என் மலர்
ஆன்மிகம்
- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
2-ந் தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் பட்டாபிஷேகம், இரவு பரணி தீபம்.
* திருவண்ணாமலை அருணாசலேசுவரர் காலை கண்ணாடி விமானத்திலும், இரவு கயிலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
3-ந் தேதி (புதன்)
* திருக்கார்த்திகை.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை தீபம்.
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயணசுவாமி விசேஷ அலங்காரம்.
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை தலங்களில் முருகப்பெருமான் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.
4-ந் தேதி (வியாழன்)
* பவுர்ணமி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் தெப்ப உற்சவம்.
* நத்தம் மாரியம்மன் லட்சத்தீப காட்சி.
* திருப்பதி ஏழு மலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
5-ந் தேதி (வெள்ளி)
* திருவாஞ்சியம் முருகப்பெருமான், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி தலங்களில் விழா தொடக்கம்.
* மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
6-ந் தேதி (சனி)
* திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* திருவரங்கம் நம்பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
7-ந் தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
8-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
- டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
- டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 30-ந் தேதி முதல் ஜனவரி 8-ந் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனம் நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் வெளியிடப்பட்டது.
கடந்த 27-ம் தேதி தொடங்கிய பதிவு நேற்று மாலை 5 மணிக்கு முடிந்தது. மொத்தம் 24,05,237 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று மதியம் 2 மணிக்கு ஆன்லைன் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள இணைப்பைத் திறந்து இலவச டோக்கன்களை பதிவிறக்கம் செய்யலாம்.
டிசம்பர் 30-ந் தேதிக்கு 57 ஆயிரம் டோக்கன்களும், 31-ம் தேதிக்கு 64 ஆயிரமும், ஜனவரி 1-ம் தேதிக்கு 55 ஆயிரம் பக்தர்களுக்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், ரூ.1,000 தரிசனம் டிக்கெட் ஒதுக்கீடு ஒரு நாளைக்கு 15,000 என்ற விகிதத்திலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனங்களும் 1,000 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
- திருக்கார்த்திகை நாளில் நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும்.
- கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது.
கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.
கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது.
திசைக்கேற்ப பலன்
நாம் வீட்டில் விளக்கேற்றும்போது, எந்த திசையை நோக்கி விளகேற்றுகிறோமோ அதற்கேற்ப பலன்களை அடையலாம்.
கிழக்கு
துன்பங்கள் நீங்கும், ஐஸ்வர்யம் கிடைக்கும்
மேற்கு
கடன்கள் தீரும்
வடக்கு
சுபகாரியங்கள் நடைபெறும்
தெற்கு திசை பார்த்து விளக்கேற்றக் கூடாது
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி.
- திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-16 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி நண்பகல் 12.29 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : அசுவினி இரவு 6.23 மணி வரை பிறகு பரணி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
பிரதோஷம், திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
பிரதோஷம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பட்டாபிஷேகம் தங்கக் குதிரையில் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர் பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
திருத்தணி, திருப்போரூர், வடபழனி குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். 3-ஆம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமா நிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் திருக்கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் காலை அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-அன்பு
மிதுனம்-பரிசு
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஊக்கம்
கன்னி-உயர்வு
துலாம்- ஈகை
விருச்சிகம்-அமைதி
தனுசு- ஆதாயம்
மகரம்-புகழ்
கும்பம்-போட்டி
மீனம்-இன்பம்
- கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும்.
- தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும்.
இந்து மதத்தில், இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமான ஒன்றாகும். பலர், தினமும் அதிகாலையில் இறைவனுக்கு விளக்கேற்றிவிட்டுதான், தங்கள் அன்றாட பணிகளை தொடங்குகிறார்கள். தினமும் விளக்கேற்ற முடியாதவர்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது சிறப்புமிக்க விழா நாட்களிலாவது தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். ஆனால் தீபத்தையே இறைவனாக நினைத்து போற்றி வழிபடும் அற்புதமான நாள்தான், திருக்கார்த்திகை தீபத் திருநாள்.
திருக்கார்த்திகை நாளில், கோவில்கள் மற்றும் வீடுகளில் வரிசையாக தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகிறார்கள். அன்றைய தினம், வீடு முழுவதும் ஒளியால் பிரகாசமடைந்து மனம் மகிழ்ச்சி அடைகிறது. தீப ஒளியானது எவ்வாறு இருளை நீக்கி ஒளியை பரப்புகிறதோ, அதேபோல நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள், பிரச்சினைகள் எனும் இருள் நீங்கி, மகிழ்ச்சி எனும் ஒளியை பரப்புகிறது.
