என் மலர்
நீங்கள் தேடியது "கார் ரேஸ் பந்தயம்"
- பிராட் பிட் நடிப்பில் F1 என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- சமீபத்தில் Mercedes-AMG GT3 என்ற காரை வாங்கி இருந்தார்.
நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் Mercedes-AMG GT3 என்ற காரை வாங்கி இருந்தார். அதனுடன் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த காரின் விலை சுமார் 10 கோடி ஆகும்.
சமீபத்தில் வெளியான அஜித்தின் தோற்றம் இணையத்தில் வைரலானது. மீண்டும் ஆலுமா டோலுமா லுக்கில் அஜித் என ரசிகர்கள் அவர்களது கருத்தை பதிவிட்டு வந்தனர்.
சமீபத்தில் பிராட் பிட் நடிப்பில் F1 என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ரேசில் இருக்கும் போது அளித்த பேட்டியில் தொகுப்பாளர் அவரிடம் " பிராட்பிட் சமீபத்தில் ஃப்1 திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதேப்போல் இந்தியாவில் நீங்கள் 24H சீரீஸ் ரேஸை படத்தில் நடிப்பீர்களா?" என்ற கேள்விக்கு.
அஜித் " ஏன் நான் Fast&Furious 2அடுத்த பாகத்தில் அல்லது ஃப்1 படத்தின் அடுத்த பாகத்தில் , நான் என்னுடைய படங்களில் நானே தான் அனைத்து ஸ்டண்டையும் செய்வேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என கூறியுள்ளார்.
- சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்.
- எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.
சினிமாவை தவிர்த்து கார் ரேசிங் பந்தயங்களில் ஆர்வம் கொண்ட நடிகர் அஜித் குமார் அயர்டன் சென்னா என்ற பிரபல பார்முலா 1 கார் ரேசரை தனது ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் இவருடைய உருவ சிலை இருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பாதத்தில் முத்தம் கொடுத்திருந்தார்
இப்போது அயர்டன் சென்னா நினைவாக உருவாக்கப்படும் ரேஸ் காரை அஜித் வாங்கியுள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த MCLAREN Automotive என்ற நிறுவனம் இந்த ரேஸ் காரை தயாரித்து வருகிறது.

ரேசுக்கு தேவையான ஸ்பெஷல் எடிசன் இந்த காரில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே மொத்தமாக இது 500 கார்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 15 கோடி என்று கூறப்படுகிறது. அந்த கார் முன்பு அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
- நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன்.
- ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு அடுத்து அஜித் மீண்டும் அவரது ரேஸிங் போட்டியில் தற்பொழுது ஈடுப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதில் அவர் " எனக்கு கிடைத்த இயக்குநர்களும் , தயாரிப்பார்களுக்காக நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அவர்கள் என்னோட தொலை நோக்கு பார்வையை புரிந்துக் கொள்கின்றனர்.
நான் வருடத்திற்கு 1 சிறப்பான தரமான படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது, அடுத்த வருட கோடை விடுமுறைக்கு திரைப்படம் வெளியாகும்.
ரேசிங் சீசனில் நான் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன். ஒரு விஷயத்தை முழு கவனத்துடன் செயல்படுத்த விரும்புகிறேன் என்றார்.
மேலும், தான் உடல் எடை குறைத்தது தொடர்பாக அஜித் குமார் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில்,"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.
ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.
என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் சி ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
- ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் தரிப்பது அஜித் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் அணி 3-வது இடத்தை பிடித்திருந்தது.
- உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாகவும் கார் ரேஸராகவும் அஜித்குமார் வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி கார் ரேஸில் அஜித் கவனம் செலுத்தி வந்தார். அதன் காரணமாக பெல்ஜியமில் நடைபெற்ற போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அஜித் கூறியதாவது:- ரேஸிங் பயிற்சி முதல் வெற்றி வரை உங்களின் ஆதரவின்றி ஜிடி4 ரேஸில் வென்றிருக்க முடியாது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி என அஜித் கூறினார்.
