search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi Murmu"

    • இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது. நள்ளிரவு முதலே வெற்றிக் கொண்டாட்டங்கள் கலை கட்டிவரும் நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் இந்திய அணி வீரர்களுக்கு மோடி வெளியிட்டுள்ள வீடியோ வாழ்த்து செய்தியில், 'ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பாக இந்த பிரமாண்ட வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நாள் உங்களில் அபாரமான ஆட்டத்தால் 1.40 கோடி இந்தியர்களை பெருமைப்பட வைத்துளீர்கள். உலகக்கோப்பையை வென்றதன் மூலம் ஒவ்வொரு இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் உள்ள மக்களின் மனதையும் நீங்கள் வென்றுளீர்கள். இந்த சிறப்பான தருணம் என்றும் நினைவுகூறப்டும். இது சாதாரணமான விஷயம் அல்ல. ஆட்டத்தின் ஒவ்வொரு பந்திலும் நீங்கள் வெற்றியை நோக்கி முன்னேறியுளீர்கள். எனது சார்பாக உங்களுக்கு அளப்பரிய வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று காலை இந்திய வீரர்களுக்கு தொலைபேசியிலும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் மோடி.

    இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது வாழ்த்துச் செய்தியில், 'டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடினமான சூழல்களில் தளராத மன உறுதியுடன் ஆட்டம் முழுதும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இது ஒரு சிறந்த வெற்றி' என்று தெரிவித்துள்ளார்.

    எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், 'இந்திய அணி தனது தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. சூர்யா, என்ன ஒரு அருமையான கேட்ச், ரோகித், இது உங்கள் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி, ராகுல், இனி உங்களின் வழிகாட்டுதலை இந்திய அணி நிச்சயம் மிஸ் செய்யும், மென் இன் ப்ளூ [இந்திய வீரர்கள்] நீங்கள் நாட்டை பெருமையடைய செய்துள்ளீர்கள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொடருடன் டி20 யில் ஓய்வை அறிவித்துள்ள விராட் கோலிக்கும் நீங்கள் வாழ்த்து தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது வாழ்த்து செய்தியில், 'இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள், குறிப்பாக விராட் கோலி, அக்சர் படேல், அர்ஸ்தீப் சிங் தனித்துவமாக விளையாடினார்கள். ஒவ்வொரு இந்தியனும் இந்த வெற்றியை நினைத்து பெருமைப் படுகின்றனர். உங்களின் சாதனைகள் என்றென்றும் கொண்டாடப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்து செய்தியில், 'இந்தியாவுக்கு ஒரு சிறப்பான தருணம் இது, தொடர் முழுவதும் அணி வீரர்கள் குழுவாக தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தேசம் உங்களின் இந்த வரலாற்று வெற்றியால் பூரிக்கிறது' என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது வாழ்த்து செய்தியில், 'இந்த வெற்றி வருங்கால கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும். மொத்த நாடும் இந்த வெற்றியால் உச்சத்துக்கு சென்றுள்ளது. அணி வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு எனது வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார். மேலும் மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ , தொழிலதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

    • சுற்றுலா வேன் அல்க்நந்தா ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் என்ற இடத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த சுற்றுலா வேனில் பத்ரிநாத் கோவிலுக்கு 17 பேர் சென்றனர்.

    அலக்நந்தா ஆற்றுப்பகுதியில் சுற்றுலா வேன் சென்றபோது பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், காயமடைந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    • இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார்.
    • எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது.

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்துஇன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெறுகிறார். முன்னதாக 1952, 1957,1962 ஆகிய வருடங்களில் நேரு மூன்று முறை தொடர்ந்து பிரதமரானார்.

     

    இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அஹமத் அபிஃப், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உட்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

     

    மேலும் ரஜினிகாந்த் உட்பட இந்திய திரை பிரபலங்களும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது. மொத்தம் 8000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது. 

    இன்றைய நிகழ்வில் பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இன்று பதியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    • மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
    • இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.

    நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
    • தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார்.

    புதுடெல்லி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.

    அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து தெலுங்கானா-புதுச்சேரி கவர்னர் பொறுப்புகளை ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதா கிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரு மாநிலங்களுக்கும் புதிய கவர்னர் நியமனம் செய்யும் வரை அவர் இந்த பொறுப்புகளை வகிப்பார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் பதவி விலகியதை தொடர்ந்து அதே பதவியை கவனிக்கும் பொறுப்பு மற்றொரு தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார்.
    • பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் குஷ்பு நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

    • ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
    • ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்த திரவுபதி முர்முவுக்கு வாழ்த்துக்கள். பொது சேவையில் அவரது அயராத அர்ப்பணிப்பும், முன்னேற்றத்திற்கான இடைவிடாத நாட்டமும் மிகவும் ஊக்கமளிக்கிறது. அவரது பல்வேறு சாதனைகள் அவரது தலைமையின் உறுதியான தாக்கத்தை பிரதிபலிக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்பு மந்திரிகளை டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது அதன்படி, வருகிற 21-ந் தேதி மந்திரிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மந்திரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த நிலையில், டெல்லிக்கு செல்லும் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்டு இருந்தார். அதன்படி, வருகிற 21-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையாவை சந்தித்து பேசுவதற்கு ஜனாதிபதி அலுவலகம் அனுமதி வழங்கி இருக்கிறது. இதன்மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சித்தராமையா சந்தித்து பேசுவது உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் பிரதமர் மோடியை சித்தராமையா சந்தித்து பேசவும் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பிரதமரை, முதல்-மந்திரி சித்தராமையா சந்தித்து பேசுவதற்கு இன்னும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.
    • இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவரி, நான் ஈ, கத்தி, தங்கமகன், தெறி, 24 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாகவும் வலம் வரும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் நடித்து வருகிறார்.


    வருண் தவான் -திரெளபதி முர்மு- சமந்தா

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் சமந்தா தசை அழற்சி நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், படப்பிடிப்புப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குஷி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சமந்தா மீண்டும் இணைந்தார். இதையடுத்து 'குஷி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமந்தா நடித்த சிட்டாடல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


    சிட்டாடல் படக்குழுவினர்

    இந்நிலையில், நடிகை சமந்தா செர்பியாவில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்துள்ளார். இவருடன் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சிட்டாடல் படக்குழுவினர் இருந்தனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார்.
    • விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

    சென்னை :

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் என்று கூறினார்.

    அதன்படி, தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் 3 கட்டிடங்களை கொண்ட இந்த மருத்துவமனை, ஆயிரம் படுக்கை வசதிகளுடன் ரூ.230 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த மருத்துவமனையை ஜூன் 3-ந்தேதியன்று கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்முவை வைத்து திறப்பதற்கு அரசு திட்டமிட்டது. அதற்காக கடந்த ஏப்ரல் 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை அவர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

    அதைத்தொடர்ந்து ஜூன் 5-ந்தேதியன்று நடக்கும் மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் ஜனாதிபதி பங்கேற்பார் என்று கூறப்பட்டது.

    எனவே இந்த விழாவுக்கான அழைப்பிதழ் அச்சடிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 5-ந்தேதி சென்னைக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வரவில்லை என்ற தகவல் வெளியானது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் அவர் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதால் மருத்துவமனை திறப்பு விழாவை வேறு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ஜனாதிபதி அலுவலக தரப்பில் கூறப்பட்டது.

    அதன் அடிப்படையில் விழா தள்ளிவைக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் சென்னைக்கு ஜூன் 15-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை அவர் ஜூன் 15-ந்தேதி திறந்து வைக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
    • திரவுபதி முர்மு 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ராஞ்சி :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக நேற்று ஜார்கண்ட் சென்றார். இதற்காக திேயாகர் விமான நிலையத்தில் சென்று இறங்கிய அவரை மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள பாபா பைத்யநாதர் கோவிலுக்கு சென்றார். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த புகழ்பெற்ற கோவிலில், வேத மந்திரங்கள் முழங்க முர்மு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

    முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் வாரியம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முர்முவின் வருகையை முன்னிட்டு கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    ஜார்கண்டில் நாளை வரை இருக்கும் ஜனாதிபதி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக தலைநகர் ராஞ்சியில் நேற்று மாலையில் ஐகோர்ட்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

    ரூ.550 கோடியில் 165 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இந்த ஐகோர்ட்டு வளாகம் நாட்டின் மிகப்பெரிய ஐகோர்ட்டு வளாகங்களில் ஒன்றாகும்.

    இதற்காக தியோகரில் இருந்து ராஞ்சி சென்றடைந்த திரவுபதி முர்முவை, அங்குள்ள பிர்சா முண்டா விமான நிலையத்தில், மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் அங்கிருந்து பிர்சா சவுக் சென்ற ஜனாதிபதி, அங்கு பழங்குடியின தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தியாகி ஆல்பர்ட் எக்காவுக்கும் அஞ்சலி செலுத்தினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (வியாழக்கிழமை) குன்றி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக மத்திய பழங்குடி நலத்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்கள் மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். அத்துடன் ராஞ்சி ஐ.ஐ.டி. பட்டமளிப்பு விழாவிலும் மாலையில் பங்கேற்கிறார்.

    ஜனாதிபதியாக 2-வது முறையாக ஜார்கண்ட் சென்றுள்ள திரவுபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகின்றன. அவர் கடந்த 2015-21-ம் ஆண்டுகளில் ஜார்கண்டில் கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    ×