கார்த்திகை மாதம் என்பது தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டிய சிறப்புக்குரிய மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் திருக்கார்த்திகை நாளிலாவது நிச்சயம் தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம், நாம் இன்முகத்தோடு ஏற்றும் தீபமானது, நம் வாழ்வில் இன்பத்தை வாரி வழங்கும். கார்த்திகை மாதம் பவுர்ணமி நாளில் கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை வருகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருநாள், 3-12-2025 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது.
திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்..
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினார். இதனால் உலகமே இருளில் மூழ்கியது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் வாடின. இச்செயலால் பார்வதி தேவிக்கு பாவம் ஏற்பட்டது. இதையடுத்து பார்வதி தேவி பாவவிமோசனம் வேண்டி, காஞ்சிபுரத்திற்கு வந்து சிவபெருமானை நினைத்து கடுந்தவம் புரிந்தார்.
அப்போது பார்வதி தேவிக்கு காட்சி அளித்த சிவபெருமான், திருக்கார்த்திகை நாளில் திருவண்ணாமலைக்கு வரும்படி அருளினார். சிவபெருமானின் கட்டளைப்படியே திருவண்ணாமலை வந்தார் பார்வதி தேவி. அங்குள்ள பவளக்குன்று மலையில் வசித்து வந்த கவுதம மகரிஷி உதவியுடன் பர்ணசாலை அமைத்து தவம் இயற்றினார். கார்த்திகை மாதம், பவுர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இணையும் நாளில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஜோதி வடிவில் காட்சி அளித்தார். பின்பு, தன் உடலின் இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்தார். அந்த நாளே திருக்கார்த்திகை என்று கொண்டாடப்படுகிறது.
ஒரு சமயம் கயிலாயத்தில் நெய் தீப விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கு அணையும் தருவாயில், அங்கு ஒரு எலி வந்தது. விளக்கில் இருந்த நெய்யின் வாசனையை அறிந்த எலி, அதை உண்ண நினைத்து திரியை இழுத்தது. அப்போது அந்த திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. உடனே, அந்த எலியின் முன் தோன்றிய சிவபெருமான், மானிடப் பிறவி எடுத்து, ராஜயோக வாழ்வு வாழும்படி அருள் வழங்கினார். அந்த எலிதான் மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்று கூறப்படுகிறது.
எண்ணற்ற செல்வங்களுக்கு அதிபதியாக இருந்த மகாபலி சக்கரவர்த்திக்கு கூடவே செருக்கும் வளர்ந்தது. ஒரு நாள் அகங்காரத்துடன் கோவிலுக்கு சென்ற அவர், பட்டாடைகள் தரையில் புரள அலட்சியமாக நடந்தார். அப்போது மகாபலி சக்கரவர்த்தியின் பட்டாடை, அங்கிருந்த அகல் விளக்கின் மீது பட்டு தீப்பற்றி எரிந்தது. இதனால் அவரின் உடலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆணவத்தை எண்ணி வருந்திய சக்கரவர்த்தி, இறைவனை இருகரம் கூப்பி வணங்கி பிரார்த்தனை செய்தார். தனது உடம்பில் ஏற்பட்ட தீ காயம் குணமடைய அருள்புரியுமாறு வேண்டினார்.
உடனே இறைவன், "நீ நாள்தோறும் கோவிலில் விளக்குகளை வரிசையாக ஏற்றி, என்னை வழிபடு. காலப்போக்கில் உனது காயம் குணமடையும்" என்று அசரீரியாக கூறினார்.
அதன்படி மகாபலி சக்கரவர்த்தி தினமும் கோவிலுக்கு சென்று, விளக்குகளை வரிசையாக அடுக்கி தீபம் ஏற்றி வழிபட்டார். இவ்வாறு தொடர்ந்து வழிபட, கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம் கூடிய பவுர்ணமி திதியில் இறைவன் மனம் இரங்கி மன்னனுக்கு காட்சி அளித்தார். ஜோதி வடிவில் ஒளிப்பிழம்பாய் காட்சி அளித்த இறைவன், மன்னனின் நோயை நீக்கி அருள் வழங்கினார். இவ்வாறு தொடங்கிய தீப வழிபாடே, திருக்கார்த்திகை திருநாளாக கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.
திருக்கார்த்திகை விரதம்
கார்த்திகை தீப திருவிழா என்பது நமது பாரம்பரிய வழிபாடுகளில் ஒன்றாகும். பொதுவாக கார்த்திகை மாதம் முழுவதும் மாலை நேரத்தில் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்படுகிறது. இருப்பினும் திருக்கார்த்திகை நாளன்று ஏற்றப்படும் தீப வழிபாடு தனிச் சிறப்பாகும். அன்றைய தினம் பல வகையான விளக்குகளால் தீபங்கள் ஏற்றினாலும், மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
திருக்கார்த்திகை தினத்திற்கு முதல் நாள் பரணி நட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் காலையில் மட்டும் உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு உண்பதை தவிர்த்துவிட்டு, தண்ணீர் மட்டுமே பருக வேண்டும். பின்பு, இரவு கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பின்பு மறுநாள் காலையில் நீராடிவிட்டு பால் அருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் திருகார்த்திகை விரதம் இருந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும். அவர்களின் சந்ததியினர் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
திருக்கார்த்திகை தினத்தன்று, ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப வசதிக்கேற்ப விதவிதமாக, பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்கு தீபம் ஏற்றுகிறார்கள். முதலில் வீட்டின் வாசலில் உள்ள கோலத்தின் நடுவில் விளக்கேற்ற வேண்டும். பின்பு, வீட்டு வாசல், பூஜை அறை என வீடு முழுவதும் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ அத்தனை விளக்குகள் ஏற்றலாம். ஜோதி வடிவான இறைவனை நாம் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். லட்சுமி கடாட்சம் ஏற்படும். வாழ்வில் பிரகாசமான எதிர்காலம் உண்டாகும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் நாள். வரவு திருப்தி தரும். பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.
ரிஷபம்
பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து காரியத்தை முடித்துக் கொடுப்பர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும். அயல்நாட்டில் வசிக்கும் நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
கடகம்
நந்தி வழிபாட்டால் நன்மை கிடைக்கும் நாள். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். விட்டுப் போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம்.
சிம்மம்
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுப காரியப் பேச்சுக்கள் முடிவாகும். அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் முயற்சி கைகூடும்.
கன்னி
வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நெருக்கடி கொடுப்பர்.
துலாம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். வாகன யோகம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள்.
விருச்சிகம்
பொதுவாழ்வில் புகழ்கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
நன்மைகள் நடைபெறும் நாள். தனவரவு திருப்தி தரும். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக விளங்குவர். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். தேக ஆரோக்கியம் தெளிவு பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
கும்பம்
பிறரை விமர்சிப்பதால் பிரச்சனைகள் ஏற்படும் நாள். வரன்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் பற்றிச்சிந்திப்பீர்கள்.
மீனம்
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணைபுரியும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.
- திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
டிட்வா புயல் காரணமாக திருப்பதி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மழையில் நனைந்தபடி குளிரில் நடுங்கி கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பலத்த மழையால் பாபவிநாசம், ஸ்ரீவாரி பாதத்திற்கு செல்லும் வழிகளை தேவஸ்தான அதிகாரிகள் மூடினர். மேலும் அலிபிரியில் இருந்து மலைக்குச் செல்லும் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டுமென பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலத்த மழையால் திருப்பதி மலையில் உள்ள கோகர்ப்பம், பாப விநாசம், ஆகாச கங்கா, குமாரதாரா, பசுபதாரா அணைகள் முழுமையாக நிரம்பியது. கோகர்ப்பம், பாப விநாசம் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. மழையில் பல்வேறு இடங்களில் திடீரென நீர்வீழ்ச்சிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர்.
திருப்பதியில் நேற்று 68, 187 பேர் தரிசனம் செய்தனர். 25,027 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.47 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
முக்கியப் புள்ளிகளின் ஆலோசனையால் முன்னேற்றம் கூடும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.
ரிஷபம்
புதிய பாதை புலப்படும் நாள். காரிய வெற்றிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோக உயர்வு உண்டு.
மிதுனம்
ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் பிரச்சனைகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கடகம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
சிம்மம்
யோகமான நாள். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
வழிபாட்டின் மூலம் வளர்ச்சி ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்களால் கையிருப்புக் கரையலாம். உத்தியோகப் பிரச்சனைகள் நீடிக்கும்.
துலாம்
லட்சியங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று இன்று கைகூடும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
விருச்சிகம்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.
