search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம்
    X

    அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம்

    • அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொது செயலாளர்-முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    பெத்தானியாபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஆர். சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்குகிறார்.மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா வரவேற்று பேசுகிறார்.

    மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் ரவிச்சந்திரன், மத்திய 6-ம் பகுதி செயலாளர் ராமச்சந்திரன், சக்தி மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கணேஷ் பிரபு, முன்னிலை வைக்கிறார்கள்.

    தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லன், தவசி, சுப்புராஜ், பாலகுமார், ராஜசேகரன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்று கிறார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் முத்தையா, துணைச்செயலாளர் எம். எஸ். பாண்டியன், பேச்சா ளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தொழிலாளர்களின் மேன்மையை சிறப்பிக்கும் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவு நிர்வாகி கள் மற்றும் முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×