ஏற்கனவே துபாயில் நடைபெற்ற போட்டியிலும் இத்தாலியில் நடைபெற்ற போட்டியிலும் 3-வது இடத்தை அஜித்குமார் கார் ரேஸிங் அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- GBU படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
- ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் பெல்ஜியமில் நடைபெற்ற ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 2வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசில் கலக்கி உள்ளார்.
முன்னதாக, அஜித் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும், இதுதொடர்பாக அவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவையும் இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
- நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார். மேலும் படத்தில் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னாவும் பகிர்ந்து இருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவமாக படத்தை உருவாக்கியுள்ளார்.
திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் அஜித் குமார் அடுத்த கார் ரேசிற்கு தயாராகி வருகிறார். அவர் தற்பொழுது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித் காரை சுற்றி பார்த்து அதில் உள்ள விஷயங்களை பார்க்குமாறு அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.
- சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
- குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் அஜித்குமார், நடிப்பை தொடர்ந்து கார் பந்தயத்திலம் அசத்தி வருகிறார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது.
அதேவேளை கலைத்துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக அஜித்குமாருக்கு, மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார்.
இந்நிலையில், தந்தை வழியில் கார் ரேஸில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் களமிறங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள கோ கார்ட் சர்க்யூட்டில் அஜித்தின் மகன் கார் ரேஸில் பயிற்சி பெற்றார்.
குடும்பத்தினருடன் சென்று நடிகர் அஜித் மகனை உற்சாகப்படுத்தினார்.
- 60 வயதான கீனு ரீவ்ஸ் முதல் முறையாக தொழில்முறை கார் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
- கார் பந்தயத்தில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
மேட்ரிக்ஸ், ஜான்விக் போன்ற படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் இண்டியானாபோலிஸ் மோட்டார் ஸ்பீட்வேயில், டொயோட்டா ஜிஆர் கோப்பையில் பங்கேற்றார். இதன்மூலம் தொழில்முறை கார் பந்தயத்தில் அவர் அறிமுகமானார்.
60 வயதான கீனு ரீவ்ஸ் பந்தயத்தின் 45 ஆவது நிமிடத்தில் ரேஸ் தடத்திலிருந்து வெளியேறி புல் தரைக்குள் சென்றார். பின்னர் சுதாரித்து கொண்டு மீண்டும் ரேஸ் தடத்திற்குள் நுழைந்தார். இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
35 போட்டியாளர்களின் முதல் 31 இடங்களை பிடிக்கும் போட்டியாளர்கள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவர். அவ்வகையில் இப்போட்டியில் 25 ஆவது இடம் பிடித்த கீனு ரீவ்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார்.
நடிகர் அஜித் 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பெயரில் புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கியுள்ளார். தற்போது கார் பந்தயத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்றுள்ளார்.
சில தினங்களுக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அஜித் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் இருந்து காயமின்றி உயிர் தப்பினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து நேற்று அஜித் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியானது. அதில், திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் இடையில் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
நடப்பு கார் ரேஸ் தொடர் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை. கார் பந்தய ஓட்டுநராக மட்டுமல்ல அணியின் உரிமையாளராகவும் வந்துள்ளேன். கார் ரேஸ் தொடர் நடைபெறாத மாதங்களான அக்டோபர் முதல் மார்ச் வரை திரைப்படங்களில் நடிப்பேன் என கூறி இருந்தார். இந்த வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில், கார் ரேசில் பங்கேற்றுள்ள அஜித்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அன்புள்ள அஜித் சார், துபாயில் நடைபெறும் 24H தொடருக்கு வாழ்த்துகள்! உங்கள் அசைக்க முடியாத ஆர்வமும் அர்ப்பணிப்பும் தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இதிலும் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன் சார் என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது.
- அஜித் குமாரின் வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும், மகிழ்ச்சியில் அஜித் குமார் சக அணியினருடன் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அஜித் குமாருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஜினி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் அன்பான அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்க சாதிச்சிட்டீங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். லவ் யூ.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
- தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.
துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார்.
இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.
பந்தயத்தில் பங்கேற்பதற்காக நடிகர் அஜித் குமார் போர்ச்சுக்கல் சென்றுள்ள நிலையில், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.