என் மலர்

    நீங்கள் தேடியது "Consultation meeting"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மண் நல மையம் சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    நெமிலி அருகே கீழ்வெங்கடாபுரம் கிராமத்தில் வேலூரை தலைமையிடமாக கொண்ட மண் நல மையம் உள்ளது.

    இந்த மையத்தின் மூலம் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணா மலை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மையத்தின் சார்பில் மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் முரளிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கேபிள் டி.வி. சங்கம் தாமோதரன், கீழ்வெங்கடாபுரம் ஊராட்சி மன்றதலைவர் அம்மு தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இயற்கை விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவுகளை மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் வழங்கப் பட்டன. இயற்கை விவசாயம் செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கவேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க குழு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரி விக்கப்பட்டது.

    கூட்டத்தில் நெமிலி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் சிவகிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட தலைவர் ராஜீ தலைமை தாங்கினார்.

    அம்மன் கோவில் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் மற்றும் சிவகிரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் பரமு என்கிற ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டமைப்பின் செயலாளர் வேலுமணி வரவேற்றார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டு பால் விலை உயர்த்தி தரக்கோரி பேசினர்.

    இக்கூட்டத்தில் வருகிற 17-ந் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால் ஆவின் நிர்வாகத்திற்கு பால்உற்பத்தியாளர்கள் பாலை அனுப்புவதில்லை என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக் குமார், கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி உள்பட 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் கரட்டாங்காட்டுப்புதூர் பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டா ட்சியர் அலுவ லகத்தில் ராஜபாளையம்-சத்தி ரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிக்கான 2-ம் கட்ட நில எடுப்புக்கான இறுதி தீர்வுரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமையில் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் 19 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரி வித்தனர். மேலும் ஓரிரு நில உரிமையாளர்கள் தங்களது வீடு பாதிக்காதவாறு நிலத்தை கையகப்படுத்துமாறு கூறினார்கள். அதற்கு பதில் அளித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாதவாறு நிலம் கையகப்படுத்தப்படும்.

    மேலும் இந்த மாதத்திற்குள் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விரைவில் நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.அதனை தொடர்ந்து 2-ம் கட்ட நில எடுப்பில் என்.ஆர்.கே. பங்க் அருகில் உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் பேசி பொதுமக்களின் சிரமங்களை எடுத்துரைத்து மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் எடுக்க நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கொடுத்தார்.

    மேலும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி பணியை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரரிடம் கூறிய எம்.எல்.ஏ., வரும் ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், தனி தாசில்தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறை அலுவலர் ஜெகன் செல்வராஜ், தி.மு.க நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்திற்கு தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரணியசுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற 25-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்திருவிழா நடத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. தட்சணமாற நாடார் சங்கத்தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதந்திராதேவி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கவிதா, கிருஷ்ணன், கீழப்பாவூர் பால்துரை, வணிகர் சங்க நிர்வாகிகள், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், அனைத்து சமுதாய நிர்வாகிகள் மற்றும் 10-ம் திருவிழாவில் பால்குடம் எடுத்து வரும் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையப்பட்டி, திப்பணம்ட்டி அரியப்பபுரம், வெங்காலிபட்டி , கல்லூரணி, ஆரியங்காவூரை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவிழாவின் போது கலைநிகழ்ச்சிகள் இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது. சாதி ரீதியான வாசகங்களோ, தலைவர் படம் பொறித்த பனியன்களோ அணியக்கூடாது. சாதித்தலைவர்கள் படம் போட்டு விளம்பர பதாகைகள் வைக்கக்கூடாது. 10-ம் திருவிழாவன்று மதியம் 12 மணிக்குள் கோவிலுக்கு பால்குடம் எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
    • சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    கடலூர்:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முல்லைமாறன், ராஜேஷ், அன்பரசன், சுபாஷ், காட்டு ராஜா, ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சங்கரன்கோவில் தனியார் விடுதி அரங்கில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தனியார் விடுதி அரங்கில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி ஆலோ சனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வக்கீல் அணி மாவட்ட அமைப்பாளர் மருதப்பன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது-

