search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா
    X

    இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மாசி பெருந்திருவிழா

    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
    • மார்ச் 4-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    மதுரை

    மதுரை மேலமாசிவீதியில் உள்ள பிரசித்திபெற்ற இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி பெருந்திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 7.42 மணி முதல் 8.42 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடி யேற்றம் நடக்கிறது. இதனை தொடர்ந்து விழா நடக்கும் 10 நாட்களும் காலை, மாலையிலும் சப்பரம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    விழாவின் 6-ம் நாளான 2-ந்தேதி சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நடக்கிறது. அன்று காலை கோவில் வளாகத்தில் ஞான சம்பந்தருக்கு பாலூட்டி உற்சவமும், 3-ந்தேதி காலை பிக்ஷாடணர் புறப்பாடு நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான திருக்கல்யாணம் மார்ச் 4-ந்தேதி (சனிக்கி ழமை) நடக்கிறது. காலை 8.02 மணி முதல் 8.53 மணிக்குள் பிரியாவிடையு டன் நன்மை தருவாருக்கும், மத்தியபுரி அம்மனுக்கும் நடை பெறும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பார்கள்.

    அன்று சனிப்பிரதோஷம் என்பதால் மாலை 3 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், வழிபாடும் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு யானை, புஷ்ப வாகனத்தில் சுவாமி -அம்பாள் திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா வரு கிறார்கள். மறுநாள் 5-ந்தேதி காலையில் தேரோட்டம்ந டக்கிறது.

    10-ந்தேதி தீர்த்தவாரி உற்சவம் மற்றும் கொடியிறக்கமும், 11-ந்தேதி உற்சவ சாந்தி, பைரவர் பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×