என் மலர்
ஆன்மிகம்
- மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
- சித்தர்கள் பலரும் பூச நட்சத்திரத்தை தேர்வு செய்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள்.
சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் ஏராளம். அவர் அதிகமான திருவிளையாடல்கள் நிகழ்த்தியது மாசி மாதத்தில்தான். எனவே மாசி மாதம் முழுவதுமே சிவ வழிபாட்டுக்கு உரிய மாதம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். பூச நட்சத்திர நாளன்று சிவ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலமாக பிறவிப் பிணியை நீக்க முடியும் என்கின்றனர் ஆன்மீக பெரியவர்கள்.
எனவே மாசி பூச நட்சத்திர நாளன்று நதியில் நீராட வேண்டும். நீராடி விட்டு அந்த நதிக்கரையில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் சிவபெருமானை முழு மனதுடன் சரணாகதி அடைய வேண்டும். பிறகு கோவிலை 19 முறை வலம் வர வேண்டும்.
தொடர்ந்து 5 பூச நட்சத்திர நாட்களுக்கு வழிபாடு மேற்கொண்டு வருபவர்களுடைய கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். மறுபிறவி என்பது இருக்காது. நற்கதி பேரு கிடைக்கும். அதனால்தான் சித்தர்கள் பலரும் பூச நட்சத்திரத்தை தேர்வு செய்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். வள்ளலார் தைப்பூச நாளை தேர்ந்தெடுத்து தான் ஜோதியில் ஐக்கியமானார்.
- பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது.
- பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
தமிழ் மாதங்களில் 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். சூரியன் கும்ப ராசியில் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 48 நொடி, 24 விநாடி கொண்ட கால அளவே இந்த மாதமாகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.

மாசி மாதத்தில் கிரகப்பிரவேசம் அல்லது வீடு மாறிக் குடியேறினால் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதும் ஐதீகம். முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில் தான்.
அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி தொடங்குதல் போன்றவை செய்யப்படுகின்றன. இதன் மூலம் அந்தத் துறைகளில், எடுத்துக்கொண்ட கல்வியில் மிகப்பெரிய உச்சம் தொடலாம் என்பது நம்பிக்கை. தை மாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் தெய்வ அருள் பெற்ற நட்சத்திர நாளாகும். அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. அதே போல மாசி பூசம் முருகனின் துணைவி தெய்வானைக்குரியது. அம்மையிடம் வரம் கேட்டால் அப்பனும் சேர்ந்து தருவார் அல்லவா. அந்த வகையில் மாசி பூசமும் தெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்.

மாசி பூசம் நாளான நாளை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் லட்சுமி தேவிக்கு துளசி மாலை சாற்றி வழிபடுவதால் சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி விரும்பிய பலன்களை உண்டாக்கும். பூச நட்சத்திரத்திற்குரிய தல விருட்சமாக அரச மரம் இருக்கிறது. அரசமரம் தலவிருட்சமாக இருக்கும் கோவிலுக்கு சென்று அரசமரத்தையும் அங்குள்ள இறைவனையும் வழிபடுவதால் வாழ்வில் மிகுந்த அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் ஏற்படுத்தும்.
இந்த ஆண்டு மாசி மாத பூசம் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி 34 நிமிடம் 58 நொடிகளில் தொடங்குகிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி 34 நிமிடம் 18 நொடிகளில் நிறைவடைகிறது. பூசம் சனியின் ஆதிக்க நட்சத்திரம் என்பதால், திருநள்ளாறு போன்ற சனி தலங்களில் வழிபாடு செய்வது நல்லது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விளங்குளம் அட்சய புரீஸ்வரர் கோவில் பூச நட்சத்திரக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய முக்கிய தலம் ஆகும். பூச நட்சத்திரத்தின் அதிதேவதையான குரு பகவானை வழிபடுவது குரு தோஷங்களை நீக்கும்.
பூசம் என்பதன் வடிவங்கள் மகுடி, புற்று, அம்பு கூடை, முருகனின் வேல், மயில்தோகை கொத்து, பசுவின் மடி. கோமாதா. ஆகவே மேற்கண்ட வடிவம் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்க கூடிய தெய்வம் அல்லது மகான் அல்லது அந்த ரூபங்களையே நாம் வழிபாடு செய்வதும் தினமும் பார்த்து தியானம் செய்து வருவதும் நமக்கு நல்ல வழிகாட்டுதலை, நல்ல சிந்தனையும், யோசிக்கும் திறனையும், ஆற்றலையும் நமக்கு கொடுக்கும்.
மாசி பூசம் நட்சத்திர நாளான நாளை புட்லூரில் இருக்கும் பூங்காவனத்தம்மன், சங்கரன் கோவிலில் இருக்கும் கோமதியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன், மலேசியா பத்துமலை முருகன் கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்கள், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி வழிபடுவது சிறப்பாகும். மாசி பூச வழிபாடு மிகச்சிறந்த நேர்மறை எண்ணங்களை கொடுத்து உங்களுக்கு வாழ்வில் வெற்றியை பெற உதவும்.
- ஆயுஷ் ஹோமம் தீராத நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
- ஹோமம் செய்வதன் மூலம் தேவையற்ற பயங்கள் நீங்கி, மன தைரியம் மற்றும் நீண்ட வாழ்நாள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆயுஷ் ஹோமம் நீண்ட ஆயுள், நலம் மற்றும் ஆரோக்கியம் பெற ஆயுர் தேவதையை வேண்டி செய்யப்படும் ஒரு சிறப்பு வேத சடங்காகும். இது பொதுவாக பிறந்தநாள், திருமண விழாக்கள் மற்றும் குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாளில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் தீராத நோய்கள் குணமடைவதாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஆயுஷ் ஹோமத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
ஆயுள் மற்றும் ஆரோக்கியம்: ஆயுஸ் ஹோமம் நீண்ட ஆயுளை அருளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நடத்தப்படும் முக்கிய ஹோமமாகும்.
பரிகாரம்: ஆயுஷ் ஹோமம் தீராத நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
கால நேரம்: குழந்தைக்கு முதல் பிறந்தநாள் (பிறந்த நட்சத்திரத்தில்) அன்று செய்வது சிறப்பானது. மேலும், ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோமத்தை செய்யலாம்.
மங்கள கரமான வழிபாடு: இது ஆயுர் தேவதையை வேண்டி, நீண்ட ஆயுளும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்க பிரார்த்திக்கப்படும் ஒரு சிறப்பு வழிபாடாகும்.
சுபம்: இந்த ஹோமம் செய்வதன் மூலம் தேவையற்ற பயங்கள் நீங்கி, மன தைரியம் மற்றும் நீண்ட வாழ்நாள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆயுஷ் ஹோமம் என்பது ஒருவரின் ஆயுளை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும் மிகச்சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.
- பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.
- கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்தில் தென் பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆதிதிருவரங்கம். இக்கோவில் முதல்யுகமாகிய கிருதாயுகத்தில் அமைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.
முதல்யுகம் மற்றும் முதல் அவதாரம் என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் இது ஆதி(முதல்) திருவரங்கம் என வழங்கப்படுகிறது. இக்கோவில் மூன்று முக்கிய பாக்கியங்களை பக்தர்களுக்கு வழங்குகிறது. அவை முறையே வேலை, திருமணம் மற்றும் புத்திரபாக்கியம்.
இங்குள்ள பெருமாள் சயனக்கோலத்தில் காட்சியளிக்கிறார். இதனை போகசயனம் எனக் கூறுகின்றனர். போகம் என்றால் மகிழ்ச்சி (சந்தோசம்) எனப் பொருள். அவரின் இந்த திருஉருவம் தமிழ்நாட்டில் உள்ள சயனக்கோலப் பெருமாள்களில் பெரியது என கூறப்படுகிறது.
அவர் ஐந்து தலைக் கொண்ட ஆதிசேஷனின் மீது படுத்துள்ளார். அவரின் தலையை ஸ்ரீதேவி மடியில் கிடத்தியுள்ளார். அவரின் கால்களில் ஒன்றை பூதேவி பிடித்துள்ளார். மற்றொரு கால் ஆதிசேஷனின் வால் மீது வைத்துள்ளார். அவரின் தோல்பட்டையை கருடபகவான் தாங்கியிருக்கிறார். அவரின் இடது கை விரல்கள் 4 வேதங்களை குறிக்கின்றன. அவரின் வயிற்றிற்கு மேலாக பிரம்மன் காட்சியளிக்கின்றார். இந்த நான்கு வேதங்களை பிரம்மாவிற்கு எடுத்துரைப்பதாக வருணிக்கப்படுகிறது.
