search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Valliur"

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    வள்ளியூர்:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வள்ளியூர் தெற்கு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடி உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம் வள்ளியூர் யூனியன் சேர்மனும் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.

    இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் உறுப்பினர்களை ஆய்வு செய்து, அவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் தொகுதி பொறுப்பாளரும், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சுரேஷ் மனோ கரன், கிழக்கு மாவட்ட அவைத் தலை வரும், வள்ளி யூர் வடக்கு ஒன்றிய செயலா ளருமான கிரகாம்பெல், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறு முகம், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இளை ஞரணி ஜாண் ரபீந்தர், மகளிரணி மல்லிகா அருள், வழக்கறிஞரணி செல்வசூடாமணி, தகவல் தொழில்நுட்ப அணி பிரேம் ஆனந்த், ஒன்றிய கவுன்சிலர் கொசிஜின், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் லெட்சுமணன், சுதாகர், சிவா, கோபி, சுரேஷ், மந்திரம், முத்துகிருஷ்ணன்,

    ராதாபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சுபாஷ், ஒன்றிய அவைத்தலைவர் வேலு, துணை செயலாளர்கள் இளங்கோவன், ரேவதி, மாவட்ட பிரதிநிதிகள் கருணாநிதி, மணிவர்ண பெருமாள், இசக்கியப்பன், ஒன்றிய பொருளாளர் தாமஸ்,

    கிளை செயலாளர்கள் இளங்கோ கலைசிகாமணி, தங்கையா, தவசி செல்வன், தயானந்த மார்த்தாண்டன், உச்சிப்புளி, தர்மலிங்கம், சோமு, அந்தோணி, தன பால், வில்சன், வின்சென்ட், மனோகரன், முருகன், கனகராஜ், பால்குட்டி, சிவகுமார், ரவி, முருகன், சிவச்சந்திரன், அரிக்குமார் மற்றும் வாக்குசாவடி முகவர்கள், உறுப்பினர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் கலந்து கொண்டு பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவை கல்லூரியின் தலைவர் டி.டி.என். லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தூய்மையான உலகை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் தருண் ஆண்டனி வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர் குணசீலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி செய்திருந்தார்.

    • நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள பண்டாரகுளம் புனித தோமையார் ஆலயம் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டும்தோறும் புனிதருக்கு திருவிழா கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்தாண்டு 1-ம் திருவிழா கடந்த 24-ந் தேதி மாலை அருட்தந்தை லூர்துசாமி கொடியை அர்ச்சித்து கொடியேற்றினார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருயாத்திரை திருப்பலி, மாலை மறையுறை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    நேற்று 9-ம் திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இரவு தேர்பவனி நடைறெ்றது. தேரில் புனித தோமையார் ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பக்தர்கள் நேர்ச்சையாக உப்பு, மிளகு தூவியும், பாடல்கள் பாடியும், வான வேடிக்கைகள் நிகழ்த்தியும் தேரை இழுத்துச் சென்றனர்.

    தேர்திருவிழாவில் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10-ம் திருவிழாவான இன்று காலை 5.30 மணிக்கு அருட்தந்தை அருள் பிரபாகர் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இன்று மாலை 5.30 மணிக்கு கொடி இறக்கமும், நற்கருணை ஆசிரும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூர்துசாமி அடிகளார் மற்றும் பண்டாரகுளம் பங்கு இறை மக்கள், இளைஞர்கள் செய்து இருந்தனர்.

    • பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ஒன்றியத்தில் பாரதீய ஜனதா சார்பில் செயற்குழு கூட்டம் வள்ளியூர் காமராஜ் நகரில் உள்ள அய்யா திருமண மண்டபத்தில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் தளவாய் மற்றும் மாவட்ட செயலாளரும், ஒன்றிய பார்வையாளருமான சுந்தரராஜன் கலந்து கொண்டார். ஒன்றிய பொதுச்செயலாளர் சார்லஸ் வரவேற்று பேசினார். செயற்குழு தீர்மானங்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்தழகன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் அணி பிரிவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணசாமியும்,

    வள்ளியூர் பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் சுமித்ராவும் வாசித்தார்.

    ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ராமகுட்டி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட மற்றும் ஒன்றிய அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை

    • சத்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு வள்ளியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது
    • வள்ளியூரை சுற்றியுள்ள திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்

    வள்ளியூர்:

    சத்குரு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் குருபூஜையை முன்னிட்டு வள்ளியூரில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. மலையடிவாரம் சூட்டுப் பொத்தையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வள்ளியூரை சுற்றியுள்ள திரளான கிராம மக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். கண் மருத்துவர்கள் வைதேகி, ரிஷப் தேசய் ஆகியோர் பொதுமக்களை பரிசோதித்தனர். ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×