search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Blood donation camp"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரத்த தான முகாம் நடந்தது.
    • 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி யில் அனைத்து இளைஞர் அமைப்பு கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கலா, ராஜபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மருத்துவர் கிரிஜா, தேவர் மகாசபை தலைவர் சித்தானந்தன், செயலாளர் காளிமுத்து, பசும்பொன் தேவர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வீரய்யா, சுசீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 96 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் செய்தனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார்.
    • திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த திருமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரத்த தான முகாமிற்கு சுகாதார ஆய்வாளர் சுந்தரம் வரவேற்றார். மருத்துவ அலுவலர் தா.சிமி தலைமையிலான மருத்துவக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் சி.பொன்னம்பலம் முன்னிலையில், திருமனுார் ஊராட்சி மன்ற தலைவர் கே.காளியப்பன் ரத்த தானம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். சேலம்அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் ரவீந்திரன், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிசாமி, திருமனூர் அரிமா சங்க பொருளாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    திருப்பூர் : 

    திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., பள்ளி இன்டரேக்ட் கிளப், ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் மற்றும் ஐ.எம்.ஏ., ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் ஏ.வி.பி., பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். ஏ.வி.பி. பள்ளி தாளாளர் கார்த்திகேயன் முகாமிற்கு தலைமை தாங்கியதோடு ரத்ததானத்தின் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாவட்ட திட்டத்தலைவர் அனந்தராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கவுரவ விருந்தினர்களாக மாவட்ட ரத்த தான முகாம் தலைவர் கமலா பாஸ்கர் மற்றும் ரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி கலந்து கொண்டனர்.

    ஏ.வி.பி., பூண்டி பள்ளி முதல்வர் பிரியா ராஜா, ரோட்டரி வி.என். முத்துராமலிங்கம், பிரேம் ஆனந்த், பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் சுகுமார் கலந்து கொண்டனர். பெற்றோர் மற்றும் தன்னார்வலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு,மேலாளர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் மாணவி அமிர்தவல்லி நன்றி கூறினார்.   

    • காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.
    • மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம்களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளா கத்தில் மெகா என்கிற பொது நல அமைப்பின் சார்பில் 26-வது ரத்த தான முகாம் நடைபெற்றது.

    திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனையின் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் மெகா அமைப்பின் நிர்வாகிகள் முஜாஹித் அலி, நூகு, புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முத்து இஸ்மாயில், அப்துல் வாஹித், சதக்கத்துல்லாஹ் ஆகியோர் பங்கேற்றனர்.

    முகாமில் 5 பெண்கள் உள்பட 46 பேர் ரத்ததானம் செய்தனர். டாக்டர் பாவனாச குமார் தலைமை யிலான குழுவினர் இதற் கான பணிகளை மேற் கொண்டனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் முகாமில் சான்றிதழ் வழங்கப்பட்டது. மெகா அமைப்பின் சார்பில் இது வரை நடந்த 26 முகாம் களிலும் மொத்தம் ஆயிரத்து 617 பேர் ரத்ததானம் செய்து ள்ளதாக அறிவிக்கப்பட்டது.

    • முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது.
    • தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முள்ளக்காடு கிங் மேக்கர் காமராஜர் மக்கள் சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா முள்ளக்காடு நூலக கட்டிடம் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர். சிவாகர் தலைமை தாங்கினார். வக்கீல் எம் சொக்கலிங்கம், தர்மகர்த்தாக்கள் சேகர்(என்ற) சந்திரசேகர் ரகுபதி என்ற சின்னராஜ் முன்னில வகித்தனர், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்,சப் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, காமராஜ் கல்லூரி வரலாற்று துறை தலைவர் தேவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    நிர்வாகிகள் கோகுல், லிங்க பிரதீஷ், சரத் சரவணன், ரத்தத்தான அணி பொறுப்பாளர்கள் விக்னேஷ், செல்லத்துரை, சமூக வலைதள அணி பொறுப்பாளர் ராபர்ட் ஜெயம், சங்க சட்ட ஆலோசகர் ஸ்ரீநாத் ஆனந்த் ஆகியோர் வரவேற்றனர்,

    பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி முள்ளக்காடு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று காலை நடைபெற்றது, இதில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டனர்,முகாமை உப்பு உற்பத்தியாளர்கள் முகேஷ் சண்முகவேல், எல்.ஆர்.சிவகர்,மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் எஸ் எம் சகாயராஜ்,ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

    • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் தாய் பாசம் அறக்கட்டளை, கல்வித்தந்தை மருத்துவர் இ.எம்.அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம், மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து ரத்தான முகாம் மற்றும் தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டா ளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி விஜயா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஷேக் இபுராஹிம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீதிபதி நிரந்தர மக்கள் நீதிமன்றம் பரணிதரன், மாவட்ட அமர்வு நீதிபதி விரைவு மகளிர் நீதிமன்றம் கோபிநாத், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தாய்பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் பாதுஷா நூருல் சமது ஒருங்கிணைத்தார். மாவட்ட வழக்கறிஞர் சங்க செயலாளர் கருணாகரன் நன்றி கூறினார்.

