என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volvo"

    • வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது.
    • ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    வால்வோ இந்தியா நிறுவனம் தனது மிகவும் மலிவு விலை கார்: EX30-ஐ ரூ.41 லட்சம் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் இந்த புதிய EV-யை அக்டோபர் 19ஆம் தேதி வரை ரூ.39.99 லட்சத்திற்கு முன்பதிவு செய்து வாங்கலாம். டெலிவரி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்திற்கு EX30 மாடல் திருப்புமுனையாக இருக்கலாம். ரூ. 40 லட்சத்திற்கும் குறைவான விலையில் (முன்கூட்டிய இருப்பு விலை), இந்த மாடல் கச்சிதமான இடத்தில் அமர்ந்திருக்கிறது. வால்வோ EX40 மற்றும் EC40 மாடலுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்டுள்ள EX30, நன்கு கட்டமைக்கப்பட்ட மின்சார காரை தேடும் இளம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

    வால்வோ நிறுவனம் இதுவரை தயாரித்த மின்சார கார்களில் மிக சிறிய மாடலாக EX30 அமைந்துள்ளது. இந்த கார் பெங்களூரு அருகில் உள்ள வால்வோ நிறுவனத்தின் ஹோஸ்கோட் ஆலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இந்த மின்சார காரில் 69kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிலோமீட்டர்கள் (WLTP) வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.

    இதன் ஒற்றை-மோட்டார், ரியர்-வீல் டிரைவ் செட்டப் 272bhp பவர், 343Nm நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இத்துடன் 12.3-இன்ச் டச்-ஸ்கிரீன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய 1040 வாட்ஸ் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், டிஜிட்டல் கீ பிளஸ் மற்றும் NFC ஸ்மார்ட் கார்டு, பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் தீம்கள் இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

    புதிய வால்வோ EX30 மாடலில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா மற்றும் இன்டர்செக்ஷன் ஆட்டோ-பிரேக் போன்ற ADAS அம்சங்களையும் பெறுகிறது. இந்த கார் மாடலுக்கு வால்வோ நிறுவனம் மூன்று ஆண்டுகள் வாரண்டி, RSA தொகுப்பை வழங்குகிறது. இத்துடன் எட்டு ஆண்டுகள் பேட்டரி வாரண்டி பேக்கேஜ் மற்றும் வால் பாக்ஸ் சார்ஜர் ஆகியவையும் உள்ளன.

    • டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது.
    • வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.

    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், EX30 எலெக்ட்ரிக் SUV-யை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வால்வோவின் மின்சார வாகனம் சில காலமாகவே விற்பனையில் உள்ளது. இருப்பினும், வரவிருக்கும் எலெக்ட்ரிக் கார்களின் வெளியீட்டைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் டீசர்களில் இதுவும் ஒன்றாகும். இந்த EV ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது மற்றும் இந்தியாவில் CKD யூனிட்களாக விற்கப்படும். அறிமுகம் செய்யப்பட்டதும், அது EX40 மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படும்.

    புதிய வால்வோ EX30 தோற்றத்தில், வால்வோ வடிவமைப்பு மொழியைப் பின்பற்றுகிறது. இது ஒரு நேர்த்தியான அழகியலை வெளிப்படுத்துகிறது. இதில் பிளான்க்டு-ஆஃப் கிரில், LED ஹெட்லைட்கள், தோர் ஹேமர் டே-டைம் ரன்னிங் லைட்கள், பிக்சலேட்டெட் டெயில் லைட்கள் மற்றும் EVகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஏரோடைனமிக் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. வாகனத்தின் சார்ஜிங் போர்ட் பின்புறம் இடதுபுற பேனலில் அமைந்துள்ளது.

