என் மலர்
நீங்கள் தேடியது "Maruti Suzuki"
- 1983 ஆம் ஆண்டு மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கியது.
- இந்த மைல்கல்லை அடைய மாருதி சுசுகி நிறுவனத்திற்கு 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான கார்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற சாதனையை மாருதி சுசுகி படைத்துள்ளது.
1983 ஆம் ஆண்டு இந்தியாவில் கார் விற்பனையை தொடங்கிய மாருதி சுசுகி இந்த மைல்கல்லை அடைய 42 ஆண்டுகள் ஆகியுள்ளது.
விற்பனையான 3 கோடி கார்களில் அதிகபட்சமாக Alto மாடல் 47 லட்சம், Wagon R மாடல் 34 லட்சம், Swift மாடல் 32 லட்சம் விற்றுள்ளதாக மாருதி சுசுகி கூறியுள்ளது.
இதுகுறித்து பேசிய மாருதியின் தலைமை நிர்வாக அதிகாரி, "இந்தியாவில் 1,000 பேருக்கு 33 கார்கள் மட்டுமே உள்ளது. ஆகையால் எங்களுக்கு இன்னும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
- புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் மோட்டார் வாகன கண்காட்சியில், Fronx Flex Fuel கான்சப்ட் காரை சுசுகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது.
இந்தியச் சந்தையில் உள்ள Fronx காரில் 1.2 லிட்டர் என்ஜின் K சீரிஸ் டூயல் ஜெட் என்ஜின் உள்ளது. 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்டிலும் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Fronx காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
இந்த யூனிட் உடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளும் வசசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ADAS சூட், பிளாக் நிற அலாய் வீல்கள், புதுமையான கிராபிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
புதிய Fronx மாடல் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை விரைவில் 30 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தக்கூடிய காரை சுசூகி நிறுவனம் உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது.
- இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாரத் NCAP சோதனைகளில், மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் பெற்றுள்ளது. மாருதி இன்விக்டோ ஆல்பா+ 7-சீட்டர் மற்றும் ஜீட்டா+ 8-சீட்டர் வேரியண்ட்களில் சோதிக்கப்பட்ட இன்விக்டோ, விசாலமானதாகவும் வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் பெரியதாக இருப்பதைக் காட்டியது.
இன்விக்டோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 32 இல் 30.43 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 49 இல் 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான கார் கிளப்பின் ஒரு பகுதியாக அமைந்தது.
பயணிகள் பாதுகாப்பு மதிப்பீடு: 30.43/32 – கிட்டத்தட்ட குறைபாடற்றது
முன்பக்க ஆஃப்செட் விபத்து சோதனையில் இன்விக்டோ சிறப்பாக செயல்பட்டது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் தலை, கழுத்து, முழங்கால்களை பாதுகாத்தது. ஓட்டுநரின் மார்பு "போதுமானதாக" இருந்தது, மீதமுள்ளவை "நல்லதாக" இருந்தன. இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் ஆகியவை இன்விக்டோவின் திடமான கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாக உள்ளன.
இன்விக்டோ அனைத்து முக்கிய பகுதிகளிலும் "நல்ல" பாதுகாப்புடன் பக்கவாட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது. கடினமான பக்கவாட்டு கம்பத்தில் சோதிக்கப்பட்டபோதும், அது சிறப்பாக செயல்பட்டது, பக்கவாட்டு விபத்துகளின் போது MPVகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது.
குழந்தை பயணி பாதுகாப்பு மதிப்பீடு: 45/49 – மிகவும் நல்லது
பின்புறமாக எதிர்கொள்ளும் ISOFIX மவுண்ட்களை தரநிலையாகக் கொண்டு, 18 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பின்புறமாக எதிர்கொள்ளும் டம்மிகளுடன் சோதிக்கப்பட்ட நிலையில், இன்விக்டோ டைனமிக் கிராஷ் செயல்திறனில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. பக்கவாட்டு மற்றும் முன்பக்க தாக்கங்கள் சரியான மதிப்பெண் பெற்றன.
மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு திடமான தொகுப்புடன் முன், பக்க மற்றும் திரைச்சீலைகளைப் பாதுகாக்கும் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வகைகளிலும் நிலையானவை. இது பயணி பாதுகாப்பை முழுமையாக்குகிறது.
அனைத்து டிரிம்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) கிடைக்கிறது மற்றும் கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளில் வாகனம் நிலையாக இருக்க உதவுகிறது.
இன்விக்டோ ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உடன் வரவில்லை என்றாலும், அதன் உத்தி நடைமுறைக்குரியது. அதன் வகுப்பிற்குள் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் அனைத்து அடிப்படை பாதுகாப்பு அத்தியாவசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24.97 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.28.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுடன் அதன் டாப் எண்ட் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
- இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
- பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.
மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.
இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
புதிய விலை விவரங்கள்:
இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.
பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.
ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.
கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.
எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.
ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.
இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.
- ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
- ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மத்திய அரசு வசூலித்து வரும் ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 22-ந்தேதிக்கு பின் ஜி.எஸ்.டி. 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வரவிருக்கிறது. இதன் பிறகு, இந்தியாவில் சிறிய ரக கார்களின் விலை குறைய உள்ளது.
ஜி.எஸ்.டி. மாற்றத்தின் படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளமும், 1200 சி.சி. பெட்ரோல் அல்லது 1500 சி.சி. டீசல் எஞ்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதனை காட்டிலும் குறைந்த சி.சி. எஞ்ஜின் கொண்ட பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. மற்றும் எல்.பி.ஜி. வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக குறைகிறது.
இந்நிலையில் ரூ.10 லட்சத்திற்குள் பாதுகாப்பிற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும், செயல்திறனுக்கும் பிரபலமான கார்கள், எவ்வளவு விலை குறைய இருக்கின்றன என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா பன்ச்
இந்தியாவின் பாதுகாப்பான மற்றும் பிரபலமான மைக்ரோ-எஸ்.யூ.வி. கார்களில் ஒன்று டாடா பன்ச். 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்ஜின் (87 எச்.பி.) இதில் உள்ளது. ஜி.எஸ்.டி. குறைப்பிற்குபிறகு சுமார் ரூ. 85 ஆயிரம் வரை இந்த காரில் சலுகை கிடைக்கும். சிறிய அளவிலான இந்த எஸ்.யூ.வி. கார் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு சிறந்த தேர்வு ஆகும்.
மாருதி சுசுகி வேகன்ஆர்
இது குடும்பங்களிடையே மிகவும் பிரபலமான கார். எரிபொருள் சிக்கனத்திற்கு பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.57 ஆயிரம் வரை விலை குறைப்பை பெற இருக்கும் வேகன்ஆர் கார், அதிக இடவசதி மற்றும் மிகக் குறைந்த இயக்கச் செலவுகளை விரும்பும் பெரிய குடும்பங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.

மஹிந்திரா XUV 3XO
சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்கும் காம்பாக்ட் எஸ்.யூ.வி. காரான இது, ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.40 லட்சம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ரூ.10 லட்சத்திற்குள் சக்தி வாய்ந்த மற்றும் நவீன அம்சங்கள் நிறைந்த கார்களை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மாருதி சுசுகி பலேனோ
இது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிரிவில் உள்ளது. விசாலமான மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் நிறைந்த கேபினுக்கு இது பிரபலமானது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.60 ஆயிரம் வரை விலை குறைய இருக்கிறது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மற்றும் விசாலமான ஹேட்ச்பேக் கார் தேவைப்படும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா அல்ட்ரோஸ்
குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற டாடா நிறுவனத்தின் மற்றொரு கார் அல்ட்ரோஸ். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.1.10 லட்சம் வரை விலை குறைப்பை பெற உள்ளது. பன்முக எஞ்ஜின் தேர்வுகள் கொண்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
ஹூண்டாய் எக்ஸ்டர்
டாடா பன்ச்-க்கு போட்டியாக களமிறங்கிய ஹூண்டாயின் மைக்ரோ-எஸ்.யூ.வி. கார் இது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.89 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. நவீன அம்சங்கள் கொண்ட உயரமான எஸ்.யூ.வி. காரை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
மாருதி சுசுகி ஸ்விப்ட்
இது ஹேட்ச்பேக் கார் பிரிவில் நீண்டகாலமாகவே பிரபலமான மாடலாகும். ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.58,000 வரை ஸ்விப்ட் காரின் விலை குறைக்கப்பட உள்ளது. தினசரி நகரப் பயன்பாட்டிற்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
டாடா டியாகோ
பாதுகாப்பான எண்ட்ரி-லெவல் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஜி.எஸ்.டி சலுகைக்கு பிறகு சுமார் ரூ.75 ஆயிரம் வரையில் டியாகோ காரின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் உறுதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான காரை தேடுபவர்களுக்கும், முதல் முறையாக கார் வாங்குபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வு.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ்
பிரீமியம் உணர்வையும், சவுகரியமான பயண அனுபவத்தையும் வழங்கும் இந்த காரில் 1.2 லிட்டர் காபா பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்படுகிறது. ஜி.எஸ்.டி. சலுகைக்கு பிறகு சுமார் ரூ.74 ஆயிரம் வரை விலை குறைக்கப்பட உள்ளது. ஆடம்பரமான கேபின் உடன் மென்மையாக, நகரத்திற்குள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும்.
- இந்த கார் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.
- புதிய விக்டோரிஸ் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ALLGRIP செலக்ட் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விக்டோரிஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்று பரந்த அளவிலான பவர்டிரெய்ன் விருப்பங்கள் ஆகும். பெட்ரோல், ஸ்டிராங் ஹைப்ரிட், CNG மற்றும் AWD உடன் கூட, விக்டோரிஸ் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
புதிய விக்டோரிஸ் 1.5 லிட்டர், K15C பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இது 103bhp பவர், 139Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த யூனிட் உடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் (டார்க் கன்வெர்ட்டர்) டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. செயல்திறனை பொருத்தவரை e-CVT உடன் இணைக்கப்பட்ட 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலைத் தேர்வுசெய்யலாம்.
இந்த கார் இகோ, பவர் மற்றும் நார்மல் ஆகிய டிரைவ் மோட்களுடன் வருகிறது. மேலும் குறுகிய தூர பயணங்களுக்கு பியூர் EV மோட் ஆகியவை உள்ளன. இந்த கார் லிட்டருக்கு 28.65 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது. இது அதன் வகுப்பில் அதிக மைலேஜ் வழங்கும் பெட்ரோல் மாடல்களில் ஒன்றாக விளங்குகிறது.
கூடுதலாக, மாருதி நிறுவனம் எந்தவொரு மாருதி CNG தயாரிப்புக்கும் முதன்முறையாக அண்டர்பாடி CNG டேங்க் கொண்ட CNG மாடலை வழங்குகிறது. 27.02 கிமீ/கிலோ மைலேஜ் வழங்கும் விக்டோரிஸ் S-CNG, செலவில் சிக்கனம் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. புதிய விக்டோரிஸ் மாடலில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் ALLGRIP செலக்ட் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
இந்திய சந்தையில் புதிய மாருதி சுசுகி விக்டோரிஸ் மாடல் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுடன் போட்டியிடுகிறது. இவை இரண்டும் பல பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களை வழங்குகின்றன.
- 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
- மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, விக்டோரிஸ் என்கிற புதிய எஸ்யுவி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
ப்ரீமியம் எஸ்யூவி காரை விரும்புவோருக்கு இந்த மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த கார் மாருதி பிரெஸ்ஸா காரை விட பெரியது, மாருதி கிராண்ட் விட்டாரா காரை விடச் சிறியதாகும்.
மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எஞ்சின் என இரண்டு விருப்பங்களில் கார் கிடைக்கிறது. இதேபோல், 5 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமெட்டிக் அல்லது சிவிடி தேர்விலும் விக்டோரிஸ் கார் கிடைக்கிறது.
Bharat NCAP தர குறியீடு, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கன பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இதன்மூலம், 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற 2வது மாருதி சுசூகி கார் என்ற பெருமையைப் பெற்றுள்ளது விக்டோரிஸ்.
இந்த காரில் மிதக்கும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், காற்றோட்டமான இருக்கைகள், பனோரோமிக் சன்ரூஃப் உள்ளிட்ட ப்ரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், 360 டிகிரி கேமரா உள்பட 60க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட அம்சங்கள் காரில் இடம்பெற்றுள்ளன. மாருதி சுசூகி விக்டோரிஸ் கார் மொத்தம் 10 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷாக் உள்ளிட்ட பல பிரீமியம் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாளராக இது கருதப்படுகிறது.
மாருதி சுசூகியின் விக்டோரிஸ் காரின் விலை குறித்து அறிவிக்கப்படவில்லை. என்றாலும், பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய விக்டோரிஸ் காரின் விலை சுமார் 10- 11 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
- 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.
- 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், கார் தயாரிப்பாளர்கள் தங்கள் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர். எனவே, செப்டம்பர் 2025 ஆட்டோ ஆர்வலர்களுக்கு அதிரடியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாதம் இந்திய சாலைகளில் வரவிருக்கும் ஐந்து அற்புதமான கார்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி எஸ்யூவி
மாருதி சுசுகி தனது புதிய காம்பாக்ட் எஸ்யூவியை வெளியிட உள்ளது. இந்த காரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதற்கு முந்தைய தகவல்கள் மாருதி சுசுகி இந்த காரை எஸ்குடோ என்று அழைக்கலாம் என கூறின. இது மாருதி சுசுகி பிரெஸ்ஸாவிற்கும், நிறுவனத்தின் அரினா வரிசையில் உள்ள மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும். மேலும், இந்த காரில் கிராண்ட் விட்டாராவை விட சற்று பெரிய இருக்கைகளைப் பெறும் என்றும், உள்புறத்தில் அதிக இடவசதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இது 3 வரிசை இருக்கை அமைப்பையும் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிட்ரோயன் பாசால்ட் எக்ஸ்
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் வருகிற 5-ந்தேதி இந்திய சந்தையில் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.11,000 டோக்கன் தொகையில் தொடங்கிவிட்டன. முன்னதாக, இந்த நிறுவனம் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலான C3X-ஐ அறிமுகப்படுத்தியது. வரவிருக்கும் சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், C3X ஐ விட அதிக மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.

வின்ஃபாஸ்ட் VF6
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட், வருகிற 6-ந்தேதி இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் VF6 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 59.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று தெரிகிறது.
வின்ஃபாஸ்ட் VF7

VF6 உடன், வின்ஃபாஸ்ட் நிறுவனம் வருகிற 6-ந்தேதி VF7 மின்சார எஸ்யூவி-யையும் வெளியிடுகிறது. வின்ஃபாஸ்ட் VF7 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களில் கிடைக்கும். இரண்டு ஆப்ஷன்களிலும், இது 70.8kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் AWD மாடலில் பின்புற மோட்டாரும் அடங்கும். இவை இணைந்து 350 ஹெச்பி பவர் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா, செப்டம்பர் மாதம் மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் தார் ராக்ஸ்ஸைப் போலவே செங்குத்து ஸ்லாட் கிரில்லைப் பெறும் என்பதை குறிக்கின்றன. இது ஐந்து-கதவுகள் கொண்ட வெர்ஷனில் இருந்ததை போன்ற ஹெட்லைட்களை கொண்டிருக்கும். இத்துடன் C-வடிவ DRLகளுடன் கூடிய LED ப்ரொஜெக்டர் அமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன் பம்பர் மற்றும் ஃபாக் லைட்கள் உள்ளன.
- அகமதாபாத் அருகே ஹன்சல்பூரில் மாருதி சுசுகி ஆலை அமைந்துள்ளது.
- அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.
ரூ.5,477 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று குஜராத் மாநிலதிற்கு சென்றிருந்தார்.
நேற்று மாலை, அகமதாபாத்தின் நரோடாவில் இருந்து நிகோல் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார்.
இந்நிலையில் இன்று அகமதாபாத் அருகே உள்ள ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுசுகி ஆலையில் e-Vitara எனப்படும் பேட்டரி மின்சார கார் உற்பத்தி யூனிட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி e-Vitara, ஜப்பான் உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு இந்த SUV மின்சார வாகனம் சந்தியில் அறிமுகமாக உள்ளது.
- இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,27,861 வாகனங்களை விற்றுள்ளது.
- உள்நாட்டு விற்பனை 4,30,889 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 96,972 யூனிட்கள் அடங்கும்.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,792 கோடியாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டும் வகையில், வெளிநாட்டு ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி இந்தியா நிறுவனம், கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் ரூ.3,760 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
ஜூன் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.40,493 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.36,840 கோடியாக இருந்தது. தனித்த அடிப்படையில், மாருதி நிறுவனம் ரூ.3,712 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது, இது முந்தைய நிதியாண்டின் ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.3,650 கோடியுடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் அதிகமாகும்.
முதல் காலாண்டில் நிகர விற்பனை ரூ.36,625 கோடியாக அதிகரித்துள்ளது, இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ரூ.33,875 கோடியாக இருந்தது.
மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் போன்ற மாடல்களை வெளியிடும் நிறுவனம், ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் உள்நாட்டு பயணிகள் வாகனத் துறை தொடர்ந்து மந்தமான தேவை சூழலைக் கண்டதாகக் குறிப்பிட்டது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் மொத்தம் 5,27,861 வாகனங்களை விற்றுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனை 4,30,889 யூனிட்கள் மற்றும் ஏற்றுமதி 96,972 யூனிட்கள் அடங்கும். நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இயில் 0.1 சதவீதம் உயர்ந்து ரூ.12,634.45 ஆக இருந்தது.
- இந்தியாவில் உள்ள அனைத்து உபகரண உற்பத்தியாளர்களும் (OEMகள்) தங்கள் சலுகைகளில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
- 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் பல்வேறு மாடல்களில் ஆறு ஏர்பேக்குகளை ஒரு நிலையான அம்சமாக மாற்றுவதன் மூலம் அதன் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது அதன் பிரீமியம் எம்பிவி மாடலான XL6 ஆகும். இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் விளைவாக மாடலுக்கான விலை 0.8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் வேரியண்ட்டைப் பொறுத்து காரின் விலை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை அதிகரித்துள்ளது. எனவே, மாடலின் விலைகள் இப்போது ரூ.11.92 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகின்றன.
இந்த அப்டேட் உடன், XL6 இப்போது நெக்சா மற்றும் அரினா வரிசையில் உள்ள மற்ற மாடல்களுடன் இணைகிறது. இதில் எர்டிகா, பலேனோ, ஆல்டோ K10, செலெரியோ, வேகன்ஆர், ஈகோ, ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஜிம்னி மற்றும் இன்விக்டோ ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் இப்போது நிலையாக ஆறு ஏர்பேக்குகளுடன் வருகின்றன. XL6 க்கு முன்பு, இந்த மேம்படுத்தலைப் பெற்ற மிகச் சமீபத்திய மாடல்கள் எர்டிகா மற்றும் பலேனோ ஆகும்.
முன்னதாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) அக்டோபர் 2025 க்குள் அனைத்து புதிய பயணிகள் கார்களிலும் ஆறு ஏர்பேக்குகள் தரநிலையாக பொருத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் விளைவாக, இந்தியாவில் உள்ள அனைத்து உபகரண உற்பத்தியாளர்களும் (OEMகள்) தங்கள் சலுகைகளில் தேவையான மாற்றங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த மேம்படுத்தலுக்கு முன்பு, மாருதி சுசுகி XL6 நான்கு ஏர்பேக்குகளைக் கொண்டிருந்தது மற்றும் EBD உடன் ABS, எலெக்ட்ரிக் ஸ்டேபிலிட்டி, சீட் பெல்ட் ரிமைன்டர், டயர் பிரெஷர் கண்காணிப்பு அமைப்பு, டிஃபோகர், 360-டிகிரி கேமரா மற்றும் பல போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் வந்தது.
இதற்கிடையில், காரின் மீதமுள்ள விவரங்கள் அப்படியே உள்ளன. மாருதி சுசுகி XL6, மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டிருக்கிறது. இது 102 hp பவர் மற்றும் 137 Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது. இந்த மாடலில் CNG பவர்டிரெய்ன் ஆப்ஷனும் உள்ளது.
- ஜிம்னி மாடலின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 16.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
- மாருதி சுசுகி ஜிம்னி காரில் கன்மெட்டல் கிரே நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் மாருதி சுசுகியின் ஜிம்னி. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், இந்த மாடலின் விற்பனை நல்லமுறையில் தான் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில், கடந்த மே 2025 இல் மாருதி சுசுகி ஜிம்னி 1.5 மடங்கு விற்பனை வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மாருதி சுசுகி ஜிம்னி 4X4 ஆஃப்-ரோடர் இந்த ஆண்டு மே மாதம் 682 யூனிட் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த விற்பனையான 274 யூனிட்களை விட அதிகம் ஆகும். இந்த விற்பனை உயர்வு ஜிம்னிக்கு 149 சதவீத ஆண்டு வளர்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஜூன் 2023 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து ஜூன் மாதத்தில் மாருதி சுசுகி 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
மாருதி சுசுகி ஜிம்னி மாடல் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 105 hp பவரையும் 134 Nm டார்க்கையும் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜிம்னி மாடலின் மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 16.94 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதே நேரத்தில் ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 16.39 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது.
மாருதி சுசுகி ஜிம்னி காரில் கன்மெட்டல் கிரே நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இது குரோம் முலாம் பூசப்பட்டும், ஆக்ரோஷமான தோற்றத்தை அளிக்கிறது. மற்ற முக்கிய வெளிப்புற சிறப்பம்சங்களில் வட்ட வடிவ LED ஹெட்லேம்ப்கள், பக்கவாட்டு மற்றும் பின்புற விளிம்புகளில் டிரிப் ரெயில் உள்ளன. ஜிம்னி லேடர் ஃபிரேமில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 15 இன்ச் சக்கரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுசுகி ஜிம்னியின் உட்புறத்தில், ஆல்பா வேரியண்டில் 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஜீட்டா வகைகளில் 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரை போன்ற அம்சங்களைப் பெறுகிறது. இது ஆர்காமிஸின் சரவுண்ட் சென்ஸ், 4-ஸ்பீக்கர் செட்டப் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி ஆகியவற்றையும் பெறுகிறது.
இந்திய சந்தையில் மாருதி சுசுகி ஜிம்னி ஜீட்டா வேரியண்டின் விலை ரூ.12.76 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. மேலும் ஆல்பா வேரியண்ட் ரூ.13.71 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.






