search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Assembly"

    • காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.
    • வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் 2 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் 26-ந்தேதியும், 2-வது கட்ட தேர்தல் மே மாதம் 7-ந்தேதியும் நடக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மாதம் (மார்ச்) 16-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊரான கலபுரகியில் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, 18-ந்தேதி சிவமொக்காவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பிறகு தற்போது 3-வது முறையாக பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்கும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் மைசூரு மண்டஹள்ளி விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் மகாராஜா கல்லூரி மைதானத்துக்கு வருகிறார்.

    இந்த கூட்டத்தில் மைசூரு-குடகு தொகுதி வேட்பாளர் மைசூரு மன்னர் யதுவீர், மண்டியா தொகுதி வேட்பாளர் குமாரசாமி, ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, சாம்ராஜ்நகர் தொகுதி வேட்பாளர் பால்ராஜ் ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    மைசூரு பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் மாலை 6 மணி அளவில் மங்களூருவுக்கு செல்ல உள்ளார். முதலில் மங்களூரு கோல்டு பிஞ்ச் சிட்டி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்க இருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டு, தற்போது வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்கிறது. மைசூருவில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வரும் பிரதமர் மோடி, சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு வாகன பேரணியில் பங்கேற்க உள்ளார். இந்த வாகன பேரணி இரவு 7.45 மணிக்கு தொடங்க உள்ளது.

    லேடிஹில் நாராயணகுரு சர்க்கிளில் இருந்து தொடங்கும் இந்த வாகன பேரணி லால்பாக், மங்களூரு மாநகராட்சி அலுவலகம், பல்லால்பாக், எம்.ஜி.ரோடு, பி.வி.எஸ். சர்க்கிள், கே.எஸ்.ராவ் ரோடு வழியாக ஹம்பன்கட்டா சிக்னல் வரை 2½ கிலோ மீட்டர் தூரம் நடக்க உள்ளது. இந்த வாகன பேரணியில் சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகன பேரணியின் போது பா.ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ அதிகாரி கேப்டன் பிரிஜேஷ் சவுடாவை ஆதரித்து மோடி வாக்கு சேகரிக்க உள்ளார்.

    இந்த வாகன பேரணியையொட்டி மங்களூரு நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வாகன பேரணி நடக்கும் லேடிஹில் பகுதியில் இருந்து ஹம்பன்கட்டா சிக்னல் வரை பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் மங்களூரு பதற்றமான பகுதி என்பதால் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கர்நாடக வருகையையொட்டி பா.ஜனதாவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.
    • முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    ரிஷிவந்தியம்:

    கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி வாணாபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    ரிஷிவந்தியம் வந்த எனக்கு தலைவர் விஜயகாந்த் வாழ்ந்த நாட்கள் தான் ஞாபகம் வருகிறது. கேப்டன் விஜயகாந்த் மக்களை சந்தித்து எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு ரிஷிவந்தியம் மக்களை சந்திக்க வந்துள்ளேன்.

    நான் எந்த தொகுதிக்கு சென்றாலும் தைரியமாக பேசுவேன். ஆனால் கேப்டன் விஜயகாந்த் வாழ்ந்த இந்த பூமியை நிச்சயமாக என்னால் மறக்க முடியவில்லை. எங்கு தேடினாலும் இதுபோன்ற உண்மையான பாசமான தொண்டர்களை பார்க்க முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் செய்த திட்டங்கள் குறித்து பேசிய போது திடீரென அவர் தேம்பி, தேம்பி அழ தொடங்கினார். இதைப்பார்த்த அங்கிருந்த தொண்டர்களின் கண்களிலும் கண்ணீர் வரத் தொடங்கியது. பின்னர் அவர் தனது அழுகையை அடக்கிக் கொண்டு மீண்டும் தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக அ.தி.மு.க. வேட்பாளர் குமரகுரு விஜயகாந்த் குறித்து பேசிய போது அவரும் கண் கலங்கினார்.

    • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை இந்த மாதம் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற 27-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 27-ந்தேதி நடைபெறும் என் மண், என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சுமார் 10 லட்சம் பேர், பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானமும், வாகனங்கள் நிறுத்த சுமார் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மதிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பல்லடத்தில் பிரதமர் 25-ந் தேதி கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்துள்ளது. பல்லடத்தில் நடைபெறுகின்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருகிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மட்டுமே இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மூழ்கக் கூடிய கப்பலாக, எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் உள்ளது.பிரதமர் மோடியுடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜனதா கூட்டணிக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் ராட்சத பலூன்களை திருப்பூரில் பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் மூலம் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுக்கூட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். 

    • திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.
    • நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர்.

    இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

    இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' இந்த மாதம் 26-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இந்தியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.

    வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்தான் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் அடிப்படை வாதமும், மதவாதமும் அதிகரித்துவிட்டது. பா.ஜனதா தொடர்ந்து வெற்றி பெற்று அதன் அஜன்டாவை நிறைவேற்றி வருகிறது. தேசிய கல்வி கொள்கை, அயோத்தியில் ராமர் கோவில், 370-வது சட்டப்பிரிவு நீக்கம் என்று பலவற்றை செய்து உள்ளது. இந்திய அரசியலமைப்பை மாற்றும் இந்த போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் குறிப்பிட்டு உள்ளது.

    • சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.
    • தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

    முன்னதாக மன்னார்குடி காந்தி சாலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பந்தலடி, மகாமாரியம்மன் கோவில் தெரு, ருக்மணி பாளையம், தேரடி, பெரிய கடைவீதி வழியாக சென்று கீழராஜ வீதியில் முடிவடைகிறது.

    இதில் சீருடை அணிந்த 118 ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கள் அணிவகுத்து சென்றனர்.

    தொடர்ந்து, பந்தலடியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் வி.ஜி.கே. மணி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன், வளரும் தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் பாலை.பட்டாபிராமன், ஆர்.எஸ்.எஸ். கோட்ட இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதனை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 6 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ். கொடி ஏற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மயிலாடுதுறை சின்ன கடை வீதியில் சங்க கொடிக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பாரதமாதா, மற்றும் நிறுவனர் கேசவர் மற்றும் தலைவர் மாதவர் ஆகியோரின் உருவப்படங்களை வாகனத்தில் வைத்து பேரணியாக சென்றனர்.

    பேரணியை தலைவர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது கண்ணாரதெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, பெரி யகடைவீதி மகாதான தெரு உள்ளிட்ட வீதிகளின் வழியாக துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

    தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். கொடியேற்றப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தனியார் பள்ளி தாளாளர் வெங்கட்ரமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் மௌன மடாலயம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி பேசினார்.

    இதில் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ இந்து பரிசத், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • தி.மு.க. ஆட்சியை தூக்கிப்போட மக்கள் நினைத்து விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ் ஏற்பாட்டில் கல்லல் பஸ்நிலையம் முன்பு அ.தி.மு.க.வின்

    52-வது தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், கொள்கை பரப்பு துணை செயலா ளரும், முன்னாள் அமைச்ச ருமான மாப.பாண்டிய ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    எடப்பாடியார் எண்ணத் திற்கு ஏற்ப எதிர்காலத்தில் வர இருக்கின்ற தேர்தல் மற்றும் கழகத்தினுடைய வளர்ச்சி பணியை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டி அமைக்கும் போது ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு தான் பதவி இதை நாம் செய்துவிட்டால் தி.மு.க. வினர் எத்தனை கோடி கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது பொதுமக்கள் இந்த ஆட்சியை தூக்கிப் போட நினைத்து விட்டார் கள்.

    சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிகப்படி யான வாக்கு வித்தியா சத்தில் நம் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் குழு அமைத்து இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    ஆளும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டார். மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் எங்கே? என்று கேட்டால் நிலம் இருக்கிறவர்களுக்கு இல்லை என்கிறார். நகை கடன் தள்ளுபடி எங்கே என்று கேட்டால் கார் இருக்கிறது என்கிறார். இப் படி வாக்குறுதி கொடுக்கும் போது அனைவருக்கும் தருவேன் என்றவர் இப் போது கொடுக்காமல் இருப்பதற்கான கார ணங்களை தேடி கொண்டி ருக்கிறார்.

    பொது மக்களிடம் எந்த பொய்யை கூறினால் வாக்கு களை பெறலாம் என்பது தி.மு.க.வினர் கை தேர்ந்த வர்கள் என்றும், ஆட்சிக்கு வந்த பின் அதனை நிறை வேற்ற மாட்டார்கள் என்றும், தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உமாதேவன் நாகராஜன்.நகர செயலாளர் ராஜா ஒன்றிய செயலாளர்கள், கருணாகரன் செந்தில்குமார், அருள்ஸ்டிபன், சிவாஜி, கோபி, செல்வமணி, சோனைரவி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தமிழ் செல்வன் மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை சார்பில் வெளியிடப்ப ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை (சனிக்கிழமை) பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு பேசுவதாக இருந்தார்.

