என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கார்"
- இந்த காரில் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
- முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் தனது முற்றிலும் புதிய AMG G 63 எஸ்.யு.வி. மாடலின் விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய பென்ஸ் எஸ்.யு.வி.-இன் விலை ரூ. 3.6 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய AMG G 63 முதற்கட்ட பேட்ச்-இல் 120-க்கும் அதிக யூனிட்களை வாங்க ஏற்கனவே பயனர்கள் முன்பதிவு செய்துள்ளனர். புதிய G 63 மாடலில் பை-டர்போ 4.0 லிட்டர் V8 எஞ்சின், 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் மற்றும் AMG பெர்ஃபார்மன்ஸ் 4மேடிக் வழங்கப்படுகிறது.
இத்துடன் AMG பெர்ஃபார்மன்ஸ் பேக்கஜின் கீழ் ரேஸ் ஸ்டார்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் முதல் முறையாக லான்ச் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.
புதிய AMG G 63 மாடல் 29 வெளிப்புற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் இருக்கை மேற்கவர்களில் 31 ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 12.3 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிநவீன MBUX NTG7 மென்பொருள் உள்ளது.
மேலும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட்கள், பர்மெஸ்டர் பிரான்டின் 18 ஸ்பீக்கர்கள் மற்றும் 3டி சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ADAS, 360 டிகிரி கேமரா, ஆக்மென்டெட் ரியாலிட்டி சார்ந்த நேவிகேஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
- குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர்
- இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தெலுங்கானா மாநிலம் ஜங்கானில் குளத்தை ஒட்டிய வயல்வெளிக்கு அருகில் கார் ஓட்டுவதற்காக ஒருவர் பயிற்சியெடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கு கார் ஓட்ட சொல்லிக்கொடுத்த நபர் பிரேக் போட சொல்லியுள்ளார். அப்போது பிரேக்கிற்கு பதிலா ஆக்சிலேட்டரை அந்த நபர் அழுத்தியுள்ளார்.
இதனால் கார் பக்கத்தில் இருந்த ஒரு குளத்திற்குள் விழுந்துள்ளது. குளத்திற்குள் கார் மூழ்க தொடங்கியதை அடுத்து இருவரும் காரை விட்டு குளத்திற்குள் குதித்துள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை காப்பற்றியுள்ளனர்.
இருவருக்குமே நீச்சல் தெரியும் என்பதாலும், குளம் ஆழமாக இல்லாததாலும் இருவரும் உயிர் பிழைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதாக போலீசார் அவர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
A car plunged into the Bathukamma Kunta lake in #Jangaon on Friday evening. A man suddenly accelerated and lost control of the steering, while practicing #driving near the lake, causing the car to plunge into the tank.A local quickly rushed to the scene and rescued 2… pic.twitter.com/J5cTHFHmak
— Surya Reddy (@jsuryareddy) October 19, 2024
- வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
- இந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலையை கடப்பதற்காக மெதுவாக ஒரு கார் திரும்பியுள்ளது. அப்போது அவ்வழியே வேகமாக ஒரு பைக் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் வேகமாக வந்த பைக் கார் மீது மீதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிகிறது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்து பைக்கில் வந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் பைக்கில் பயணம் செய்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து அக்டோபர் 11 அன்று நள்ளிரவு 12 மணியளவில் ஹூக்ளியில் உள்ள போல்பார் ராஜ்காட் சந்திப்பில் நடந்துள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையிலான ரேஸ் போட்டியின் போது இந்த விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் காருக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
A group of bikes were riding together at midnight, and two of them seemed to be racing. Unfortunately, one bike collided with a vehicle, catching fire instantly. #roadsafety #safetyfirst #rushlane pic.twitter.com/JsdfzuLiX2
— RushLane (@rushlane) October 14, 2024
- வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
- மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 16 தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் பலரும் தங்களது கார்களை நிறுத்தி வருகின்றனர்.
சென்ற வருடம் பெய்த கனமழையால் கார்கள் கடுமையாக சேதமானதால் இந்த முறை கார்களை பாதுகாக்க வாகன ஓட்டிகள் இவ்வாறு செய்து வருகின்றனர்.
மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை தொடங்கும் முன்பே போக்குவரத்துக்கு இடையூறாக மேம்பாலங்களில் கார்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து வேளச்சேரி, பள்ளிக்கரணை மேம்பாலங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
- மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
- உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள அஜ்மீர் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்தது. காரில் தீப்பிடித்தது தெரிந்தவுடன் ஓட்டுநர் ஜிதேந்திர ஜாங்கிட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார்.
மேம்பாலத்தின் மேலே கார் எரிவதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் இல்லாத கார் முன்னாள் இருந்து பொதுமக்களை நோக்கி சாலையில் தானாக நகர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதனை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். பின்னர் கார் அங்கிருந்த டிவைடரில் மோதி நின்றது.
உடனடியாக, தீ விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
@gharkekalesh pic.twitter.com/VVuBFH8xFU
— Arhant Shelby (@Arhantt_pvt) October 13, 2024
- பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
- கார் ஒன்று கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்பாராமல் நடப்பவை விபத்துக்கள். இப்படியும் நடக்குமா என்று கேட்கும் அளவுக்கு கேரளாவில் கார் ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக வாகனங்கள் அதிவேகத்தில் கட்டுப்பாட்டை இழந்து, மற்ற வாகனங்கள், சாலையின் தடுப்பு, சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகளில் மோதுவது தினந்தோரும் எங்கேயும் நடக்கும் சம்பவங்கள் தான்.
