search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare Aids"

    • கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சி பாதையில் செயல்படுத்த கூட்டுறவு துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
    • 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. தமிழக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் , எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம் , ராமலிங்கம் , எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இவ்விழாவில் 2315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு சிறப்பாக செயல்பட்டமைக்காக விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவி களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வழங்கினார்.

    பின்னர் அவர் பேசிய தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களை பொருளாதார வளர்ச்சிப் பாதையில் செயல்படுத்திட கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்துசெல்வம் , மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி , வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா , பூர்ணிமா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (முழு கூடுதல் பொறுப்பு) பழனீஸ்வரி , இணைப் பதிவாளர் பெரியசாமி , துணைப் பதிவாளர் அப்துல் மஜீத் மற்றும் துணைப் பதிவா ளர்கள், பொது மேலாளர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
    • குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • உலக மனநல தினத்தை முன்னிட்டு பி.வி.எம் மனநல காப்பகத்தில் கருத்தரங்கம் நடந்தது.
    • டாக்டர் அப்துல் ரசாக் விளக்கவுரையாற்றினார்.



    காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

     ராமநாதபுரம்

    உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதிநகரில் செயல்படும் பி.வி.எம். மனநலக்காப்பகத்தில் மனநலம் குறித்த கருத்த ரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு கட்டடக்கலை நாயகன் விருதாளரும், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவரும், கீழக்கரை,ராமநாதபுரம், தேவிபட்டினம், தொண்டி, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு பல்வேறு கட்டடங்களை கட்டி வரும் மெரீனா காப்பகத்தில் இருப்பவர்களுக்கு ரோட்டரி சங்க தலைவர் சுல்தான் சம்சுல் கபீர் உணவு வழங்கினார்.

    கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளரும், ரோட்டரி செயலாளருமான எபன் பிரவீன் குமார், ரோட்டரி சங்க பொரு ளாளரும், முன்னாள் தலைவருமான சுப்ரம ணியன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அரசு வட்டார மருத்துவ அலுவலருமான செய்யது ராசிக்தீன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும், அப்பா மெடிக்கல்ஸ் உரிமையாளருமான டாக்டர் சுந்தரம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கீழக்கரை நகர் உப தலைவர் சபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி மாஸ்டர் ரெடிமேட்ஸ் உரிமையாளர் செல்வ நாராயணன், மூத்த வழக்க றிஞரும், ராமநாதபுரம் இலவச சட்ட மைய வழக்கறி ஞருமான கேசவன், மதுரா பவர்ஸ் நிறுவனர் சித்ர வேலு, மெரீனா கன்ஸ்ட்ரக்சன் பொறியாளர் செய்யது முக்தா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பி.வி.எம் மனநலக்காப்பக நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் உலக மனநல தினத்தை பற்றி விளக்கவுரையாற்றினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தின் தலைமை பொறுப்பாளர் உம்முல் சல்மா நன்றி கூறினார்.பி.வி.எம் மனநலக்காப் பகத்தில் உள்ள பயனாளிகளுக்கு அன்னதானம், சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பி.வி.எம். மனநலக் காப்பகத்தின் திறப்பு விழா சிறப்பு மலரும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது.

     


    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    • கமுதி அருகே ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி னார். பரமக்குடிசார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கமுதி தாசில்தார் சேதுராமன் வரவேற்றார்.

    முகாமில் 164 பயனாளி களுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்தின் வழங்கி னார். பின்னர் அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளை மனுக்கள் மூலம் கொடுத்து பெற்றுக்கொள்ளவே நடத்தப்படுகின்றன.

    கமுதி தாலுகாவில் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி காய்கறிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. இது பாராட்டுக்குரியது.

    இதனை பரமக்குடியில் அரசு கொள்முதல் நிலை யத்தில் விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும் என்றார்.

    விழாவில் கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர பாண்டியன், கமுதி யூனியன் மேனேஜர் ராமச் சந்திரன், கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, கமுதி ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் அய்யனார் மாவட்ட இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    விழுப்புரம்:

    சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று காவல்த்துறை, வனத்துறை, தீயணைப்பு ஆகிய துறையினர் ஊர்காவல், தேசிய மாணவர் படையினர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து பரிசுகளை வழங்கினார்.

    அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் பழனி வழங்கினார். அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 20 பேருக்கு ரூ.25,37,246 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் பல்வேறு கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், தமிழக பாரம்பரிய கலையான மல்லர்கம்ப கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக், போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, தாசில்தார் வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக காந்தி சிலைக்கு கலெக்டர் பழனி, நகராட்சி ஆணையர் ரமேஷ் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர்.

    விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் சர்க்கரை தமிழ்ச்செல்வி பிரபு தலைமையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரையாற்றி பின்னர் விழாவிற்கு வந்திருந்த கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் .துணைத் தலைவர் சித்திக் அலி,விழுப்புரம் நகராட்சி கமிஷனர் ரமேஷ், கவுன்சிலர்கள் மணவாளன், சிவக்குமார்,அமர் ஜி.உஷா மோகன், வசந்தா, மகாலட்சுமி உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியாளர்கள், செவிலியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    முதுகுளத்தூர்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி பேரூராட்சிகள்ஆகியவற்றின் தூய்மை பணியாளர்கள் மற்றும் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மற்றும் செவிலியர்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 14 பொருட்கள் கொண்ட சமையல் பொருட்களை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் முதுகுளத்தூர் பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் ஒன்றிய செயலாளர்கள் கீழக்குளம் சண்முகம், பூபதி மணி, கோவிந்தராஜ் ஆகியோர் வழங்கினர்.

    • ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் உயர்சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது.

    இதில் மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, திருப்புவனம், காளை யார்கோவில் ஆகிய வட்டா ரங்களை சேர்ந்த 50 விவசாயி களுக்கு தோட்டக்கலை இயக்கம் 2023-24 திட்டத்தின் கீழ் சிப்பம் கட்டும் அறை, வெங்காயம் சேமிப்பு கிடங்கு, பண்ணை குட்டை, மண்புழு உரக்கூடம், நிரந்தர பந்தல் ஆகியவற்றுக்காக ரூ.37.72 லட்சம் மதிப்பீட்டில் ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகளவில் பல்வேறு நாடுகளில் போதிய சூழல் மற்றும் இடவசதியின்றி தாங்கள் வசித்து வரும் வீட்டின் மாடி புற பகுதியில் தோட்டத்திற்கான மாதிரியினை ஏற்படுத்தி, அதன் மூலம் நெற்பயிர் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர், அதற்கு மாற்றாக இயற்கை யான சூழல் மற்றும் மண்வ ளத்தினை பெற்றுள்ள நாம், பல்வேறு வகையான தோட்டப் பயிர்களை மண்வளத்திற்கு ஏற்றாற்போல் பயிர் செய்து பயன்பெற வேண்டும்.

    இன்றைய நவீன காலத்திற்கேற்றாற்போல், விவசாய தொழிலில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நாம் முன்னேற்றம் காண வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துவதற்கும் உரிய விலை கிடைக்கும் வரையில் அதனை முறையாக சேமிப்பதற்கும் அரசால் பல்வேறு வழி வகைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் ஆகியன குறித்து, விவசாயிகள் முறையாக அறிந்து கொண்டு பயன்பெ றுவதற்காக இந்த கருந்த ரங்கானது நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) செ. சக்திவேல், சிவகங்கை வேளாண் துணை இயக்குநர் பழ. கதிரேசன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம் குன்றக்குடி, வேளாண் விஞ்ஞானிகள், மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலை துறைசாந்த அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யங்கோட்டை பள்ளிக்கு ரூ.9.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட் டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் கழிவறை வசதியின்றி மாணவ-மாணவிகள் வயல் வெளி யை பயன்படுத்தி வந்தனர். இது பற்றி தகவலறிந்த நகரி வைகை அக்ரோ நிறுவனம் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது,

    ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் டி.வி. வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி கருப்பண் ணன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகே சன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் காளீஸ்வரி வரவேற்றார்.

