என் மலர்
நீங்கள் தேடியது "valliyur"
- இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது.
- ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரது மனைவி ருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
பாலசுந்தர் காவல்கிணறு இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோர் வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
அர்ஜூனன் கடந்த மாதம் இறந்து விட்டார். இதனால் ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு பால சுந்தர் தினமும் சாப்பாடு கொண்டு கொடுப்பது வழக்கம்.
அதன்படி இன்று காலை சாப்பாடு கொடுப்பதற்காக பாலசுந்தர் சென்றபோது வெளிக்கதவு பூட்டிக்கிடந்தது. உடனே பாலசுந்தர் பலமுறை தனது தாயை அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் வீட்டின் பின்புறம் சென்றபோது அங்கு பின்கதவு திறந்து கிடந்தது.
பின்வாசல் அருகே ருக்மணி தலையில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் 7 பவுன் செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 7 பவுன் எடை கொண்ட வளையல்கள் என 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுந்தர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. வெங்கடேஷ், இன்ஸ்பெக்டர் நவீன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ருக்மணி தனியாக இருப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ருக்மணி அணிந்திருந்த கம்மல் மற்றும் மூக்குத்தி அப்படியே இருந்தது. எனவே மர்மநபர்கள் கழுத்து, கையில் இருந்த நகைகளை பறித்தபோது ருக்மணி தடுத்திருக்கலாம் என்றும், அப்போது கொள்ளையர்கள் ருக்மணியை தள்ளி விட்டு நகையை பறித்துக் கொண்டு ஓடியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. ஆனால் அதில் லாக்கர் இருந்ததால் அதற்குள் வைக்கப்பட்டிருந்த நகை தப்பி உள்ளது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
- திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
வள்ளியூர்:
வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பஸ் நிலையம் மூடப்பட்டு அனைத்து பேருந்துகளும் பஸ்நிலையத்திற்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையோரம் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி பாதுகாப்பின்றி காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வள்ளியூர் நகர செயலாளர் கலைமுருகன், ராதாபுரம் வட்டாரச் செயலாளர் சேதுராமலிங்கம், மணியன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் காத்திருப்பதற்கு மழை, வெயிலில் பயணிகளை பாதிக்காதவாறு பெரிய அளவில் மேற்கூரையுடன் கூடிய காத்திருப்பு கூடாரம் அமைக்கவேண்டும். மேலும் பஸ்நிலைய கட்டுமானபணி குறித்த திட்டமதிப்பீடு, வேலையின் கால நிர்ணயம், ஒப்பந்தகாரர் விபரம் உள்ளிட்ட அறிவிப்பு கள் அடங்கிய பலகை அமைக்கவேண்டும். இது தவிர திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து . இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
- அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் 4 வழிச்சாலை கேசவனேரி ரோட்டை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48). இவர் வீட்டின் முன் பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
திருட்டு
நேற்று இரவு இசக்கிமுத்து வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இன்று காலை சூப்பர் மார்க்கெட் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கு வைக்க்பபட்டிருந்த ரூ. 7 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக அவர் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் முகமூடி அணிந்த ஒரு வாலிபர் நிதானமாக நாற்காலியில் அமர்ந்தவாறு பணத்தை திருடிச் செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறினார்.
வள்ளியூர்:
வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பிரதான சாலையை விரிவுபடுத்தப்போவதாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் இரவோடு இரவாக சாலையை ராட்சத எந்திரம் மூலம் ேதாண்டினர்.
அதனைத் தொடர்ந்து சாலைப்பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தார் சாலை தோண்டப்பட்டதை அடுத்து சாலையில் தூசி கிளம்பி வாகனங்கள் செல்வது தெரியாத அளவுக்கு காணப்படுகிறது.
மேலும் வயதானவர்கள் இந்த சாலையை கடந்து செல்வதால் நுரையீரல் பிரச்சினை, சுவாச கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
திருச்செந்தூர் செல்லும் முக்கியமான சாலையில் தூசி அதிக அளவில் கிளம்பி விடுவதால் அருகிலுள்ள சிறுகுழந்தைகள் பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கடைகள் மற்றும் உணவு விடுதிகளில் தூசிபடிவதால் வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
இது தொடர்பாக தே.மு.தி.க மாவட்ட செயலாளர் விஜிவேலாயுதம் கூறியதாவது:-
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் அவசர அவசரமாக திருச்செந்தூர் சாலையை விரிவாக்கம் என்ற பெயரில் உடைத்துள்ளனர். ஆனால் இதுவரையில் சாலை அமைக்கும் பணி ஏதும் தொடங்கப்படவில்லை. சாலையை தோண்டி உடைத்துள்ளதால் வாகனங்கள் செல்லும் போது தூசி கிளம்பி சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது.
