search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • திருச்செந்தூர் தாசில்தார் வாமணன் கலந்துகொண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
    • மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு குழு தலைமையில் மத்திய அரசின் அனைவருக்கும் கல்விக்கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி மற்றும் கல்வி அமைச்சகத்தின் கீழ் வித்தியலட்சுமி இணைய வாயிலாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்விக்கடன் பெறும் வசதி தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    உள்தர மதிப்பீடு குழு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்றார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அரசு சார்பில் திருச்செந்தூர் தாசில்தார் ப.வாமணன் கலந்து ெகாண்டு, கல்விக்கடன் திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் சி.பா.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கல்விக்கடன் திட்ட செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திட்டம் குறித்து விளக்கி பேசினார். மாணவர்கள் சாந்தகுமார், பாலகுமரன் ஆகியோர் திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினர். கல்வி கடன் திட்டத்தின் நோடல் அதிகாரி பேராசிரியை க.பார்வதி தேவி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வன், செந்தில்குமார், அண்டனி முத்து பிரபு, ராஜபூபதி ஆகியோர் ெசய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘நேர்காணல் திறன்’ என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது.
    • விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றி விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றத்தின் சார்பாக 'நேர்காணல் திறன்' என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. இளங்கலை பொருளியல் மன்ற துணை தலைவர் பேராசிரியர் சிவ இளங்கோ வரவேற்றார். பேராசிரியர் கணேசன், சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். விவேகம் நிறுவனங்கள் குழுமத்தின் இயக்குனர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நேர்முக தேர்வின் முக்கியத்துவம் பற்றியும், நேர்முக தேர்வில் வெற்றி பெறுவதற்கு மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் நேர்முக தேர்வில் பொதுவாக கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பதை பற்றியும் விளக்கி கூறினார். முடிவில் மாணவ செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் சிவமுருகன், அசோகன், அன்றோ சோனியா, உமா ஜெயந்தி, அமராவதி, பிரியதர்ஷினி மற்றும் 3-ம் ஆண்டு பொருளியல் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனைப்படி பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், ‘மாறி வருகின்ற இந்தியா’ என்ற தலைப்பில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், 'மாறி வருகின்ற இந்தியா' என்ற தலைப்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இக்கருத்தரங்கில், காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி பேராசிரியர் வடிவேல் அர்ஜூனன், ஹரியானா மத்திய பல்கலைக்கழக பேராசிரியை லாங்காய் ஹிமானிங்கன், ஹிமாசலப்பிரதேச அரசு கல்லூரி பேராசிரியர் சந்தீப்குமார் தாக்கர், மும்பை எஸ்.என்.டீ.டி. கலை மற்றும் எஸ்.சி.பி. வணிகவியல் பெண்கள் கல்லூரி பேராசிரியர் கிஷோர் காதம் ஆகியோர் பேசினர். முன்னதாக பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கணேசன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து பேசினார். கருத்தரங்க செயலர் அசோகன், கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினார். நிறைவு நிகழ்ச்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் பேசினார். இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதுகலை மற்றும் இளங்கலை மாணவர்கள் 203 பேர் பங்கேற்றனர். இதில் 59 மாணவர்கள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். முதுகலை பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.
    • சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணி எண்.45, சாகசக்கலை மன்றம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.

    இந்த பயிலரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பே.மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் பேராசிரியர்கள் உமா ஜெயந்தி, கருப்பசாமி, திலீப்குமார், முதுகலை பொருளியல் மாணவர்கள் செல்வம், ஞானஅபினாஷ், மாணவச்செயலாளர்கள் சுடலைமணி, சஞ்சய் மற்றும் இளங்கலை மாணவர்கள் கலந்து கொண்டனர். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவஇளங்கோ நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர், சாகசக்கலைமன்ற இயக்குனர் மற்றும் மாணவர்கள் ெசய்திருந்தனர்.

