search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர்  ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம்
    X

    முகாமில் மாணவர் ஒருவர் ரத்ததானம் வழங்கிய காட்சி.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ரத்ததான முகாம்

    • கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது
    • திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயங்கி வரும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் அணிகள் 1, 2 மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண் 231 (சுயநிதி பிரிவு) இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு ரத்த வகை மற்றும் ரத்ததானம் முகாம் திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை குழுவின் மூலம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். திருச்செந்தூர் தலைமை மருத்துவமனை ரத்ததானம் பிரிவு மருத்துவ தலைமை டாக்டர் சசிகலா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவரது மேற்பார்வையில் சுமார் 10 மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர். கல்லூரி மாணவர்கள் 62 பேர் ரத்ததானம் வழங்கினா். சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ரத்தவகை கண்டறியப்பட்டது. மேலும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். நிகழ்ச்சி முடிவில் இளையோர் செஞ்சிலுவை சங்கத்திட்ட அலுவலர் மோதிலால் தினேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கணிப்பொறி தலைவர் வேலாயுதம் மற்றும் சிவந்தி வானொலி தொழில்நுட்ப கலைஞர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க சுயநிதிப்பிரிவு திட்ட அதிகாரி பேராசிரியர் பார்வதி தேவி மற்றும் மாணவ செயலர்கள் சொரிமுத்து, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×