என் மலர்

    நீங்கள் தேடியது "beneficiaries"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.

    இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.

    மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
    • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

    இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சை மாவட்டத்தில் 5,49,869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வங்கி பற்று அட்டைகள் (ஏ.டி.எம் அட்டைகள்) வழங்கும் விழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், எஸ்.எஸ்.பழநிமா ணிக்கம் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    கலைஞர் மகளிர் உரிமை திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது.

    குடும்பத்திற்காக வாழ்நா ளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது.

    ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது, பெண்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தி. வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியா தையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.

    தஞ்சை மாவட்டத்தில் 549869 விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதில் பெண்களுக்கு அவரவர் கொடுத்த வங்கிக்கு பணம் அனுப்பப்பட்டு உள்ளது.

    விடுப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் அணுகி மேல்முறையீடு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கல்யாண சுந்தரம் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி .கே .ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) உமா மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவவளவன் மற்றும் அலு வலர்கள், வங்கியாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.
    • 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி தலைமை தாங்கினார்.

    வட்டாச்சியர் ரமேஷ், தனி வட்டாச்சியர் (சமூக பாதுகாப்பு) கவிதாஸ்,வட்ட வழங்கல் அலுவலர் நீலாயதாட்சி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய் ஆய்வாளர் புனிதா வரவேற்றார்.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர் உதவிதொகை, விதவை உதவிதொகை,இலவச வீட்டுமனை பட்டா,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை என மொத்தம் 46 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 776 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்தி வழங்கினார்.

    இதில் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயசெல்வம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் செல்லபாண்டியன்,சரவண அய்யப்பன்,வேளாண்மை உதவி அலுவலர் பழனிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரத்தி ல் வேளாண்மை –உழவர் நலத்துறை சார்பில் அட்மா, மாநில விரிவாக்க திட்டங்க ளுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் 2023-24 செயல்விள க்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் சாக்கோ ட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்கள், 5 பயனாளிகளுக்கு தார்பா ய்கள், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க கருவிகள், 1 பயனாளிக்கு பருத்தி கருவி ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கும்பகோ ணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ், உதவி தொழில்நுட்ப மேலாள ர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்.
    • பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் 76-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து, கலெக்டர் தீபக் ஜேக்கப், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டனர்.

    முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் கவுரவித்தார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மேலும், பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமை சேர்த்த 125 பேருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

    மேலும், போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியமாக 15 பேருக்கு ரூ.3 லட்சம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மின்கல இயங்கு வாகனம் ரூ.4.24 லட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு மற்றும் 2-ம் பரிசு பெறும் பயனாளிகள் 4 பேருக்கு ரூ.40 ஆயிரம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ.4.11 லட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கும், தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் ரூ. 1.01 கோடி மதிப்பில் 57 பயனாளிகளுக்கு என மொத்தம் 85 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், ஐ.ஜி. ஜெயச்சந்திரன், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், கோட்டாட்சியர், தாசில்தார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகாமில் 400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
    • முகாமை டாக்டர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா அண்ணன் கோயில் கிராமத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம், தனலட்சுமி மருந்தகம் மற்றும் பரிசோதனை மையம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் சத்யநாராயணன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மருந்தாளுநர் சடகோபன் கல்யாணராமன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பாஸ்கரன், சாமிசெழியன், சுப்பி ரமணியன், பழனியப்பன், கணேஷ், கேசவன் அப்துல் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருந்தகத்தை மருத்துவர் முருகேசன் திறந்து வைத்தார் மருத்துவ பரிசோதனை மையத்தை டாக்டர் முத்துக்குமார் திறந்து வைத்தார்.

    மருத்துவ மையத்தை மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் வீரராகவன் திறந்து வைத்தார்.

    மருத்துவ முகாமை மருத்துவர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மருத்துவர்கள் முத்துக்கு மார், முருகேசன், குருமூர்த்தி, தாரணி ஸ்ரீதர் கனிமொழி அக்ஷயா அருண்குமார் சௌந்தர்யா சிந்துஜா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் செல்வகுமார், சண்முகசுந்தரம், சிவகுரு, திருநாவுக்கரசு ராஜேந்திரன் அப்துல் கலாம் நர்சிங் கல்லூரி தாளாளர் மதியழகன் ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர்கள் கந்தசாமி பாலமுருகன் சண்முகம் நடராஜன் சரவணன் முருகன் அப்துல் நாசர் ராஜ்பரிக் குமார் கண்ணன் கோவிந்தராஜ் சேகர் கணேசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜமாத்தார்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    400 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கினார்கள் ரோட்டரி சங்க செயலாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • அடுத்த மாதம் 8-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகம் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடுதல் ஜூன் 2023 முதல் ஜூன் 2024 வரை முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாது காப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்த பெண் குழந்தைகளின் வயது 18-ஐ கடந்தும் முதிர்வுத்தொகை வழங்கப்படாமல் உள்ளவர்களின் விபரங்களை தொடர்ந்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று அவர்களுக்கு முதிர்வுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகளை கண்டறியும் முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து பயனாளிகளும் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது. பொது மக்களிடமிருந்து 351 மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரண காசோலை, 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.87 ஆயிரத்து 500- மதிப்பீட்டில் இயற்கை மரண உதவிதொகை காசோலைகள், முதல்-அமைச்சர் பொது நிவாரன நிதியின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலைகள், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,000 மதிப்பீட்டிலான இலவச தையல் எந்திரங்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5000 மதிப்பிலான ஆடை தேய்ப்பு பெட்டி, தொழிலாளர் நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் வீதம் விபத்து மற்றும் இயற்கை மரண உதவித் தொகை காசோ லைகள் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.15 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், உதவி ஆணையர் (கலால்) ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ) சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.
    • எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கும்பகோணம் அடுத்த திப்பிராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலை பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    முகாமை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் கண்ணாடிகளையும், காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டக ங்களையும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகளையும் வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, இ.சி.ஜி., முழு ரத்த பரிசோதனை, மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, தொழு நோய் கண்டறியும் பரிசோதனை, காசநோய் பரிசோதனை, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடைபெற்றது.

    மேலும், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநல மருத்துவத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவரும், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான முத்துசெல்வம், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் திலகம், உதவி இயக்குநர் டாக்டர் ரவிச்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலாராணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டியன், சசிகுமார், திப்பிராஜபுரம் ஊராட்சி தலைவர் முருகையன், கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.எஸ்.இளங்கோவன், பழனி, கீழச்சேத்தி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin