search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting"

    • 2-வது கட்ட கலந்துரையாடல் நடைபெறுகிறது.
    • திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் தோல்வியை தழுவியதால் அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 10-ந் தேதியில் இருந்து பாராளு மன்ற தொகுதி வாரியாக சந்தித்து வருகிறார். மாவட்ட செயலாளர்கள் முக்கிய பொறுப்பாளர்களிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.

    ஒவ்வொரு நிர்வாகிகள் கூறும் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. முதல் கட்டமாக தொகுதி நிர்வாகி களை சந்தித்து முடித்த பிறகு தற்போது 2-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு கலந்துரையாடல் நடைபெறுகிறது.

    இன்று காலையில் திருப்பூர் தொகுதி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதற்காக அவர் காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்துக்களை கூறினர்.

    திருப்பூரில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். அங்கு அ.தி.மு.க.வின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். பகல் 2 மணி வரை ஆலோசனை நடைபெற்றது.

    மாலையில் கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்திக்கிறார். நிர்வாகிகளுக்கு தன்னம்பிக்கையுடன் புத்துணர்வு அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு இருந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து சனி, ஞாயிறு இரு நாட்களும் ஆலோசனை கூட்டம் நடைபெறாது. மீண்டும் 29-ந் தேதி திங்கட்கிழமை முதல் கூட்டம் தொடங்கி ஆகஸ்ட் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பேசப்படுகிறது.
    • உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் பலர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சபரீசனை சந்தித்து வாழ்த்து கூறியதால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முறை சபரீசனை சந்திக்க அமைச்சர்கள் பலர் ஆர்வம் காட்டியதாக கட்சி நிர்வாகிகள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தெந்த அமைச்சர்கள் அதிக ஓட்டு வாங்கினார்கள். எந்த அமைச்சர்களுக்கு ஓட்டு குறைந்தது என்ற பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதால் சில அமைச்சர்களின் இலாகாக் களை மாற்றி விடுவாரோ என்ற ஐயப்பாடும் சில அமைச்சர்களிடம் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் சபரீசனை பார்த்து வாழ்த்து சொல்ல நேற்று முன்தினம் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகம் பேர் சென்றதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 10 அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.

    சபரீசனை சந்தித்து வாழ்த்து சொன்ன அந்த அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றதாகவும் அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செய லாளர்கள், முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகம் மட்டுமின்றி 2026 தேர்தல் வர இருப்பதை யொட்டி இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்ப தால் அதற்கு முன்னதாக இந்த ஆலோசனையில் பல்வேறு விசயங்கள் பேசப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டு குறைந்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டதாகவும், சில அமைச்சர்கள் 'டோஸ்' வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    • காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
    • அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் தெரிவிக்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.

    முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பேசுகையில், `ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிந்துள்ளது, இதற்கு கள்ளச்சாராய விற்பனை தான் காரணமா என்று கடை மேற்பார்வையாளர்களிடம் கேட்டார்.

    அப்போது சில அதிகாரிகள் மழையின் காரணமாக விற்பனை குறைந்தாகவும், இன்னும் சிலர் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் அதனால் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறினர்.

    தொடர்ந்து பேசிய நர்மதா தேவி , டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

    அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மதுக்கூடங்களுக்கும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் மற்றும் கலால் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார்.
    • ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்வதாக தகவல்.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    நாடு முழுவதும் பா.ஜ.க. 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் முழு தொகுதிகளை கைப்பற்றினாலும் உத்தர பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் டெல்லியில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு டெல்லி செல்கிறார். 

    • கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்பு.

    சென்னை தலைமை செயலகத்தில், 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தின்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    • பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மங்கத்ராம் ஷர்மா கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இது வரை 982.77 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்க ப்பட்டன.

    கொடைக்கானல், சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டு போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது.

    அந்த இடங்களில் சம்மந்தப்பட்ட அலுவ லர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாய கூடங்கள் என 75 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு துறை மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது உரிய முறையில் செயல்பட ரப்பர் படகு, மிதவைப்படகு, ரப்பர் டிங்கிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் குடிநீர், மின்வசதி உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து ரேசன் கடை களிலும் குடிமைப்பொரு ட்கள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தேவையான மருந்துகள் வைத்திருக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எஸ்.பி. பாஸ்கரன், திட்ட இயக்குனர் திலகவதி, வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சி யர்கள் கமலக்கண்ணன், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

    தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் களுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திட்ட பலன்கள் குறித்து எடுத்துரைக்கவும்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள், ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    • மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா பங்கேற்றார்.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தக்குமார்,சார்பு அணியின் மாவட்ட கழக செயலாளர்கள் ரஜினி(எ) சிவக்குமார், குருமூர்த்தி, சாந்தா, குன்னூர் நகர செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட துணை செயலாளர் உஷா, அம்மா பேரவை மாவட்ட துணைசெயலாளர் கோபால்,ஒன்றிய செயலாளர் சக்கத்தா சுரேஷ், பேரூராட்சி செயலாளர் போளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    • ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாலாஜா கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ,மகளிர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எம்.சி.பூங்காவனம் ,கே.துரை,பி.பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபு உள்பட நிர்வாகிகள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன்.எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சாபுதீன், நிர்வாகிகள் வேதகிரி,முனுசாமி,பூண்டி.பிரகாஷ், மூர்த்தி, நவ்லாக்.தயாளன், தனஞ்செழியன் உள்பட மாவட்ட,ஒன்றிய, கிளைகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×