என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TRAINING WORKSHOP"

    • பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடந்தது
    • பல்வேறு பொருட்களை செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மத்திய மனிதவள மேம்பாடு மையத்தின் கீழ் இயங்கி வரும் இன்ஸ்டியூசன் இன்னோவேசன் கவுன்சில் மற்றும் கல்லூரியின் தொழில் முனைவோர் அலகு இணைந்து பனை ஓலையை பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய ஒரு நாள் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    இதன் தொடக்க விழா கல்லூரியின் உள் அரங்கத்தில் நடைபெற்றது. முனைவர் மாலைசூடும் பெருமாள் இறைவணக்கம் பாடினார். இன்னோவேசன் கவுன்சில் அமைப்பாளர் முனைவர் நித்யானந்த ஜோதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, இன்னோவேசன் கவுன்சில் பணிகளை பாராட்டினார்.

    கல்லூரி செயலர் முனைவர் ஜெயக்குமார், பயிற்சி பட்டறையின் நோக்கங்களை விளக்கி பேசினார். மல்லிகை பனை பொருள் அங்காடியின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் கிரேஷ் ஜூலியட் டயானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை செய்தனர். பயிற்சி பட்டறையின் முடிவில், இன்னோவேசன் கவுன்சில் செயல் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீேதவி நன்றி கூறினார்.


    • பாசறை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார்.
    • அப்துல்லா எம்.பி., தமிழன் பிரசன்னா ஆகியோர் இளைஞரணி நிர்வாகிகளுக்கு பயிற்சியளித்தனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆறுமுகச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து அப்துல்லா எம்.பி., மாநில சுயாட்சி குறித்து மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்ற 540 இளைஞரணி நிர்வாகி களுக்கு பயிற்சியளித்தனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார்.

    முன்னதாக கடையநல்லூருக்கு வருகை தந்த அப்துல்லா எம்.பி.க்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தர மகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், துணைத்தலைவர் ராசையா, ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ், ரவிசங்கர், திவான் ஒலி, அழகுசுந்தரம், நகர செயலாளர்கள் அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சுவடியில் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
    • தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு "சுவடியியல்" பயிற்சிப்பட்டறை நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன் "சுவடி - ஓர் அறிமுகம், சுவடிப்பதிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர். உதயகுமார் "சுவடி அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பூங்கோதை, நன்றி கூறினார். இதில் தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

    • மதுரையில் சித்த மருத்துவமனைகள் சார்பில் பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது.
    • வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    மதுரை

    மதுரையில் மடீட் ஷியா மற்றும் சித்த மருத்துவமனைகள், கிளீனிக் சங்கம் இணைந்து பயிற்சி பட்டறை முகாமை நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சித்த மருத்துவமனை மற்றும் கிளீனிக் சங்கத்தலைவர் ஜெ.ஜெயவெங்கடேஷ் வரவேற்றார். மடீட்சியா தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், சித்த மருந்து நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து கிளஸ்டர் என்ற அமைப்பை ஏற்படுத்த மடீட்சியா முயற்சி செய்து வருகிறது. ஆயுஷ் தொழில்துறை வளர்ச்சிக்கு மடீட்சியா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த தயாராக உள்ளது என்றார்.

    திரவியம் ஏற்றுமதி நிறுவனத்தின் விற்பனை நிர்வாகி பாஸ்டின் மதிப்புக்கூட்டிய மூலிகை உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதம் குறித்து பேசினார். ஒருங்கிணைப்பாளர் ஷியாம் நாராயணன், வங்கிக்கடன் பெறுவதற்கான அறிக்கை சமர்ப்பித்தல், பட்ஜெட் தயார் செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார்.

    ஆதித்யா தொழிற் பயிற்சி தலைவர் செல்வ சுந்தர்ராஜன் நாட்டு மருந்துகளை பதிவு செய்தல், விற்பனை செய்தல் குறித்தும், மானியம், வங்கி கடன் குறித்தும் பேசினார்.

    சித்த மருத்துவமனைகள் சங்க பொருளாளர் மணிகண்டன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் கலந்து கொண்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அகதர உறுதிப் பிரிவின் சார்பில், 'அனுபவ கற்றல்- தொடர்பு திறனை மேம்படுத்தும் பயனுள்ள கருவி' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் லெனின் வரவேற்று பேசினார்.

    கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் தணிகாசலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அனுபவ கற்றலின் வகைகளை எடுத்துரைத்தார். மேலும் பல்வேறு பயிற்சிகள், செயல்பாடுகள் மூலம் தொடர்பு திறனை மேம்படுத்துவது குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர்கள் பாலு, ஷோலா பெர்னாண்டோ, முத்துகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
    • தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையின் ஐ.இ.(ஐ), ஸ்கேன் ஆகிய துறை சார்ந்த கழகங்களின் சார்பில், 'ஜாவா மென்பொருளை பயன்படுத்தி எந்திரவழி கற்றல்' என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். இணை பேராசிரியர் கேசவராஜா வரவேற்று பேசினார்.

