search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "masi festival"

    • ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடை வீதி மாரியம்மன் கோவில் அருகில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், காமாட்சியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் வேடசந்தூர், ஆயக்குடி, காலப்பட்டி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இரவு 11 மணிக்கு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் பூசாரி தங்கவேல் (70) அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினார்.

    திருமண தடை, குழந்தைப்பேறு, கடன் பிரச்சினை, தொழிலில் நஷ்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக பூசாரியிடம் பக்தர்கள் அருள்வாக்கு பெற்றுச் சென்றனர்.

    இந்த கோவிலில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக பூரி படையலிடப்பட்டு வழிபாடு நடந்தது. இதற்காக கோவில் வளாகத்திலேயே மிகப்பெரிய வானலி வைக்கப்பட்டு பூரி தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பின்னர் அந்த பூரி படையலிடப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.
    • மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    பவானி:

    பவானி நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது செல்லாண்டி அம்மன், மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி தேர் திருவிழா மிக சிறப்பாக கொடியேற்றத்துடன் நடைபெறுவது வழக்கம்.

    செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் முடிவடைந்த நிலையில் தமிழக அரசு இந்து அறநிலைத்துறை அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கோவிலிலும் கும்பாபிஷேக பணிகள் தொடக்க விழா பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செல்லியாண்டி அம்மன் கோவில் வளாகத்தில் செல்லியாண்டி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் திருவிழா நடத்துவது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    அப்போது கட்டளைதாரர்கள், ஊர் பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு கோவில் திருப்பணி நடைபெறும் காரணத்தால் மாசி திருவிழா நடத்த வேண்டாம் என ஒரு மனதாக முடிவு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து பவானி நகரத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடி உடலில் சேறு பூசி பல்வேறு வகையான வேடங்களில் அணிந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் மாசி தேர் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பவானி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எல்லையம்மன் கோவில், வர்ணபுரம் சமயபுரம் மாரியம்மன் கோவில், மேற்குத்தெரு மாரியம்மன் கோவில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள மூலவருக்கு பக்தர்கள் மற்றும் கட்டளை தாரர்கள் கும்பாபிஷேக விழா குழுவினர் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    பவானி நகரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி செல்லியாண்டி அம்மன் மற்றும் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த மாசி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து பவானி நகரம் களை இழந்து காணப்பட்டது.

    • 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • 11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா கடந்த 14-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரத்தில் சுவாமி பல்வேறு வாகனம் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5-ம் திருவிழா வில் குடவருவாயில் தீபாரா தனையும், 7-ம்திருவிழாவில் காலையில் வெட்டி வேர் சப்பர பவனியும், மதியம் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.

    8-ம்திருவிழா அன்று அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்தில் வீதி உலாவும், மதியம் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலாவும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

    11-ம் திருவிழாவான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் தெய்வானை அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 12-ம் திருவிழாவான இன்று இரவு 7மணியளவில் சுவாமி அம்பாள் தனித்தனி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா.
    • பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

    நாகர்கோவில்:

    தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பாத யாத்திரையாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலையில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டனர்.

    காவடி ஊர்வலம், புஷ்ப காவடி, பன்னீர் காவடி, எண்ணெய் காவடி, வேல் காவடி, பறக்கும் காவடி என விதவிதமான காவடிகளுடன் பக்தர்கள் பயபக்தியுடன் புறப்பட்டனர். இரணியல் சுற்று வட்டார பகுதி, மார்த்தாண்டம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து காவடி ஊர்வலம் புறப்பட்டன.

    அந்த வகையில் மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, பறக்கும் காவடி புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றது.

    இதுபோல் வடக்கன் பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடி மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சென்று பின்னர் திரும்பி கோவில் வந்தடைந்தது.

    தொடர்ந்து அன்னதானமும், மாலை 4 மணிக்கு காவடிகள் வடக்கன்பாகம் தர்ம சாஸ்தா கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டது. மேலும் சேரமங்கலம் ஆழ்வார் சுவாமி கோவிலில் இருந்து பறக்கும் வேல்காவடி மற்றும் புஷ்பக்காவடிகள் சேரமங்கலம், படர்நிலம், பிள்ளையார்கோவில் மணவாளக்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றது.

    குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள், வேல் காவடிகள், குளச்சல் அண்ணா சிலை பகுதிக்கு வந்து அங்கிருந்து திங்கள் சந்தை வழியாக திருச்செந்தூர் சென்றன.

    மேலும் குளச்சல் புளியமூட்டு விளைமுத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 பெரிய காவடிகளும், 6 சிறுவர் காவடிகளும், சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்தபடியும் சென்றனர்.

    செக்காலத் தெரு முத்தாரம்மன் கோவிலில் இருந்து 6 அடி வேல் காவடி, காவடியும், கள்ளியடப்பு கோவிலில் இருந்து பறக்கும் காவடியும், நுழக்குடி சிவன் கோவில் இருந்து பறக்கும் காவடியும், மகாதேவர் கோவிலில் இருந்து பறக்கும் காவடியும் புறப்பட்டு சென்றன.

    • மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் ஓம் முருகா சரண கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

     தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

     நிகழ்ச்சியில் திருவாவடு துறை ஆதீனம் வேலப்ப தம்பி ரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசு ராஜா, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் கணேசன், சார்பு நீதிபதி வஷித்குமார்,ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்துப்பாண்டி நாடார், நகராட்சி துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவின் முக்கிய விழாவான 5-ம் திருவிழாவான 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடக்கிறது.

    7-ம் திருநாளான 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனை யும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.

    மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான 10-ம் திருநாளான 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

    11-ம் திருநாளான 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    • ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
    • 21-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னை, திருவொற்றி யூரில் உள்ள வடிவுடை யம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி திருவிழாவையொட்டி கோவிலில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணியளவில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் (15-ந்தேதி) இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாசி திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை சூரிய பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், மாலை 7.30 மணியளவில் சந்திர பிரபையில் உற்சவம், இரவு தியாகராஜ சுவாமி மாடவீதி உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் சந்திர சேகரர் சுவாமி திருத்தேர் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகர சுவாமி திரிபுரசுந்தரியுடன் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வருகிறார்.

    தொடர்ந்து 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கல்யாண சுந்தரர்சுவாமி திருக் கல்யாண உற்சவமும், பிற் பகல் 2 மணியளவில் 63 நாயன்மார்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாடவீதி உற்சவமும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் சேவை உற்சவம் நடக்கிறது.

    • 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    • அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதியில் 13-ம் ஆண்டு மாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 10-ந்தேதி காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு உச்சிபடி மற்றும் பால்தர்மமும், மாலை 5 மணிக்கு சுவாமிதோப்பில் இருந்து முந்திரி பதம் மற்றும் கடம்பன்குளத்தில் இருந்து திருஏடு எடுத்துவருதல், நம்பியான் விளையில் இருந்து மேளதாளம் முழங்க பதியை வந்தடைந்தது.

    இரவு 7 மணிக்கு அன்னதானம், 9 மணிக்கு அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு மூலம் சிறுமிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. நேற்று இரவு 8 மணிக்கு அய்யா வழி அருளிசை வழிபாடு அய்யாவின் அருளிசை புலவர் சிவசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இரவு அன்னதர்மம் வழங்கப்பட்டது. இன்று மாலை 4 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3 நாட்களும் இரவு 8 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும். நிகழ்ச்சிகளை வள்ளியூர் அய்யா வைகுண்டர் வளர்பதி அன்பு கொடி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் கயத்தார்-கடம்பூர் ரோட்டில் பிரசித்தி பெற்ற கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் மாசி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது.
    • பூஜைகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், குத்தாலிங்கம் வெங்கடேஷ் ஆகியோர் செய்தார்கள்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தார்-கடம்பூர் ரோட்டில் பிரசித்தி பெற்ற கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் மாசி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, சங்கல்பம், கும்பபூஜை, கணபதி ஹோமம், கண்டி கதிர்காம மூர்த்தி மூல மந்திர ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து உச்சி காலபூஜை இரவு 8 மணிக்கு அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து பால் குடம் தீர்த்த குடம் எடுத்து கயத்தார்-கடம்பூர் ரோட்டில் அமைந்துள்ள ஆலயம் வந்து இரவு 11 மணிக்கு 21 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், பால், தேன், சந்தனம், பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சோடனை தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், குத்தாலிங்கம் வெங்கடேஷ் ஆகியோர் செய்தார்கள்.

