என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draupadi Murmu"

    • திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
    • 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதி :

    ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.

    ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார்.

    திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.

    திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் பாலாஜி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலகம் இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது.

    டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வைப் ஏற்படுத்துவதற்கான சிறந்த முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையம், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளது.

    கருணையை வளர்ப்பதுதான் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முக்கியத் திறவுகோல். பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவ்வாறே நீங்களும் அவர்களை நடத்துங்கள் என்ற தங்க விதியே, மனித உரிமைகள் தொடர்பான கருத்தை அழகாக தொகுத்து வழங்குகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக, அசாதாரண வானிலையால் உலகம் அதிக எண்ணிக்கையிலான இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் என்ற ஆபத்து நமது கதவுகளைத் தட்டுகிறது. சுற்றுச்சூழல் சீரழிவுக்கு ஏழை நாடுகளில் உள்ள மக்கள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். பருவநிலை மாற்றத்தின் சவால் மிகப் பெரியது. அது உரிமைகளை மறுவரையறை செய்ய நம்மைத் தூண்டுகிறது.

    ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு மனிதர்களைப் போலவே சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன என்று கூறியுள்ளது. இயற்கையை கண்ணியத்துடன் நடத்த நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அது தார்மீகக் கடமை மட்டுமல்ல, நம் வாழ்வுக்கும் அவசியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
    • தமிழக கவர்னரை திரும்பப்பெறக்கோரி மனு அளிக்க உள்ளனர்.

    சென்னை :

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த 9-ந் தேதி அன்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தார்.

    இதையடுத்து அவருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது, கவர்னர் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் சட்டசபை உரையில் சில பகுதிகளை தவிர்த்தது ஏன் என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் 6 அம்சங்களை சுட்டிக்காட்டி விளக்கம் அளிக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக, கவர்னர் மாளிகை வட்டார தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று தமிழக அரசு சார்பில் 6 பக்க தகவல் வெளியானது.

    இதற்கிடையே சட்டசபையில் கவர்னர் நடந்துகொண்ட விதத்தை கண்டித்து அவர் மீது ஜனாதிபதியிடம் புகார் அளிக்க தி.மு.க. எம்.பி.க்கள் முடிவு செய்திருந்தனர். அதன்படி ஜனாதிபதியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அளித்திருந்தார்.

    இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க தி.மு.க. எம்.பி.க்களுக்கு இன்று (வியாழக்கிழமை) காலை 11.45 மணியளவில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. எம்.பி.க்களுடன் ஜனாதிபதியை சந்திப்பதற்காக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களும் இந்த சந்திப்பில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அவர்கள் ஜனாதிபதியிடம், தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்டவிதம் குறித்தும், அவரை திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மனு அளிக்க உள்ளனர்.

    • நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை கொண்டாடுகிறது.
    • இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்.

    புதுடெல்லி :

    நாடு தனது 74-வது குடியரசு தினத்தை நாளை (26-ந்தேதி) கோலாகலமாக கொண்டாடுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) உரை ஆற்றுகிறார்.

    இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை நேற்று விடுத்த அறிக்கையில், "நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி 25-ந்தேதி இரவு 7 மணிக்கு உரை ஆற்றுகிறார். இதை அகில இந்திய வானொலி தனது அனைத்து அலைவரிசையிலும் நேரடியாக ஒலிபரப்புகிறது. இதே போன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. இந்தியிலான இந்த உரையைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் வரும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தூர்தர்ஷன் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் ஜனாதிபதியின் உரையை ஒளிபரப்பும். அகில இந்திய வானொலியிலும் இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை ஒலிபரப்பாகிறது. ஜனாதிபதி முர்மு பதவி ஏற்ற பிறகு குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    • பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.
    • ஒரு தாயின் முயற்சியால் ஒரு குடும்பம், சிறந்த குடும்பமாக மாறும்.