    தூத்துக்குடி போஸ்ட்டுலேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜான்சன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்களின் செயல்திட்ட பணி, அதன் முக்கியத்துவம் மற்றும் எந்திரவழி கற்றல், அதனால் ஏற்படும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பட்டறையில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவி இனிகா நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கேசவராஜா, பவானி மற்றும் கணினிதுறை பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • கல்லூரி முதல்வர் ராஜன் புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
    • சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் வணிகவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில், எம்பிராயடரிங் தையல் மற்றும் தட்டச்சு பயிற்சி பட்டறை நடைபெற்றது. பேராசிரியர் மரிய கிறிஸ்டின் நிர்மலா வரவேற்று பேசினார். முதல்வர் ராஜன், தலைமை தாங்கி புதிய கல்வி கொள்கையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புஷ்பராஜ் பயிற்சியின் அவசியம் பற்றி வாழ்த்தி பேசினார். துறைத்தலைவர் மனோகர் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து மாணவர் திறன் மேம்பாட்டின் அவசியத்தை விளக்கினார்.

    சிறப்பு விருந்தினர்களாக பெண்கள் அதிகாரம் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு சங்க நிறுவன தலைவர் சுபத்ரா செல்லத்துரை கலந்து கொண்டு பெண்களின் பெருமைகளையும், பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும் பேசினார். தென்காசி, சஞ்சய் அகாடமி நிறுவனர் செண்பகவல்லி பயிற்சியின் நோக்கம் பற்றி பேசி குழு மூலமாக மாணவர்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர் திறன் மேம்பாடு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் சுஜா பிரேமரஜினி, லதா, மனோகர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். பேராசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

    • மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை பாலமுருகன் வழங்கினார்.
    • திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி விளக்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர உறுதிப்பிரிவு மற்றும் போட்டோகிராபி கிளப் சார்பில் "புகைப்பட கலையின் நுணுக்கங்கள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். போட்டோகிராபி கிளப் இயக்குனர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். அகதர மதிப்பீட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வாழ்த்தி பேசினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி பிக்ஸ்டாக்ல்க் போட்டோகிராபி கிளப்பின் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கேமராவின் வகைகள், செயல்பாடு மற்றும் நுட்பங்கள் சார்ந்த பயிற்சியை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நூலகர் முத்துகிருஷ்ணன், பேராசிரியர்கள் லிங்கத்துரை, லோக்கிருபாகர், மணிகண்ட ராஜா மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த மாணவர்கள், போட்டோகிராபி கிளப் மாணவ உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி பட்டறையின் முடிவில் போட்டோகிராபி கிளப் மாணவ செயலாளர் புரோசேகர் நன்றி கூறினார்.ஆதித்தனார் கல்லூரியில் முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின் பெற்றது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முத்துக்கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் ஈரோட்டை சேர்ந்த உளவியல் மருத்துவர் அசோக், மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே "இன்றைய சூழலில் கல்லூரி மாணவிகள் எதிர்கொள்ளும் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சினைகள்" குறித்தும், அவற்றை மேற்கொண்டு சிறப்புற வாழும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். திருச்செந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி அடைவது என்பது பற்றி தன் அனுபவங்கள் மூலம் விளக்கினார். முடிவில் 2-ம் ஆண்டு முதுகலை ஆங்கில மாணவி லிபியா நாராயணி நன்றி கூறினார்.

    • ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் லட்சுமிநாராயணன் பயிற்சி வழங்கினார்.
    • பயிற்சி பட்டறையில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் ஐ.இ.இ.இ. மாணவர்கள் பிரிவு எண்-61401 மற்றும் மின்னணுவியல் தொடர்பியல் துறை சார்பில், ஐ.இ.இ.இ. மெட்ராஸ் பிரிவு நிதியுதவியுடன் 'மருத்துவ சேவையில் ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை கடந்த 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மஞ்சித் வரவேற்று பேசினார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரும், பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணை பேராசிரியருமான லட்சுமிநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐ.ஓ.டி. தொழில்நுட்பங்களின் பயன்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். துறைத்தலைவர் பெனோ வாழ்த்தி பேசினார்.

    இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று ராமநாதபுரத்துக்கு வந்தார். மாவட்ட எல்லை மற்றும் முக்கிய பகுதிகளில் தி.மு.க.வினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன்,பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன், ராமநாதபுரம் மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சத்தியேந்திரன், நரிப்பையூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா, சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன், நீர்பாசன சங்க தலைவர் ராஜாராம், ஒன்றிய அவைத்தலைவர் சார்லஸ், பொருளாளர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஜலீல், துணை செயலாளர்கள் பழனிச்சாமி, முனியசாமி, மாவட்ட பிரதிநிதி அமீர் ஹம்சா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலன், ஒன்றிய துணை செயலாளர் பொன்னுத்தாய்-பாண்டி,

    பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா, நயினார் கோவில் ஊராட்சி ஒன்றிய தலைவர் வினிதா குப்புசாமி, துணை தலைவர் ஜெயபாலன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், துணை தலைவர் பூமிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் காளீஸ்வரி, தேன்மொழி, ராமசாமி, முருகேஸ்வரி, கதிரவன், காளிதாஸ்,

    பரமக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சிந்தாமணி முத்தையா, துணை தலைவர் ராஜேந்திரன், உறுப்பினர்கள் சங்கமுத்து, கலைச்செல்வி, காந்திமதி, மங்களேஸ்வரி, சுப்பிரமணியன், சித்ரா , சேதுராமன், அமராவதி, சிவகுமார், தேவி, நதியா, திருவாடானை ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமது முக்தார், துணை தலைவர் செல்வி பாண்டி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மேகலா விஸ்வநாதன், கார்த்திகேயன் ராஜா, சிவா, ஜமால் மைதீன், அருணாசலம், காளியம்மாள், சசிகுமார், சாந்தி செங்கை ராஜன், ஜெயசீலா கண்ணன், முகமது ரிஸ்வான், மதி வாணன், சிவசங்கீதா ராஜாராம், லூர்து மேரி பிரசாத், சாந்தா கணேசன், விஜயகதிரவன், ராவுத்தம்மாள் ராஜதுரை, சுமதி முத்துராக்கு, ஸ்ரீதரன், சாயல்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாலன்,

    கடலாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆப்பனூர் ஆறுமுகம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அம்பிகா நாகராஜ், ராமநாத புரம் நகர்மன்ற உறுப்பினர் மாவட்ட அமைப்பாளர் முகமது ஜகாங்கீர், தொண்டி பேரூர் நிர்வாகி நவ்பல் ஆதம், கமுதி தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், கடலாடி ஒன்றிய செய லாளர் மாய கிருஷ்ணன், கமுதி ஒன்றிய குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், துணை தலைவர் சித்ரா தேவி அய்யனார், ஒன்றிய உறுப்பினர்கள் ஈஸ்வரி மாரிமுத்து, கற்பூர சுந்தர பாண்டியன், பூங் கொடி, கனகஅரசி, பாலு, மகாலட்சுமி, பூபதி ராஜா, சங்கம்மாள், அன்பரசு, உதயனன், கணேசன், கவிதா, பழனியம்மாள், உதயகுமார், முத்துபாண்டி அம்மாள், முத்துலட்சுமி, காளீஸ்வரி, கமுதி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் அப்துல் வகாப் சகாராணி, ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், துணை தலைவர் உடையார்,

    செஞ்சடை நாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் லிங்கராஜ், தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் மக்சூப்பானு, உறுப்பினர்கள் மாரியம்மாள், முருகேசன், சுமதி, முத்துக்கருப்பன், ராதா, நஸ்ரின் பானு, மகேஸ்வரி, மணிமாறன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலைவர் பிரவீன் தங்கம், உறுப்பினர்கள் முனீஸ்வரி, ஜோதி மணி, மங்கை யர்க்கரசி, தனபாண்டி யம்மாள், ராஜாராம் பாண்டியன், கயல்விழி, செல்வராணி, நாகராஜன், காளிதாஸ், ராணி, கமலக்கண்ணன், வீரசேகர், விஜய லட்சுமி, காதர் பிச்சை, ஜெயராமன், ஜோதி புஷ்பம், மணி கண்டன், சபிக்கா பானு, குமார், ராமசுப்பிரமணியன், கனகவல்லி, இந்துமதி முத்துலட்சுமி, ரமேஷ், செல்வி, லட்சுமி, இந்திரா மேரி, ராமநாதன், காயத்ரி, முகமது ஜகாங்கீர், மெகர் பானு, பஞ்சவர்ணம் ஆகியோர் வரவேற்றனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு’ என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது.
    • செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் , பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், முதுகலை பொருளியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு 'மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருளியல் மாணவர்கள் புள்ளியியல் முறைகளை கணினி மென்பொருள் மூலம் எவ்வாறு கையாள்வது?, பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றினார்.
    • கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு மற்றும் அகத்தரமதிப்பீட்டு குழு சார்பில் இணையமும் இன் தமிழும் என்ற பொருண்மையில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தலைமை உரையாற்றி னார். கல்லூரி முதல்வர் து.ராஜன் முதல்வர் உரையும், அகத்தர மதிப்பீட்டுகுழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் நோக்க உரையும் வழங்கினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறை தலைவர் த.நிர்மலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவின் தலைவர் சு.கிரிஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவர் பெல்லா அன்ன ஜோதி கணினியின் தோற்றம் முதல் கணினியில் தமிழ் பயன்பாடு வரை காணொலி காட்சி மூலம் மாணவர்களிடையே பேசினார்.

    கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் செ.சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.

    ×