ஆனால், கார் ஒன்று சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மருத்துவர் ஒருவர் ஓட்டிவந்த கார், சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த பள்ளத்தில் இறங்கி, ஏரிய போது கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த கார், அருகே இருந்த சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு கிணற்றுக்குள் விழுந்தது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் நீரின் அளவு குறைவாகவே இருந்துள்ளது. இதனால், காரில் இருந்து வெளியே வந்த மருத்துவர், உதவி கோரி கூச்சலிட்டார். காரில் மருத்துவருடன் அவரது மனைவியும் இருந்தார்.
கிணற்றுக்குள் இருவர் கூச்சலிடுவதை கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து இருவரையும் மீட்டனர். இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்த நிலையில், விபத்தில் சிக்கிய மருத்துவர் மற்றும் அவரது மனைவி எந்த வித காயமும் இன்றி உயிர்தப்பினர்.
- புதிய பென்ஸ் இ கிளாஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது.
- மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை இ கிளாஸ் மாடலின் விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஆறாம் தலைமுறை இ கிளாஸ் மாடல்: லாங் வீல் பேஸ் மற்றும் வலது புற ஸ்டீரிங் வீலுடன் அறிமுகமாகி இருக்கிறது. உலகின் வேறு எந்த நாட்டிலும் இந்த மாடல் இந்த வடிவில் இதுவரை அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பென்ஸ் இ கிளாஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை இந்த கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின்களுடன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காருடன் மெர்சிடிஸ் E450 பெட்ரோல் 4-மேடிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாடலின் விலை ரூ. 92 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மெர்சிடிஸ் இ கிளாஸ் மாடலின் 200 மற்றும் 220d வெர்ஷன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய E450 பெட்ரோல் 4-மேடிக் மாடலுக்கான முன்பதிவுகள் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. இந்த கார் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் ஆடி A6 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
- விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டில் அதிகரித்து வரும் விற்பனையாகாத பயணிகள் வாகன எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் சுமார் 7.9 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள விற்பனையாகாத கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 79 ஆயிரம் கோடி ஆகும். நாட்டில் விற்பனையாகாத கார் யூனிட்களால் விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. கார் உற்பத்தியாளர்கள் அதிக யூனிட்களை உற்பத்தி செய்தது, நுகர்வோர் கார் வாங்க ஆர்வம் செலுத்தாதது மற்றும் கடுமையான கனமழை உள்ளிட்டவை கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
கார்கள் விற்பனையின்றி தேக்கம் அடைவதால், பல்வேறு விற்பனை மையங்களில் நிதி பற்றாக்குறை சூழல் உருவாகி இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்தார்.
- புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
- இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் இந்த கார் புதிய தோற்றம் கொண்டுள்ளது. இதே போன்று புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இதன் டெயில் லேம்ப் தோற்றம் மாற்றப்படவில்லை.
கேபின் பகுதியிலும் பெருமளவு மாற்றங்கள் இல்லை. புதிய ஸ்டீரிங் வீல், புதிய நிறங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங் வசதி, ஓட்டுநர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த கார் 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 ஹெச்பி பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT யூனிட் வழங்கப்படுகிறது.
- முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
- புதிய மேக்னைட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
நிசான் இந்தியா நிறுவனம் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தனது அதிகம் விற்பனையாகும் மேக்னைட் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை மறுநாள் (அக்டோபர் 4) புதிய மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், வினியோகம் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்த நிலையில், முற்றிலும் புதிய நிசான் மேக்னைட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இதோடு நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான டீசர்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
டீசர்களின் படி மேக்னைட் மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
இதுதவிர, புஷ் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் கார் அம்சங்களை இயக்கும் கண்ட்ரோல்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், மத்தியில் கைவைத்துக் கொள்ளும் ஆர்ம்-ரெஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை புதிய மேக்னைட் மாடலிலும் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
- சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் அம்சங்கள் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.
- இந்த காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை விவரங்களை அறிவித்து விட்டது. டாப் என்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் மாடலின் விலை ரூ. 10 லட்சம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 27 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த காரிலும் அதன் மேனுவல் வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த வெர்ஷனில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட விங் மிரர்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.2 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன், ஆறு ஏர் பேக் வழங்கப்படுகிறது.
சிட்ரோயன் C3 மாடலிலும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே எஞ்சின் சிட்ரோயன் பசால்ட் மற்றும் C3 ஏர்கிராஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
விலை விவரங்கள்:
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் ரூ. 10 லட்சம்
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் வைப் பேக் ரூ. 10.12 லட்சம்
சிட்ரோயன் C3 டர்போ ஆட்டோமேடிக் ஷைன் டூயல் டோன் வைப் பேக் ரூ. 10.27 லட்சம்
- அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார்.
- கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார்.
நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் காட்டுபவர்.
கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார். இந்நிலையில் அஜித்குமாரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டது.
அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#Thalaaijth officially participating Ferrari race in Dubai this year✌️?#VidaaMuyarchi #GoodBadUgly #AjithRacingComeback pic.twitter.com/0EEQGwWkW7
— The Flicks (@Flicks_rithick) September 25, 2024
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்