search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்-2 பேருக்கு வலைவீச்சு
    X

    களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்-2 பேருக்கு வலைவீச்சு

    • களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி.
    • தாக்குதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மாவடி புதூரை சேர்ந்தவர் ராஜாகுமார் (வயது 41). கூலி தொழிலாளி. மாவடியை சேர்ந்தவர்கள் சிவலிங்கம், அருண். இவர்கள் இருவரும் மாவடி-டோனாவூர் சாலையில் அதிக வேகத்தில் விபத்தை ஏற்படுத்துவது போல், மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த ராஜாகுமார் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்கிறீர்களே என தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவலிங்கமும், அருணும் சேர்ந்து ராஜாகுமாரை தாக்கினர். இதுபற்றி அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சிவலிங்கம், அருணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×