இந்த சாலையையொட்டி உள்ள வியாபாரிகள், பாதசாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக பதில் தெரிவித்து வருகின்றனர். உடைக்கப்பட்ட சாலையை இன்னும் ஒருவார காலத்தில் சரிசெய்யாவிட்டால் தே.மு.தி.க கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டது
- வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது
வள்ளியூர்:
வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்கள், பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயை கண்டறிந்து, குறிப்பாக முதல் கட்டம், 2-வது கட்ட மார்பக புற்றுநோயை கண்டறிந்து அதற்கான ஆலோசனையும் மருந்துகளும் வழங்கினர். சுமார் 22 பெண்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தார்கள். வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவரும் மேக்ரோ காலேஜ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் பொன் தங்கதுரை தலைமையில் வள்ளியூர் இன்னர் வீல் கிளப் தலைவர் ஜென்சி ராஜேஷ் முன்னிலையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த விழாவில் வள்ளியூர் சென்ரல் ரோட்டரி சங்கத்தின் கம்யூனிட்டி சர்வீஸ் சேர்மன் டாக்டர் சங்கரன் அவர்களும் முன்னாள் மாவட்ட ஆளுநர் நவமணி, முன்னாள் துணை ஆளுநர் முத்துகிருஷ்ணன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், செயலர் சுதிர்ந்தன், டாக்டர்கள் ஜேக்கப், ஜெய்கணேஷ், முன்னாள் தலைவர் பிரபா நவமணி, முன்னாள் தலைவர் வேல்முருகன், டாக்டர் தாமரைச்செல்வி கலந்து கொண்டனர். செயலர் சுகர்கந்தன் நன்றி கூறினார்.
- நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலி விளையில் பாலாஜி அண்ட் கோ நிறுவனமும், பிரேசில் நிறுவனம் சேர்ந்து ஆசியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட 4.2 மெகாவாட் காற்றாலையை நிறுவியது.
- இந்திய நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்டி உள்ளது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே வடலி விளையில் பாலாஜி அண்ட் கோ நிறுவனமும், பிரேசில் நிறுவனம் சேர்ந்து ஆசியாவிலேயே அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட 4.2 மெகாவாட் காற்றாலையை நிறுவியது.
இந்த காற்றாலையை ஒரு சில வாரங்களுக்கு முன்பு மத்திய எரிசக்தி மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பகவநத் குபா பார்வையிட்டு சென்றார். அதனைத் தொடர்ந்து காற்றாலை மத்திய மின்சார துறை ஆணையக் கூடுதல் செயலாளர் பி.கே.ஆர்யா பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
தற்போது இந்த காற்றாலை நிறுவி சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில் பிரதமர் மோடி, பாலாஜி அன்ட் கோ உரிமையாளரும் பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளருமான பாலகிருஷ்ணனுக்கு வாழ்த்து மடல் அனுப்பி உள்ளார்.
அதில், தங்களுக்கும் தங்களது நிறுவனத்திற்கும் என்னுடைய இதயம் கனிந்த வணக்கமும் வாழ்த்துக்களும் தங்களது நிறுவனம் நிறுவிய காற்றாலை மூலம் இந்திய நாட்டின் வளர்ச்சியை நிலைநாட்டி உள்ளது.
2047-ம் ஆண்டு நூறாவது சுதந்திர தினம் கொண்டாடுவதற்கு முன் உங்களது நிறுவனமும் வளர்ச்சி செழிப்பு அடைய இறைவனை வணங்குகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
- முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
- திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுபொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழா வருகிற 29-ந் தேதி (செவ்வா ய்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. சூட்டுபொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து மேருமண்டபத்தில் உள்ள முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.
தேரோட்டம்
குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக டிசம்பர் 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை கிரிவல தேரோட்டம் நடைபெறும். தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டியம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வருவார்கள். இந்த தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்கின்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் விசேட அன்னதானம் வழங்கப்படுகிறது. 4-ந்தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் ஸ்ரீ மஹாமேரு தியான மண்டபத்தில் முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. 6-ந்தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நடைபெறும். 7-ந்தேதி குருஜெயந்தி, 8-ந்தேதி காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம், அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அடியவர்களுக்கு விசேட அன்னதானம் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி 10 நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
- வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள சூட்டுபொத்தையடி வாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
இதில் ஆயிரகணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருவிழா நாட்களின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் லலிதகலா மந்திர் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை பெரியபுராணம் நாட்டிய நாடகம் நடைபெற்றது.
வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு குருபூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி சூட்டு பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி குருஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.
8-ந் தேதி பவுர்ணமி கிரிவல வழிபாடும் இரவு விளக்குபூஜை வழிபாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- தெற்கு வள்ளியூர் ஊராட்சி செம்பாடு, அச்சம்பாடு ஊராட்சி அச்சம்பாடு ஊர்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
- தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளம் ஊராட்சி புதுமனை பள்ளிவாசல் தெருவில் நூலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி 100 கே.வி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியனில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
லெவிஞ்சிபுரம் ஊராட்சி கைலாசநாதபுரம், விஸ்வநாதபுரம், ஜெய மாதாபுரம். செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரம், இறுக்கன் துறை ஊராட்சி கொத்தங்குளம், கீழ்குளம். தெற்கு வள்ளியூர் ஊராட்சி செம்பாடு, அச்சம்பாடு ஊராட்சி அச்சம்பாடு ஊர்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.
தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6லட்சம் மதிப்பீட்டில் லெவிஞ்சி புரம் ஊராட்சி விஸ்வநாத புரத்தில் பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டப்பட்டது.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளம் ஊராட்சி புதுமனை பள்ளிவாசல் தெருவில் நூலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி 100 கே.வி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.
செம்பாடு கிராமத்தில் அவர் பேசியதாவது:-
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற்றுக் கொள்ள பதிவு செய்ய வேண்டிய அவசியம் மேலும் முத்துராஜபுரம், மகிழ்ச்சிபுரம் கிராமத்திற்கு விரைவில் புதிய ரேஷன் கடை அமைத்து கொடுப்பேன், கடம்பன்குளம், செம்பாடு கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி பழுதடைந்து உள்ளதால் தற்போது வாடகை கட்டிடத்தில் நடத்தப்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும், தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற அடிப்படை தேவைகள் நலத்திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா, தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசிரெகுபால், துணை தலைவர் அன்பு லீலா, வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராதா, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், ஆ.திருமாலாபுரம் ஊராட்சி தலைவர் இந்திரா, வார்டு உறுப்பினர் அன்பரசி மற்றும் துணைச் செயலாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முத்துகிருஷ்ண சுவாமிகளின் 109-வது குருபூஜையையொட்டி கிரிவல தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
- 6-ந் தேதி மாலை சூட்டுப்பொத்தை மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டு பொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது.
தேரோட்டம்
இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிகளின் 109-வது குருபூஜையையொட்டி கிரிவல தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சூட்டு பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்ட பத்தில் உள்ள ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது. ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5.30 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மேளவாத்தியங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரதநாட்டி யம், கோலாட்டங்களுடன் தேரோட்டம் நடைபெற்றது. சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். இத்தேரோட்டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாளை குருபூஜை
நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீபுரம் மஹாமேரு தியான மண்டபத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி மாலை 5.30 மணிக்கு சூட்டுப்பொத்தை மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் தேதி குருஜெயந்தியும், 8-ந் காலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் அதை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 11 முதல் 1 மணி வரை அன்னதானம் நடைபெறுகிறது .விழா ஏற்பாடுகளை ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.
- வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
- போலீசார் தேடி வந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த தொழிலாளியான முருகன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வள்ளியூர்:
வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 13-ந்தேதி இரவு இவர் தனது வீட்டு முன்பு காரை விட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது கார் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக காட்சி யளித்தது. இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த தொழிலாளியான முருகன்(50) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதன்பின்னரே காருக்கு தீ வைத்ததற்கான விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது.
- கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சூட்டுபொத்தை மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் திரு விழாவை முன்னிட்டு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் அறக்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி திருக்கார்த்திகை தீபம் ஏற்றினார்.
பின்னர் மாதாஜி அருளாசீர் வழங்கினார். இதில் திரளான பக்தர் கள் பங்கேற்று வழி பட்டனர். இரவு கிருஷணாஞ்சலி அகாடமி சார்பில் பரதநாட்டியம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு குரு ஜெயந்தி ஆராதனை, அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி 10-ம் நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.