தனுசு
பம்பரமாகச் சுழன்று பணிபுரியும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மகரம்
வாங்கல் கொடுக்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
கும்பம்
வளர்ச்சிக்கு வழிகாட்ட நண்பர்கள் முன்வரும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மீனம்
உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நண்பர்களால் நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
- சுபமுகூர்த்த தினம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு கார்த்திகை-15 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.52 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் வெள்ளி விமானத்திலும் இரவு ஸ்ரீ சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-தனம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நற்செயல்
சிம்மம்-லாபம்
கன்னி-உழைப்பு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-நலம்
தனுசு- பெருமை
மகரம்-நன்மை
கும்பம்-வாழ்வு
மீனம்-கடமை
- கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
- கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.
மேஷம்
எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
மிதுனம்
மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.
கடகம்
நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.
சிம்மம்
சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
கன்னி
நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.
துலாம்
சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.
விருச்சிகம்
திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.
தனுசு
எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.
மகரம்
வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.
கும்பம்
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.
மீனம்
தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
- தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
- சிவன், ‘பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்’ என்றார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
இந்த உலகத்தில் அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மனுக்கு ஒருமுறை அளவில்லாத கர்வம் ஏற்பட்டது. அவர் காக்கும் கடவுளான திருமாலிடம் சென்று, திருமாலே! இந்த ஈரேழு லோகங்களையும் படைத்தவன் நான். நான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. நான் உலகத்தை படைக்காவிட்டால் உன்னால் எப்படி காப்பாற்ற முடியும் என்று ஆணவத்துடன் பேசினார்.
இதனால் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் உலகமே நடுநடுங்கியது.
திருமாலும், பிரம்மனும் சண்டையிடுவதால் உலகத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பதால் அதற்கு தீர்வு காண்பதற்காக தேவேந்திரனும், தேவர்களும் அல்லல் தீர்க்கும் அலகில் ஜோதியனை நாடிச் சென்று பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்து உலகை காக்கும்படி கூறி முறையிட்டனர். அவர்களின் துன்பத்தை நீக்க, சிவபெருமான் முன்வந்தார்.
தேவர்களின் துன்பத்தை தீர்க்கவும், திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் ஏற்பட்ட பகை நீங்கவும் இந்த உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்காகவும் மிகப்பெரிய ஒரு நெருப்பு உருவம் எடுத்து பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் முன்பு ஒளிப்பிழம்பாக உருமாறி நின்றார்.
மிகப் பெரிய நெருப்பு உருவம் தோன்றியதை பார்த்த பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையை நிறுத்தி ஆச்சரியமாக அந்த ஒளிப்பிழப்பை பார்த்தனர். பின்னர் இவ்வளவு பெரிய உருவத்தின் அடிப்பாகத்தையோ அல்லது மேல்பாகத்தையோ யாரால் கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே பெரியவர் என்று விஷ்ணுவும், பிரம்மனும் முடிவுக்கு வந்தனர்.
பின்னர் நெருப்பு உருவத்தின் அடியை நான் கண்டு பிடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து பூமியை குடைந்து சென்றார். தான் முடியை கண்டு வருவதாக கூறி பிரம்மன் அன்னப்பறவையின் வடிவம் கொண்டு ஒரு நொடிக்கு லட்சக்கணக்கான மைல் வேகத்துடன் மேலே பறந்து சென்றார். பாதாளங்களுக்கு அப்பால் சென்றும் விஷ்ணுவால் அடியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர் கீழ் நோக்கி பூமியை குடைந்து சென்று கொண்டிருந்தார். ஆனால் நெருப்பு ஒளியின் அடியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது சிவபெருமானின் செயலாகத்தான் இருக்கும் என்பதை அறிந்த விஷ்ணு தன்னால் அடியை கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி வந்தார்.
மேலே பறந்து முடியை காண்பதற்காக அன்னப்பறவையாக மாறி சென்ற பிரம்மன் பல ஆயிரம் ஆண்டுகளாக பறந்து சென்ற காரணத்தால் அவரது இறகுகள் உதிர தொடங்கின. அவரும் உண்மையை உணர தொடங்கினார். தன் தவறை அவர் உணரும் நேரத்தில் தாழம்பூ ஒன்று பிரம்மனை நோக்கி கீழே வந்து கொண்டு இருந்தது. அந்த தாழம்பூவை கையில் பிடித்த பிரம்மன், 'நீ எங்கிருந்து வருகிறாய்' என்று கேட்டார். அதற்கு தாழம்பூ, 'தான் சிவபெருமானின் முடியில் இருந்ததாகவும், தவறி கீழே விழுந்து விட்டதாகவும், 40 ஆயிரம் ஆண்டுகளாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும்' கூறியது.