வேதங்களை உபதேசிப்பதால் இந்த காட்சியைக் கண்டால் உத்யோகப் பிராப்தம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் தம்பதிசமயந்தராக பெருமாள் காட்சியளிப்பதாலும் சந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்து அவர் மனைவியுடன் சேர்ந்ததால் திருமண யோகம் கிடைக்கும் எனவும், கிருதாயுகத்தில் சுரதகீர்த்தி என்னும் தொண்டை மன்னன், நாரதரின் ஆலோசனைப்படி இங்கு தன் மனைவியுடன் வந்து வணங்கியதால் நான்கு ஆண்பிள்ளைகள் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
இதனால் புத்திரப்பாக்கியம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. இக்கோவில் கிருஷ்ணருக்கு விருப்பமான தலமாக விளங்குகின்றது. இங்கு கிருஷ்ணர் கொடி மரம் அருகில் உயர்ந்த இடத்தில் தனிசன்னதியில் காட்சி அளிக்கின்றார். ஒரு கையில் வெண்னையும் மற்றொரு கையில் உரியோடும் தோன்றுகிறார். பஞ்ச கிருஷ்ணாரண்ய ஷேத்திரத்தில், நடு நாடு என்று சொல்லப்பட்ட பகுதியில் ஆதிதிருவரங்கம் உள்ளது.
கிருஷ்ணர் பெயரினால் விளங்கும் காட்டில் அமைந்துள்ளதால் 'கிருஷ்ணா ரண்யம்' என்றும் பெயர் பெற்றது. தமிழ் இலக்கணம் இலக்கிய முறைப்படி காடும், காட்டைச் சார்ந்த பகுதியில் இத்திருத்தலம் உள்ளதால் இந்நிலம் முல்லை நிலம் எனப்படும். காட்டை சார்ந்த பகுதியில் முழு முதற்கடவுள் 'கிருஷ்ணர்' இருப்பதனால், இத்திருத்தலத்தில் கிருஷ்ணருக்கு ஒரு தனி சன்னதி உண்டு, இது பலி பீடத்திற்கு பின்புறம் மேல் மாடியில் அமைந்துள்ளது. பக்தர்கள் பலி பீடத்தில் இருந்தே கிருஷ்ணரை சேவித்துக் கொள்கிறார்கள். இச்சன்னதியில் பாலகிருஷ்ணர் ஒரு கையில் வெண்ணையும் மற்றொரு கையில் உரியோடும், ஆண் உருவோடு காட்சித் தருகின்றார்.
தென்பெண்ணை ஆற்றின் தென்கரையோரம் மேட்டுப்பாங்கான பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது. இதன் தோற்றமும் இதை உராய்ந்தாற்போல வடக்கிலும், கிழக்கிலும் நீர் வழிந்தோடும் பெண்ணை ஆற்றின் அழகும், மனதைக் கவர்ந்த கண் கொள்ளாக் காட்சியாய் இன்பம் அளிக்கிறது.
- நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
- வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது.
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா 22-ந்தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக தொடங்கியது. விழாவில் தினமும் உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, பூதம், சிம்மம், நாகம், ரிஷபம், அதிகார நந்தி, அஸ்தமான கிரி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார். நேற்று காலை யானை வாகனத்திலும், இரவில் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி மாடவீதி உற்சவம் வந்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. வருகிற 2-ந்தேதி கல்யாண சுந்தரர் திருக்கல்யாண வைபவமும், மாலையில் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடக்கிறது. 3-ந்தேதி கொடியிறக்கம். 4-ந்தேதி தியாகராஜ சாமி பந்தம் பறிஉற்சவம், 18 திருநடனத்துடன் மாசி பெருவிழா நிறைவுபெறுகிறது.
- குலசேகரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-15 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி இரவு 10.50 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : திருவாதிரை காலை 11.05 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி, திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை
இன்று சர்வ ஏகாதசி. கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் குதிரை வாகனத்திலும் அம்பாள் பல்லக்கிலும் பவனி. குலசேகரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. காங்கேயம் ஸ்ரீ முருகப் பெருமான் ரதோற்சவம் நத்தம் ஸ்ரீ மாரியம்மன் சந்தனக்குடக் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படை வீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-புகழ்
மிதுனம்-சிறப்பு
கடகம்-உறுதி
சிம்மம்-பண்பு
கன்னி-பரிசு
துலாம்- சிந்தனை
விருச்சிகம்-கவனம்
தனுசு- கடமை
மகரம்-பக்தி
கும்பம்-ஓய்வு
மீனம்-திடம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியத்தைச் செய்ய இயலாது. வீண் வம்பு வீடு தேடி வரும். விரயங்கள் அதிகரிக்கும். பயணத்தால் பிரச்சனை ஏற்படும்.
ரிஷபம்
விரயங்கள் கூடும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த காரியங்கள் நடைபெறாமல் போகலாம். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது.
மிதுனம்
வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும் நாள். முக்கிய புள்ளிகள் உங்களின் முன்னேற்றத்திற்கு வித்திடுவர். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கொடுக்கல், வாங்கல்களில் லாபம் உண்டு. உங்கள் யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
கன்னி
இனிமையான நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் செய்வீர்கள். மருத்துவ செலவுகள் குறையும்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களின் பகை உருவாகும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை.
தனுசு
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.
மகரம்
புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் அதிகரிக்கும் நாள். பிரியமான சிலரை தேடிச் சென்று சந்திப்பீர்கள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
கும்பம்
ஆன்மிக பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். கனிவாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
யோகமான நாள். நாளை நடக்கும் என்று நினைத்த காரியம் இன்றே நடைபெறும். பணவரவு திருப்தி தரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
- ஒவ்வொரு நாளும் காலை மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
- 7-ம் திருவிழாவான நாளை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.
5-ம் திருவிழாவான நேற்று இரவு குடை வரை வாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடந்தது.
6-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பந்தல் மண்டபம் சேர்தல் நடந்தது.
இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது
7-ம் திருவிழாவான நாளை காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது. காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பிள்ளையின் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் அங்கிருந்து சுவாமி சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது
8-ம் திருவிழாவான நாளை மறுநாள்( 28-ந் தேதி) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்த ருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.
- ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.
பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களை விடவும் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. ஒருவர் வாழ்நாளில் ஒரே ஒருமுறை ஏகாதசி விரதம் கடைபிடித்தாலும் அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அடுத்த பிறவியிலும் கூட அவனுக்கு அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை.
மாசி மாதம் வளர்பிறை சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலகி ஏகாதசியாக கொண்டாடுகிறோம். ஆமலகி என்றால் நெல்லிக்கனி என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி அன்று நாம் நெல்லி மரத்தை வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களும் அழிந்த பிறகு விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்டு பூமியில் விழுந்த ஒரு நீர் துளி தான் நெல்லி மரமாக வளர்ந்தது என்று புராணங்களில் கூறப்படுகிறது.
அதனால் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நெல்லிக்கனியை தானமாக தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் கிடைக்கும். அதே போல் நெல்லிக்கனியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அப்படிப்பட்ட நெல்லி மரத்தை இந்த மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளான நாளை(வெள்ளிக்கிழமை) வழிபாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலன்களை தரக் கூடியதாகும். அதே போல் ஒவ்வொரு ஏகாதசியில் பெருமாள் ஒவ்வொரு பொருளிளும் எழுந்தருளி அருள் செய்வதாக ஐதீகம். அப்படி திருமால், நெல்லிக்காய் மரத்தில் எழுந்தருளி வாசம் செய்யும் ஏகாதசி என்பதால் இதற்கு ஆமலகி ஏகாதசி ஆகும். அதனால் தான் இந்த நாளில் நெல்லி மரத்தை பெருமாளாகவும், மகாலட்சுமியாகவும் கருதி பூஜை செய்து, வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.
வீட்டில் நெல்லி மரம் இல்லை என்றால், நெல்லி மரம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். வீட்டில் நெல்லி மரம் இருந்தால் வீட்டிலேயே இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.
இதற்காக நெல்லி மரத்திற்கு அடியில் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, நெல்லி மரத்தை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு நெல்லி மரத்திற்கு மஞ்சள் சந்தனம் தடவி, குங்கும பொட்டு வைத்து மரத்திற்கு கீழே அரிசிமாவால் சின்னதாக கோலம் போட வேண்டும்.
கோலப்பொடியை பயன்படுத்தாமல் அரிசி மாவால் கோலம் போட்டுவிட்டு கொஞ்சம் உதிரிபூக்களை எடுத்து அந்த நெல்லி மரத்திற்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.

கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த பூஜையை செய்துவிட்டு அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் பழம், பிரசாதம் என்ன வேண்டுமென்றாலும் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் 108 ஒரு ரூபாய் நாணயங்கள்.
ஒரு சிறிய கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அந்த மரத்திற்கு அடியில் வைத்து மனம் உருகி விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் வேண்டிக் கொண்டால், உங்களுக்கான அருள் ஆசி உடனடியாக கிடைக்கும். இறுதியாக கணவன் மனைவி இருவரும் தம்பதியராக அந்த மரத்திற்கு நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்து இந்த பூஜையை செய்து பூஜை நிறைவடைந்த உடன் பூஜையில் வைத்த பொருட்களை வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பூ, பழம், பிரசாதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கிண்ணத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.
ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர். ஒரு பசு தானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்ற நிலையில், ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கடன் தீரவும் பணப்பிரச்சனை தீரவும் பெருமாள் ஆசியுடன் லட்சுமியின் அருளும் நமக்கு சேர்த்தே தான் கிடைக்க வேண்டும். எனவே அவர்களுக்கே உகந்த ஆமலகி ஏகாதசி நாளில் இந்த வழிபாடு செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம்.
குபேரனுக்கே அருள் கொடுத்த நெல்லி
நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை குறித்து புராணங்கள் கூறும் தகவல்கள்...
செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். "நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.
செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார். நாள்கள் கடந்து விட்டன. நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன. காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.
குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பியது. சூழ்ச்சி செய்து செல்வம் பறித்தவர்கள் அவற்றை எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.
குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார். "நெல்லி மரங்கள் வளர்ந்ததா? இழந்த செல்வம் கிடைத்ததா?" என்றார் சிவபெருமான். "நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.
நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்றார் சிவபெருமான்.
மேலும் ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள் என்கின்றன புராணக்கள்.
இழந்ததை மீட்டு தரும் நெல்லி சாதம் தானம்
பெருமாளின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி உணவில் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம். நெல்லி மரத்தை தானம் செய்தாலும் பலன்கள் அதிகம் கிடைக்கும். நெல்லி மரத்தை தானம் செய்வதன் மூலம், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.
நெல்லிக்காயை தானம் செய்வதால் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பல கிடைக்கும். அதை தானம் செய்வதன் மூலம், நபர் செல்வமும் செழிப்பும் பெறலாம். நெல்லிக்காய் தானம் செய்வதன் மூலம், அறிவு பெற்று மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.
வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்குச் சென்று அங்குள்ள எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தானம் செய்யுங்கள். நெல்லி சாதம் தானம் செய்ய செய்ய நீங்கள் இழந்தவை யாவும் திரும்ப அடைவீர்கள். உங்களை ஏமாற்றி அடைந்த சொத்துக்கள் கூட திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருட்கள் உங்களை தேடி தானாக வந்து சேரும். விட்டு சென்ற உறவுகளும், உங்கள் பிரிவின் துயர் நீக்க உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களை வந்தடைவார்கள். எளிய இந்த தானத்தை பரிகாரமாக ஆறு வாரங்கள் செய்து பாருங்கள், நல்ல பலன்கள் கிட்டும்.
நெல்லியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, அஜீரண பிரச்சனையையும் குறைக்கும். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகி சருமத்தில் பொலிவு ஏற்படும்.
ஆன்மீக ரீதியாக நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது அதனால் தான் கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள் அதற்கு ஆமலகம் என்று பெயர்.
ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லிக்கனியை பயன்படுத்தக் கூடாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும்போது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம். மேலும் நெல்லி மரம் லட்சுமியின் அம்சம் என்பதால் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.
