search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consultation meeting"

    • கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்பு.

    சென்னை தலைமை செயலகத்தில், 2024- 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது

    இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, சக்கரபரணி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தின்போது, விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்பு விவசாயிகள், பால், முட்டை உற்பத்தியாளர்கள், விளை பொருள் விற்பனையாளர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

    • பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த விவாதிக்கப்பட்டது
    • தொண்டர்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி அமைத்தல் பணிகளை குறித்த நேரத்தில் முடித்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடுவது என்பதை வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால், முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி. ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ, வி.கே.ஆர்.சீனிவாசன் உள்பட மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு முதன்மைச் செய லாளர் மங்கத்ராம் ஷர்மா, கலெக்டர் பூங்கொடி முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மங்கத்ராம் ஷர்மா கூறியதாவது:-

    திண்டுக்கல் மாவட்ட த்தில் இது வரை 982.77 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. பருவமழை காலங்களில் ஏற்படும் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைக்க ப்பட்டன.

    கொடைக்கானல், சிறுமலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்டு போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியாக கண்டறியப்பட்டு அதில் 24 இடங்கள் அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதியாக உள்ளது.

    அந்த இடங்களில் சம்மந்தப்பட்ட அலுவ லர்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். 66 பள்ளிகள், 4 திருமண மண்டபங்கள், 5 சமுதாய கூடங்கள் என 75 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்பு துறை மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீ விபத்துகளின் போது உரிய முறையில் செயல்பட ரப்பர் படகு, மிதவைப்படகு, ரப்பர் டிங்கிகள் ஆகியவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    நிவாரண முகாம்களில் குடிநீர், மின்வசதி உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உணவு வசதிகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து ரேசன் கடை களிலும் குடிமைப்பொரு ட்கள் தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமல் தேவையான மருந்துகள் வைத்திருக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு ஏற்பட்டாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் எஸ்.பி. பாஸ்கரன், திட்ட இயக்குனர் திலகவதி, வருவாய் அலுவலர் ஷேக் முகைதீன், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், கோட்டாட்சி யர்கள் கமலக்கண்ணன், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
    • கூட்டத்தில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றும் பொருட்டு விரிவான செயல் திட்டம் ஒன்று வெளியிடப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் முறையாக அமல்படுத்திட கடைகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களுக்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் அலுவலகங்களில் கூட்டம் நடத்த வேண்டும்.

    தங்களது உள்ளாட்சி அமைப்பின் எல்கைக்குட்பட்ட கடைகள். உணவகங்கள் மற்றும் வணிக வளாக உரிமையாளர்களிடம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையாணையினை முறையாக அமல்படுத்திட கேட்டும், கடைகள் மற்றும் உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மீண்டும் மஞ்சப்பையினை கொண்டுவர உரிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வருகிற 30-ந் தேதிக்குள் ஒப்படைப்பு செய்யக்கேட்டு கடை மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடவும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை யாணையை அனைத்து பொதுமக்கள், கடை மற்றும் உணவக உரிமையாளர்களிடம் விளக்க வேண்டும், வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் அவை பறிமுதல் செய்யப்படும் எனவும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதத்துடன் அவை பறிமுதல் செய்யப்படும் என்ற அறிவிப்பினை வருகிற 31-ந் தேதிக்குள் வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், மேற்படி செயல்திட்டங்களை தங்களது உள்ளாட்சி அமைப்பின் பகுதிக்குள் முறை யாக செயல்படுத்திடவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து சிவகிரி பேரூராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். செயல் அலுவலர் வெங்கடகோபு, துணை தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், சீதாராமன், குருசாமி, ரவிந்திரநாத் பாரதி, குமார், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர்பாக விரிவாக எடுத்துரை க்கப்பட்டது. இக்கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், தலைமை எழுத்தர் தங்கராஜ், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் களுடன் ஆலோசனைக் கூட்டம் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

    தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து தமிழ்நாடு அரசினால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும். அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