தாழம்பூ, சிவபெருமான் முடியில் இருந்து வருவதாக கூறியதும், பிரம்மனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அவர், தாழம்பூவிடம் இந்த நெருப்பு உருவத்தில் முடியை கண்டுபிடிப்பதற்காக மேலே பறந்து வந்து கொண்டிருந்தேன். நான் சிவபெருமானின் முடியை கண்டு அதில் இருந்து உன்னை எடுத்து வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும் என்று கூறினார். இதற்கு முதலில் தாழம்பூ அஞ்சினாலும் பின்னர் ஒப்புக்கொண்டது.
உடனே பிரம்மன் வேகமாக கீழே வந்தார். அவர் திருமாலை பார்த்து, 'நான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டேன். மேலும் அதில் இருந்து தாழம்பூவை எடுத்து வந்தேன்' என்று கூறினார். தாழம்பூவும், 'ஆமாம்! பிரம்மன் சொல்வது உண்மைதான்' என்றது. அந்த நேரத்தில் நெருப்பு மலை வெடித்து பேரொலி கேட்டது. அந்த சத்தத்தால் மூவுலகமும் நடுங்கியது. வெடித்த நெருப்பு மலையில் இருந்து சிவபெருமான் புன்னகையுடன் தோன்றினார்.
பிரம்மன் பொய் கூறியதால் அவரை பார்த்து, 'பிரம்மனே! உனக்கு இனிமேல் பூமியில் கோவிலும் இல்லை. பூஜையும் இல்லை' என்றார். தாழம்பூவை பார்த்து, 'பொய்சாட்சி கூறிய தாழம்பூவே, இன்று முதல் நான் உன்னை சூடிக் கொள்ள மாட்டேன்' என்று கூறினார் சிவபெருமான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினார். பிரம்மனின் நிலை கண்டு மனம் இளகிய சிவன், 'பிரம்மனே! பூவுலகில் உள்ள அந்தணர்களுக்கு செய்கின்ற பூஜை, உன் பூஜையாக விளங்கும்' என்றார்.
அதன்பிறகு சிவபெருமான் பிரம்மனையும், விஷ்ணுவையும் பார்த்து, 'இன்று முதல் இந்த இடம் புனித தலமாக விளங்கும். இந்த ஒளிவடிவான மலை, சிறிய மலையாகி இங்கே நிற்கும். இந்த தலத்தில் பாவங்கள் நடக்காது. இதை சந்தேகப்படுபவர்களுக்கு முக்தி கிடைக்காது' என்று அருளாசி கூறினார். பிரம்மனும், திருமாலும் இந்த மலை மற்ற மலைகளைப் போலவே இருக்க வேண்டும். மலையின் உச்சியின் மீது எப்போதும் ஓர் ஒளி விளங்க வேண்டும் என்று வேண்டினர்.
அதற்கு சிவபெருமான், 'கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டும் மலையின் மீது ஒளி காட்டுவோம். இந்த ஒளியை காண்போர்க்கு துன்பங்கள் நீங்கும். இந்த ஒளியை கண்டு வணங்குபவரின் 21 தலைமுறைகளுக்கு முக்தி கிடைக்கும்' என்றார். அதன்படி தான் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் மகா தீப திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மாற்றங்களைப் பற்றி சிந்திக்கும் நாள். உடல் நலனில் கவனம் தேவை. பழைய நண்பர்ளை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். அலைபேசி மூலம் நல்ல தகவல் உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.
கடகம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் அகல செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
சிம்மம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளவும்.
கன்னி
கல்யாண முயற்சி கைகூடும் நாள். நிர்வாகத்திறமை பளிச்சிடும். ஆசையாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
பாக்கிகள் வசூலாகும் நாள். குடும்ப பிரச்சனை குறையும். பயணங்களால் பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
விருச்சிகம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் பொருளாதார நிலை உயரும்.
தனுசு
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். தாயின் உடல்நலம் சீராகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
மகரம்
நல்லவர்கள் தொடர்பால் நலம் காணும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும்.
கும்பம்
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். கடன்சுமை குறையும். பஞ்சாயத்துகள் சாதகமாக அமையும்.
மீனம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.






