்றெரிச்சலில் எதிர்கட்சிகள் புலம்புகின்றன. குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் இந்த அரசை விமர்சிப்பதில் குறியாக உள்ளனர். இதைப்பற்றி முதல்-அமைச்சர் கவலைப் படவில்லை. மக்களுக்கு இந்த அரசை பற்றி தெரியும். நாங்கள் என்ன செய்வோம் என தெரியும்.
இது மக்களால் உருவாக்க ப்பட்ட அரசு. இதனால் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மக்களுக்காகவும், புதுவை வளர்ச்சிக்காகவும் இரவு, பகல் பாராமல் பாடுபட்டு வருகின்றனர். எதிர்காலத்திலும் இந்த அரசு மக்களுக்காக பாடுபடும். இத்திட்டங்கள் மக்கள் கையில் சேரும்போது பொருளாதாரம் நிச்சயமாக உயர்ந்திருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதல்-அமைச்சர் தொலைநோக்குடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வதற்கென நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் என்றார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ரூ.21.07 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2 வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொலை நோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறார். அது மட்டுமின்றி, பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்திடும் பொருட்டு, அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கென துறை ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து, அதற்கான நடவடிக்கை களை சிறப்பாக மேற் கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி, அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்பாடு அடையச் செய்வதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களின் அடிப்படைத்தே வைகளை நிவர்த்தி செய்வது ஒவ்வொரு மக்கள் பிரதி நிதிகளின் கடமையாகும். ஆகவே, தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் தங்களது கிராமங்களின் அடிப்படை கூடுதல் தேவைகள் குறித்து, எடுத்துரைத்து, அதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ள வேண்டும். அதில் தகுதியான கோரிக்கைகள் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்குமார், சத்யன் மேலவண்ணாயிரிப்பு ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னம்மாள், உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர்.
- விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
நெல்லை:
பாரதீய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினரு மான நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாடு நல்லாயிருக்க வீடு நல்லாயிருக்க வேண்டும் என புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொன்னதை போல் பிரதமர் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலை வாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயூஸ் மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழக த்தில் பயன்பெற்று ள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்ப ட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலை வாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடி க்கைகள் எடுக்கவேண்டும்.
பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்கு வதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை அடைப்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். தற்போது அடைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அடுத்த முதல்-அமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரக்ளுடைய விருப்பம்.
நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.
நெல்லையில் பருவமழை தவறிவிட்டது. பருவமழை நிலை மாறிவிட்டது. குளங்களில் நீரிருப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக ராஜ்பவன் மாறு வதாக சொல்வது முற்றிலும் தவறு. சில சட்ட திட்டங்களில் மாநில அரசுக்கும் கவர்னருக்கும் சில முரன்பாடுகள் இருக்கிறது. கருணாநிதி காலத்தில் இருந்தே இந்த நிலை நீடித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் நாகராஜன், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், இளைஞரணி பிரபாகரன், காசிராஜன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கீழக்கரையில் உள்ளாட்சி தேர்தலில் அறிவித்த 8 திட்டங்கள் நிறைவேறாமல் எட்டாக்கனியாக உள்ளது.
- இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.தி.மு.க.ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடியப்போ கிறது. ஆனால் கீழக்கரை நகராட்சியில் எந்த வளர்ச்சி, முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இது குறித்து கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கூறியதாவது:-
தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதும் மறந்து விடுகின்றனர்.உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதும் மக்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். முதற்கட்டமாக கீழக்கரை நகருக்கு தரமான நவீன வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை அமைத்து தருதல், மகளிருக்கு பல்வேறு வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மூலம் சொந்த கட்டிடத்தில் அமைத்து தருதல், கீழக்கரை நகரில் நவீன நூலகம், இளை ஞர்களுக்கு விளையாட்டு மைதானம், கீழக்கரைக்கு சுகாதார நலனை கருத்தில் கொண்டு பாதாள சாக்கடை திட்டம், நகரில் விரிவடைந்த பகுதிகளில் உடனடியாக தெரு விளக்கு, கீழக்கரையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை நகருக்கு கொண்டு வருதல் ஆகிய 8 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல் எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகமும், நகர் மன்ற சேர்மன் முன்வர வேண்டும். உடனடியாக பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி பகுதியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அதிரடி ஆய்வு மேற் கொண்டார்.
