என் மலர்
நீங்கள் தேடியது "வைரல்"
- மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- பாதுகாப்பு கோரி கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.
2025 ஜனவரியில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்றது. இங்கு பாசிமணி, வளையல் விற்றுக் கொண்டிருந்த இளம்பெண் மோனலிசா போஸ்லே தனது இயற்கையான மாநிறத்துக்கான வைரலானார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் எளிய குடும்பத்தை சேர்ந்த மோனாசிலாவுக்கு அதன் பின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.
அவர் தொடர்ந்து மலையாள படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கேரளாவின் அருமனுார் கோவிலில் நேற்று மோனலிசா தனது காதலர் பர்மான் கானை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் இந்து சடங்குகளின்படி நடைபெற்றது. திருமணத்தில் கேரள அமைச்சர் உட்பட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
இதற்கு முன்னர், தனது தந்தை தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வேறொருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயல்வதாவும் தனக்கு பாதுகாப்பு கோரியும் கேரள போலீசில் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் திருமணத்தின் பின் இன்று கணவர் பர்மான் கானுடன் மோனலிசா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எங்களது திருமணம் இந்து முறைப்படிதான் நடந்தது, இது லவ் ஜிஹாத் அல்ல" என்று மோனலிசா கூறினார்.
இருவருமே தங்களது மதங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரது கணவர் பர்மேன் கான் தெரிவித்தார்.
- இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான்.
- அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டார்.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார்.
கடந்த 2019 ஜூலை மாதம் கைதான அவர் நியூ யார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதே ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி தனது சிறையில் தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி இந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி, அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெயர் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீனின் தீவில் ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
மார்ச் 2006-ல் கரீபியன் தீவான செயின்ட் தாமஸில் நடைபெற்ற ஒரு அறிவியல் மாநாட்டில் ஹாக்கிங் கலந்து கொண்டார். குவாண்டம் அண்டவியல் குறித்து அவர் அங்கு உரையாற்றினார்.
இந்த நிகழ்விற்கு நிதியுதவி அளித்து தொகுத்து வழங்கியது ஜெப்ரி எப்ஸ்டீன் தான் என்று கூறப்படுகிறது.
அதேநேரம் எப்ஸ்டீனின் தனித்தீவான 'லிட்டில் செயின்ட் ஜேம்ஸ்' க்கும்ஹாக்கிங் சென்றதாக ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் இருந்து வெளியிடப்பட்ட புகைப்படத்தில், ஹாக்கிங் ஒரு ஓய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதும், அவருக்கு இருபுறமும் பிகினி அணிந்த இரண்டு பெண்கள் இருப்பதும் தெரிகிறது.
அவர்களில் ஒரு பெண் ஹாக்கிங்கின் கையில் காக்டெய்ல் பானத்தை வைத்திருக்கிறார். இது அறிவியல் மாநாடு நடந்த செயின்ட் தாமஸ் தீவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாக்கிங்கின் குடும்பப் பிரதிநிதி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் ஹாக்கிங்கை பராமரிக்கும் செவிலியர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஹாக்கிங்கின் உடல்நிலையை கவனிக்க எப்போதும் அவருடன் வருபவர்கள்.
ALS நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹாக்கிங், 24 மணிநேர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தவர். சக்கர நாற்காலி மற்றும் குரல் தொகுப்பான் உதவியின்றி அவரால் எதையும் செய்ய முடியாது.
எனவே, அவர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டார் என்பது முற்றிலும் தவறானது.
இந்தப் புகைப்படங்கள் அவரது அறிவியல் பயணத்தின் ஒரு பகுதி மட்டுமே தவிர, இதில் எந்தத் தவாறான நோக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா கிஃப்ரே, ஹாக்கிங் அந்தத் தீவில் நடந்த ஒரு 'மைனர் பார்ட்டியில்' கலந்துகொண்டதாகக் கூறியிருந்தார். இதன் காரணமாகவே எப்ஸ்டீன் கோப்புகளில் ஹாக்கிங்கின் பெயர் இடம்பெற்றுள்ளது.
- மாட்டிறைச்சியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
- பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது
சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி'.
கேரளாவில் 32,000 இந்துப் பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மத மாற்றம் செய்யப்பட்டு, பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக இந்த படம் சித்தரித்தது.
