என் மலர்

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
    • நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா கலந்துகொண்டு பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சுயநிதிப்பிரிவு வணிகவியல் துறை சாரபில், 2 நாட்கள் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

    தொழில் முனைவோர் எப்படி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறுகிறார்? என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் சிரில் அருண் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக குற்றாலம் பராசக்தி கல்லூரி வணிகவியல் பேராசிரியை முருகேஸ்வரி மற்றும் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் வணிகவியல் சுயநிதிப்பிரிவு துறை தலைவர் ஜேசுராஜ் கலந்துகொண்டு தொழில் முனைவோராக எவ்வாறு மாற வேண்டும்? என எடுத்துரைத்தனர். இறுதியில் பேராசிரியை கரோலின் கண்மணி ஆனந்தி நன்றி கூறினார்.

    2-வது நாளாக நேற்று சமூக ஊடக சந்தைப்படுத்தலின் சிக்கல்கள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் துறை தலைவர் திருச்செல்வன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். நெல்லை சாரதா கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியை சுஜாதா, சங்கரன்கோவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியை ஷிபா மெர்லின் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

    கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி மற்றும் இதர கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியை பார்வதிதேவி, டயானா ஸ்வீட்லின், ரூபன் சேசு அடைக்கலம், சுமதி ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியை பாசமலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் ரமேஷ், சாந்தி, பசுங்கிளி பாண்டியன், சிவக்குமார், அந்தோணி சகாய சித்ரா மற்றும் பேராசிரியர்கள் ராஜ்பினோ, கருப்பசாமி, திலபன், கவிதா, முத்துக்கிருஷ்ணன், சிங்காரவேலு, அந்தோணி பிரைட் ராஜா, பெனட், ராஜபூபதி, சகாய ஜெயசுதா, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், லைட் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • 120-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்தர உறுதிப் பிரிவு மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனைப்படி, லைட் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ்சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) வேலாயுதம் தலைமை தாங்கி, சிறப்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். லைட் முதியோர் இல்லத்தின் நிறுவனர் பிரேம்குமார், முதியோர் இல்லம் குறித்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் துறை பேராசிரியர் பாலு கலந்து ெகாண்டார். கல்லூரி மாணவ, மாணவிகள் 25பேர் முதியோர் இல்லத்திற்கு நேரில் சென்று பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்தி முதியோர்களை உற்சாகப்படுத்தினர். மேலும் 120-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கல்லூரி சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறை பேராசிரியர் தாவூதுராஜா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் ச.மோதிலால் தினேஷ் நன்றி கூறினார்.

    மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமவாய்ப்பு மையம் சார்பில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி 'மன அழுத்தத்திற்கான விழிப்புணர்வு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு கணினித்துறை தலைவர் வேலாயுதம் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். ஆங்கிலத்துறை பேராசிரியை மற்றும் சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் கு.ராமஜெயலட்சுமி வரவேற்று பேசினார்.

    விலங்கியல்துறை உதவிப்பேராசிரியை ஆரோக்கியமேரி பெர்னாண்டஸ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் ெசய்தார். நாசரேத் மர்காஷியஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கேரட்ராஜா இம்மானுவேல், மன அழுத்தத்தை கண்டறிவது எப்படி? மன அழுத்தத்தின் நிலைகள், மன ரீதியான உடல் ரீதியான மன அழுத்தத்திற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். மாணவர்கள் எழுப்பிய உளவியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில்கள் அளித்தார். இக்கருத்தரங்கில் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இளங்கலை 2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் திலீபன் நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியைகள் ரீட்டா யசோதா, முனீஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
    • ‘தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி’ என்ற ஆய்வு நூலை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வெளியிட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ் துறைத்தலைவர் கதிரேசன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் தமிழ்துறை பேராசிரியர் சுயம்பு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எழுதிய ஆய்வு கட்டுரைகள் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டது. 'தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி' என்ற ஆய்வு நூலை ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் வெளியிட்டார். அதனை புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரி தமிழ் துறைத்தலைவர் அரங்க முருகையன் பெற்று கொண்டார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு ஆய்வு மைய இணை பேராசிரியர் வேல் கார்த்திகேயன் நிறைவுரையாற்றினார்.

