search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Ration Shops"

    • தெற்கு வள்ளியூர் ஊராட்சி செம்பாடு, அச்சம்பாடு ஊராட்சி அச்சம்பாடு ஊர்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளம் ஊராட்சி புதுமனை பள்ளிவாசல் தெருவில் நூலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி 100 கே.வி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் யூனியனில் புதிய கிளை ரேஷன் கடைகளை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

    லெவிஞ்சிபுரம் ஊராட்சி கைலாசநாதபுரம், விஸ்வநாதபுரம், ஜெய மாதாபுரம். செட்டிகுளம் ஊராட்சி சிவசக்திபுரம், இறுக்கன் துறை ஊராட்சி கொத்தங்குளம், கீழ்குளம். தெற்கு வள்ளியூர் ஊராட்சி செம்பாடு, அச்சம்பாடு ஊராட்சி அச்சம்பாடு ஊர்களில் புதிய கிளை ரேஷன் கடைகளை திறந்து வைத்தார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6லட்சம் மதிப்பீட்டில் லெவிஞ்சி புரம் ஊராட்சி விஸ்வநாத புரத்தில் பயணிகள் நிழற்குடை அடிக்கல் நாட்டப்பட்டது.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் செட்டிகுளம் ஊராட்சி புதுமனை பள்ளிவாசல் தெருவில் நூலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி 100 கே.வி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார்.

    செம்பாடு கிராமத்தில் அவர் பேசியதாவது:-

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பெற்றுக் கொள்ள பதிவு செய்ய வேண்டிய அவசியம் மேலும் முத்துராஜபுரம், மகிழ்ச்சிபுரம் கிராமத்திற்கு விரைவில் புதிய ரேஷன் கடை அமைத்து கொடுப்பேன், கடம்பன்குளம், செம்பாடு கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளி பழுதடைந்து உள்ளதால் தற்போது வாடகை கட்டிடத்தில் நடத்தப்பட்டு வரும் மழலையர் பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்படும், தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற அடிப்படை தேவைகள் நலத்திட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் செல்வராஜா, தெற்கு வள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தரசிரெகுபால், துணை தலைவர் அன்பு லீலா, வள்ளியூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராதா, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், ஆ.திருமாலாபுரம் ஊராட்சி தலைவர் இந்திரா, வார்டு உறுப்பினர் அன்பரசி மற்றும் துணைச் செயலாளர் நம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×