search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker"

    விருதுநகர் அருகே நடந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் செங்கமலம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் போர்மேனாக பணியாற்றி வந்தார். 

    சம்பவத்தன்று ஆலையில் உள்ள கழிவு பட்டாசுகளை எரித்தார். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமி தீக்காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுரை வைகையாற்றில் மூழ்கி கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம், வைகை வடகரையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி.  சில நாட்களாக இவரை காணவில்லை. இந்த நிலையில் வைகை ஆற்றுக்குள் நாகராஜனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக மனைவி சங்கீதா விளக்குத்தூண் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், துளசிராம் தெருவைச் சேர்ந்தவர் குமரன் (வயது 42), கூலித் தொழிலாளி. நேற்று மாலை இவர் முனியாண்டி புரம் தனியார் கல்லூரி முதல் மாடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தும் வேலையில் ஈடுபட்டார். 

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே குமரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மீனாம்பாள்புரம், இயேசுநாதர் தெருவைச் சேர்ந்த பாலாஜி மனைவி பாண்டிச்செல்வி (40). இவருக்கு குடும்ப பிரச்சினை காரணமாக வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அவர் தத்தனேரி சுடுகாட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். 

    அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    ×