    இதில் கதிர்காம மூர்த்தி வேல்ராஜ் சுவாமிநாதன் திரவியம், சீனிவாசப் பெருமாள், முத்துக்குமார், விளக்கு பூஜை குழுவினர் மகாலட்சுமி, செல்வலட்சுமி மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இவ்விழா ஏற்பாடுகளை கண்டி கதிர்காம மூர்த்தி கோவில் குழுவினர் செய்தார்கள்

    • பொதுபிச்சி அம்மன் கோவில் மாசி திருவிழா நடந்தது.
    • இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை அருகே உள்ள மேலநெற்குப்பை தேவர்நகர் பகுதியில் பொதுபிச்சி அம்மன் கிழவன்-கிழவி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் "ராவாத்தா" என்னும் மாசி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இங்குள்ள செட்டி ஊரணி குளத்தில் மண் எடுத்து கிழவன்- கிழவி சிலைகள் செய்து காப்பு கட்டி, அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பெண்கள் கும்மியடித்து வழிபடுவார்கள். விழாவின் 10-ம் நாளில் இப்பகுதியில் பிறந்த பெண்கள் திருமணம் முடித்து எந்த ஊர்களுக்கு சென்றிருந்தாலும் விழாவிற்கு வந்து கலந்துகொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

    விழாவின் 10ம் நாளான நேற்று இரவு அனைவரும் கூடி கும்மியடித்து கிழவன்- கிழவி கோவில் முன்பாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் பொங்கலை சுவாமிக்கு படையலிட்டனர். தொடர்ந்து தொட்டி சேலை கட்டி கோவிலை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கோவிலுக்கு வழங்கப்பட்ட பொருட்களை ஏலம்விடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கருடசேவை நிகழ்ச்சியும், 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி (சனிக்கிழமை) இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) மாசி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
    • மார்ச் 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 7.42 மணி முதல் 8.42 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது. இதனை தொடர்ந்து விழா நடக்கும் 10 நாட்களும் காலை, மாலையிலும் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் 6-ம் நாளான 2-ந்தேதி சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடக்கிறது. அன்று காலை கோவில் வளாகத்தில் ஞான சம்பந்தருக்கு பாலூட்டி உற்சவமும், 3-ந்தேதி காலை பிக்ஷாடணர் புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மார்ச் 4-ந்தேதி (சனிக்கி ழமை) நடக்கிறது. காலை 8.02 மணி முதல் 8.53 மணிக்குள் பிரியாவிடையு டன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நடை பெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    அன்று சனிப்பிரதோஷம் என்பதால் மாலை 3 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வரு கிறார்கள். மறுநாள் 5-ந்தேதி காலையில் தேரோட்டம்ந டக்கிறது.

    10-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 11-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் உள்ள ராஜா சுவாமி கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தொடர்ந்து சாமி உலா வருதல் நிகழ்ச்சி தினசரி நடந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறில் உள்ள ராஜா சுவாமி கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமி உலா வருதல் நிகழ்ச்சி தினசரி நடந்தது.

    நேற்று காலை திருக்கோவில் பூஜையும், மாலை காவடி பூஜையும், மூலவர் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ராஜா சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ராஜா சாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    மாலை திருத்தேர் உலா நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு கொடி இறக்கமும், பாலிகை ராஜா வாய்க்காலில் சேர்த்தல் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் குழு, கிருத்திகை கட்டளை குழு மற்றும் கோவில் குடி பாட்டு மக்கள் செய்திருந்தனர்.

    ×