    வக்கீல் அணிக்கு கட்ச யினர் எளிதாக அணுகும் வகையில் மாவட்ட அலுவலகம் அமைக்க வேண்டும். கட்சியினர் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி அவர்களை விடுவிக்க வேண்டும். இதற்கு மாவட்ட கட்சி நிர்வாகம் என்றும் துணை இருக்கும். கட்சி சார்ந்த போராட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கட்சி உறுப்பினர்களுக்கு வக்கீல்கள் அவர்களை சட்டபடி விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும், மேலும் வறுமை நிலையில் இருக்கும் கட்சியினருக்கு இலவச சட்ட உதவி செய்ய வேண்டும். மேற்கொண்டு உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் எனவும், இளம் வக்கீல்களை கட்சியில் இணைக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

    இதில் வக்கீல்கள் சண்முகையா, பிச்சையா, கண்ணன், அருணாச்சலம், அன்புச்செல்வன், தேவா என்ற தேவதாஸ், ஜெயக்குமார், பேட்டரிக்பாபு ராஜா, வெற்றி விஜயன், பெரியதுரை, சந்தன பாண்டி யன், சதீஷ் காளிராஜ், பிரகாஷ் உள்ளிட்ட வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வளர்ச்சிப் பணிகள், மற்றும் அடிப்படைத் தேவைகளை முறையாக செய்ய வேண்டும்.
    • பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்ரியா முன்னிலை வகித்தார்.

    இதில் கலந்துகொண்ட திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் மதுமிதா பேசுகையில்:- கிராம ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

    ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள், மற்றும் அடிப்படைத் தேவைகளை முறையாக செய்ய வேண்டும்.

    ஊராட்சிக் கூட்டங்கள் மற்றும் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும். ஊராட்சிகளின் வருவாய் ஆதாரங்களை பெருக்கி அதன் மூலம் ஊராட்சியில் நலத்திட்ட பணிகளை செய்ய மீண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பல்லடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதால் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு டவுன், புது தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 30), இவர் செய்யார் டவுன், கண்ணியம் நகர் சந்திப்பில் காஞ்சிபுரம் சாலையில் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு செய்ததாக செய்யாறு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு விரைந்து ெசன்று சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போன்று வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் கிராமம், ரோட்டு தெருவை சேர்ந்த கார்த்திகேயன் (39), என்பவர் புதுப்பாளையம் கூட் ரோட்டில் பொது மக்களுக்கு இடையூறு செய்து ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவரை தூசி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
    • ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கிராம ஊராட்சி திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள் குறித்து அவர் விளக்கமாக பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    கிராம ஊராட்சிகளுக்கு ஊராட்சி மன்றத் தலை வர்கள் கட்டுப்பாட்டில் தான் பணிகள் ஒதுக்கப்படுகிறது. எனவே ஊராட்சி பணிகளை முனைப்புடன் ஊராட்சி மன்றத் தலைவர்கள் திறம்பட செய்து நிறைவேற்ற வேண்டும்.

    நீடித்த மற்றும் நிலையான பல்வேறு வளர்ச்சி இலக்குகளை எட்டிவிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தற்போது ரூ.10 லட்சம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.

    இதனை மாவட்ட மற்றும் மாநில அளவிலான தோ்வு குழுக்கள் பரிசீலனை செய்து அரசுக்கு முன்மொழிவு செய்யும்'' என்றார்.

    பங்கேற்பு கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் (பொறுப்பு) மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார்.
    • இணைய வழி மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்துவது சம்பந்தமாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அறிவுரை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், நெல்லை மின் பகிர்மான வட்டம், தென்காசி கோட்டத்திற்கான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆய்வு கூட்டம் நெல்லை மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நெல்லை மண்டல தலைமை மின் பொறியாளர் (பொறுப்பு) மற்றும் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் பொதுமக்களிடம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி மிக விரைவாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஆலோ சனைகளை வழங்கினார்.

    மேலும் இணைய வழி மூலமாக பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்து வது சம்பந்தமாக தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில் நெல்லை துணை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் வீரலட்சுமணன், மத்திய அலுவலக அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், தென்காசி கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் மற்றும் தென்காசி கோட்டத்தை சேர்ந்த உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், உதவி கணக்கு அதிகாரிகள், மதிப்பீட்டு ஆய்வாளர்கள், மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print