    உள்புறத்தில் கூகுள் சார்ந்து இயங்கும் 12.3-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, அத்துடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வழங்கப்படுகிறது. டேஷ்போர்டில் டிரைவர் டிஸ்ப்ளே, புதிய ஸ்டீயரிங் வீல் நேர்த்தியான அமைப்பை வழங்குகிறது. புதிய வால்வோ EX30 மாடலில் 360-டிகிரி கேமரா, ஏராளமான ஏர்பேக்குகள் மற்றும் லேன்-கீப்பிங் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    கீலியின் SEA பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்ட வால்வோ EX30, முறையே 344 கிலோமீட்டர்கள் மற்றும் 480 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களுடன் வருகிறது. இருப்பினும், சர்வதேச சந்தையில், இதே கார் மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த காரின் ஒற்றை-மோட்டார் வேரியண்ட் 268 ஹெச்பி பவர் மற்றும் 343 நியூட்டன் மீட்டர் டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில் இரட்டை-மோட்டார் வேரியண்ட் 422 ஹெச்பி பவர் மற்றும் 543 நியூட்டன் மீட்டர் டார்க்கை வழங்குகிறது.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய வால்வோ EX30 மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் EQA, ஹூண்டாய் ஐயோனிக் 5, பிஓய்டி Sealion 7 மற்றும் பிஎம்டபிள்யூ iX1 போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும்.

    • 2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது.
    • புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் XC60-ஐ வால்வோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இருப்பினும், இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை சில மாதங்களுக்கு தள்ளி வைத்தது. அந்த வரிசையில், தற்போது வால்வோ XC60 மாடல் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி வெளியிட வால்வோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    சமீபத்தில் தான், வால்வோ நிறுவனம் XC60 விற்பனையில் 2.7 மில்லியனுக்கும் அதிக யூனிட்களை பதிவு செய்ததாக அறிவித்தது. இது அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையான மாடலாக இருந்த வால்வோ 240 மாடலை மிஞ்சியது. 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, வால்வோ கார்களின் நடுத்தர அளவிலான SUV வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிடித்தமானதாக இருந்து வருகிறது.

    வெளிப்புற புதுப்பிப்புகள்:

    2025 வால்வோ XC60 தற்போதைய மாடலை போன்ற தோற்றம் கொண்டுள்ளது. பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஏர் வென்ட்களுடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட கிரில், ஸ்மோக்டு-அவுட் எஃபெக்ட் கொண்ட டெயில்-லேம்ப்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் என பல வடிவமைப்பு மாற்றங்களை பெறுகிறது.



    உட்புற புதுப்பிப்புகள்:

    2025 வால்வோ XC60 காரில் புதிய UX மற்றும் OTA அப்டேட்களுடன் கூடிய பெரிய 11.6-இன்ச் ஃப்ரீஸ்டாண்டிங் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் இருக்கும். புதிய வால்வோ XC60 காரில் புதுப்பிக்கப்பட்ட இருக்கை மேற்கவர்கள் மற்றும் கேபின் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுதவிர இந்த மாடலில் போவர்ஸ் & வில்கின்ஸ் ஹை ஃபிடிலிட்டி ஆடியோ சிஸ்டம் மற்றும் பிற முக்கிய இன்டீரியர் அம்சங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    எஞ்சின் மற்றும் பவர்டிரெய்ன்:

    வால்வோ XC60 இன் 2025 மாடல் அதன் தற்போதைய மாடலைப் போலவே அதே எஞ்சினைக் கொண்டிருக்கும். இது 2.0 லிட்டர் டுவின்-டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெறுகிறது. இது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் அதிகபட்சம் 250 hp பவர், 360 Nm பீக் டார்க் வழங்கும் திறன் கொண்டது.

    • வால்வோ நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வால்வோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    வால்வோ நிறுவனம் தனது EX90 பிளாக்‌ஷிப் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலை நவம்பர் 9 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது வால்வோ நிறுவனம் தனது SPA2 பிளாட்பார்மில் உருவாக்கி இருக்கும் முதல் எஸ்யுவி மாடல் ஆகும். இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட கார்களில் இல்லாத வகையிலான பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    சமீபத்திய டீசர்களில் புதிய EX90 மாடலின் இண்டீரியர் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. அதன்படி டேஷ்போர்டில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன், நேவிகேஷன், மீடியா, போன் கண்ட்ரோல், கிளைமேட் கண்ட்ரோல், சீட் வெண்டிலேஷன் என ஏராளமான அம்சங்கள் புது வால்வோ எலெக்ட்ரிக் எஸ்யுவி-யில் வழங்கப்படுகிறது. இந்த காரில் கூகுள் சார்ந்த யுஎக்ஸ் இண்டர்பேஸ் பயன்படுத்துகிறது. எனினும், இதில் ஏராளமான AI அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் அளவில் சிறிய டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இது வழி, ரேன்ஜ் விவரங்கள், கியர் நிலை, ADAS தொடர்பான விவரங்களை காண்பிக்கிறது. இதன் ஸ்டீரிங் வீல் மேம்படுத்தப்பட்டு டச் கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டுள்ளன. கேபினில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பொருட்கள் அதிக தரமானது என்பதையும் விட சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்காது.