    புதுடெல்லி :

    டெல்லி அருகே உள்ள குருகிராம் பிரம்மகுமாரிகள் அமைப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் 'மதிப்பீடுகள் சார்ந்த சமூகத்தின் அடிப்படை, பெண்கள்' என்ற தேசிய மாநாட்டையும் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரம்மகுமாரிகள் அமைப்பின் சேவைகளை பாராட்டினார். மேலும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய சமூகத்தில் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளை வடிவமைப்பதில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பெண்களுக்கு சம வாய்ப்புகள் கிடைத்தால், அவர்கள் ஆண்களுக்கு இணையாக, சில சமயங்களில் அவர்களை விடவும் எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

    பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. எனினும் அவர்களில் பலரும் உயர்ந்த பதவிகளை அடைய முடிவதில்லை. தனியார் துறைகளின் நடுநிலை நிர்வாகத்தில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பெண்களின் பங்கேற்பு குறைந்துள்ளது.

    இதற்கு பெண்களின் குடும்ப பொறுப்புகளும் ஒரு காரணம் ஆகும். பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தை போல வீட்டிலும் பல்வேறு பொறுப்புகள் உள்ளன.

    ஆனால் குழந்தைகளை வளர்ப்பதும், வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பும் பெண்களுக்கானது என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். பெண்கள் தங்கள் தொழிலில் எந்த இடையூறும் இல்லாமல் உயர்ந்த நிலையை அடைவதற்கு குடும்பத்தினரின் ஆதரவும் இருக்க வேண்டும்.

    பெண்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் மட்டுமே குடும்பங்கள் அதிகாரம் பெறும். அதிகாரம் பெற்ற குடும்பங்கள் அதிகாரம் பெற்ற சமுதாயத்தையும், அதிகாரம் பெற்ற தேசத்தையும் உருவாக்கும்.

    பொருளாதார முன்னேற்றம் மற்றும் செல்வ செழிப்பு நமக்கு பொருள் சார்ந்த மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால் நிலையான அமைதியை வழங்காது. ஆன்மிக வாழ்க்கை தெய்வீக பேரின்பத்துக்கான கதவுகளைத் திறக்கிறது.

    தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல மனிதர்களாக மாற ஊக்குவிக்க வேண்டும். ஒரு தாய் தனது குழந்தைகளிடையே ஒருபோதும் பாகுபாடு காட்டுவதில்லை. குடும்பத்தில் முதல் ஆசிரியராகவும் அவரே இருக்கிறார்.

    அவர், தனது குழந்தையை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குழந்தைக்கு பல்வேறு மதிப்பீடுகளையும் புகுத்துகிறார். எனவே, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான மதிப்பீடுகளுடன் கல்வி கற்பிக்க வேண்டும்.

    ஒரு தாயின் முயற்சியால் ஒரு குடும்பம், சிறந்த குடும்பமாக மாறும். அப்படி ஒவ்வொரு குடும்பமும் சிறந்த குடும்பமாக மாறினால், சமூகத்தின் இயல்பு தானாகவே மாறும். நமது சமூகம் மதிப்பீடுகள் அடிப்படையிலான சமூகமாக மாறும்.

    இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

    • இன்று மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது.
    • 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மதுரை :

    திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறார்.

    2 நாள் பயணமாக வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அவரது பயண விவரம் வருமாறு:-

    தமிழக சுற்றுப்பயணத்துக்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நாளை காலை 8.45 மணி அளவில் திரவுபதி முர்மு புறப்படுகிறார். மதுரை விமான நிலையத்துக்கு பகல் 11.45 மணி அளவில் வந்து சேருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அங்கிருந்து காரில் புறப்பட்டு, 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலை சென்றடைகிறார். பூரண கும்ப மரியாதையுடன் கோவில் சார்பில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்பட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். சுமார் 1 மணி நேரம் கோவிலில் இருக்கிறார்.

