என் மலர்
நீங்கள் தேடியது "திரௌபதி முர்மு"
- 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
- பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.
அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.
இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.
இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
- கருப்பு புடவை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர்!
- இருமுடி கட்டி, 18 படிகள் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பெற்றார் முர்மு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலக பிரசித்திப் பெற்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நேற்று (22.10.25) இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம் குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ஒருவர், இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்குமுன் குடியரசு முன்னாள் தலைவர் விவி கிரி, ஆளுநராக இருந்த காலத்தில்தான் சபரிமலை சென்றுள்ளார். இந்நிலையில், இருமுடி கட்டி, 18 படிகள் ஏறி சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் திரவுபதி முர்மு!
இருமுடிக்கட்டை தலையில் சுமந்துசென்ற திரவுபதி முர்மு, பதினெட்டுப்படி தாண்டி, சன்னிதானத்தில் சமர்ப்பித்தார். அவருடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகளும் இருமுடி கட்டுகளை சுமந்து சென்று சன்னிதானத்தில் சமர்பித்தனர். தொடர்ந்து குடியரசுத் தலைவரின் இருமுடி கட்டுகள் கருவறைக்குள் எற்றுக்கொள்ளப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீபாராதனையை குடியரசுத் தலைவர் தொட்டு வணங்கியதுடன், கோயிலை வலம் வந்து மீண்டும் சாமி தரிசனம் செய்தார்.

இணையத்தில் வைரலாகிவரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் சபரிமலைப் புகைப்படம்
திரவுபதி முர்மு யார்?
இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக ஜூலை 25, 2022-ல் பதவியேற்றவர் திரவுபதி முர்மு. பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர், பிரதிபா பாட்டிலுக்கு பின் பதவி வகிக்கும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவராவார். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் குடியரசுத் தலைவரும் இவர்தான். முன்னதாக 2015 முதல் 2021 வரை ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் , 2000 முதல் 2009 வரை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் முர்மு பணியாற்றினார். ராம்நாத் கோவிந்திற்கு பிறகு ஜூன் 2022 இல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு முர்முவை பரிந்துரைத்தது.
- இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
- தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது
இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ பயணங்களுக்காக வாங்கும் புதிய BMW காருக்கு வரிகளில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.3.66 கோடி மதிப்புள்ள இந்த குண்டு துளைக்காத வாகனத்தின் மீது IGST மற்றும் இழப்பீட்டு செஸ் வரியை தள்ளுபடி செய்ய GST கவுன்சில் முடிவெடுத்தது.
வழக்கமாக, இதுபோன்ற வெளிநாட்டு கார்களை இறக்குமதி செய்வதற்கு சுங்க வரி மற்றும் கூடுதல் செஸ் ஆகியவற்றுடன் சேர்த்து 28 சதவீத IGST விதிக்கப்படும்.
இருப்பினும், இந்த வாகனம் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானது என்று கருதிய GST கவுன்சில், ஜனாதிபதியின் வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல, மாறாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சிறப்பு காரணத்தின் அடிப்படையில் விலக்கு அளிக்க ஒப்புக்கொண்டது.
இதன் மூலம், ஜனாதிபதியின் செயலகம் இந்த வாகனத்தை எந்த வரி சுமையும் இல்லாமல் வாங்கும்.
தற்போது, ஜனாதிபதி முர்மு பயணங்களுக்கு Mercedes-Benz S600 Pullman Guard Limousine பயன்படுத்தப்படுகிறது. இப்போது அந்த இடத்தை BMW செடான் நிரப்ப உள்ளது.
- மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
- கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அகில இந்திய பேச்சு மற்றும் கேட்டல் நிறுவனத்தின் (AIISH) வைர விழா நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று மைசூரு வந்தார்.
மைசூரு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் மற்றும் முதலைமைச்சர் சித்தராமையா வரவேற்றனர்.
பின்னர் AIISH வைர விழா நிகழ்வில் கலந்துகொண்டு தனது உரையை தொடங்கிய சித்தராமையா, மேடையில் அமர்ந்திருந்த முர்முவை பார்த்து, "உங்களுக்கு கன்னடம் தெரியமா?" என வினவினார்.
தனது உரையின் போது இதற்கு பதிலளித்த முர்மு, " முதல்வர் சித்தராமையாவுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கன்னடம் எனது தாய்மொழி இல்லை என்றாலும், நமது நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன்.
எல்லோரும் தங்கள் மொழியை உயிர்புடன் வைத்திருந்து கலாச்சாரம், பாரம்பரியத்தை காக்க வேண்டும் என விரும்புகிறேன். இதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும், கன்னடம் காற்றுக்கொள்ள நான் சிறுக சிறுக இனி முயற்சி செய்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்று கூறினார்.
கர்நாடகாவில் உள்ள அனைவரும் கண்டிப்பாக கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் சித்தராமையா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
- ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.
சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.
நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.
தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
- மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிப்பார்.
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார்.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிப்பார். அவ்வகையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார்.
அதன்விவரம்:-
1. உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
2. ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
3. சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
4. மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்
- போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோர் போப் பிரான்சிஸின் அரசு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இத்தாலியின் வாடிகன் நகருக்கு புறப்பட்டுச் சென்றனர்.
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21 அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாளை அவரின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாடிகன் வருகை தருகின்றனர்.
தற்போது போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் இந்தியா சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, கிரண் ரிஜிஜு, மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் மற்றும் கோவா துணை சபாநாயகர் ஜோசுவா பீட்டர் டி சௌசா ஆகியோர் 2நாள் பயணமாக இன்று வாடிகன் கிளம்பியுள்ளனர். நாளை போப் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் அஞ்சலி செலுத்துவார்கள்.
- ஆனால் ஆங்கிலேய அரசு 379 பேர் பலியாகினர் என தெரிவித்தது.
- உடல், மனம் மற்றும் செல்வதுடன் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
ஆங்கிலேயரின் 'ரவுலட்' சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1919 ஏப்ரல் 13ல் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் திடலில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த திடலில் உள்ளே, வெளியே செல்ல ஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது.
போராட்டத்தை கண்டு அஞ்சிய ஆங்கிலேய அரசு, ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அனுப்பியது. அப்படையினர், மனிதாபிமானமற்ற முறையில் 10 நிமிடம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். ஆனால் ஆங்கிலேய அரசு 379 பேர் பலியாகினர் என தெரிவித்தது.
இந்நிலையில் இன்று இந்த படுகொலையின் நினைவு தினத்தை ஒட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாலியன் வாலாபாக்கில் இந்தியத் தாய்க்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
அவர்களது தியாகம் நமது சுதந்திரப் போராட்டத்தை மேலும் வலிமையாக்கியது. நன்றியுள்ள இந்தியா எப்போதும் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கும். அந்த அழியாத தியாகிகளிடமிருந்து உத்வேகம் பெற்று, அனைத்து நாட்டு மக்களும் தங்கள் உடல், மனம் மற்றும் செல்வத்துடன் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், "ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்த தியாகிகளுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம். வருங்கால தலைமுறையினர் அவர்களின் அழியாத மனஉறுதியை எப்போதும் நினைவில் கொள்வார்கள். இது உண்மையில் நமது நாட்டின் வரலாற்றில் ஒரு இருண்ட அத்தியாயம். அவர்களின் தியாகம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார்.
- திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
- 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பதி :
ஜனாதிபதியாக பதவியேற்று திருப்பதி மாவட்டத்துக்கு முதல் முறையாக திரவுபதிமுர்மு நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 2 நாட்கள் வருகை தந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
திருப்பதிக்கு வரும் ஜனாதிபதி திரவுபதிமுர்முவுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் வெங்கட்ரமணாரெட்டி தலைமை தாங்கி பேசுகையில், ஜனாதிபதி திருப்பதி வருகிறார். அதற்காக ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஜனாதிபதி விசாகப்பட்டினத்தில் இருந்து இன்று புறப்பட்டு இரவு 8:40 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைகிறார். இரவு 9.25 மணிக்கு ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருமலையை அடைகிறார்.
திருமலையில் தங்கி ஓய்வெடுத்ததும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9.25 மணிக்கு வராஹ சுவாமி கோவில், வெங்கடாசலபதி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதியை அடைகிறார்.
திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டார்
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை கலெக்டர் பாலாஜி, போலீஸ் சூப்பிரண்டு பரமேஸ்வர்ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.
மதுரை:
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று பதில் அளித்துள்ள அனுப்பிய கடிதத்தை வெங்கடேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
"உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக" குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பதிலளித்துள்ளார்.
அனித்தாக்களின் கல்வி உரிமை;
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 14, 2023
குடியரசு தலைவரின் பதிலும்
முதல்வரின் பெயர் சூட்டலும்.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். 1/3 pic.twitter.com/l6qAc7cBbB
அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.
இவ்வாறு எம்.பி. வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
- மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
- இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார்.
- எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கூட்டம் முடிந்த பின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார். இதனை தொடர்ந்துஇன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.7.15 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வி 8.00 மணி வரை சுமார் 45 நிமிடங்கள் நடைபெறும். இந்திய வரலாற்றில் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3 வது முறை பிரதமராகும் பெருமையை மோடி பெறுகிறார். முன்னதாக 1952, 1957,1962 ஆகிய வருடங்களில் நேரு மூன்று முறை தொடர்ந்து பிரதமரானார்.

இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே, செஷல்ஸ் துணை அதிபர் அஹமத் அபிஃப், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உட்பட பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினிகாந்த் உட்பட இந்திய திரை பிரபலங்களும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிகிறது. மொத்தம் 8000 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்துள்ளது.
இன்றைய நிகழ்வில் பிரதமர் உடன் கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்க வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து 18-வது மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி இரண்டு நாட்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கிடையில் இன்று பதியேற்பு விழாவை முன்னிட்டு டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.