    கல்லூரி பல்வேறு துறைத்தலைவர்கள் ரமேஷ், சுந்தர வடிவேல், பாலு, ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், செந்தில்குமார், பேராசிரியர்கள் வசுமதி, மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், சேகர், செல்வகுமார், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஜீஹா பெண்கள் கல்லூரி, நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி, சாராள் தக்கர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராஜேஷ் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
    • பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பளு தூக்கும் மன்றம் மற்றும் ரத்த தான கழகம் இணைந்து நடத்திய 'பளு தூக்குதல் பயிற்சி பட்டறை' என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பளு தூக்கும் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயவேல் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். பளு தூக்குதலின் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநலம் பற்றிய கருத்துக்களை சிறப்பு விருந்தினர் உடற்பயிற்சியாளர் கந்தசாமி மாணவர்களிடம் கலந்துரையாடினார். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் பளுதூக்குதலின் நன்மைகள் மற்றும் அதனால் உடல் மற்றும் மனம் எவ்வாறு தகுதி அடைகிறது என்பதை பற்றிய விஷயங்களை மாணவர்களிடம் கலந்துரையாடினார். ரத்த தானம் செய்பவர்கள் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் மோதிலால் தினேஷ் மாணவர்களை வழி நடத்தினார். பல்வேறு துறைகளை சேர்ந்த திரளான மாண வர்கள் கலந்து கொண்டார்கள். முடிவில் பளு தூக்கும் மன்றத்தின் இயக்குனர் பேராசிரியர் தாவீது ராஜா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக தேசிய அளவிலான ‘சிம்போசியம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேராசிரியை இந்திராணி இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரையாடினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கணினி அறிவியல் (சுயநிதி பிரிவு) துறை சார்பாக தேசிய அளவிலான 'சிம்போசியம்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். கணினி அறிவியல் பொறுப்பு துறைத்தலைவர் ராஜபூபதி அறிமுக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியை இந்திராணி கலந்து கொண்டு இன்றைய மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன் பாட்டையும், விழிப்புணர்வு பற்றியும் கலந்துரை யாடினார். நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறை தலைவர் வேலாயுதம் நடுவராக கலந்து கொண்டு, கல்லூரிகளுக்கிடை யேயான மாணவர் திறன் சார் போட்டிகளை நடத்தினார். தொடக்க விழாவில் இயற்பியல்துறை தலைவர் பாலு, வணிக நிர்வாகவியல் துறை தலைவர் அந்தோணி சகாய சித்ரா, வேதியியல் துறை தலைவர் கவிதா, தமிழ்துறை பேராசிரியர் சிங்காரவேலு, ஆங்கிலத்துறை பேராசிரியர் ஆண்டனி பிரைட் ராஜா, வணிகவியல்துறை பேராசி ரியர்கள் பார்வதிதேவி, சுமதி, சிரில்அருண், திருச்செல்வம், ரூபன் இயேசு அடைக்கலம், ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், செயலர் மற்றும் சிறப்பு விருந்தினர் இணைந்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். பேராசிரியை சகாய ஜெயசுதா நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது.
    • இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப படைப்புத்திறன் போட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர மதிப்பீட்டு குழு தலைவர் ஜிம்ரீவ்ஸ் வரவேற்று பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் பாலு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி (மெட்ரிக் பள்ளி) பிரபாகுமார் பரிசு, சான்றிதழ் வழங்கினார். இதில் திருச்செந்தூர் சரவணய்யர் நடுநிலைப்பள்ளி முதலிடமும், காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடமும், காயல்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து அனிதாகுமரன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை 3-வது இடமும் பிடித்தது.

    நடுவர்களாக பேராசிரியர்கள் பாலு, வசுமதி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சியை திருச்செந்தூர் சுற்று வட்டார பள்ளி மாணவர்கள் பார்த்து பயனடைந்தனர். கல்லூரி கணினித்துறை தலைவர் வேலாயுதம் கணினியின் செயல்பாடுகள், மென்பொருட்கள் குறித்தும், வேதியியல் துறைத்தலைவர் கவிதா வேதிவினைகள், வேதிப்பொருட்கள் குறித்தும் விளக்கி கூறினர். விலங்கியல் துறை சார்பில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் குறித்து துறைத்தலைவர் சுந்தர வடிவேல் எடுத்துரைத்தார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, பேராசிரியர்கள் வாசுகி, ஜெசிந்த் மிஸ்பா, சேகர், சிரில் அருண், திருச்செல்வன், ஜெயராமன், மோதிலால் தினேஷ், செண்பகாதேவி, லிங்கதுரை, லோக் கிருபாகர், சிவமுருகன் ஆகியோர் செய்து இருந்தனர். கண்காட்சி அமைப்பாளர் பாகீரதி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மகளிர் நல அமைப்பு சார்பாக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். விலங்கியல்துறை பேராசிரியை வசுமதி, மகளிர் தினம் குறித்து பேசினார். இவ்விழாவில் பல்டாக்டர் தி.ரேணுகா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பெண்கள் சாதனை படைத்து வாழ்வில் முன்னேறி நற்பெயரை பெற்றோருக்கு எடுத்து கொடுக்க வேண்டும். சமூகவலைதளத்தில் பல்வேறு அபாயங்கள் இருக்கிறது. இவற்றை கையாளும் போது பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும், என்றார். முன்னதாக மகளிர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்யானந்தஜோதி வரவேற்று பேசினார். மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறை பேராசிரியை சாந்தி நன்றி கூறினார். தொடர்ந்து முதுகலை மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை முதுகலை மாணவிகள் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற தமிழக அரசின் ஆணையால் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பதிதாக வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் இளங்கலை பொருளியல் மாணவர்கள் தமிழ் வழியில் பயில்வதால், அவர்களுக்கு போட்டித் தேர்வு எழுதுவதற்கு தமிழ் வழியில் இலவச பயிற்சி வகுப்புகளை ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை நடத்தி வருகிறது.

    இதன் தொடக்க விழாவில் பொருளியல் துறை தலைவர் சி.ரமேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு போட்டி தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி பேசுகையில், மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், என்றார். சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவரும், திருச்செந்தூர் வழக்கறிஞருமான வி.நடேசன் ஆதித்தன் கலந்து கொண்டு, கல்லூரியின் சமூக தொண்டுகள் பற்றியும், தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு வசதிகள் பற்றியும், போட்டித்தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    பயிற்சி வகுப்பு ஒருங்கிணைப்பாளர் சி.முருகேஸ்வரி நன்றி கூறினார். பயிற்சி வகுப்பு இயக்குனர் உமாஜெயந்தி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சுந்தரவடிவேல், ராஜ்பினோ, மோதிலால் தினேஷ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முத்துக்குமார், மாலைசூடும்பெருமாள், கணேசன், சிவமுருகன், அசோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தபால்தலை மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றது.
    • கல்லூரி மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பழைய நாணயங்களையும், தபால் தலைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தபால்தலை மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் காகிதப்பணம் ஆகியவை இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவர்கள் பல்வேறு நாடுகளின் பழைய நாணயங்களையும், தபால் தலைகளையும் பார்வைக்கு வைத்திருந்தனர்.

    இக்கண்காட்சியை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன், கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ருமேனியா, கென்யா, நெதர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, சவுதிஅரேபியா, துருக்கி, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த பழங்கால நாணயங்கள், கிழக்கிந்திய நாட்டு நாணயங்கள், ஆங்கிலேயர் காலத்து நாணயங்கள் மற்றும் இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், குவைத், மங்கோலியா, மலேசியா, நேபாளம், ஓமன், தைவான் ஆகிய நாடுகளின் தபால் தலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. பொருளியல்துறை இளங்கலை 3-ம் ஆண்டு மாணவர் எஸ்.முகுந்தன், முதுகலை 2-ம் ஆண்டு மாணவர் கு.ஆகாஷ் ஆகியோர் வெளிநாட்டு, உள்நாட்டு தபால் தலைகளை படைப்பாற்றல் முறையில் காட்சிப்படுத்தி இருந்தனர். மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.வேலாயுதம், நாணய சேகரிப்பு மன்ற இயக்குனர் சி.முருகேஸ்வரி மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கண்காட்சியை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
    • கண்காட்சியில் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைகளில் பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறை மற்றும் தாவரவியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விலங்கியல்துறை தலைவர் சுந்தரவடிவேல் வரவேற்றார். கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன், சுற்றுச்சூழல் தூய்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இக்கண்காட்சியில் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைகளில் பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு வகையான நுண்ணோக்கிகள், அறிவியல் உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் மாதிரிகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

    கண்காட்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். தாவரவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்ப–ளராக வசுமதி, ஆரோக்கியமேரி பர்னாந்து ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சி அமைப்பு செயலாளராக லிங்கதுரை, மணிகண்ட ராஜா ஆகியோர் செயல்பட்டனர். வேலாயுதம் மற்றும் விலங்கியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo