search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "testing"

    • மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
    • சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.

    இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.

    அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.

    தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.

    இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.

    ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி  விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.
    • நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    அனைவரது வேலையில் அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் உடல் நலத்திலும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். உணவு, உறக்கம், உடற்பயிற்சி இந்த மூன்று விஷயங்களிலும் நேரத்தை செலவிட வேண்டும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இதற்கு நாம் நேரம் செலவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை உடலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் கட்டாயம் அவசியம். 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக தைராய்டு, BP, கொலஸ்ட்ரால், சர்க்கரை, உடல் எடை, ஈசிஜி, எக்கோ, திரெட்மில் ஆகிய அடிப்படை பரிசோதனைகளை வருடத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது அவசியம்.

    இந்த பரிசோதனைகளை செய்வதன் மூலம் உடலில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? மாரடைப்பு வருவதற்க வாய்ப்பு உள்ளதா? முன் குடும்பத்தில் யாருக்காவது சிறு வயதில் மாரடைப்பு வந்துள்ளதா? புகைப்பிடித்தல் பழக்கம், மது அருந்துவது போன்ற பழக்கங்கள் உள்ளதா? இதுபோன்ற பரிசோதனைகள் மூலம் அறிவதற்கு ஏதுவாக இருக்கும்.


    யாருக்கு அபாயகரமான அறிகுறிகள் உள்ளதோ அவர்களில் நோயின் தீவிரத்தை பொருத்து அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

    உணவு, உறக்கம், உடற்பயிற்சி எல்லாம் நாம் மருத்துவர்களிடம் சென்ற பிறகே ஒழுங்கு படுத்த முயற்சிக்கோம். ஆனால் இந்த பழக்கம் எல்லாம் குழந்தை பருவத்தில் இருந்தே பள்ளிகளில் கற்றுதர வேண்டும். பள்ளிகளில் உணவு பற்றிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு பற்றி ஆலோசனைகளை குழந்தை பருவத்தில் இருந்தே பெற்றோர்களோ, ஆசிரியர்களோ குழந்தைகளில் ஆழ்மனத்தில் பதிய வைக்க வேண்டும்.


    இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு உடல் எடை, உணவு முறை போன்ற பிரச்சனைகள் இருந்த உடல் பரிசோதனை செய்து கொண்டு மருத்துவரை அணுகுவது நல்லது. தினமும் அரைமணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். முக்கியம் பயம் என்பது அனைவருக்கும் வருவது உண்டு. சின்ன படபடப்பு இருந்தால் உடனே அது கார்டியாக் இருக்குமோ என்ற பயம் அனைவரும் வந்து விடுகிறது. நமக்கு மாரடைப்பு வந்து விடுமா என்ற பயம் உள்ளவர்கள் ஒரு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    சரியான உடற்பயிற்சியும், உணவு பழக்கமும் மாரடைப்பு தடுக்க வாய்ப்புள்ளது.

    • 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.
    • கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற உணவு பொருளாக தட்டு வடை செட் உள்ளது. இந்த தட்டு வடை செட்டை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் விரும்பி சாப்பிடுவதால் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் தொடங்கி இரவு 10 மணி வரை தட்டு வடை செட் விற்பனை கொடி கட்டி பறக்கிறது.

    குறிப்பாக இந்த தட்டு வடை செட் கடைகளில் , சாதா தட்டு வடை செட், முறுக்கு செட், மாங்காய் செட், பூண்டு செட், பொறி செட், நொறுக்கல், முட்டை நொறுக்கல், கார பொறி உள்பட பல்வேறு வகையான ருசி மிகுந்த செட்கள் விற்கப்படுகின்றன. இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வாங்கி ருசித்து சாப்பிடுகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள திரு.வி.க. சாலையில் உள்ள துருவன் தட்டுகடை செட் கடையில் அட்சய திருதியையொட்டி 24 காரட் தங்க தட்டுவடை செட் வழங்கப்படும் என்று சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. தொடர்ந்து அந்த கடையில் கடந்த சில நாட்களாக கோல்ட் பாயில் பேப்பரில் தட்டு வடை செட் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி ருசித்து சாப்பிட்டனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அலை மோதியது.

    இதனை அறிந்த அந்த பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரி பாபுராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த தட்டு வடை செட் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோல்டு பாயில் பேப்பரில் உணவு தர குறியீடுகள் ஏதும் இல்லாமல் தங்க தட்டு வடை செட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும் அவை மனித உணவுக்கு ஏற்றதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோல்ட் பாயில் பேப்பரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    உடனடியாக அதனை பகுப்பாய்வுக்கும் அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவின் அடிப்படையில் தட்டு வடை செட் கடை உரிமையாளர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    அருவங்காடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, பொதுமக்களுக்கு பரிசு மற்றும் பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை சாவடிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களின் கார்கள், வேட்பாளர்களின் கார்களிலும் பறக்கும் படையினர் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று பறக்கும் படை அதிகாரிகள் குன்னூரில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

    குன்னூர் வண்டிப்பேட்டையில் தி.மு.க நகர அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 3 பேர் கொண்ட பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் அலுவலகத்தில் உள்ள அறைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் எதுவும் அங்கு சிக்கவில்லை. சில மணி நேர சோதனைக்கு பிறகு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

    • மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.
    • பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    எண்ணெய் கழிவு கலந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க சில பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியமானதாகும். எண்ணெய் படிந்த பகுதி மற்றும் எண்ணெய்யால் பாதிக்கப்பட்ட தாவரங்களை எடுத்து பரிசோதிக்க வேண்டும். மேலும் எண்ணெய் ஓடிய பகுதியில் மண் பரிசோதனை செய்து நச்சுத்தன்மையை கணக்கிட வேண்டும்.

