search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temples"

    • கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.
    • இச்சட்டம் காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநில சட்டசபையில் கர்நாடக இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா 2024 நேற்று நிறைவேற்றப்பட்டது.

    ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோவில்களின் வருமானத்தில் 10 சதவீதத்தை அரசு வசூலிக்க இந்தச் சட்ட மசோதா அனுமதிக்கிறது.

    இந்நிலையில், இந்தச் சட்டம் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசின் இந்து விரோத கொள்கையை காட்டுகிறது என கண்டனம் தெரிவித்த பா.ஜ.க, முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான மாநில அரசு நிதியைத் தவறாக பயன்படுத்துகிறது என குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக, கர்நாடக பா.ஜ.க. தலைவர் விஜயேந்திர எடியூரப்பா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த மசோதா மூலம் காங்கிரஸ் அரசு தனது கஜானாவை நிரப்ப முயற்சிக்கிறது. மாநில அரசு ஏன் இந்துக் கோவில்களில் இருந்து வருமானம் ஈட்டப் பார்க்கிறது? தொடர்ந்து இந்து விரோத கொள்கைகளை கடைப்பிடித்து வரும் காங்கிரஸ் அரசு, தற்போது இந்துக் கோவில்களின் வருவாயை குறிவைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.
    • இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று கோவில்களின் கட்டண சேவைகளில் விரைவாக கட்டண சீட்டுகளை வழங்கிடும் வகையிலும், கட்டணச் சீட்டு மையங்களில் கூட்டத்தினை தவிர்க்கவும், பக்தர்கள் எளிய முறையில் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமாக கட்டணச் சீட்டு பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக, 260 கோவில்களுக்கு 315 கையடக்க கருவிகளை மண்டல இணை ஆணையர்களிடம் வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1,224 கோவில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்திடும் வகையில் செயலாற்றி கொண்டிருக்கிறோம்.


    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்து உள்ள இடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு உகந்த வகையில், அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இறுதி முடிவினை எடுக்கும். ஆகவே தற்போது இதில் தேவையற்ற சர்ச்சையை கிளப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சோழவந்தான் அருகே சக்திவிநாயகர், பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதற்கு பின்னர் கும்பாபிஷேகம் நடக்க வில்லை. இந்த நிலையில் இந்தக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்து திருப்பணிகள் செய்யப்பட்டன. தொடர்ந்து கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடந்தது. மதுரை வீரராகவ பெருமாள் கோவில் பட்டர்கள் ரவி, வீர ராகவன் ஆகியோர் தலைமையில் சிவாச்சா ரியார்கள் யாக பூஜை நடத்தினர். தொடர்ந்து நான்காம் கால ஹோமம் நடந்து மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். பின்னர் கோவில் கோபுரத்தின் கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சக்தி விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. சமயநல்லூர் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கொடிமங்கலம் கிரா மத்தில் பெரியபுன மங்கை என்ற பாலதிரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாளில் திருவிளக்குபூஜை, மூத்த பிள்ளையார் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடும், 2-ம் நாள் கோ பூஜை, மண் எடுத்தல், முளையிடுதல், காப்பணிதல், களை ஈர்ப்பு வழிபாடும், 3-ம் நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகபூஜை, மருந்து சாத்துதல் நடந்தது. 4-ம் நாளில் நான்காம் கால யாகபூஜை நடந்து நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் மேளதா ளத்துடன் திருக்குடங்கள் எடுத்துக் கோவிலை வலம் வந்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்க ளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நாகமலை புதுக்கோட்டை போலீசார் 

    • தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
    • கோவில்களில் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களும் வசூல் செய்யக்கூடாது.

    தஞ்சாவூர்:

    தமிழக கோவில்கள் அனைத்திலும் இலவசமாய் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ, வைணவ கோவில்களிலும் உண்டியல் காணிக்கையை தவிர வேறு எந்த கட்டணங்களையும் வசூல் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தை தேசிய பொதுச்செயலாளர் வக்கீல் சந்திரபோஸ் பெருமாள் தொடங்கி வைத்தார்.

    இதில் தமிழ் மாநில முதன்மை செயலாளர் புலவர் ஆதி நெடுஞ்செழியன் சிறப்புரை ஆற்றினார்.

    கரந்தை கண்ணன், மாநில இணை செயலாளர் மகேந்திரன், மாஸ்டர் சுரேஷ், மாநில துணை தலைவர் கோவி ந்தராஜ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

    முடிவில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மையக்குழு உறுப்பினர் கே.ஆர்.ஜி. ராஜா செய்திருந்தார்.

    இதில் முன்னாள் காவல் அதிகாரி வைத்தியநாதன், மகளிர் அணி கோமதி, அலமேலு, சண்முகம், சக்தி, மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தசரா விழா கடந்த 14-ந்தேதி பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது.

    நெல்லை:

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்ததாக நெல்லை மாவட்டத்தில் பாளை யங்கோட்டையில் நடை பெறும் தசரா விழா மற்றும் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆகியவை ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தசரா விழா கடந்த 14-ந்தேதி பிரதான கோவிலான பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி தினந்தோறும் பல்வேறு பூஜைகள், நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து பாளையில் உள்ள தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி, கிழக்கு உச்சினிமாகாளி, வடக்கு உச்சினிமாகாளி, விஸ்வ கர்மா உச்சினிமாகாளி, புதுப் பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார் பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில்களிலும் தசரா பண்டிகை தொடங்கி யது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.

    விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லெட்சுமிக்கும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதிக்குமாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.

    விஜய தசமியையொட்டி இன்று காலையில் இருந்து அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு தொடங்கியது. மதியம் உச்சிக்கால சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இன்று இரவு 7 மணிக்கு 12 அம்மன் கோவில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 12 மணிக்கு 12 அம்மன்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் பவனி வரு கிறார்கள்.

    நாளை(புதன்கிழமை) காலை பாளை ராஜகோபாலசுவாமி கோவில் திடலில் 12 அம்மன் சப்பரங்களும் அணிவகுத்து நிறுத்தப்படுகிறது. அப்போது ஆயிரக்க ணக்கான பக்தா்கள் தங்கள் நோ்த்திக்கடனை நிறைவேற்ற தேங்காய்கள் உடைத்தும், புடவை, பழ வகைகள் வைத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

    பி்ன்னர் நாளை மாலை 12 சப்பரங்களும் பக்தர்கள் தரிசனத்திற்காக பாளை மார்க்கெட் திடலில் அணிவகுத்து நிற்கும். அதன்பின் நள்ளிரவில் பாளை எருமைகிடா மைதானத்தில் 12 சப்பரங்கள் அணிவகுத்து நிற்க சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

    இதனையொட்டி நெல்லை மாநகரில் டவுன் பகுதியில் 36 சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பின்னர் அவை தேரடி திடலில் அணிவகுத்து நிற்கிறது. மாநகர் பகுதி முழுவதும் மொத்தம் 63 சப்பரங்கள் அணிவகுப்பானது இன்றும், நாளையும் நடக்கிறது.

    இதனையொட்டி மாநகர் பகுதி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் எருமைகிடா மைதானமும் சூரசம்கா ரத்திற்கு தயார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கொலு வைப்பவர்கள் 7 அல்லது 9 படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மை களை அலங்கரிப்பர்.

    முதல் படிக்கட்டில் கலசமும், அந்த கலசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அம்பிகையை எழுந்தருள செய்து பூஜையும் நடத்தப்படும்.

    மேலும் முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், பூண்டு, செடி கொடிகளும், 2-வது படிக்கட்டில் 2 அறிவு கொண்ட சிப்பி, சங்கு போன்றவையும், 3- வது படிக்கட்டில் 3 அறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளும் வைப்பர்.

    இதேபோல் 4-வது படியில் 4 அறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற ஜீவராசி களின் பொம்மைக ளும், 5-வது படியில்.5 அறிவு கொண்ட விலங்கு களின் பொம்மைகளும், 6-வது படிக்கட்டில் நாட்டிற்காக உழைத்த தலை வர்களின் பொம்மைகளும், 7-வது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மை களும் இடம்பெறும், 8-வது படியில் தேவர்கள், மற்றும் தெய்வங்களை வைப்பர். 9- வது படியில் மும்மூர்த்தி கள் அவர்களது துணைவி யர்கள் இடம்பறுவர்.

    வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்படும் கொலுவில் தினமும் பெண்கள் வழிபாடு நடத்துவர்.

    நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.  கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டது.

    இன்று முதல் நாள் உற்சவம் நடத்தப்படுகிறது. புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பால சுப்பிரமணியர் கோவில், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், கடலூர் சாலையில் உள்ள கெங்கையம்மன் கோவில், மாங்காளியம்மன் கோவில், இரும்பை பாலாதிரி புரசுந்தரி கோவில், கிருமாம்பாக்கம் முத்தா லம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள கொலு வினை பக்தர்கள் வழிபட்டனர்.

    எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்  கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    நாளை மகாருத்ர ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், 17-ந் தேதி துர்கா சுக்த மற்றும் காயத்திரி ஹோமம், 18-ந் தேதி ஹயக்ரீவ மற்றும் சுதர்ச ஹோமம், 19-ந் தேதி நவக்கிரக ஹோமம், 20-ந் தேதி அஷ்டலட்சுமி ஹோமம், 21-ந் தேதி தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஹோமம், 22-ந் தேதி அதிஷ்டாணத்தில் ஆராதனை, 23-ந் தேதி மகா சண்டி ஹோமம், 24-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது.

    • மானாமதுரை, திருப்புவனம் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    மானாமதுரை ஆனந்தவல்லி சமேதசோமநாதர் சுவாமிகோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, சோமநாதர் சுவாமிக்கும், நந்தி தேவ ருக்கும் 16 வகையான வாசனை பொருள்களால் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. சோமநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சன்னதியை வலம் வந்து பிரதோஷ மூர்த்தி புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    திருப்புவனம் புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் சுவாமிக்கும் நந்திக்கும் அபிஷேகம் நடத்தி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருப்பாச்சேத்தி சிவன் கோவில், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் புவனகிரி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் இன்று கேள்வி நேரத்தின் போது புவனகிரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த ஆவன செய்யுமாறு கூறினார்.

    இதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    உறுப்பினர் குறிப்பிட்ட வேதபுரீஸ்வரர் கோவிலை புனரமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 286 கோவில்கள் உபயதாரர்கள் மூலம் புனரமைக்கப்பட்டது.

    இதற்காக உபயதாரர்கள் ரூ.600 கோடி உதவி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று பெறப்படும் நிதி முழுமையாக செலவிடப்படுவதால் தான் உபயதாரர்கள் அதிகளவில் முன்வந்து கோவில் திருப்பணிக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது.
    • டாஸ்மாக் கடை பக்கத்திலேயே ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் நெல்லை உடையார் தலைமையில் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர். அதில் கூறி யிருப்பதாவது:-

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பிரசித்தி பெற்ற சாலை குமாரசாமி கோவில் உள்ளது. இதன் முன்பு மீனாட்சிபுரம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வரும் இந்த கடையை உடனடியாக அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக அந்த கடையை அப்புறப்பத்த வேண்டும்.

    இதன் பக்கத்திலேயே பாரதியார் படித்த ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இதன் அருகிலேயே நெல்லை சந்திப்பு ரெயில் நிலையமும் அமைந்துள்ளது. மேலும் பெருமாள் கோவிலும் இதன் அருகே இருக்கிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்லும் போது குடிமகன்கள் சாலைகளில் வீசி செல்லும் மது பாட்டில்கள் காலில் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

    இது தொடர்பாக பல முறை மனு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த மனுவை விசாரித்து உடனடியாக டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

    அப்போது தொழிற்சங்க தலைவர் மாயாண்டி, தொழிற்சங்க செயலாளர் நாகராஜன், கார்த்தீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சோழவந்தான் பகுதியில் சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. சோழவந்தான் பிரளயநாத கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது. நந்திக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை வலம் வந்தனர். எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன், மற்றும் கோவில் நிர்வா கத்தினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதேபோல் மன்னாடி மங்கலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவாலவாய நல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வர முடையார் கோவில் தென்கரை அகிலாண்டே சுவரி சமேத மூலநாதசுவாமி ஆகிய கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

    • குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • இதில் குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தென்திருப்பேரை:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி பொதுவிருந்து நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, துணைத் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜீத் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். அதே போன்று குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் சமபந்தி பொதுவிருந்து, மதியம் அம்மனுக்கு தீபாராதனை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குரங்கணி ஊராட்சி தலைவர் ஜெயமுருகன் மற்றும் பக்தர்கள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    ×