என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker"

    • வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.
    • குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் கருங்கல் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

    இன்று, பாறைகளைத் தகர்க்க வைக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்வால் பாறைகள் உருண்டு விழுந்தன.

    இந்த விபத்தின் போது குவாரியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

    மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  

    • ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.
    • சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து சிறுத்தையிடம் துணிச்சலுடன் போராடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தௌர்பூர் வனப்பகுதிக்கு உட்பட்ட ஜுக்னுபூர் பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒரு சிறுத்தை புகுந்தது.

    அப்போது மிஹிலால் என்ற 35 வயது தொழிலாளி தனது உயிரைப் பணயம் வைத்து சிறுத்தையுடன் கடுமையாகப் போராடினார். சிறுத்தையை கீழே தள்ளி அதன் வாயை இறுக்கமாகப் பிடிக்க முயன்றார்.

    மிஹிலால் சிறுத்தையை எதிர்கொள்வதைக் கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் உடனடியாக அதன் மீது செங்கல் மற்றும் கற்களால் தாக்கினர்.

    இறுதியில் சிறுத்தை அருகிலுள்ள விவசாய வயல்களுக்குள் தப்பி ஓடியது. தகவல் கிடைத்ததும், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுத்தைக்கு மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

    சிறுத்தை தாக்குதலில் மிஹிலால் மற்றும் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில்
    • “எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன்.

    சத்தீஸ்ரில் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை பார்த்த இருவர் உரிமையாளரால் கொடூரமாக நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தானை அபிஷேக் பாம்பி மற்றும் வினோத் பாம்பி என்ற இருவர் ஒப்பந்த அடிப்படையில் சத்தீஸ்கரின் காப்ரபட்டியில் சோட்டு குர்ஜார் என்பவரின் ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சோட்டு குர்ஜார் மற்றும் அவரது உதவியாளர் முகேஷ் சர்மா ஆகியோர், அபிஷேக் மற்றும் வினோத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறி தாக்கினர்.

    இருவரையும் நிர்வாணமாக்கி, நகங்களை பிடுங்கி, மின்சாரத்தை உடம்பில் செலுத்தி கொடூரமான முறையில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், அரைநிர்வாண நிலையில் ஒருவர் மீது மின்சாரம் பாய்ச்சப்படுவது பதிவாகியுள்ளது.

    தாக்குதலிலிருந்து இருவரும் ராஜஸ்தானில் தங்கள் சொந்த ஊருக்கு தப்பிச் சென்று, அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பாதிக்கப்பட்ட வினோத் கூறுகையில், "எனது வாகனத்திற்கான EMI கட்ட ரூ .20,000 சம்பள முன்பணம் கேட்டேன். அதை அவர் மறுத்ததால், நான் வேலையை விட்டு நிற்கேன் என்றதும், அவர் என்னை தாக்கத் தொடங்கினார்.என்னுடன் சேர்த்து வினோத்தையும் தாக்கினர்" என கூறினார்.

    இந்த சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.   

    • பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார்.
    • ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கும்மரகுண்டாவை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 50). இவரது மனைவி சாரதா.

    சுப்பிரமணியத்திற்கு 20 வயதாக இருந்தபோது முதல் முறையாக பாம்பு கடித்தது. அதன் பிறகு கூலி வேலைக்கு செல்லும் போதெல்லாம் வருடத்திற்கு 4 முதல் 5 தடவை பாம்புகள் கடித்தன.

    ஒவ்வொரு முறையும் பாம்பு கடிக்கும் போதும் உயிர் பிழைப்போமா என்று கவலையடைந்தார். ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருவதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

    பாம்பு கடிக்கு பயந்து சுப்பிரமணியம் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார். அங்கு கட்டிட வேலை செய்தார். பெங்களூரில் கட்டிட வேலை செய்யும் போதும் சுப்பிரமணியத்தை பாம்புகள் கடித்தன.

    இதனால் விரத்தி அடைந்த சுப்பிரமணியம் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பாம்புகள் விரட்டி விரட்டி கடிப்பதால் தனக்கு நாகதோஷம் இருக்கலாம் என நினைத்தார். இதனால் ராகு, கேது மற்றும் பரிகார பூஜைகளை செய்தார். இருப்பினும் பாம்புகள் அவரை விடவில்லை.

    சொந்த ஊருக்கு திரும்பிய சுப்பிரமணியம் அங்குள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன் தினம் கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு இருந்தபோது மீண்டும் ஒரு பாம்பு வந்து சுப்பிரமணியத்தை கடித்தது. அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு சுப்பிரமணியம் தற்போது குணம் அடைந்து வருகிறார்.