    பின்னர் கோவிலில் இருந்து பிற்பகலில் மீண்டும் விமான நிலையம் புறப்படுகிறார். மதுைரயில் இருந்து விமானத்தில் கோவை செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை விமான நிலைய பணியாளர்களுக்கும், மீனாட்சி அம்மன் கோவில் பணியாளர்களுக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    கோவிலை பொறுத்தவரை அர்ச்சகர்கள், பூரண கும்ப மரியாதை அளிப்பவர்கள், மேள-தாளம் வாசிப்பவர்கள், ஓதுவார்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று காலை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.

    முன்ஏற்பாடாக ஜனாதிபதி நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று நடக்க இருக்கிறது. பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் முதல் அனைவரும் இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

    இதற்காக காலை 11.45 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து ஒத்திகை வாகன அணிவகுப்பு தொடங்குகிறது. வரும் வழித்தடத்தில் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்தி இந்த ஒத்திக்கை பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை நகரம் உச்சக்கட்ட பாதுகாப்பில் இருந்து வருகிறது.

    கோவை ஈஷா யோகா மையத்தில், மகா சிவராத்திரி விழா நாளை (சனிக்கிழமை) மாலை, 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது. அங்கு ஆதியோகி சிலை மற்றும் தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.

    விழாவில், தலைமை விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். இதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு மதுரையில் இருந்து நாளை மாலை தனிவிமானத்தில் புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

    அங்கிருந்து அவர், கார் மூலம் தொண்டாமுத்தூர் சாலை வழியாக ஈஷா யோகா மையத்துக்கு மாலை 6 மணிக்கு செல்கிறார். அன்று இரவு, மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 9.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து அங்கு தங்குகிறார்.

    நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    இந்த நிகழ்ச்சி குறித்து வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் கூறும்போது, வெலிங்டன் ராணுவ மையத்தில் ஜனாதிபதி முர்மு கலந்து கொண்டு ராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார். மேலும் போரில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுதூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சி காலை 10 மணிமுதல் 12 மணிவரை நடைபெறுகிறது. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானநிலையம் சென்று டெல்லி திரும்புகிறார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளனர். ஜனாதிபதி செல்லும் பாதைகள் குறித்து திட்டமிடப்பட்டு உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் கோவைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) மாலை போலீசாரின் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. ஜனாதிபதி வருகையையொட்டி ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்குவோர் குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஜனாதிபதி பாதுகாப்புக்கான சிறப்பு போலீஸ் சூப்பிரண்டு சுவாமிநாதன் நேற்று கோவை வந்தார். அவர் ஜனாதிபதி செல்லும் அனைத்து வழிக ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர், கூடுதலாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.
    • பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    அமிர்தசரஸ் :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒரு நாள் பயணமாக பஞ்சாப் சென்றார். இதற்காக விமானம் மூலம் அமிர்தசரஸ் சென்ற அவர், அங்குள்ள பொற்கோவிலில் வழிபாடு செய்தார். மேலும் அங்கு சிறிது நேரம் அமர்ந்து கீர்த்தனை நிகழ்ச்சியிலும் பங்கெடுத்தார்.

    ஜனாதிபதியுடன் முதல்-மந்திரி பகவந்த் சிங், சிரோமணி குருத்பாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹஜிந்தர் சிங் தாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

    முன்னதாக அமிர்தசரஸ் விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், மத்திய மந்திரி சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா உள்பட பலர் வரவேற்றனர்.

    பொற்கோவிலில் வழிபட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு பின்னர் ஜாலியன் வாலாபாக், துர்கையனா கோவில் உள்ளிட்ட இடங்களுக்கும் சென்றார்.

    ஜனாதிபதி வருகையையொட்டி அமிர்தசரஸ் உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.
    • கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார்.

