search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hitech Polytechnic College"

    • சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் கலந்து கொண்டு பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவை கல்லூரியின் தலைவர் டி.டி.என். லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தூய்மையான உலகை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் தருண் ஆண்டனி வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர் குணசீலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி செய்திருந்தார்.

    • சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார்.
    • கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார். கல்லூரி தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

    நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பொறியாளர் தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட டெக்னிக்கல் பேப்பர் பிரசடேசன் போட்டியில் துறைவாரியாக வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் அருண்குமார் வரவேற்று பேசினார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் மாணவர் தருண் ஆண்டனி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் முகாமிற்கு தலைமை தாங்கினர்.

    வள்ளியூர்:

    சமூகரெங்கபுரத்தில் உள்ள டி.டி.என். கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலைச் சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. டாக்டர் புனிதா ரஞ்சிதம் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்துக்கொண்டு முகாமினை நடத்தினர். முன்னதாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் மூலம் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முகாமிற்கு கல்லூரி தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார மருத்துவ அலுவலர் ராமசாமி கலந்து கொண்டார்கள். முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் ரத்ததான நன்மைகளை மாணவரிடம் எடுத்துக் கூறினார். ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அதிகாரி முகமது இபாம், இளைஞர் செஞ்சிலுவை சங்க அதிகாரி ராம்கி மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ரராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×