என் மலர்

    நீங்கள் தேடியது "Welfare Aids"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார்.
    • ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிரா விடர் நலம் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ரூ.2.80 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் சிறப்பாக நடைபெற்றது. காரைக்காலை அடுத்த கோட்டிச்சேரி சிங்காரவேலர் திருமண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர், மேல்நிலைக் கல்வித் துணை இயக்குனர் ராஜேஸ்வரி, மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், ஆதிதிராவிட நலத் துறையின் உதவி இயக்குனர் மதன்குமார் மற்றும் பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியுதவி, பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி, நீண்ட நாள் நோய் வாய்ப்பட்டு இருப்பவர்களுக்கு மாதம் ரூ.3000 வீதம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகளை, அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில், கலெக்டர் முகம்மது மன்சூர் பேசுகையில், இந்த ஆண்டு காரைக்கால் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பட்ஜெட்டில் இத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏழை களுக்கான உதவித்தொகை அவர்களுக்கு சரியாக சென்று சேர வேண்டும். கல்விக்காக செலவு செய்வதை யாரும் குறை கூற மாட்டார்கள். சுய உதவி குழுக்கள் மூலம் நிறைய திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கை அருகே சக்கந்தியில் ரூ.1.69 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சக்கந்தியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பல்வேறு துறைகளின் சார்பில் 288 பயனாளிகளுக்கு ரூ.1.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதன் மூலம் பலதரப்பட்ட மக்கள் பயனடைகின்றனர்.

    பொது மக்களுக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவல கத்தை தேர்ந்தெடுத்து மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தின் கடைகோடிவரை மக்கள் பயனடைவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் வருவாய் அலுவலர் மணிவண்ணன், திட்ட இயக்குநர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கையில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.
    • இதில் 66 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி 66 பயனாளிகளுக்கு ரூ.51.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மனிதநேயத்தை எல்லோரும் சரியாக கடை பிடித்தால் சமுதாயத்தில் பாகுபாடு என்ற நிலை முற்றிலும் ஒழியும். அதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனிதநேயத்தை உறுதிப்படுத்தும் வகையில் தீண்டாமையை அகற்றி நல்லிணக்கத்துடன் வாழவேண்டும்.

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜக்கிய நாடுகளை சேர்ந்த அனைத்து நாடுகளிலும் இலக்கீடுகளை நிர்ணயித்து 2030-க்குள் அதனை செயல்படுத் துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதனடிப்படையில் மத்திய, மாநில அரசின் சார்பில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிகழ்ச்சியில் மனித நேயம் குறித்து பள்ளி மாணவ மாணவிகள் தங்களின் பேச்சுத்திறன் வாயிலாக விரிவாகவும், சிறப்பாகவும் எடுத்துரைத்தனர். இதனை கருத்தில் கொண்டு எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைவரும் மனித நேயத்துடன் செயல்பட்டு, பிறருக்கு உதவும் மனப்பான்மையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், அரசு வழக்கறிஞர் (வன்கொடுமை) துஷாந்த் பிரதீப்குமார், ஆதிதிராவிடர் நலக்குழு, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு, தூய்மை பணிபுரிவோர்களுக்கான கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களான ஆறுமுகம், பூமிநாதன், மலைச்சாமி, செல்வக்குமார், பிச்சை, மற்றும் பொன்னுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார்.

    விழுப்புரம்:

    நாடுமுழுவதும் இன்று 74-வது குடியரசு தினவிழா கோலகலமாக கொண்டா டப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல் அணிவகுப்பு மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மோகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வானில் வண்ண பலூன்களையும், வெண்புறக்களையும் பறக்கவிட்டார். தொடர்ந்து காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டு, திறந்தஜீப்பில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுதந்திர போராட்ட தியாகிகள் 24 பேருக்கு சால்வை அணைத்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் விழாவில் மொத்தம் 181 பேருக்கு ரூ.1, 18,94 ,483 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும் நிவாரண நிதியிலிருந்து நான்கு நபர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை கலெக்டர் சித்ரா விஜயன், டி.ஐ.ஜி. பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவகுமார் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி மற்றும் போலீசார், அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நாளை வழங்கப்படுகிறது
    • இந்த நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    மதுரை

    முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு வின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி மதுரையில் நாளை ஏழை எளியவருக்கு இலவச வேட்டி- சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    மதுரையின் முன்னாள் நகர் மன்ற தலைவராகவும் மதுரை பாராளுமன்ற உறுப்பினராக 2 முறை திறம்பட மக்கள் பணியாற்றியவர் ஏஜி.சுப்புராமன்.இவரது மகனும், மதுரை மாவட்ட காங்கிரசின் தன்னிகரில்லா தலைவராக விளங்கி மதுரை மக்களின் பேரன்பினால் 3 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர் ஏ.ஜி.எஸ். ராம்பாபு.

    அவர் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந் தேதி இயற்கை எய்தினார். ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மதுரை விளக்குத்தூண் அருகே உள்ள மஹால் வடம்போக்கி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

    இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஏ.ஜி.எஸ். ராம்பாபு மீது பற்று கொண்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், முன்னாள், இந்நாள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சவுராஷ்டிரா சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள், சமுதாய பெருமக்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மன்ற தலைவர்கள், நிர்வாகிகள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டு ஏ.ஜி.எஸ். ராம்பாபுவின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்துகிறார்கள். இதை தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக நலிவுற்ற, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி -சேலைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த நினைவேந்த லுக்கான ஏற்பாடுகளை ஏ.ஜி.எஸ். அகாடமி, ஏ.ஜி.எஸ்.ஆர் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து செய்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறிவானந்த பாண்டியன் நினைவு நாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    மதுரை

    அகில இந்திய நாடார் இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் மறைந்த அறிவானந்த பாண்டியனின் 22-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பாரதப் பெருந்தலைவர் காமராஜர் அறிநிலையத்தில் நடந்தது.