    திருவனந்தபுரம் :

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 16-ந்தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார். அதன்படி 16-ந்தேதி அன்று மதியம் 1.30 மணிக்கு கொச்சி வருகிறார். அங்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் போர் கப்பலை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஐ.என்.எஸ். துரோனாச்சார்யா போர்க்கப்பலில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    அங்கிருந்து திருவனந்தபுரம் வரும் அவர் இரவு திருவனந்தபுரத்தில் ஓய்வு எடுக்கிறார். மறுநாள்(17-ந்தேதி) காலை 9.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் அமிர்தானந்தமயி மடத்துக்கு சென்று மாதா அமிர்தானந்தமயி தேவியை சந்தித்து ஆசி பெறுகிறார்.

    பின்னர் திருவனந்தபுரம் திரும்பும் அவர், மதியம் கவடியாரில் நடைபெறும் பெண்கள் விழாவில் கலந்து கொள்கிறார். இதையடுத்து பிற்பகலில் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

    • பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதி காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
    • உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற வளாகம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வருகிற 28-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மோடி திறந்து வைப்பதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. அத்துடன், பாராளுமன்ற திறப்பு விழா நடைபெறும் தேதியும் காங்கிரசை எரிச்சல் அடைய வைத்துள்ளது. அந்த தினம் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த நாளை தேர்வு செய்தது தேசத்தை கட்டமைத்த தலைவர்களுக்கு அவமானம் என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

    "புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல" என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    இதே கருத்தை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் ட்வீட்டை பகிர்ந்துள்ள அவர், 'ஜனாதிபதி நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, அரசியலமைப்புச் சட்டம், நெறிமுறைகள் மற்றும் பாராளுமன்ற அவைகளின் கண்ணியத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என கூறியுள்ளார்.

    மேலும், அரசியல் ஆதாயம் மற்றும் விளம்பரம் தேடும் நோக்கத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உலக அளவில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றும் கெலாட் சுட்டிக்காட்டி உள்ளார்.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது என சுதிப் பந்தோபாத்யாய் கூறி உள்ளார்.
    • ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    கொல்கத்தா:

    டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.

    'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

    குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் சுதிப் பந்தோபாத்யாய் இதுபற்றி கூறுகையில், "மே 28ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். சுதந்திர தினத்திலோ அல்லது குடியரசு தினத்திலோ அல்லது மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ இந்த விழா நடந்திருக்க வேண்டும். சாவர்க்கரின் பிறந்தநாளில் இதை செய்திருக்கக் கூடாது" என்றார்.

    பாராளுமன்றம் என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல, பழைய மரபுகள், முன்னுதாரணங்கள் மற்றும் ஜனநாயக அடித்தளம் ஆகியவற்றை கொண்டு நிறுவப்பட்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
    • கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். பிரதமர் அல்ல, என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். 'ஜனாதிபதிதான் நாட்டின் அரசியலமைப்புத் தலைவர். எனவே, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைப்பதே முறையானதாக இருக்கும்' என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். குறிப்பாக சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் அறிவித்தன. திமுகவும் விழாவை புறக்கணிப்பதாக திமுக தரப்பில் அக்கட்சியின் எம்.பி திருச்சி சிவா இன்று அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பிலும் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

    இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    • சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. அத்துடன், சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெறுவதால், எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தி உளள்து.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், திமுக, விசிக, மதிமுக, தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய பாராளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு, கடும் அவமதிப்பு மட்டுமின்றி, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டறிக்கையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி கையெழுத்திடவில்லை. அதேசமயம் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளது.

    நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.

    இந்நிலையில், திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முன்பும் பாராளுமன்ற வளாகத்தில் கட்டிடங்களை பிரதமர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்றும், இல்லாத பிரச்சினையை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    'மக்களவை சபாநாயகர் தான் பாராளுமன்றத்தின் பொறுப்பாளர், அவர்தான் பிரதமரை அழைத்துள்ளார். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரலாற்று நிகழ்வு. ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வரலாற்று நிகழ்வு நடக்கிறது' என்றும் ஜோஷி தெரிவித்தார்.

    ×