search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trade union"

    • மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
    • இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளி விழா பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலும், துறை சார்ந்த வகையிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் பரப்புரை இயக்கம் நிறைவடைந்த பின்பு வெள்ளையனே வெளியேறு நாளான ஆகஸ்ட் 9-ந் தேதி மாநில அளவிலான திரள் அமர்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    துறை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தொடங்கி வேலை நிறுத்தம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அந்தத்துறைக்கு வெளியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆதரவு வேண்டும்.மாநில அளவிலான பெருந்திரள் அமர்வு போராட்டத்திற்குப் பிறகு, அதன் அனுபவங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    • அ.தி.மு.க. தொழிற்சங்கம் சார்பில்மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    அ.தி.மு.க. பொது செயலாளர்-முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மே தினத்தையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் மதுரையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    பெத்தானியாபுரம் எம்.ஜி.ஆர். திடலில் நடைபெறும் மே தின பொதுக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர், அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஆர். சக்தி விநாயகர் பாண்டியன் தலைமை தாங்குகிறார்.மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சோலை ராஜா வரவேற்று பேசுகிறார்.

    மாவட்ட நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண்ணாதுரை, குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணாநகர் ரவிச்சந்திரன், மத்திய 6-ம் பகுதி செயலாளர் ராமச்சந்திரன், சக்தி மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் கணேஷ் பிரபு, முன்னிலை வைக்கிறார்கள்.

    தொழிற்சங்க மாவட்ட நிர்வாகிகள் மல்லன், தவசி, சுப்புராஜ், பாலகுமார், ராஜசேகரன், முருகன், சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்லூர் ராஜூ சிறப்புரையாற்று கிறார். எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் டாக்டர் முத்தையா, துணைச்செயலாளர் எம். எஸ். பாண்டியன், பேச்சா ளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    தொழிலாளர்களின் மேன்மையை சிறப்பிக்கும் இந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்கத்தின் அனைத்து பிரிவு நிர்வாகி கள் மற்றும் முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டுமாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

    • அண்ணா தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு ஊழியராக பணியாற்றி வந்தவர் லட்சுமி (வயது48), மாற்றுத்திற னாளி. இவர் கடந்த மாதம் 31-ந் தேதி வேலையை முடித்து விட்டு, நூற்பாலைக்கு வெளியே வந்தபோது மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இவரது உடல் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்கா மல் கடுமையான பணிகள் ஒதுக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர் என்றும், மாற்றுத்திறனாளி பெண் லட்சுமி மரணத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மேற்பார்வையாளர் கொடுத்த பணி சுமை தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அவரை பணி நீக்கம் செய்ய கோரி அண்ணா தொழிற் சங்கம் சார்பில் நூற்பாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். அச்சங்குளம் நூற் பாலை அண்ணா தொழிற்சங்க தலைவர் முத்துச்சாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சதன்பிரபாகர், அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய அணி இணைச்செயலாளர் கர்ணன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, முத்தையா, குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் நூற்பாலை மேற்பார்வையாளரை பணி நீக்கம் செய்யக்கோரி நூற்பாலை மேலாளரிடம் மனு அளித்தனர்.

    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பயிர் கடன்கள் வழங்கப்படும் போது எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் நேரங்களில் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் அதிகாரி களால் வாய்மொழியாக தளர்த்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்ப ட்டுள்ள அனைத்து நடவடி க்கைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி அனுமதி க்கப்பட்ட பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்வு காணப்பட வேண்டும்.