    இந்த விழாவில் வட்டார கல்வி அலுவலர் ஜெசிந்தா நவீன சுகாதார வளாகத்தை திறந்து வைத்தார். அக்ரோ இயக்குநர் குணசேகரன் ஸ்மார்ட் டி.வி. வழங்கினார்.

    இதில் ஆசிரியர்கள் வைகை அக்ரோ நிறுவன பணியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.

    • ரூ.7.84 கோடி மதிப்பில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    தமிழக முதல்-அமைச்சர் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மற்றும் சிறு பான்மையின சமூகத்தினர் சமூக கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில், மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலை களில் தங்களது நிலையை உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் செய்ல்பட்டு வருகிறார்.

    அதன் அடிப்படையில் சமுதாயத்திலுள்ள இதர பிரிவினருக்கு சமமான நிலையினை அனைத்துத் துறைகளிலும் அவர்கள் அடைவதை இலக்காக கொண்டும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் அதே பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட் டுள்ளது. டாப்செட்கோ கடன் திட்டம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    7 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பில் இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு பல்வேறு அரசு துைறகளின் சார்பில் பல கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளன. முஸ்லிம், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் சார்பில் 286 பெண்களுக்கு ரூ.31 லட்சம் மதிப்பில் கடனுதவிகளும், உலமாக்கல் மற்றும் இதர பணியாளர் நலவாரியம் சார்பாக ரூ.72 ஆயிரம் மதிப்பில் கடனு தவியும் வழங்கப்பட்டுள்ளது.

    டாம்கோ திட்டத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் 101 பயனாளிகளுக்கும், 12 ஆயிரத்து 162 பயனாளிகளுக்கு ரூ.2½ கோடி மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 6ஆயிரத்து69 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பில் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின பிரிவை ேசர்ந்த 5,346 மாணவ-மாணவி களுக்கு ரூ.1½ கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளில் (மே 2021 முதல் ஜூன் 2023 வரை) ராமநாதபுரம் மாவட்டத்தில் 25460 பயனாளிகளுக்கு ரூ.7கோடியே 48லட்சத்து 87ஆயிரத்து 172 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சி 16 கால் மண்டபம் பகுதியில் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி துணை அமைப்பாளர் விமல் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் ஆறுமுகம், ஜெயராமன், பெருங்குடி வசந்த் முன்னிலை வகித்தனர். மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினர். பகுதி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். கவுன்சிலர்கள் சிவசக்தி ரமேஷ், கருப்பசாமி, வக்கீல் ஸ்ரீதர், தனுஷ்கோடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் த.மு.மு.க- ம ம.க. சார்பில் ஏழை,எளிய மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலிமுல்லா கான் அறிவுரையின் பேரில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிளை சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பபுள்ள உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை ஏழைகளுக்கு வழங்கினர். 170 குடும்பத்திற்கு தலா 5 கிலோ அரிசி, உணவு பொருட்கள் ரூ. 1லட்சத்து 23 ஆயிரத்து 700 ரூபாய், 12 பேருக்கு ரூ.500 வீதம் ரூ.6 ஆயிரம், கல்வி உதவியாக ரூ.22 ஆயிரம், மருத்துவ உதவி 2 பேருக்கு ரூ.20 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 840 மதிப்பில் உதவிகளை மாவட்ட பொருளாளர் பனைக்குளம் பரக்கத்துல்லா தலைமையில் கிளை தலைவர் ஹாஜா நஜ்முதீன் முன்னிலையில் வழங்கப்பட்டது.

    இதில் ம.ம.க. செயலாளர் பாலகிருஷ்ணன், த.மு.மு.க., ம.ம.க. பொருளாளர் நவீன் பாதுஷா, மூத்த நிர்வாகி செய்யது முகமது, கிளை நிர்வாகிகள் மதார், அர்ஜுணை குமார், கரீம் கனி,ஹபீப் ராஜா,பாருக் உசேன், ராஜா சலீம்,ரியாஸ், நாகூர் கனி, சேக், அஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×