    நிலத்தின் உள்பகுதியில் நீண்ட தூரம் எண்ணெய் ஊடுருவி இருக்கலாம் என கருதினால் நிலத்தடி நீர் சோதனையும் மேற்கொள்ள வேண்டும். இது போன்ற பரிசோதனைகள் மேற்கொள்வதன் மூலம் எண்ணெய் கசிவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இது தவிர பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் உதவிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    • யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
    • பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் பலியாகி உள்ளனர்.

    தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    கேரள மாநிலத்தையொட்டி உள்ள தமிழக எல்லையில் அமைந்துள்ளது கோவை மாவட்டம்.

    கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து பலர் கேரளாவுக்கும் சென்று வருகிறார்கள்.

    தற்போது கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கோவை மாவட்ட எல்லைகளான வாளையார், பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைகட்டி உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அங்கு மருத்துவ குழுவினர், போலீசார் முகாமிட்டுள்ளனர். அவர்கள் அந்த வழியாக கேரளாவில் இருந்து கோவைக்குள் வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி, அதில் இருக்கும் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்கின்றனர்.

    அதில் யாருக்காவது காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    மேலும் அவர்களின் சளி மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்த பின்னரே அவர்களை கோவைக்குள் அனுமதித்து வருகின்றனர்.

    கோவையில் பொது மக்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்பத்திரிகளுக்கு காய்ச்சலுடன் வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இருமல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகளான நாடுகாணி, கக்கநல்லா உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு ள்ளது.

    அந்த வழியாக கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் பயணிகள் அனைவரும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

    பரிசோதனைக்கு பின்னரே அவர்கள் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நீலகிரி கலெக்டர் அருணா கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்குள் வருவோரின் உடல் வெப்ப நிலை, சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன.

    இதுவரை 30 பேரின் சளி மாதிரிகள் சேகரி க்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. எனவே பொது மக்கள் கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • ரூ.38,௬௮௦ ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி ஒன்றியம் முத்தாண்டி குப்பம் அடுத்த வல்லம் பஸ்நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற் பனை நடைபெறுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிரடி படை போலீசார் சோதனை செய்த தில் ரூ10லட்சம் மதிப்பிலான 1,245 மது பாட்டில்கள்மற்றும் பணம் ரூ.38,680ஆகியவற்றை கைப்பற்றி காடாம்புலியூர் போலீசில் ஒப்படை த்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து பாப்பன் கொல்லை குமார் ,அருள்முருகன்ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர்.
    • சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கடலூர்:

    சிதம்பரத்தில் இருந்து புவனகிரி வழியாக கடலூர், விருத்தாசலம் செல்லும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் வந்தது. இதை தொடர்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா மற்றும் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி ஆகியோர் பஸ் நிலையத்தில் திடீரென வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்களில் ஏறி கட்டண சீட்டுகளைப் பெற்று அவை சரியாக உள்ளதா அதிகமாக உள்ளதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதிக கட்டணம் வசூலித்த பஸ்சுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறுகையில் அனைத்து பஸ் கண்டக்டர்களும் சரியான பயணச்சீட்டையே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

    • தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது.
    • ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    அதிராம்பட்டினம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதிராம்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மீனாட்சி மருத்துவமனையில் இருந்து வருகை தந்த டாக்டர்கள், செவிலியர்கள் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை என உடல் முழு பரிசோதனை செய்தனர்.

    இம்முகாமில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாகிராஅம்மாள் அப்துல்கரீம், நகர் மன்ற துணைத் தலைவர் ராமகுணசேகரன், ஆணையர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

    • 250 மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் புலிவலம், காட்டாற்று பாலம், கூடூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 640 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தினந்தோறும் 250 மாணவ மாணவிகளுக்கு இங்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

    மதிய உணவு உட்கொண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் மயக்கம் அடைந்துள்ளனர்.

    அதனையடுத்து மயக்கம் அடைந்த மாணவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    இதில் சௌமியா மற்றும் காவியா ஆகிய இரண்டு மாணவிகளுக்கு உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் 7ம் வகுப்பு படித்து வரும் ஜெகதீஸ்வரன் தர்ஷன் சாரநாதன் சஞ்சனா சுபலட்சுமி மாதேஷ் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் முகேஷ் நிவாஸ் ஆகியோர் தனி வார்டில் அனுமதி க்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோ ர்களையும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, பூண்டி கலைவாணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.

    • வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.
    • மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.

    ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் .

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    நேற்று காலை துவங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் சாகர்கவஜ்ஆபரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    ×