    மேலும், கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்றம் சார்பாக சிந்தனை திறனும் மாணவர்களின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் பேராசிரியர் சிவஇளங்கோ வரவேற்று பேசினார். ரெக்காரியோ சொத்துக்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவன நெல்லை மண்டல தலைவர் தேவபிரான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், தினமும் செய்தித்தாள் வாசிப்பதன் அவசியத்தையும், வேைலவாய்ப்பிற்கு தேவையான அனைத்து திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மாணவச் செயலாளர் சாமுவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மருதையா பாண்டியன், உமாஜெயந்தி மற்றும் மூன்றாமாண்டு பொருளியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனைப்படி, பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள், பொருளியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பயிற்சி திட்டத்தில் வேலன் ஸ்டேசனரி கடையின் உரிமையாளர் விஜய ஷர்மிளி மற்றும் ஹரிணி மனோன்மணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
    • தொழில் அதிபராக மாறுவதற்கு கடின உழைப்பு, விடா முயற்சி, குறிக்கோள் மிகுந்த மனதைரியம் போதுமானது என்று கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் பெண்கள் கல்வி மையம் சார்பில் வீட்டு அலங்கார பொருட்கள் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இந்த பயிற்சி திட்டத்தில் வேலன் ஸ்டேசனரி கடை யின் உரிமையாளர் விஜய ஷர்மிளி மற்றும் ஹரிணி மனோன்மணி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற னர்.

    இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    உள்தர மதிப்பீட்டு உறுதி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்ட் நைட் வரவேற்று பேசினார். பெண்கள் மையத்தின் ஒருங் கிணைப்பாளர் கு.ராம ஜெயலெட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    சிறப்பு விருந்தினர் விஜய ஷர்மிளி பேசுகையில், பெண்கள் சுயதொழில் குறித்தும், தங்களுடைய விருப்பத்தை எப்படி தொழிலாக மாற்ற வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

    கல்வி தான் எல்லா வற்றிற்கும் அடிப்படை என்றும், பெற்ற கல்வியை கொண்டு எப்படி வெற்றி பெறலாம் என்றும் பேசினார்.

    மேலும் தொழில் அதிப ராக மாறுவதற்கு பின்புலம் தேவை இல்லை என்றும் கடின உழைப்பு, விடா முயற்சி, குறிக்கோள் மிகுந்த மனதைரியம் போது மானது என்று கூறி மாணவிகளை ஊக்குவித்தார்.

    ஹரிணி மனோன்மணி மாணவிகளுக்கு மிகவும் நேர்த்தியாக வீட்டு அலங் கார பொருட்கள் செய்வது எப்படி என்று பயிற்சி அளித்தார். மாணவிகளுக்கு எளிதாக புரியும் வகையில் மிகவும் பொறுமையுடன் செய்து காட்டினார்.

    இந்த பயிற்சி திட்டத்தில் அனைத்து முதுகலை மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முடிவில் பெண்கள் கல்வி மையத்தின் உறுப்பினர், கணிதவியல் உதவி பேராசிரியை சரண்யா நன்றி கூறினார்.

    இந்த பயிற்சி திட்டத்தில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, ரீட்டா யசோதா, சோனியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார்.
    • இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையின் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. முள்ளெலிகள், பச்சோந்திகள், எறும்பு தின்னிகள், கழுகுகள் பாதுகாப்பு பற்றி தானேஜா விண்வெளி மற்றும் விமான நிறுவன நிதியுதவியுடன் பிரவீன்குமார் தலைமையில் ஆராய்ச்சி மாணவரான அபினேஷ் முத்தையன் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விளக்கி பேசினார். முன்னதாக விலங்கியல் துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை ஆரோக்கியமேரி பெர்னாதீஸ் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் வேதியியல் துறை தலைவர் கவிதா, பேராசிரியர்கள் செந்தில்குமார், லோக்கிருபாகர், கெழஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விலங்கியல்துறை இளங்கலை, முதுகலை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் ஆலோசனையின்பேரில் பேராசிரியர்கள் லிங்கதுரை, மணிகண்டராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆரோக்கிய மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.43-ம் இணைந்து மன அழுத்த மேலாண்மை குறித்த உளவியல் பார்வை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். ஆரோக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிதா வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜசெல்வி, காயாமொழி புற மருந்தக கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரூபன் கிங்க்ஸ்லி மற்றும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் பிந்துஜா தரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இவ்வுரையில் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, தியானம் ஆகியவற்றுடன் வைட்டமின் சி நிறைந்த பழங்கள், மெக்னீசியம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று கூறினர். நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆஸாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கவிதா, தீபாராணி மற்றும் அபுல்கலாம் ஆஸாத் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததான பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
    • மேலும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் எண்.1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.231(சுயநிதி பிரிவு) ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களின் ரத்தவகை கண்டறிதல் மற்றும் ரத்ததான முகாமை கல்லூரி வளாகத்தில் நடத்தின. திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் நடந்த இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததான பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது மேற்பார்வையில் 10 மருத்துவ பணியாளர்கள் முகாமில் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். மேலும் முதலாமாண்டு மாணவ, மாணவியருக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்களும் தங்களின் ரத்தவகையை கண்டறிந்தனர்.

    இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பார்வதி தேவி, மாணவ செயலாளர்கள் சிவசிரி, ஜெயவினோத் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • மாணவர்கள் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி உறுதி மொழியினை வாசித்தார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் சிலுவைரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறையில் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • திருச்செந்தூர் தொகுதி வளமைய கல்வியாளர் ஜெயாஹெலன் , ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆரோக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தொடங்கி வைத்தார். ஆரோக்கிய மன்ற தலைவர் கவிதா வரவேற்று பேசினார். இவ்விழாவில் திருசெந்தூர் தொகுதி வளமைய கல்வியாளர் ஜெயாஹெலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆரோக்கியத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். மேலும், தொடர்ச்சியாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், சிறந்த மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெற்று வாழ்வில் நோயற்ற வாழ்வை எதிர்கொள்வார்கள் என அவர் தெரிவித்தார். ஆரோக்கிய மன்ற செயல் உறுப்பினர் தீபாராணி நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை மன்ற மாணவச் செயலாளர் சுபாஷ், வேதியியல் துறை பேராசிரியர்கள் ஜெஸிந்த்மிஸ்பா, அபுல்கலாம் ஆஷாத், கோடிஸ்பதி, ராம்தாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை (சுயநிதி பிரிவு) மன்ற தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி முன்னாள் மாணவர் அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை (சுயநிதி பிரிவு) மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சகாய ஜெயசுதா வரவேற்று பேசினார்.

    கல்லூரி முன்னாள் மாணவரும், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் நகரில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியுமான அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் திறன் மேம்பாடு, நேர்முக தேர்வுக்கு தயார் செய்வது குறித்து விளக்கி கூறினார். கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் மன்ற செயலாளர் ஸ்ரீராம் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    விழாவில் கணினி அறிவியல் துறையை சேர்ந்த ஆக்னஸ் ஸ்டெபி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி, தமிழ்த்துறை பேராசிரியர்கள் ராஜேஷ், சிங்காரவேலன் மற்றும் மகேஸ்வரி, ஆங்கிலத்துறை போராசிரியர்கள் அந்தோணி பிரைட் ராஜா, சுகாசினி, வணிகவியல் துறை பேராசிரியர்கள் சிரில் அருண், திருச்செல்வம், கரோலின் கண்மணி ஆனந்தி, ஜெயராமன், பார்வதி தேவி, டயானா ஸ்வீட்லின், ரூபன் ஜேசு அடைக்கலம், சுமதி மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.
    • சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் வெற்றி கேடயத்துக்கான கபடிப்போட்டியும், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனா் வெற்றி கேடயத்துக்கான கைப்பந்து போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 12 பள்ளிகள் கபடி போட்டியிலும், 12 பள்ளிகள் கைப்பந்து போட்டியிலும் பங்கேற்றன.

    போட்டிகளை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய அணியின் கைப்பந்து வீரருமான மங்கள ஜெயபால் கலந்து கொண்டார். தொடர்ந்து கபடி போட்டிகள் செயற்கை தரையிலும், கைப்பந்து போட்டிகள் மாலையில் மின்னொளியிலும் நடைபெற்றன.

    கபடி போட்டியில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளியும், 2-வது பரிசை திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ேமல்நிலைப்பள்ளியும், 3-வது பரிசை ஆசீர்வாதபுரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியும், நாலுமாவடி காமராசர் மேல்நிலைப்பள்ளியும் பகிர்ந்து கொண்டன. சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுக்கு தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் தமிழ்செல்வன் தேர்வு செய்யப்பட்டார். கைப்பந்து போட்டியில், சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசையும் வென்றன. மணப்பாடு செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசையும், தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி 4-வது பரிசையும் பெற்றன. சிறந்த ஆட்டக்காரர் விருதுக்கு சாயர்புரம் போப் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டார்.

    மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். கல்லூரி ெசயலாளர் ஜெயக்குமார் கலந்து கொண்டு, கபடி போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வெற்றிக்கேடயத்தையும், கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற பள்ளிகளுக்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் வெற்றிக் கேடயத்தையும் வழங்கி பாராட்டினார். போட்டிகளின் அமைப்பாளர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். விழாவில் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர்கள், வேலாயுதம், மாலைசூடும் பெருமாள், பாலகிருஷ்ணன், ேசகர், நூலகர் முத்துக்கிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி உள்தரஉறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் செய்திருந்தார்.

    ×