    எனவே, சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை திண்டுக்கல் மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும். இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திட்ட பலன்கள் குறித்து எடுத்துரைக்கவும்,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதலீட்டாளர்கள், ஜவுளித்தொழில் அமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 3-ந் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    • மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா பங்கேற்றார்.
    • மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் ஆய்வு நடந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சிவினோத் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்ராஜா கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்திராமு, இளைஞரணி இணை செயலாளர் பாலநந்தக்குமார்,சார்பு அணியின் மாவட்ட கழக செயலாளர்கள் ரஜினி(எ) சிவக்குமார், குருமூர்த்தி, சாந்தா, குன்னூர் நகர செயலாளர் சரவணக்குமார்,மாவட்ட துணை செயலாளர் உஷா, அம்மா பேரவை மாவட்ட துணைசெயலாளர் கோபால்,ஒன்றிய செயலாளர் சக்கத்தா சுரேஷ், பேரூராட்சி செயலாளர் போளன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக குன்னூர் ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜூ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ராமநாதபுரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சோசியல் டெமாக்ரடிக் கிரேடு யூனியன் தொழிற்சங்கத்தின் சார்பாக ஊரக பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் யூசுப் தலைமை தாங்கினார். மாநில தலைவர் முகமது ஆஷாத், மாநில பொது செயலாளர் ரவூப் நிஸ்தார், மாநிலத் துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட கமிட்டி உறுப்பினர் கார்த்திகை செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கடந்த 4.10.2023-ல் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 15-வது குழும கூட்டத்தின் அறிக்கை சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த 2010 முதல் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 8-வது கல்வி தகுதி பெற்றவர்களை பணியில் தேர்வு செய்தனர்.அவர்களை அதே தகுதியில் பணியில் நீடிக்க செய்ய வேண்டும் என்றும் புதிதாக எடுப்பவர்களை 12-வது கல்வி தகுதியில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பணி செய்து வரும் ஊரக சமூகப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊரக சமூக களப் பயிற்றுனர்க ளுக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை ரூ.2500-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. முடிவில் கிழக்கு மாவட்ட தலைவர் காதர்கனி நன்றி கூறினார்.

    • ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது
    • தொண்டர்கள் ஏராளமானோர் கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூரில் வாலாஜா கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி பூத் கமிட்டி , இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ,மகளிர் அணி,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வாலாஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் வன்னிவேடு வி.கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் எம்.சி.பூங்காவனம் ,கே.துரை,பி.பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபு உள்பட நிர்வாகிகள் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சேவூர். எஸ். ராமச்சந்திரன்.எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூத் கமிட்டிகளை ஆய்வு செய்து சரி பார்த்து ஆலோசனைகள் வழங்கி பேசினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுமைதாங்கி.ஏழுமலை, மாவட்ட பொருளாளர் சாபுதீன், நிர்வாகிகள் வேதகிரி,முனுசாமி,பூண்டி.பிரகாஷ், மூர்த்தி, நவ்லாக்.தயாளன், தனஞ்செழியன் உள்பட மாவட்ட,ஒன்றிய, கிளைகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத் தத்தப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை முன்னிலையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை யில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    இதில் முத்துராமலிங்க தேவர் பிறந்தநாள் விழா வினை முன்னிட்டு மேற்கொள்ளப் பட்டு வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்க ளுடன் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒவ்வொரு வருடமும் அக்.

    30-ந் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்தநாள், குருபூஜை விழா அரசு விழாவாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அன்றைய தினம் தமிழக அரசின் சார்பில் பசும் பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவி டத்தில் மரியாதை செலுத் தத்தப்படும். அன்றைய தினம் பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தப் படும். பசும்பொன்னுக்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம், முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழி, பொதுமக்கள் செல்லும் வழி, சாலைகளை சீர மைத்தல், மின் இணைப்பு வசதி, அன்னதானம் நடை பெறும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உரிய அனுமதிகள் வழங்கப் படுவதை உறுதி செய்தல்.

    பசும்பொன் பகுதியில் சுற்றி உள்ள பகுதிகளில் கண்காணிப்பு காமிரா பொருத்துதல், குடிநீர் வசதி போன்றவைகள் தொடர்பு டைய அலுவலர்கள் தங்க ளுக்கு ஒதுக்கப்பட்ட பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் விழா நடை பெறும் இடங்களை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்ட னர்.

    • சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசினார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம். நெத்திமேட்டில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள நபர்களை கண்காணித்து வருவாய் கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்க வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு எதிராக குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை விரைவாக பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

    காணாமல் போன நபர்கள் குறித்த வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், செல்வம், துணை சூப்பிரண்டு சங்கீதா, நாகராஜன், ராஜா, மரியமுத்து, ஹரிசங்கரி, அமல்அட்வின், தமிழ்வாணன், சின்னசாமி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    பஞ்சாலை தொழிலுக்கு (வேலை பழகுனர்கள் தவிர) குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யும் வகையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் செயலாளராக கோவை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்), தற்சார்பு உறுப்பினர்களாக இணை இயக்குனர் பஞ்சாலை சென்னை, இணை இயக்குனர்-1 தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் திருப்பூர், புள்ளியியல் உதவி இயக்குனர், பொருளியல் மற்றும் புள்ளியல்துறை கோவை ஆகியோர் உள்ளனர். தொழிலாளர் தரப்பு பிரதிநிதிகள், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த குழுவால் வருகிற 17-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் பஞ்சாலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை நேரடியாக சந்தித்து விவரங்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவின் கருத்து கேட்பு கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6-வது தளத்தில் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வேலையளிப்போர், வேலையளிப்போர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழுவினரிடம் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இந்த தகவலை கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
    • பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. உதவி பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் பெமினா தலைமை தாங்கி ஆங்கில மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியை அர்ச்சனா தேவி ஆங்கிலத் துறையின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.

    அதைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது மகன், மகளின் படிப்பு குறித்து ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் ஸ்வப்னா இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ×