என் மலர்
நீங்கள் தேடியது "எலெக்ட்ரிக் கார்"
- இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலிலும் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம்.
- புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 543 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது.
மாருதி சுசுகி தனது முதல் முழு மின்சார வாகனமான இ விட்டாராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த மாடலுக்கான உற்பத்தி ஆகஸ்ட் 2025 இல் குஜராத்தில் உள்ள நிறுவனத்தின் ஹன்சல்பூர் ஆலையில் தொடங்கியது. மேலும் முதல் கட்டமாக செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டது.
புதிய இ விட்டாரா, மாருதி சுசுகியின் EVX கான்செப்ட்டில் இருந்து அதன் வடிவமைப்பைப் பெறுகிறது. கான்செப்ட் காரின் பெரும்பாலான வடிவமைப்பு அதன் உற்பத்தி மாடலிலும் காணப்படுகிறது. இந்த எஸ்யூவி Y-வடிவ DRLகளுடன் ஆங்குலர் ஹெட்லேம்ப் கிளஸ்டர்களைப் பெறுகிறது. அதே நேரத்தில் வீல் ஆர்ச், முன் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் கதவுகளின் கீழ் கிளாடிங்கின் விரிவான பயன்பாட்டையும் கொண்டுள்ளது. கனெக்ட்டட் டெயில் லைட்களும் வழங்கப்பட்டுள்ளன.
கேபினுக்குள், வேறு எந்த மாருதி மாடலிலும் காணப்படாத புதிய கேபின் வடிவமைப்பை இ விட்டாரா கொண்டு வருகிறது. டேஷ்போர்டில் ஃபிரீ ஸ்டான்டிங் டிஸ்ப்ளே உள்ளன. அம்சங்களை பொறுத்தவரை, ஆட்டோ-டிம்மிங் இன்னர் ரியர்-வியூ மிரர், 2-ஸ்போக் ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், 10.25-இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன், 10.1-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட்டிங், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் கீலெஸ் என்ட்ரி போன்ற தொழில்நுட்பங்களுடன் வருகிறது.
மேலும் 19-இன்ச் வீல்கள், 10-வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பவர்டு டிரைவர் இருக்கை, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், முன்புறத்தில் வென்டிலேட்டெட் இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜிங், ஃபாக் லைட்டுகள் கொண்டிருக்கிறது.

இந்திய சந்தைக்கான இ விட்டாரா மாடலிலும் 49 kWh மற்றும் 61 kWh ஆகிய இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம். இதன் பேஸ் மாடலில் உள்ள மோட்டார் 142 bhp பவர் மற்றும் 192.5 Nm டார்க் வெளிப்படுத்தும் என்றும் டாப் எண்ட் மாடல் 172 bhp பவர் வெளிப்படுத்தும்.
புதிய இ விட்டரா மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 543 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என WLTP சான்று பெற்றுள்ளது. புதிய இ விட்டாரா மாடல் இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா BE 6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த மாடல் மாருதி நிறுவனத்தின் நெக்சா டீலர்ஷிப் மூலம் விற்பனைக்கு வருகிறது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கியுள்ளன. எலெக்ட்ரிக் வாகன பிரிவில் தொடர்ந்து புது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரூ.10 லட்சத்திற்குள் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார்களை அறிந்து கொள்வோம்.
எம்ஜி கோமெட் EV
நகர்ப்புற பயன்பாட்டிற்காக, இரு கதவுகளுடன் வடிவமைக்கப்பட்ட சிறிய ரக ஹேட்ச்பேக் கார் கோமெட் EV. இந்திய சந்தையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.24 லட்சத்தில் தொடங்குகிறது. இதில் 17.3 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் இந்த கார் அதிகபட்சம் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என எம்ஜி கூறுகிறது.
இந்த காரின் உட்புறம் 10.25 இன்ச் தொடுதிரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே என இரட்டைத்திரை அமைப்பு கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு எளிதாகச் செல்ல முன்பக்க இருக்கைகள் சாய்ந்து நகரும் வசதியைக் கொண்டுள்ளன. நகர்ப்புற பயணிகளுக்கும், பட்ஜெட் விலையில் ஒரு சிறிய காரை விரும்புபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

டாடா டியாகோ EV
டாடா நிறுவனத்தின் நான்கு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் இது. இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 19.2 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும். டி.சி. பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால், ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே 10 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
டாடா பன்ச் EV
இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக ஆக்டி.இவி (Acti.ev) பிளாட்பார்மில் கட்டமைக்கப்பட்ட மைக்ரோ எஸ்யூவி கார் ஆகும். இதன் ஸ்மார்ட் வேரியண்ட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட் வேரியண்ட்டில் 25 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பொருத்தப்படுகிறது. இது 315 கிலோமீட்டர்கள் வரை 'ரேஞ்ச்' வழங்கும்.
- வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
- வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.
பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.
கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...
சிஎன்ஜி
'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.
எலெக்ட்ரிக்
மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
இயக்கத்திறன்
எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.
சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.
எரிபொருள்
எலெக்ட்ரிக்:
எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.
(சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)
சிஎன்ஜி:
சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.
(பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)
சிக்கனம்
வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.
விலை
கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.
- மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது.
- இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
புதிய மின்சார மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடல் 2027ஆம் ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம். முதற்கட்டமாக, இந்த மாடல் முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட CBU வடிவில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெறும் மின்மயமாக்கப்பட்ட மாடல்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் GLC பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் தளத்தின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் டூயல்-மோட்டார் டிரைவ் டிரெய்ன் கொண்டிருக்கிறது.
மிகவும் விலையுயர்ந்த மாடலாக GLC 400 4MATIC இருக்கும். இதில் உள்ள இரண்டு மோட்டார்கள் 360kW டார்க் உற்பத்தி செய்கிறது. பின்புற மோட்டார் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் முன்புற ஆக்சிலில் டிஸ்கனெக்ட் யூனிட் கொண்டுள்ளது. இது நிலைமைகள் அனுமதிக்கும் போதெல்லாம் துண்டிக்க முடியும், இதன் மூலம் செயல்திறன் அதிகரிக்கும்.
இந்த யூனிட் மணிக்கு 0-100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த காரில் புதிய 94kWh லித்தியம்-அயன் பேட்டரி யூனிட் உள்ளது. புதிய 800-வோல்ட் மின் கட்டமைப்போடு இணைந்து, இந்த பேட்டரி 571 முதல் 713 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று WLTP சோதனைகளில் தெரியவந்துள்ளது. இத்துடன் 330kW வரை அதிவேக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ்-இன் எலெக்ட்ரிக் GLC-இன் உள்புறம் புதிய MBUX ஹைப்பர்ஸ்கிரீன் உள்ளது. இது ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இதில் 39.1 இன்ச் அளவில் டேஷ்போர்டு முழுக்க நீள்கிறது. இது மெர்சிடிஸ் பென்ஸில் இதுவரை நிறுவப்பட்ட மிகப்பெரிய ஸ்கிரீனாக அமைகிறது. இது மேட்ரிக்ஸ் பேக்லைட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
பவர்டிரெய்ன் மற்றும் டிஜிட்டல் இன்டீரியர் இரண்டிற்கும் அடித்தளமாக இருப்பது, GLC-இன் இந்த தலைமுறைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய எலெக்ட்ரிக்-ஃபர்ஸ்ட் பிளாட்ஃபார்ம் ஆகும். இந்த கார் அளவீடுகளில் 4,845 மில்லிமீட்டர் நீளம் மற்றும் 2,972 மில்லிமீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ளது. இந்த காரில் முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கு கால் வைக்க அதிக இடவசதி உள்ளது. மேலும் அதிக ஹெட்ரூம் உள்ளது.
புதிய எலெக்ட்ரிக் GLC-இன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பிரெமன் ஆலையில், வழக்கமான முறையில் இயங்கும் வேரியண்ட்களுடன், நிகர கார்பன்-நடுநிலை அடிப்படையில் நடைபெறும்.
- புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும்.
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எலெக்ட்ரிக் மாடலில் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய வேரியண்ட் விலை விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும். டாடா நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் விரைவில் ஒரு குறிப்பிடத்தக்க அப்டேட்டை பெற இருக்கிறது.
அதன்படி டாடா நிறுவனம் விரைவில் நெக்சான் EV-இல் லெவல் 2 ADAS சூட் பொருத்த இருக்கிறது. டாடா நிறுவனம் தனது சப் 4-மீட்டர் எஸ்யூவிக்கு இதுவரை மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பான ADAS சூட் வழங்கவில்லை. இந்த புதிய அம்சங்கள் நெக்சான் EV எம்பவர்டு+ A வேரியண்ட் எனப்படும் புதிய வேரியண்டில் கிடைக்கும். இதில் A என்ற எழுத்து ADAS சூட்-ஐ குறிக்கிறது.
புதிய அப்டேட் உடன் வரும் நெக்சான் எலெக்ட்ரிக் காரில் டாடா தற்போது வழங்கும் அனைத்து சலுகைகளுடன் வரும். கூடுதலாக, இது 45kWh பேட்டரி பேக் பதிப்பில் மட்டுமே வழங்கப்படும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 489 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
நெக்சான் EV பெறக்கூடிய லெவல் 2 ADAS அம்சங்களில் ஓட்டுநர் தூக்கத்தில் இருக்கிறாரா என்பதை கண்டறிதல், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரியர் கிராஸ் டிராஃபிக் அலெர்ட், ரியர் கொலிஷன் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் கொலிஷன் வார்னிங் ஆகியவை அடங்கும்.
- டெஸ்லா இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையை தொடங்கியது.
- 2025-ல் 2500 கார்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா "Model Y" காரை அறிமுகம் செய்தது. இதற்கான புக்கிங் அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார். ஆனால், சுமார் 600 கார்கள் மட்டுமே இதுவரை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டெஸ்லா காரின் விலை 69.75 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் புக்கிங் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு 2500 கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்பின் வரி விதிப்பால் 2025-ன் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியர் மின்சார கார்களின் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. உலகளவில் 51 ஆயிரம் டாலர் முதல் 79 ஆயிரம் டாலர் வரையிலான கார்கள் வெறும் 2800 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது.
- கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.
புதுப்பிக்கப்பட்ட ஹூண்டாய் ஐயோனிக் 6 இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமானது. இருப்பினும், அந்த நேரத்தில் வரவிருக்கும் N மாறுபாட்டின் விவரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N மாடலின் டீசர்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய எலெக்ட்ரிக் மாடலை ஹூண்டாய் நிறுவனம் "குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு" நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது.
தோற்றத்தின் அடிப்படையில், 2026 ஹூண்டாய் ஐயோனிக் 6 N, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 6 மாடலை போன்ற தோற்றம் மற்றும் வடிவமைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புதிய நேர்த்தியான ஹெட்லைட்களும் அடங்கும். இந்த மாடலில் புதிதாக N பேட்ஜுடன், இப்போது அகலமான ஃபெண்டர்கள் மற்றும் ஸ்வான் நெக் பின்புற இறக்கை பெறுகிறது.
புதிய பிளாக் சைடு சில்ஸ் மற்றும் பின்புற முனையில் புதிய பம்பர் வழங்கப்படுகிறது. ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலுசேர்க்க, ஃபெண்டர்கள் விரிவடைந்துள்ளன. இவற்றுடன் பெர்ஃபாமன்ஸ் ப்ளூ பேர்ல் ஷேடோ ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ஹூண்டாய் ஐயோனிக் 5 N உடன் அதன் பவர்டிரெய்னைப் பகிர்ந்து கொள்ளும் இந்த கார், ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் மற்றும் 601 hp பவர் வெளிப்படுத்துகிறது. இது போதாது என்றால், காரில் N க்ரின் பூஸ்ட் பட்டன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இது 84 kWh பேட்டரி பேக்கிலிருந்து அதிக திறனை உறிஞ்சும் அதே வேளையில் 10 வினாடிகளுக்கு 641 hp ஆக வெளியீட்டை அதிகரிக்கிறது. பயன்படுத்தப்படும்போது, இந்த செடான் 3.2 வினாடிகளில் நின்றுகொண்டிருக்கும் நிலையிலிருந்து மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை அடைகிறது. இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 257 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி பேட்டரியை 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
வேகத்தைக் கட்டுப்படுத்த, ஹூண்டாய் ஐயோனிக் 6 N நான்கு-பிஸ்டன் முன் காலிப்பர்களையும், பின்புறத்தில் முறையே 15.7 மற்றும் 14.1-இன்ச் ரோட்டர்களுடன் கூடிய ஒற்றை-பிஸ்டன் யூனிட்டையும் பெறுகிறது.
- புதிய டால்பின் சர்ஃப் ஒரு முறை சார்ஜ் செய்தால் 507 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும்.
- இந்த வாகனத்தின் அனைத்து வேரியண்ட்களும் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன.
சீன ஆட்டோ நிறுவனமான BYD, பெர்லினில் புதிய எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் மாடல் 'டால்பின் சர்ஃப்'-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த மாடல் ஐரோப்பாவில் கிடைக்கும் BYD-இன் பத்தாவது வாகனமாகும். மேலும் எலெக்ட்ரிக் வாகன (EV) வாடிக்கையாளருக்கு மலிவு விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதிய எலெக்ட்ரிக் காரின் விலை 22,990 யூரோவில் தொடங்கி அதிகபட்சம் 24,990 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் ரூ. 22.4 லட்சம் முதல் ரூ. 24.27 லட்சம் வரை) வரை உள்ளன. மேலும் ஜூன் வரை தொடக்க விலையை தற்காலிகமாக 19,990 யூரோ (ரூ. 19.41 லட்சம்) ஆகக் குறைக்கும் விளம்பரச் சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது.
BYD டால்பின் சர்ஃப்: பேட்டரி மற்றும் பவர்டிரெயின்
டால்பின் சர்ஃப் 5-கதவுகள் கொண்ட ஹேட்ச்பேக் மாடல் ஆகும். இது BYD-இன் சீகல் மாடலின் ஐரோப்பிய பதிப்பாகும். இது ஆக்டிவ், பூஸ்ட் மற்றும் கம்ஃபோர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆக்டிவ் வேரியண்ட் 30 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் பூஸ்ட் மற்றும் கம்ஃபோர்ட் வேரியண்ட்கள் 43.2 kWh பேட்டரியைக் கொண்டுள்ளன.
புதிய டால்பின் சர்ஃப் ஒரு முறை சார்ஜ் செய்தால் 507 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும். இது DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதனால் பேட்டரி 30 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும்.
டால்பின் சர்ஃப் என்பது BYD இன் e-பிளாட்ஃபார்ம் 3.0 இல் கட்டமைக்கப்பட்ட ஒரு சிறிய ஹேட்ச்பேக் ஆகும். மேலும் இது நிறுவனத்தின் பிளேட் பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது அதன் பாதுகாப்பு மற்றும் நீடித்து நிலைக்கும் தன்மைக்கு பெயர் பெற்றது. தோராயமாக 4,290 மிமீ நீளம் கொண்ட டால்பின் சர்ஃப், C-பிரிவு வகைக்குள் வருகிறது.
BYD டால்பின் சர்ஃப்: அம்சங்கள்
இந்த வாகனத்தின் அனைத்து வேரியண்ட்களும் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளேவுடன் வருகின்றன. இதில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, குரல் கட்டுப்பாடு (voice control) மற்றும் வீகன் லெதர் இன்டீரியர் ஆகியவை அடங்கும். இந்த காரில் வெஹிக்கிள்-டு-லோட் (V2L) தொழில்நுட்பமும் உள்ளது. இது 3.3 kW வரையிலான பவர் வழங்குகிறது. கூடுதலாக, டால்பின் சர்ஃப் மாடல் NFC கீ-லெஸ் என்ட்ரி மற்றும் ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்களைப் பெறும் திறனை வழங்குகிறது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை, BYD டால்பின் சர்ஃப் ஆறு ஏர்பேக்குகள், இன்டெலிஜன்ட் வாய்ஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன்-புறப்படும் உதவி மற்றும் புத்திசாலித்தனமான ஹை-பீம் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
- ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
- புதிய ஸ்கோடா எலெக்ட்ரிக் கார் 295 ஹெச்பி திறன் வெளிப்படுத்துகிறது.
ஸ்கோடா நிறுவனம் தொடர்ச்சியாக தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக ஸ்கோடா என்யாக் RS iV இணைந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட என்யாக் கூப் மாடல் RS iV வடிவில் கிடைக்கிறது.
புதிய என்யாக் மாடல் 295 ஹெச்பி பவர், 460 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 2-மோட்டார் டிரைவ் போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் முழு சார்ஜ் செய்தால் 520 கிலோமீட்டர் வரை செல்லும் என WLTP சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடல் குறைந்தபட்சம் 500 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடா என்யாக் RS iV மாடலில் 82 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.5 நொடிகளில் எட்டிவிடும். இதில் வழங்கப்பட்டு இருக்கும் டிராக்ஷன் மோட் கொண்டு எளிதில் வழுக்கும் சாலைகளிலும் பயணிக்க முடியும். RS மாடல் என்பதால் இந்த காரில் RS சார்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர 21 இன்ச் அலாய் வீல் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இதில் உள்ள ஆட்-ஆன் பாகங்கள் ஹை-கிளாஸ் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரேடியேட்டர் கிரில், விண்டோ ஃபிரேம், மிரர் கேப்கள், ரியர் டிப்யுசர், ஸ்கோடா லோகோ உள்ளிட்டவை அடங்கும்.
இத்துடன் க்ரிஸ்டல் ஃபேஸ்- ரேடியேட்டர் கிரில் பகுதியில் 131 எல்இடி பேக்லிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ஃபுல் மேட்ரிக்ஸ் ஹெட்லைட்கள், எல்இடி ரியர் லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. RS மாடல் என்பதால் நான்-மெட்டாலிக் பெயிண்ட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.
- லோடஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யுவி மாடல் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய லோடஸ் எலெக்ட்ரிக் கார் மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.
ப்ரிட்டனை சேர்ந்த கார் உற்பத்தியாளரான லோடஸ் தனது முதல் எஸ்யுவி- எலெட்ரி மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய லோடஸ் எலெட்ரி மாடல் அதிகபட்சம் 905 ஹெச்பி பவர், 600 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என லோடஸ் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு வாக்கில் லோடஸ் எலெட்ரி மாடலின் வினியோகம் துவங்குகிறது. புதிய லோடஸ் எலெட்ரி- எலெட்ரி, எலெட்ரி எஸ் மற்றும் எலெட்ரி ஆர் என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. முற்றிலும் புதிய 800வி எலெட்ரி பிளாட்பார்மில் லோடஸ் எலெட்ரி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மூன்று வேரியண்ட்களிலும் 112 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது.

எலெட்ரி மற்றும் எலெட்ரி எஸ் மாடல்களில் 6.3 ஹெச்பி பவர், 710 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்கும் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிங்கில்-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.5 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 258 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
லோடஸ் எலெட்ரி ஆர் மாடலில் 2 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள டூயல் மோட்டார் செட்டப் 905 ஹெச்பி பவர், 985 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.95 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 265 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். முழு சார்ஜ் செய்தால் 490 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
- வால்வோ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
வால்வோ நிறுவனம் தனது EX90 பிளாக்ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வால்வோ நிறுவனம் தனது SPA2 பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கும் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இல்லாத வகையிலான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது.
சமீபத்திய டீசர்களில் புதிய EX90 மாடலின் இண்டீரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி டேஷ்போர்டில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நேவிகேஷன், மீடியா, போன் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், சீட் வெண்டிலேஷன் என ஏராளமான அம்சங்கள் புது வால்வோ எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் வழங்கப்படுகிறது. இந்த காரில் கூகுள் சார்ந்த யுஎக்ஸ் இண்டர்பேஸ் பயன்படுத்துகிறது. எனினும், இதில் ஏராளமான AI அம்சங்கள் வழங்கப்படுகிறது.

இத்துடன் அளவில் சிறிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழி, ரேன்ஜ் விவரங்கள், கியர் நிலை, ADAS தொடர்பான விவரங்களை காண்பிக்கிறது. இதன் ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டு டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்கள் அதிக தரமானது என்பதையும் விட சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.
தோற்றத்தில் இந்த கார் வட்டம் மற்றும் மெல்லிய ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் சுத்தியல் போன்ற டிஆர்எல்கள் உள்ளன. புதிய வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மூன்று கார்களை விற்பனை செய்து வருகிறது.
- எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டாடா மோட்டார்ஸ் புது மைல்கல்லை எட்டி அசத்தி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிட்டு உள்ளது. 50 ஆயிரமாவது யூனிட்டாக டாடா நெக்சான் EV வெளியிடப்பட்டது. இந்த கார் கிளேசியர் வைட் நிறம் கொண்டிருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் EV, டிகோர் EV மற்றும் டியாகோ EV என மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. பத்து புது எலெக்ட்ரிக் வாகனங்களில் கர்வ் EV, அவினியா மற்றும் அல்ட்ரோஸ் EV உள்ளிட்டவை ப்ரோடக்ஷன் நிலையை எட்டும் என தெரிகிறது.

"இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் நிலையில், வாடிக்கையாளர்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களிடம் இருந்தது. கச்சிதமான வாகனம், நுகர்வோர் எதிர்பார்க்கும் அம்சங்கள் மீது கவனம் செலுத்தினோம்."
"வாடிக்கையாளர்களுக்கு எளிய, குறைந்த விலை தீர்வுகளை வழங்க டாடா குழும நிறுவனங்களுடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகன துறையை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவில் 50 ஆயிரமாவது எலெக்ட்ரிக் வாகனத்தை கொண்டாடுவது, மக்கள் எங்களின் தயாரிப்புகளை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளனர் என்பதற்கு சான்றாக விளங்குகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றை தவிர்க்க சரியான மாற்று எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்."
"தற்போது வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்க தயாராகி விட்டனர். முன்கூட்டியே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க செய்ததோடு, இந்திய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய முதன்மை பிராண்டாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்." என டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம் மற்றும் டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி பிரிவு நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.