லட்சுமி அருள் தரும் தமிழ் மந்திரம்
நவகிரகங்களில் சுக்கிரனுடைய ஆளுமை பெற்றது நெல்லி. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிமரத்தை வழிபட்டு வந்தால் ஏற்றம் உண்டாகும் என்கின்றன ஜோதிட நூல்கள். பழனியில் உள்ள திருஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி ஆகும். ஆமலகி ஏகாதசி அன்று நெல்லி மரத்துக்கு பூஜை செய்து கீழக்கண்ட லட்சுமி மந்திரத்தை கூற வேண்டும்.
அகலகில்லேன் இறையுமென்று
அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்று
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே
- நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-14 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி நள்ளிரவு 12.54 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : மிருகசீரிஷம் நண்பகல் 12.34 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம், ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பவனி வரும் காட்சி. திருக்கச்சிநம்பி திருநட்சத்திர வைபவம். திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் கோ ரதம், இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சிறிய திருவடியில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நன்மை
மிதுனம்-சிந்தனை
கடகம்-பரிசு
சிம்மம்-உற்சாகம்
கன்னி-அனுகூலம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-உயர்வு
தனுசு- மேன்மை
மகரம்-உதவி
கும்பம்-லாபம்
மீனம்-புகழ்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
சிக்கல்கள் விலகி சிறப்புகள் வந்து சேரும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். கட்டிய வீட்டைப் பராமரிக்கும் யோகம் உண்டு.
மிதுனம்
உற்சாகமாகப் பணிபுரியும் நாள். பிறர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தடைபட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
கடகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். உறவினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் மாறும்.
சிம்மம்
ஆதாயம் தரும் தகவல்களில் அக்கறை காட்டும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய பங்குதாரர்களால் தொழில் வளர்ச்சி கூடும்.
கன்னி
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நடைபெறாது என நினைத்த காரியம் ஒன்று நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர்.
துலாம்
மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். எதிர்பாராத தன லாபம் இல்லம் தேடி வரும். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.
விருச்சிகம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீணான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டாம். உடல் நலனில் தொந்தரவு வரலாம்.
தனுசு
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றங்களைச் சந்திப்பீர்கள். பக்கபலமாக இருப்பவர்கள் பணிக்கு உதவி செய்வர்.
மகரம்
யோகமான நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம்
பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள்.
மீனம்
நிதி நிலை உயரும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது.
- பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள்.
கருட வாகன சேவை என்பது வைணவக் கோவில்களில், பிரம்மோற்சவம் போன்ற முக்கிய திருவிழாக்களின் போது, திருமால் கருடப் பறவையின் வடிவிலான வாகனத்தில் எழுந்தருளி, திருவீதிகளில் வீதி உலா வரும் நிகழ்வாகும். இது வைணவத்தில் மிக உயர்ந்த தரிசனமாகக் கருதப்படுகிறது, மேலும் இது செல்வத்தையும், மோட்சத்தையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது. கருட வாகனம் 'பெரிய திருவடி' என்றும் அழைக்கப்படுகிறது,
மேலும் கருட சேவையின் மூலம் வேதங்கள் உணர்த்தும் பரம்பொருளைத் தரிசிப்பதாகக் கருதப்படுகிறது. பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா வரும்போது, பக்தர்கள் அவரை நேரடி தரிசனம் செய்கிறார்கள். கருட வாகனத்தில் பெருமாளைத் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது வைணவர்களின் நம்பிக்கை. கருடன் வேதங்களின் வடிவமாக கருதப்படுவதால், கருட சேவையின் போது பெருமாளை தரிசிப்பது, வேதங்களின் சாராம்சத்தை உணர்வதற்கு சமம்.
பல வாகனங்களில் பெருமாள் எழுந்தருளினாலும், கருட வாகன சேவை மிகவும் உயர்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பல வைணவக் கோவில்களின் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் கருட சேவையும் ஒன்றாகும். கோவிலுக்குள் வர இயலாத முதியவர்கள், நோயுற்றவர்கள் போன்றோருக்காக இறைவன் கருணையுடன் வீதிக்கு எழுந்தருள்வதாகவும் கருதப்படுகிறது. சுருக்கமாக, கருட வாகனம் என்பது திருமாலின் மிக முக்கியமான வாகனங்களில் ஒன்று. கருட வாகன சேவை என்பது திருமாலின் பேரருளைப் பெற்று, மறுபிறப்பில்லா பேறு அடையும் ஒரு வைணவ வழிபாட்டு முறையாகும்.