    இந்த நிலையில் தஞ்சை உட்பட டெல்டா மாவட்ட ங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே நாளை தஞ்சையில் நடக்க இருந்த பொதுக்கூட்டம் வரும் 16-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழா தஞ்சையில் 4-ந்தேதி நடக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழக அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில், கழகத்தின் சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், வருகிற 4.11.2023 - சனிக்கிழமை மாலை 5 மணியளவில், தஞ்சை மாநகரில் நடை பெற உள்ள, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி பங்கேற்று சிறப்பு பேருரை ஆற்ற உள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    திருப்பூர்:

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் தென்னம்பாளையம் பகுதி 56-வது வட்டம் சார்பில் கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் செரங்காட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாணவர் அணி துணை செயலாளர் ஹரிபிரசாந்த் தலைமை தாங்கினார். தென்னம்பாளையம் பகுதி செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அன்பகம் திருப்பதி வரவேற்று பேசினார். மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குணசேகரன், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், கே.பி.ஜி.மகேஷ்ராம், ஹரிகரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி பேசும்போது, 'அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்' என்றார். தலைமை கழக பேச்சாளர் திரைப்பட இயக்குனர் மனோஜ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி, பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

    கூட்டத்தில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • அனைத்து செட்டியார் சமூகத்தினரையும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மதுரை

    மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தலைமை செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவை தேசிய செட்டி யார்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமை தாங்கினார்.

    மாநில தலைவர் தமிழ்ச் செல்வன், மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணி தென்னவன், மாநில பொருளாளர் ராஜ ராஜசேகரன், மாநில மகளிர் அணி தலைமை ஒலிங்கி ணைப்பாளர் ராஜேஸ்வரி, சட்ட ஆலோசகர் வக்கீல் ஜெயராமன், மாநில தலைமை ஒருங்கிணைப் பாளர் மோகன், மாநில துணைப் பொதுச் செய லாளர் வக்கீல் ராம கிருஷ்ணன், தலைமை நிலைய செயலாளர்கள் கோவிந்தமணி, மோகன், ரகுபதி, தலைமை நிலைய இணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி ஒருங்கிணை்ப பாளர் சுறா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மூர்த்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ காஞ்சி காமாட்சி அறக்கட்டளை நிறுவனர் முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நம் சமுதாயத்தை சார்ந்தவர்கள் உள்ள அரசி யல் கட்சிகளில் நமது சமுதாயத்தினருக்கு முன்னுரிமை அளித்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் மாநில முழுவதும் மாவட்ட வாரியாக சிறப்பு கூட்டங் கள் ஏற்பாடு செய்து நலத் திட்டங்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு அனைத்து சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைத்தல்.

    நமது சமுதாயத்தின் நூற்றாண்டு மாநாடு அனைவரும் ஒருங்கிணைந்த பிரம்மாண்டமாக நடத்த வேண்டும். உடுமலை நாராயண கவிக்கு சென்னை அண்ணா சாலையில் முழு உருவசிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கேரளா எல்லையில் அமைந் துள்ள கண்ணகி கோவிலில் தமிழ் மாதந்தோறும் சாமி தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வர லாற்றை பறைசாற்று கின்ற அளவுக்கு தேனி லோயர் கேம்ப் பகுதியில் கண்ணகி கோட்டம் அமைக்க வேண்டும். அனைத்து செட்டியார் சமூக மக்களையும் மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்பட முக்கிய தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் மணி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ரகுபதி, தமிழக, கேரளா, கர்நாடக, புதுச்சேரி, ஆந்திரா உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆற்காட்டில் அ.தி.மு.க சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கலவை:

    ஆற்காடு அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சி மற்றும் பொன்விழா எழுச்சி மாநாடு தீர்மானம் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஆற்காடு நகர கழக செயலாளர் ஜிம். சங்கர் தலைமை தாங்கினார்.திமிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சொறையூர் குமார், ஆற்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வளவனூர் அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ, மற்றும் எதிர்க்கட்சித் துணை கொறடாவுமான சு.ரவி ஆகியோர் கலந்து கொண்டு மதுரையில் நடந்த மாநாடுகளை பற்றி விளக்கினர். உடன் அம்மா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், ராணிப்பேட்டை மாவட்ட இணைச்செயலாளர் கீதா சுந்தர்,மாவட்ட பிரதிநிதிகள் உதயகுமார், பிச்சமுத்து.

    கூட்டுறவு சங்க தலைவர் சுமதாங்கி ஏழுமலை, மண்டல தகவல் தொழில்நு ட்ப துணை செயலாளர் அஞ்சலி கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முனுசாமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, மாவட்ட மாணவரணி செயலாளர் பிரபு, வாலாஜா நகர செயலாளர்மோகன், ராணிப்பேட்டை நகர செயலாளர் சந்தோஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

    ×