    தவணை தவறிய நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ழ இழப்பு தொகைக்கு சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, மண்டல இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சாந்தகுமார், தாமோதரன், இணைச்செயலாளர்கள் வாசகி, உமா மகேஸ்வரி, மகளிர் அணி செயலாளர் லட்சுமி நாராயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ளகோஷம் எழுப்பினார்கள். முடிவில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தொழிற்சங்கங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
    • தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணபுரம் காமராஜர் சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் துணைச் செயலாளர் கோவிந்தன், ஆட்டோ தொழிற்சங்க செல்வம் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன், முன்னாள் எம்.பி. அழகிரிசாமி முன்னிலை வகித்தனர். 240 நாட்கள் நிறைவடைந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம், கட்டிட தொழிலாளர் நல வாரியம், ஆட்டோ தொழிலாளர் நல வாரியங்களை முறையாக செயல்படுத்த வேண்டும். ஆட்டோ,லோடு வேன்களை தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா செயலாளர் பலவேசம், ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ சங்கம் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். #BharatBandh
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் தங்கமோகன், எல்.பி.எப். மாநில துணை செயலாளர் இளங்கோ, ஐ.என்.டி.யூ.சி. செயலாளர் முருகேசன், ஹெச்.எம்.எஸ் மாவட்ட செயலாளர் முத்துகருப்பன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை தலைவர் ஸ்ரீகுமார் மற்றும் அந்தோணிமுத்து மற்றும் மகாராஜப்பிள்ளை, ஞானதாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., காங்கிரஸ் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் சந்திரகலா தலைமை தாங்கினார். அங்கன்வாடி ஊழியர் சங்க தலைவி விஜயலெட்சுமி, பொதுச்செயலாளர் சரஸ்வதி, பொருளாளர் சரோஜினி, துணைச் செயலாளர் அமுதா, சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் சித்ரா, துணைத்தலைவர்கள் சந்திரபோஸ், ஜாண் சவுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜாக்கமங்கலத்தில் கட்டுமான சங்கம் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையிலும், கருங்கல்லில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சோபன்ராஜ் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. முன்னாள் எம்.பி. பெல்லார்மின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    நித்திரவிளையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் வல்சலம் தலைமையிலும், கொல்லங்கோட்டில் விஜயாமோகன் தலைமையிலும், குழித்துறையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சிங்காரம் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், எல்.பி.எப். மாவட்ட செயலாளர் ஞானதாஸ் கலந்து கொண்டு பேசினார்கள்.

    அருமனையில் சி.ஐ.டி.யூ. மாவட்ட குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் தலைமையிலும், குலசேகரத்தில் தோட்ட தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் வல்ச குமார் தலைமையிலும், வேர்கிளம்பியில் கட்டுமான சங்க துணை செயலாளர் சகாய ஆண்டனி தலைமையிலும், ஆரல்வாய்மொழியில் சக்திவேல் தலைமையிலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். #BharatBandh

    மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகாமல் முடங்கியது என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்தது. #BankStrike #Strike
    சென்னை:

    வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். பொதுத்துறைகளில் தனியார்மயத்தையும், அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதிக்க கூடாது. குறைந்தபட்ச கூலியாக மாதம் ரூ.18 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பொதுத்துறைகளின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கினர். இதனால் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.



    சென்னை அண்ணாசாலையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பெரும்பாலான மக்களை சார்ந்து அரசு செயல்பட வேண்டும். ஆனால் முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே இந்திய வருமானத்தில் 73 சதவீதம் மூலதனம் மூலம் பயனடைந்து வருகின்றனர். இதனால் ஏழை, பணக்காரர்கள் வித்தியாசம் அதிகரித்து வருகிறது. 50 கோடி தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது.

    அனைவருக்கும் ஓய்வூதியம், பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு, பொதுத்துறையை வளர்ப்பது போன்ற செயல்களை விடுத்து, மத்திய அரசு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களை அறிவித்து உள்ளது. இந்த கொள்கைகளை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் 20 கோடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    45 ஆயிரம் வங்கி கிளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் பண பரிமாற்றம், காசோலை பரிமாற்றம், அரசு கருவூல கணக்குகள் செயல்பாடு, ஏற்றுமதி, இறக்குமதி கணக்குகள் போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாடு முழுவதும் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் காசோலைகள் முடங்கி கிடக்கிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் பரிமாற்றம் ஆகவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுசெயலாளர் சி.பி.கிருஷ்ணன், இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க பொதுசெயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தம் இன்றும் (புதன்கிழமை) தொடர்கிறது.

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகள் உள்ளிட்டவை வேலைநிறுத்தத்தில் பங்கேற்காமல் வழக்கம் போல் செயல்பட்டன.
    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை எதிர்த்து மதுரையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மதுரை:

    மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவ தற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள் ளன.

    மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கும் அழைப்பு விடுத்தன.

    அதன்படி இன்று எதிர்க்கட்சி தொழிற் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ, வேன் போன்றவை இயக்கப் படவில்லை. மதுரையிலும் பல பகுதிகளில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கோரிக்கையை வலியுறுத்தி பெரியார் பஸ் நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது. எல்.பி.எப்., சி.ஐ. டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்பட 10-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கத்தினர் இதில் பங்கேற் றனர்.

    தொ.மு.ச.வைச் சேர்ந்த மேலூர் அல்போன்ஸ், சி.ஐ.டி.யூ. மாவட்டத்தலைவர் வாசுதேவன், செயலாளர் செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் நந்தாசிங் உள்பட 300-க் கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கோ‌ஷங் களை எழுப்பினர்.
    ×