    தோற்றத்தில் இந்த கார் வட்டம் மற்றும் மெல்லிய ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் சுத்தியல் போன்ற டிஆர்எல்கள் உள்ளன. புதிய வால்வோ EX90 எலெக்ட்ரிக் எஸ்யுவி-யின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த காரின் இந்திய வெளியீடு அடுத்த ஆண்டு வாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    • வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகமானது.
    • புதிய வால்வோ EX90 மாடல் ஏராளமான பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

    வால்வோ நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய EX90 மாடலை அறிமுகம் செய்தது. வால்வோ ஏற்கனவே விற்பனை செய்து வரும் XC90 காருக்கு இணையான எலெக்ட்ரிக் வடிவம் தான் புதிய EX90. இந்த கார் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தோற்றத்தில் புதிய EX90 மாடல் வால்வோ பாரம்பரியத்திலேயே காட்சியளிக்கிறது. இதில் உள்ள லைட்டிங் மற்றும் டிசைன் அம்சங்கள் வால்வோ வழக்கப்படி மிக கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டிசைன் பெற்று இருக்கிறது. இதே பிளாட்பார்மில் எதிர்கால வால்வோ கார்களும் உருவாக்கப்படும்.

    கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் சார்ந்த செங்குத்தான டச் ஸ்கிரீன் செண்டர் கன்சோல் உள்ளது. இது என்விடியா டிரைவ் ஏஐ பிளாட்பார்ம்களான சேவியர் மற்றும் ஒரின் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்பார்ம் முன்பை விட அதிகளவு மேம்பட்டு இருக்கின்றன. இதன் டிரைவர் டிஸ்ப்ளே மெல்லியதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீன் மீது ஏராளமான ரேடார்கள், லிடார்கள், கேமரா மற்றும் பாதுகாப்பு சென்சார்கள் உள்ளன.

    இவை EX90 மாடலை இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பாதுகாப்பான வால்வோ கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இதில் பைலட் அசிஸ்ட், தானியங்கி வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த காரில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 370 கிலோவாட் திறன் கொண்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். புதிய வால்வோ EX90 மாடலில் பை-டைரெக்‌ஷனல் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்ததும், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

    • வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • சமீபத்தில் தான் வால்வோ தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்தது.

    வால்வோ இந்தியா நிறுவனம் உள்நாட்டில் அசெம்பில் செய்யப்பட்ட XC40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடலின் முதல் யூனிட்டை சமீபத்தில் தான் வெளியிட்டது. தற்போது XC40 ரிசார்ஜ் மாடலின் இந்திய விலையை உயர்த்துவதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

    விலை உயர்வை அடுத்து வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை தற்போது ரூ. 56 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது காரின் முந்தைய விலையை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும். எலெக்ட்ரிக் மாடல் விலை உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், அதன் பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    வால்வோ XC60 B5 அல்டிமேட் எஸ்யுவி மற்றும் XC90 B6 அல்டிமேட் எஸ்யுவி மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து இரு கார்களின் விலை தற்போது முறையே ரூ. 66 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ. 96 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே காரின் பெட்ரோல் மைல்டு-ஹைப்ரிட் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் சர்வதேச சந்தையில் உதிரி பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே கார் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் நவம்பர் 24 ஆம் தேதி வரை கார்களை முன்பதிவு செய்தவர்கள் இந்த விலை உயர்வில் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வால்வோ உறுதிப்படுத்தி விட்டது.

    • வால்வோ நிறுவனத்தின் புதிய எண்ட்ரி-லெவல் எஸ்யுவி பல்வேறு பேட்டரி மற்றும் ரேன்ஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • 2025 வாக்கில் உலகம் முழுக்க ஐந்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய வால்வோ திட்டம்.

    உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன துறையில் கணிசமான பங்குகளை பெறும் நோக்கில் வால்வோ கார்ஸ் நிறுவனம் அளவில் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி-யை அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா, ASEAN மற்றும் இதர ஆசிய பசிபிக் நாடுகளில் கவனம் செலுத்தும் நோக்கில், இந்த திட்டத்தை வால்வோ கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

    புதிய சிறிய எலெக்ட்ரிக் வாகனம் 2023 கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை இந்தியா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்ப எண்ட்ரி லெவல் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என வால்வோ கார்ஸ் தலைமை செயல் அதிகாரி ஜிம் ரோவன் தெரிவித்து இருக்கிறார்.

    "முழு பேட்டரி எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த பல்வேறு நாடுகள் முன்வருவதை தெளிவாக பார்க்க முடிகிறது. சிறிய எஸ்யுவி-யை கொண்டு வருவதன் மூலம், நாங்கள் இந்த நாடுகளில் சிறந்து செயல்பட முடியும். குறைந்த கட்டணத்தில் ஏராளமான பேட்டரி அளவுகளில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகமாகும்."

    "வாடிக்கையாளர்கள் ஏராளமான ரேன்ஜ் ஆப்ஷன்கள் மற்றும் விலை பட்டியலில் இருந்து வாகனத்தை தேர்வு செய்ய முடியும். புது சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் நகரம் மற்றும் நெடுஞ்சாலை என இருவித பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும்," என ரோவன் தெரிவித்தார்.

    வால்வோ நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோ உருவாக்கும் திட்டத்தின் கீழ் புதிதாக சிறிய எலெக்ட்ரிக் எஸ்யுவி உருவாகி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாறும் திட்டத்தை முதன்முதலில் அறிவித்த நிறுவனங்களில் வால்வோ கார்ஸ் ஒன்று ஆகும்.

    • வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும்.
    • புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ நிறுவனம் தனது முழுமையான எலெக்ட்ரிக் கார் EX30 ஜூன் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே தேதியில் இந்த எஸ்யுவிக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக வால்வோ EX30 எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    வரும் வாரங்களில் புதிய எலெக்ட்ரிக் கார் பற்றிய இதர விவரங்களை அறிவிப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய EX30 மாடல் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். 2025 முதல் ஆண்டுக்கு 1.2 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற வால்வோ இலக்கை அடைய இந்த கார் பெருமளவு உதவும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

     

    இது சாத்தியமாகும் பட்சத்தில் வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும். புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இங்கிருந்து உள்நாட்டு தேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    எலெக்ட்ரிக் கார் விலையை குறைவாக வைத்துக் கொள்ள பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் சமரசம் செய்யாமல், சற்றே சிறிய பேட்டரியை வால்வோ வழங்க இருக்கிறது. முந்தைய EX90 வெளியீட்டின் போது, வால்வோ நிறுவனம் EX90 அருகில் சிறிய எலெக்ட்ரிக் கார் இருக்கும் படத்தை வெளியிட்டு இருந்தது.

    அந்த வகையில் அந்த படத்தில் இருந்த கார் தான், தற்போது EX30 பெயரில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. புதிய வால்வோ EX30 மாடல் முந்தைய EX90 காரை விட அளவில் சிறியதாக இருக்கும். இது முதல் முறையாக ஆடம்பர எலெக்ட்ரிக் கார் விரும்புவோருக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

    • வால்வோ C40 மாடலின் விலை, XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே இருக்கும்.
    • தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    வால்வோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் C40 ரிசார்ஜ்-ஐ இந்திய சந்தையில் ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏற்கனவே வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலின் டூயல் மோட்டார் கொண்ட ஆல்வீல் டிரைவ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய C40 மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்தியாவில் தற்போது வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 56.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் வால்வோ நிறுவனத்தின் CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

    காரின் உள்புறம் 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் மற்றும் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன.
    • மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை அறிமுகம் செய்கிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் பெரும்பாலான மாடல்கள் ஆடம்பர பிரிவில் நிலைநிறுத்தப்பட இருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் CNG மாடல், டொயோட்டா ருமியன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட மாடல்கள் வரும் மாதத்தில் அறிமுகமாகின்றன.

    ஆடம்பர பிரிவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் எஸ்யுவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதே போன்று வால்வோ மற்றும் ஆடி நிறுவனங்களும் இரண்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     

    டாடா பன்ச் CNG:

    ஆகஸ்ட் மாதத்தின் துவக்கத்திலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பன்ச் CNG மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் புதிய பன்ச் CNG மாடலில் டுவின் சிலின்டர் செட்டப் வழங்கப்பட இருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் GLC:

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை GLC மாடலை ஆகஸ்ட் 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் கடந்த ஆண்டு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கார் GLC 300 பெட்ரோல் மற்றும் GLC 220d டீசல் என இரண்டு வெர்ஷன்களில் கிடைக்கிறது.

     

    ஆடி Q8 இ டிரான்:

    ஆகஸ்ட் 18-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஆடி Q8 இ டிரான் மாடல் பேஸ்லிப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த மாடல் எஸ்யுவி மற்றும் கூப் என இருவித பாடி ஸ்டைல்களில் கிடைக்கும். முந்தைய மாடல் போன்றே, ஆடி Q8 இ டிரான் 50 மற்றும் 55 என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் முறையே 95 கிலோவாட் ஹவர் மற்றும் 114 கிலோவாட் ஹவர் பேட்டரிகள் வழங்கப்படுகின்றன.

    டொயோட்டா ருமியன்:

    டொயோட்டா நிறுவனம் இரண்டு மாருதி சுசுகி கார்களின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று மாருதி சுசுகி எர்டிகா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட ருமியன் எம்பிவி மாடல் ஆகும். டொயோட்டா நிறுவனம் ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் எம்பிவி மாடலை விற்பனை செய்யாத நிலையில், இது அந்நிறுவனத்திற்கு சாதமாக இருக்கும் என்று தெரிகிறது.

     

    வால்வோ C40 ரிசார்ஜ்:

    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் வால்வோ C40 ரிசார்ஜ் எனும் பெயரில் அறிமுகமாகும் என்றும் இதன் வினியோகம் செப்டம்பர் மாத வாக்கில் துவங்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
    • வால்வோ C40 ரிசார்ஜ் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் ஆகும்.

    வால்வோ நிறுவனம் தனது C40 ரிசார்ஜ் எலெக்ட்ரிக் கார் மாடல் விலை விவரங்களை செப்டம்பர் மாதம் 4-ம் தேதி அறிவிக்க இருக்கிறது. 2023 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன. புதிய C40 ரிசார்ஜ் மாடல் இந்தியாவில் வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    தற்போது வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை மட்டுமே இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் விற்பனை செய்து வருகிறது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் மோட்டார் செட்டப் வழங்கப்படுகிறது. இவை இணைந்து 402 ஹெச்பி பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

     

    புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 418 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று சான்று பெற்றுள்ளது. இந்த காரை 150 கிலோவாட் பாஸ்ட் சார்ஜர் மூலம் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 27 நிமிடங்கள் ஆகும். காரின் பின்புறம் தவிர C40 ரிசார்ஜ் மாடல் XC40 ரிசார்ஜ் போன்றே காட்சியளிக்கிறது.

    இந்த காரில் XC40 மாடலில் உள்ளதை போன்ற எல்இடி ஹெட்லேம்ப்கள், 19-இன்ச் அலாய் வீல்கள், ரிடிசைன் செய்யப்பட்ட ஸ்லோபிங் ரூப்லைன், செங்குத்தாக பொருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள், கான்டிராஸ்ட் நிற பிளாக் ஸ்பாயிலர், பிளாஸ்டிக் கிளாடிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்தில் பிளாக் தீம் கொண்ட கேபின் வழங்கப்படுகிறது.

    இத்துடன் 9 இன்ச் ஆன்ட்ராய்டு சார்ந்த போர்டிரெயிட் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படுகிறது. மேலும் 360 டிகிரி கேமரா, ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் மொத்தத்தில் ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.

    வால்வோ இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. C40 ரிசார்ஜ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் விலை ரூ. 61 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இதன் வினியோகம் துவங்க இருக்கிறது.

    வால்வோ C40 ரிசார்ஜ் மாடல்- ஆனிக்ஸ் பிளாக், க்ரிஸ்டன் வைட், ஃபியுஷன் ரெட், கிளவுட் புளூ, ஜோர்ட் புளூ மற்றும் சேஜ் கிரீன் என்று ஆறுவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இரட்டை மோட்டார் செட்டப் கொண்டிருக்கும் வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 78 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இதில் உள்ள இரட்டை மோட்டார்கள் ஒவ்வொரு ஆக்சில்களில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரு மோட்டார்கள் இணைந்து 402 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 530 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய வால்வோ C40 ரிசார்ஜ் மாடலில் 9- இன்ச் அளவில் கூகுள் சார்ந்த டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேடிக் டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 

    ×