search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shoe"

    • இந்த வீடியோ வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
    • அந்த ஷூவை பிரேம் செய்யுங்கள் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி சமீபகாலமாக தான் செல்லும் இடங்களில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது ரசிகர்கள் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சி அடைகின்றனர்.

    அந்த வகையில் சித்தார்த் கெர்கெட்டா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் எம்.எஸ்.டோனி ரசிகரின் 'ஷூ'வில் ஆட்டோகிராப் போட்டு கொடுக்கும் காட்சிகள் உள்ளது. உடனே அந்த ரசிகர் எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்துள்ளது.

    இந்த வீடியோ வைரலாகி 16 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் அந்த ரசிகரை மிகவும் அதிர்ஷ்டசாலி எனவும், அவரது 'ஷூ' விலைமதிப்பற்றது எனவும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், சித்தார்த் நீங்கள் அந்த ஷூ வை எப்போதும் அணிய வேண்டாம். பிரேம் செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.

    • சினிமாப்பட விநியோகஸ்தர் மதுராஜ் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார்.
    • இவரது ஊழியர்கள் இரண்டு பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளனர்.

    சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் மதுராஜ். சினிமாப்பட விநியோகஸ்தர். விருகம்பாக்கம் ஏ.வி.எம். அவின்யூ பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். போரூர் பகுதியை சேர்ந்த கோபி, பென்சீர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இதையடுத்து நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடித்த "ஷூ" என்கிற சினிமா படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடவும், சேட்டிலைட் உரிமம் ஆகியவற்றை ரூ.1கோடியே 10 லட்சத்துக்கு பேசி ரூ.17 லட்சம் முன்பணம் கொடுத்து மீதமுள்ள தொகையை 2 தவணைகளாக 90 நாட்களுக்குள் கொடுத்து விடுவதாக மலேசியாவைச் சேர்ந்த பட தயாரிப்பாளரிடம் மதுராஜ் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

    இதனிடையே மதுராஜ் தனது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டதாக தெரிகிறது இதனால் அவர் சொன்னபடி தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க காலதாமதம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுராஜ் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.


    ஷூ

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மதுராஜ் அலுவலகத்திற்குள் புகுந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கிருந்த ஊழியர்கள் கோபி, பென்சீர் ஆகிய இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து கத்தி முனையில் காரில் ஏற்றி கடத்தி சென்றனர். தாம்பரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவர்கள் ஏ.டி.எம் கார்டு மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.

    பின்னர் அவர்களை தாம்பரம் ரெயில் நிலையம் அருகே இறக்கிவிட்டு மிரட்டல் விடுத்து தப்பி சென்றுவிட்டனர். மேலும் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.70 ஆயிரத்தை எடுத்துக் கொண்டனர். இதுபற்றி அறிந்த சினிமா வினியோகஸ்தர் மதுராஜ் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் கவுதமன், இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த கடத்தல் தொடர்பாக தாம்பரம் அருகே பதுங்கி இருந்த நாகராஜ், வினோத் குமார், சொக்கலிங்கம், பிரசாந்த் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ், வினோத் குமார் இருவரும் வக்கீல்கள் என்பதும் சொக்கலிங்கம் கல்லூரி மாணவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ஷூ.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சஞ்சிதா பெண்கள் குறித்து பேசியுள்ளார்.

    இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ஷூ. இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, கேபி பாலா, திலீபன் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை நெட்கோ ஸ்டுடியோஸ் மற்றும் ஏடிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் சார்பில் நியாஷ், கார்த்திக் மற்றும் டி.மதுராஜ் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஷூ

    ஷூ

     

    திரில்லர் காமெடி பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் நடிகை சஞ்சிதா ஷெட்டி கூறியதாவது, படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.

    சஞ்சிதா

    சஞ்சிதா

     

    நடிகை கோமல் ஷர்மா கூறியதாவது, இது போன்ற கதைக்களத்தை உருவாக்கி அதை திரைப்படமாக மாற்றுவது மிகவும் சவாலான விஷயம். இப்படம் உருவாக தயாரிப்பாளர் தான் காரணம். சமூக கருத்துகள் கொண்ட இந்த திரைப்படத்தை எடுத்ததற்கு கல்யாண் அவர்களுக்கு நன்றி. இப்போதைய சமூகத்திற்கு தேவையான கருத்துகளை கொண்ட திரைப்படமாக இது உருவாகி இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

    ×