search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்
    X

    ரத்த தான முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

    • ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துக்கொண்டு முகாமினை நடத்தினர். முன்னதாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி கலந்து கொண்டார்கள். முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ரத்ததான நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முகமது இபாம், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ராம்கி மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×