    • 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு குடைகள் வழங்கினார்.
    • இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை மற்றும் அக்னிச்சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    ரத்ததான முகாம்

    முகாமிற்கு தொழில் அதிபரும், ஸ்ரீராகவேந்திர சேவா அறக்கட்டளை நிறுவனருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தொழில் அதிபரும், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. சிறுபான்மை பிரிவு நல உரிமை துணை அமைப்பாளருமான அமலி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

    இதில் 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு குடைகள் வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் மருத்துவர்கள் தேவசேனா, ரோஸ்லின், செவிலியர்கள் லட்சுமி காந்தம், சுபா, சேவியர், அக்னி சிறகுகள் சமூக சேவை அறக்கட்டளை முத்துமாரியம்மன், பகவத்சிங் ரத்ததானகழக நிறுவனர் காளிதாஸ், ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் மகேஷ், பெருமாள், கருப்பசாமி, உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    ரத்ததான முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் வாழ்த்தி பேசினார். இதற்கான ஏற்பாட்டினை ஜீவ அனுக்கிரகா பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.
    • நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், தேசிய தர மதிப்பீட்டுக்குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் திலகேஷ்வர்மா, டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். ஏற்பாடுகளை இளம் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் இயற்பியல் துறையில் நியூஸ் லெட்டர் இதழ் வெளியீட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் தர்ம கர்த்தா டாக்டர் எம்.ஜெபஸ்டின் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நியூஸ் லெட்டர் இதழை வெளியிட்டார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணை ப்பாளர் புஷ்பராஜ் வாழ்த்தி பேசினார். ஆசிரியர்கள், மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடல் மற்றும் போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்க ப்பட்டது. ஏற்பாடுகளை பேரா சிரியர்கள் ராய்சிச் ரெனால்ட், பிருந்தாமலர், ராஜகுமாரி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • முகாமை புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார்.
    • இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பேராலய வின்சென்ட் தி பவுல் சபை மற்றும் வள்ளியூர் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது. புனித பாத்திமா அன்னை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் தலைமை தாங்கி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். லயன்ஸ் கிளப் தலைவர் ஜான் வின்சென்ட், செயலாளர் எட்வின் ஜோஸ், பொருளாளர் டாக்டர் ஜார்ஜ் திலக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் தலைவர் ஜான் வின்சென்ட் வரவேற்றார். நெல்லை மருத்துவக் கல்லூரி ரத்ததான முகாம் குழு மருத்துவர்கள் ரவிசங்கரன், மணிமொழி, திருவேங்கடம், ஆய்வக நுட்புனர் ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்தம் பெற்றுக் கொண்டனர்.

    வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஜெகதீசன், வாசகன், ராஜவேலு, சசிகுமார், அன்னை தெரசா ரத்ததான இயக்க தலைவர் ரீகன் மற்றும் பிற ரத்ததான அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் டாக்டர் ஜார்ஜ் திலக் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வள்ளியூர் லயன்ஸ் கிளப் குழுவினர் செய்திருந்தனர்.

    • தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சாத்தான் குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காத ர்பாட்சா முத்துராம லிங்கம் தலைமையில் தாங்கி னார்.

    ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்தத்தை தானம் செய்வதனால் அடையும் பயன்கள் குறித்தும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். தொடர்ந்து ரத்ததானம் செய்தவ ர்களை பாராட்டி னார்.ராமநாதபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் பெற்று க்கொண்டனர்.

    இந்த முகாமில் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், இளைஞரணி யூசப், கிளை செயலாளர் புகாரி, பிரதிநிதி வினோத், ஊராட்சி மன்றத்தலைவர் குப்பைக்கனி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் ரத்ததான முகாம் நடந்தது.
    • 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி யில் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி), நகர்மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவர் பால முருகன் ஆகியோர் அனை வரையும் வரவேற்றனர்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) திருமால் செல்வம் வாழ்த்தி பேசினர். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் சாம் சேசுரான், மருத்துவர் அழகு தாஸ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ ஆலோசகர் சூசை ராஜ் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்து கொண்டனர்.

    இதில் ரத்த தானம் செய்தவர்களுக்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், தமிழ்நாடு ரத்த குழுமத்தால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும்.

    பல்லடம்:

    பல்லடம் வட்ட சட்டப் பணிகள் குழு, வழக்கறிஞர் சங்கம்,திருப்பூர் லயன்ஸ் கிளப் மற்றும் கோவை லைன்ஸ் ரத்த வங்கி ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா தலைமை வகித்தார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். ரத்ததான முகாமை பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசியதாவது :-

    அனைவரும் ரத்தம் கொடுத்தால் உடலுக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணுவதை விட்டுவிட்டு ரத்தம் கொடுப்பது மீண்டும் ,மீண்டும் உடலில் ரத்தம் உருவாகி புத்துணர்ச்சியை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவும். இதனை அனைவரும் புரிந்துகொண்டு ரத்தம் கொடுக்க முன்வர வேண்டும் என்றார். இந்த முகாமில் 37 பேர் ரத்ததானம் செய்தனர். அவர்களை நீதிபதிகள் சந்தான கிருஷ்ணசாமி, சித்ரா, மற்றும் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பாராட்டினர்.

    ×