இலுப்பையூர், அகத்தாகுளம், பூமாலை ப்பட்டி, மறையூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பனைக்குடியில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் மற்றும் அய்யனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணிகளையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
இசலி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், நிர்வாக அலுவலக கட்டிடம் மற்றும் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி நிலைய கட்டிடத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இவ்வாறு நரிக்குடி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்த கலெக்டர் அதனை விரைந்து முடித்து அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- தமிழகத்தில் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
- சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பேசினர்.
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் மஸ்தான் பேசியதாவது:-
மாவட்டத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உதவும் சங்கங்கள் அமைத்து அதன்மூலம் பொது மக்களுக்கு உதவலாம் என்ற அடிப்படையிலும் மற்றும் ஒன்றிணைந்து அந்த உதவும் சங்கங்களின் பங்களிப்பு தொகையை பதிவு செய்வதன் மூலம் அரசின் சார்பில் வழங்கப்படும் அந்த தொகைக் கான 2 மடங்கு தொகையும் வழங்குவதற்கான வழிவகை யையும் முதல்-அமைச்சர் ஏற்படுத்தி உள்ளார்.
பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் குறிப்பாக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் போன்ற திட்டங்களை அறிவித்து பெண்களின் உரிமையை நிலை நாட்டுகின்ற வகையில் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோன்று தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்க்காக்களை பராமரிப்பதற்காக முதற்கட்டமாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் 77 பள்ளிவாசல்களில் பராமரிப்புப் பணிகள் தற்போது நடை பெற்று வருகிறது. தற்போது நடைபெற்ற கூட்டத்தொடரின் போது அதனை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்று சிறுபான்மை யினர் மக்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத் தப்பட்டு, அவர்களின் நலன் காக்கும் அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
கருணாநிதி வழியில் மக்களுக்கான ஆட்சியை தமிழகத்தில் வழங்கிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாத்து, குறிப்பாக சிறுபான்மை யினர் மக்களின் நலன் காக்கின்ற வகையில் அதற்கான திட்டங்களை அறிவித்து அவர்களின் நலனை காத்து வருகிறார்.
குறிப்பாக தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் சிறப்பான நிர்வாகம் முதல்-அமைச்சர் தலைமையில் அரசில் நடைபெற்று கொண்டி ருக்கிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையிலும், அமை தியை நிலைநாட்டுகின்ற வகை யிலும் ஒரு சிறப்பான நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 84 ஆயிரத்து 940 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சரஸ்வதி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலை வர் மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
- வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஆர்ச் உட்புறம் அண்ணா அரங்கில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடந்தது. சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், தேவகோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், நகர செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகர் சிங்கமுத்து, மதுரை தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசும்போது, கருவறை முதல் கல்லறை வரை சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்து செயல்படுத்தியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க. செயல்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, பெண்களுக்கு மானிய இருசக்கர வாகனம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.
திரைப்பட நடிகர் சிங்கமுத்து பேசுகையில், தி.மு.க. வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தி வருகிறது. வருங்காலங்களில் ஒரே குடும்பத்தினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஈேராடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில்போட்டியிடும். அந்த சின்னம் கிடைக்கா விட்டால் வேறு சின்னத்தில் நின்று வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் தேவகோட்டை தெற்கு தசரதன், வடக்கு முருகன், கண்ணங்குடி தெற்கு பெரிய சாமி, வடக்கு சரவணன், காரைக்குடி நகர் செயலாளர் மெய்யப்பன், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், நடராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் ரமேஷ், கண்டதேவி ஊராட்சி மன்ற தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
- பயனாளிகளுக்கு உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.