வெளியான சமயத்தில் நாடு முழுவதும் இப்படம் பெரும் பதற்றத்தை இப்படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து மத்திய அரசு வழங்கும் 2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் 2 தேசிய விருதுகள் இப்படத்துக்கு வழங்கப்பட்டதும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் 2 ஆம் பாகம் உருவாகி உள்ளது. காமக்யா நாராயண் சிங் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி வெளியாக உள்ளது.
முதல் பாகத்தினைப் போலவே டிரெய்லரில் சர்ச்சை வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்து பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மாற்றுவதும், இந்துப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மாட்டிறைச்சி ஊட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
கேரளாவின் உணவு கலாச்சாரத்தில் 'பீப்-பரோட்டா' என்பது அனைத்து மதத்தினரிடையேயும் பிரபலமானது. அங்கு யாரும் யாருக்கும் கட்டாயப்படுத்தி உணவளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி சமூக ஊடகங்களில் கேரள மக்கள் இந்தப் படத்தின் காட்சியை விமர்சித்து வருகின்றனர்.
கேரள சுற்றுலாத் துறை "No Beef With Anyone" (யாருடனும் எங்களுக்குப் பகை இல்லை) என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டரைப் பகிர்ந்துள்ளது.
சிபிஐ(எம்) கட்சியின் இளைஞர் அமைப்பான DYFI மற்றும் மாணவர் அமைப்பான SFI ஆகியவை மாநிலம் முழுவதும் 'பீப் திருவிழா' நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் பீப் கறியும் பரோட்டாவும் பொதுமக்களுக்குப் பரிமாறப்பட்டன.
கேரளாவின் மதச்சார்பற்ற பிம்பத்தைச் சிதைக்கவும், மத வெறுப்பைத் தூண்டவும் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கேரளா மத நல்லிணக்கம் மற்றும் சட்ட ஒழுங்கிற்கு முன்மாதிரியான மாநிலம். இத்தகைய பொய்யான பரப்புரைகளை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால், "பொய்க் கதைகளை உருவாக்கி கேரளாவை அவமானப்படுத்தும் முயற்சி இது" என்று கூறியுள்ளார்.
மேலும், படத்தின் முதல் பாகத்திற்கு தேசிய விருது வழங்கி பாஜக இத்தகைய படங்களை ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், இது கருத்து சுதந்திரம் என்றும், முதல்வர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார்.
கேரளாவின் கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தின் மீது இந்தப் படம் தாக்குதல் நடத்துவதாக பெரும்பான்மையானோர் கருதுகின்றனர்.
இதற்கிடையே இந்த படத்துக்கு வாங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
- ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நபர் ஒருவர் இணையத்தில் ஆபாச வீடியோ தேடும்போது அவர் தனது காதலியுடன் அந்தரங்கமாக இருந்த வீடியோ அந்த தளத்தில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அந்த வீடியோ, அந்தத் தளத்தில் நேரலையாகவும் ஒளிபரப்பப்பட்டிருப்பது அவருக்கு மேலும் அதிர்ச்சியை அளித்தது.
முன்பு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அந்த காட்சிகள் அவர்களுக்கு தெரியாமல் ஸ்விச் போர்டில் மறைத்து வைக்கப்பட்ட 'ஸ்பை கேமரா' மூலம் படமாக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளித்தார். விசாரணையில், சீனா முழுவதும் பல ஹோட்டல் அறைகளில் இது போன்ற ரகசிய கேமராக்களைப் பொருத்தி, அதன் மூலம் தம்பதிகள் மற்றும் காதலர்களின் அந்தரங்க வீடியோக்கள் படமாக்கப்பட்டு கள்ளச்சந்தையில் ஆபாச இணையதளங்களுக்கு விற்கும் மிகப்பெரிய கும்பல் செயல்படுவது கண்டுபிடிக்கபட்டது.
மேலும், இந்தக் கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகள், கட்டணம் செலுத்திப் பார்க்கும் சந்தாதாரர்களுக்குச் சிறப்புச் செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான தம்பதிகள் மற்றும் தனிநபர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே இந்தக் குற்றச் செயலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு சீன காவல்துறை விசாரணையில் இறங்கி உள்ளது.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பென்குயின் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, உணவு கிடைக்கும் கடல் பகுதியை நோக்கிச் செல்லாமல், ஆளில்லாத பனி மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்கிறது.
இந்த வீடியோ 2007-ம் ஆண்டு பிரபல ஜெர்மானிய இயக்குனர் வெர்னர் ஹெர்சாக் எடுத்த "Encounters at the End of the World" என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஏன்?