    இதுகுறித்து அவரது மனைவி சாரதா கூறுகையில்:-

    எனது கணவரை டஜன் கணக்கில் பாம்புகள் கடித்துள்ளன. ஒவ்வொரு தடவை பாம்பு கடிக்கும் போதும் வெளியில் கடன் வாங்கி சிகிச்சை பெறுவதும் மீண்டும் கூலி வேலை செய்து கடனை அடைப்பதே எங்கள் வாழ்க்கையில் சுமையாக மாறிவிட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இனியாவது பாம்பு கடியில் இருந்து தப்பிக்க முடியுமா? என்ற கலக்கத்தில் சுப்பிரமணியின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • ஜெயக்குமார் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    பெரம்பலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு உட்பட்ட வதிஷ்டபுரம் பாட்டை தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 45). இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ராஜாமணி என்ற மனைவியும், ரேவதி என்ற மகளும், குணா என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திட்டக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் வெள்ளாற்றில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளாற்றில் இடுப்பளவு தண்ணீர் ஓடுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு வெளியில் சென்ற ஜெயக்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே அவர் வெள்ளாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த குன்னம் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து இறந்து போன வாலிபர் குடிபோதையில் இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
    • அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டி காந்தி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பழனிச்சாமி (வயது 38). கூலி தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி (35) என்ற மனைவியும், 2 பெண், 1 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள பழனிச்சாமி வழக்கம்போல் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.மீண்டும் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். சரஸ்வதி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த பழனிச்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு சிறிய பாட்டிலில் பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    வீட்டின் வெளியே பழனிச்சாமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்த சரஸ்வதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

    அங்கு பழனிச்சாமி சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்த தகவலின் பேரில் வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தில் கட்டிட தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் அய்யனார். (வயது 30) கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அய்யனாருக்கு போன் செய்து தான் அதிக போதையில் இருப்பதால் தன்னை வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறினார்.

    அதனை ஏற்று மணிகண்டனை அழைத்து வர அய்யனார் நோணாங்குப்பத்தில் உள்ள சாராயக்கடைக்கு சென்றார்.

    அங்கு மணிகண்டனிடம் நோணாங்குப்பத்தை சேர்ந்த வர்மா என்பவர் தகராறு செய்து கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த அய்யனார் தகராறை சமாதானம் செய்து மணிகண்டனை அங்கிருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    இந்த நிலையில்  அய்யனாரும் மணிகண்டனும் சாராயம் குடிக்க நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்றனர்.

    அப்போது அங்கிருந்த வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் அய்யனாரை வழிமறித்து தடியால் சரமாரியாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அய்யனார் மயங்கி கீழே சாய்ந்தார்.

    அப்போது வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் பீர் பாட்டிலை எடுத்து வந்து எங்களிடம் பிரச்சினை செய்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என அய்யனாரை மிரட்டிவிட்டு சென்றனர். இந்த தாக்குதலில் தலையில் காயமடைந்த அய்யனாரை மணிகண்டன் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் இது குறித்து அய்யனார் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் கூலி தொழிலாளி
    • தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் ஆதிமூல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் சின்னகோவிலான்குளம் அருகே உள்ள தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் ஒரு கோவில் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கிடந்தார். தகவல் அறிந்த சின்னகோவிலான்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி.
    • படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது28). தொழிலாளி. இவரது மனைவி மாரியம்மாள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனை விக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன் தினம் செல்வம், தனது மனைவி மாரியம்மாளிடம் தகராறு செய்தார். இதைப்பார்த்த ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முப்பிடாதி (27) என்பவர் செல்வத்தை தட்டிக் கேட்டார்.

    இதில் செல்வதிற்கும், முப்பிடாதிக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். நேற்று இரவில் செல்வம் களக்காடு-சேரன்மகாதேவி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த முப்பிடாதிக்கும், செல்வத்திற்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முப்புடாதி, செல்வத்தை கத்தியால் குத்தினார். பின்னர் தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முப்புடாதியை கைது செய்தனர்.

    • வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
    • மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த

    நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.

    தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கில் தொழிலாளி பிணமாக தொங்கினார்
    • குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வடக்கலூர் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் (வயது28) இவரது மனைவி பவானி. இவருக்கு திருமணம் மாகி ஒரு வருடம் ஆகின்றன. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன விரக்தியில் இருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் செந்தில் சம்பவத்தன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துசெந்திலை யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிடடிருப்பார்களா அல்லது தற்கொலை செய்து இருப்பார என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி.
    • தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த ராஜாகுமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்களே என தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.

    ×