    அவைத்தலைவர் எஸ்.கே.மோகன் தலைமை தாங்கினார். காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி முன்னிலை வகித்தார். பேரவையின் பொதுச்செயலாளர் வி.பி.மணி வரவேற்றார்.

    வேளாண் உணவு வர்த்தக மைய நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் ஏழை பெண்களுக்கு சேலை வழங்கியும், மதுரை அம்மன் சன்னதி காந்தி சிலை அமைப்புக்குழு தலைவர் கவிஞர் சிதம்பர பாரதி தையல் எந்திரம் வழங்கியும் புகழ் அஞ்சலி செலுத்தினர்.

    விழாவில் ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் தர்மராஜ், துணைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், துணைச்செயலாளர் பாஸ்கரன், காமராஜர் அறநிலைய தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் சோமசுந்தரம், பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி தலைவர் கணேசன், துணைத்த லைவர் பழனிக்குமார். செயலளர் ஆனந்த், இணைச்செயலாளர் சூசை அந்தோணி.

    வழக்கறிஞர் விஜய முருகேசன் மாவட்டத் துணைத்தலைவர் சந்தி ரசேகரன், பொருளாளர் கிடாரிபட்டி சேகர், மதுரை மாநகர் துணைத்தலைவர் ரவி, முத்து, செயலாளர் மதிவாணன். இணைச்செயலாளர் பாண்டி. மடப்புரம் சம்பத், கிழக்குத் தொகுதி தலைவர் கதிர்வேல், துணைத்தலைவர் கலைமதிச்செல்வன், செயலாளர் முருகேச பாண்டியன், பொருளாளர் ரவிச்சந்திரன்.

    மத்திய தொகுதி தலைவர் கார்த்திகைசெல்வம், துணைத்தலைவர் பாண்டி யராஜன். துணைத்தலைவர் ஆனந்த ஜோதி, செயலாளர் கணேசன். துணைச்செயலாளர் குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ராதா கிருஷ்ணன், பொருளாளர் நாகராஜ், மேற்குத்தொகுதி தலைவர் சிவக்குமார். துணைத்தலைவர் தவசிலிங்கம், பொருளாளர் பால்ராஜ், துணைச்செயலாளர் வினோத், இரும்பு கண்ணன்.

    தெற்கு தொகுதி தலைவர் நாகசேகர், துணைத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் மகாராஜன், பொருளாளர் செல்வராஜ், துணைச்செயலாளர் முத்துமாரியப்பன், ஆலோசகர் சரவணக்குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மதுரை மாநகர் தலைவர் குமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிவகங்கையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு டிவாழ்வுத்துறை உதவித் தொகை, மாற்றுத்திறனா ளிகளுக்கான உபக ரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது மக்களிடம் இருந்து 376 மனுக்கள் பெறப்பட்டன.

    தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக பாதுகாப்பு திட்டம், மாவட்ட தொழில் மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.40.84 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்த நாளையொட்டி மாவட்ட அளவில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 5 பள்ளி மாணவிகளுக்கும், 3 கல்லூரி மாணவிகளுக்கும் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு

    சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 298 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் திட்டப்பகுதியின் சார்பில், 6 பயனாளிகளுக்கு மனை ஒதுக்கீட்டு ஆணைகள், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில், 17 பயனாளிகளுக்கு குழந்தை திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் இடை நின்றவர்களுக்கு தொழில் பயிற்சிக்கான ஆணைகள், சிவகங்கை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில், பிரதமரின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் மூலம் குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.69 ஆயிரத்து 243 மதிப்பீட்டில் இருசக்கர வாகனங்கள் மற்றும் தலா ரூ.4 ஆயிரத்து 299 மதிப்பீட்டில் குளிர்காப்பு பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சார்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் உறுப்பினரின் வாரிசுதாரர்கள் 7 மாணவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோ்ச்சி பெற்றதை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.1,500 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.3.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பிரபாகரன் (தேவகோட்டை), கலெக்டரின் நோ்முக உதவியாளர் (பொது) கண்ணகி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் காமாட்சி, உதவி இயக்குநர் (மீன்வளத்துறை) சிவராமசந்திரன், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாகப் பொறியாளர் புஷ்பராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன் குடிசை மாற்று வாரிய சமுதாய அலுவலர் காளிதாஸ், மீன்வளத்துறை ஆய்வாளர் ஜோபியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரைக்குடியில் கருணாநிதி பிறந்த நாளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி 15-வது வட்ட தி.மு.க. சார்பில் கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் சிலை அருகில் நடந்தது.

    நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுப.துரைராஜ், நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தி.மு.க. கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்த், சின்னத்துரை, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சத்யா ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், அன்னை மைக்கேல், நாகராஜன், சித்திக், தெய்வானை, கலா, ஹேமலதா செந்தில், பூமி, கார்த்திகேயன், தனம் சிங்கமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், கென்னடி, முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ்,புதுவயல் பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி, நிர்வாகிகள் ருக்மா சரவணன், அமராவதிபுதூர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×