பொதுவாக பென்குயின்கள் கூட்டமாகத் தான் வாழும். ஆனால், இந்த ஒரு பென்குயின் மட்டும் தனது திசையை மாற்றி, சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைகளை நோக்கி எதற்காகச் செல்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.
இது ஒரு அசாதாரணமான நடத்தை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடத்தையை மனித வாழ்க்கையுடன் ஒப்பிட்டு தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தங்கள் சொந்த ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கினர்.
அதாவது, கூட்டத்தோடு இல்லாமல், எதிர்காலம் புதிராக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையில் செல்லும் நபர்களோடு பென்குயினின் நடத்தையை ஒப்பிடுகின்றனர். மேலும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லாமல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று புரியாத புதிராக இருப்பவர்களின் அடையாளமாகவும் அந்த பென்குயின் மாறியுள்ளது.
கூட்டத்தோடு இருந்தால் உணவு கிடைக்கும், ஆனால் ஒன்றுமே இல்லாத மலைகளை நோக்கி சென்றால் மரணமே மிஞ்சும் என்ற இயற்கையின் விதியை எதிர்த்து அந்த பென்குயின் நடைபோடுவதில் நிச்சயம் ஏதோ இருக்கிறது.
- அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
- இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்த கோலு யாதவ் இளைஞர் அண்மையில் ரெயில் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். ரெயிலில் பயணித்த சில நபர்கள் அவரைத் தவறான நோக்கத்துடன் பார்த்ததாகவும், சங்கடமான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்துள்ளார்.
இதனைக் கண்ட கோலு யாதவ் உடனடியாக அப் பெண்ணுக்குப் பாதுகாப்புக் கரம் நீட்டினார்.
அவரது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அந்தப் பெண்ணைத் தன்னுடன் பக்சரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
வீடு திரும்பியதும், அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் இளைஞர் தெரிவித்தார்.
அவரது மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர்கள், அந்த அனாதைப் பெண்ணுக்குத் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்கச் சம்மதித்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலைமையை முழுமையாகப் புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் முழுச் சம்மதத்துடன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்.
மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
- இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
- இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இளம்பெண் ஒருவரின் 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்து, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.
இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் ரூ. 5 லட்சம் வருவாயை அப்பெண் ஈட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
- உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.
இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.
அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது
அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.
இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது.
- 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?
- இங்கே என்ன நடக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான 'ரெடிட்' இல் ஒரு மாணவரின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.
மாலை 4 மணியளவில் அவரது பதிவில், 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர். மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு இடைப்பட்டு சரியாக 3 மணி நேரம் கழித்து 7 மணியளவில் அதே பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர். இதைதொடர்ந்து அந்த பதிவு தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவமைத்துள்ளார்.
- 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.
இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவதே பகல் கனவாக மாறி வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவைமைத்துள்ள இந்த டாய்லெட், வரும் 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.

இந்த டாய்லெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பளபளவென மின்னும் தங்க டாய்லெட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
- 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
- பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.
அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
- ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ``67'' ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. 67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
இதற்கு காரணம் 67 என்பது ஒரு எண்ணாக அல்லாமல் குறியீடாக இருப்பதே ஆகும். அண்மை காலங்களாக சமூக வலைத்தளங்களில் கஜென் ஆல்பா சிறுவர் சிறுமிகள் 67 என்ற எண்ணை அதிகம் பதிவிடுகின்றனர்.
2010 and 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா ஆவர். அவர்களுக்கு 67 என்பது உற்சாகத்தை வெளிப்படுத்ததும் ஒரு குறியீட்டு வழியாக மாறியுள்ளது. டிக்டாககில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.
இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிரெண்டின் படி, இதை 'அறுபத்தி ஏழு' என்று உச்சரிக்காமல், 'சிக்ஸ்-செவன்' என்றுதான் சொல்ல வேண்டும்.
67 எப்படி குறியீடாக மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பயன்பாடு சூழலுக்கு சூழல் மாறுபடும் என்று Dictionary.com தெரிவித்துள்ளது.
இதன் பயன்பாடு, அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் 'Doot Doot (6 7)' என்ற பாடலில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பள்ளிகளில் வகுப்பில் சில மாணவர்கள் ஆறு என்று சொல்லும்போது, மற்றவர்கள் ஏழு என்று கத்துகின்றனர். ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு 67 என்பது இளைய தலைமுறையின் குறியீடாக மாறியுள்ளது.