- முகாமில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து கலெக்டர் கூறினார்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கோ.பழனிவேல் வரவே ற்றார். கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்திரா, சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, ரூபாய் 1000 மாதாந்திர உதவித்தொகை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூபாய்.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, 20 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் உதவி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் இடு பொருட்கள், மானியம் மற்றும் பவர் டில்லர் என மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து பேசினார். முடிவில் பேராவூரணி வட்டாட்சியர் சுகுமார் நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து மனோரா கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்க அலையாத்தி காடுகள் உருவாக்க 14000 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.கழனிவாசல் ஊராட்சி கொரட்டூர் கிராமத்தில் 1 ஏக்கரில் ஊருக்கு ஒரு வனம் திட்டத்தில் தென்னை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கவின்மிகு தஞ்சை தலைவர் ராதிகா மைக்கேல், ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர், குப்பத்தேவன் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை சமர்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
- ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான (விராசத் கடன் திட்டம்), கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, கடன் பெறும் பயனாளிகளுக்கான ஆண்டு வருமானம், கடன் தொகை, வட்டி விகிதம் ஆகியவற்றில் கீழ்கண்டவாறு தளர்வுகளை நடைமுறைப்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையினை அதிகரித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கைவினை கலைஞர்களுக்கு (விராசாத் கடன்) திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கைவினை கலைஞர்களுக்கு திட்டம் 1-ன் கீழ் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00.000- கடன் வழங்கப்படுகிறது.
எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தினை நேரில் அணுகி அல்லது தொலைபேசி எண். 04362-278416 மற்றும் மின்னஞ்சல் dbcwo.tntnj@gmail.com மூலமாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
திருப்பூர் :
தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து திட்டப் பலன்களும் இணைய வழியில் பதிவு செய்யும்விவசாயிகளுக்கே வழங்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தோட்டக்கலைத்துறை மூலம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. தற்போதைய, 2022-23ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்ததுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும்.
தற்போது, விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இணையதளம் மூலம்விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே, அனைத்து பலன்களும் வழங்க இயலும் நிலை உள்ளதால்இதற்காக விவசாயிகள் ,http:/tnhorticulture.tngov.in/tnhortnet/registration-new.phpஇணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யத்தெரியாத, இயலாத விவசாயிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் நடைபெற்றது.
- அரசு பணிகளுக்கு தமிழில் தேர்வு கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு.
திருப்பூர் :
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழகம் இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம், அர்ச்சனை மொழியாக தமிழ், உயர்கல்வியில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் உயர்கல்வி உதவித்தொகை திட்டம், மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், அரசு பணிகளுக்கு தமிழில்தேர்வு போன்றவற்றை கொண்டுவந்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது.
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாகவும் அறிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை நிராகரித்து மாநில கல்வி கொள்கைக்காக குழு அமைத்துள்ள தமிழக அரசை பாராட்டுவதுடன், கல்வி உரிமையை பாதுகாத்திட கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றும் பணியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட காலமாக சிறையில் உள்ள இஸ்லாமியர்கள் 6 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மத்திய அரசின் 60 சதவீத நிதியில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் தகவல் தெரிவித்துள்ளார்.
- அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட த்தில் நடந்த பா.ஜனதா கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய இணை மந்திரி கபில்மோரேஸ்வா் பாட்டீல் ராமநாதபுரம் வந்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் பெற்ற 77 பயனாளிகளை சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பா.ஜனதா மாவட்டத் தலைவா் கதிரவன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் கபில்மோ ரேஸ்வா் பாட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை பாா்த்து பேசியபோது மகிழ்ச்சியாக இருந்தது.
நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் உயிா்நீா்த் திட்டம், தூய்மை இந்தியா கழிப்பறை திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஏரா ளமானோா் பயன டைந்துள்ள னா். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களுக்கும் 60 சதவீத நிதியை மத்திய அரசே வழங்கி வருகிறது.
தமிழக அரசு தனது நிதியில் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி மூலமே திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.