என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Droupadi Murmu"

    • வடகிழக்கு மாநிலங்களில் சாலை மற்றும் ரயில் இணைப்பில் மத்திய அரசு சிறப்பு கவனம்.
    • இது வர்த்தகம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கவுகாத்தியில் உள்ள சங்கர்தேவ் கலாசேத்ரா அரங்கில் இருந்து காணொலி மூலம் மாநில மற்றும் மத்திய அரசுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிறைவடைந்த திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் கூறியுள்ளதாவது:  எந்தவொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் சிறந்த உள்கட்டமைப்புதான் அடிப்படை.இன்று தொடங்கப்பட்டுள்ள சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, பெட்ரோலியம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், அசாம் உட்பட வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் வணிகம், வேலை வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும், இதனால் பொருளாதாரம் வலுவடையும். 


    நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு, சாலை, ரயில் இணைப்பு மற்றும் தகவல் தொடர்பு இணைப்பு ஆகியவற்றில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது இப்பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிக்கும்.

    அசாம் மாநில வளர்ச்சி, முழு வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் அசாம் 13 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தியில் 15 சதவீதம் வடகிழக்கு பிராந்தியத்தில் இருந்து கிடைக்கிறது. 

    பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே நாகரீக சமுதாயத்தின் அடையாளம். அசாமில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சேவைகளை வலுப்படுத்த 3000 மாதிரி அங்கன்வாடி மையங்கள் தொடங்கப்பட்டது பாராட்டுக்குரிய முயற்சி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திரிபுராவில், தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல்.
    • கல்வித்துறையை வலுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,அகர்தலா நகரில் உள்ள நரசிங்கரில் திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநில நீதித்துறை அகாடமியையும் அவர் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ரவீந்திர சதபர்ஷிகி பவனில் இருந்து காணொலி காட்சி வழியாக அகர்தலாவில் கட்டப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியை திறந்து வைத்ததுடன், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த திட்டங்கள் திரிபுராவின் கல்வி, நீதித்துறை மற்றும் சட்டமன்றத்தை வலுப்படுத்துவது மட்டுமின்றி மாநிலத்தின் வளமான கலாச்சாரத்தை உயர்த்தும்.

    இன்று பொருளாதார வளர்ச்சியுடன், வழக்கறிஞர் பணியும் பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. திரிபுரா தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் சட்டக் கல்விக்கான முக்கிய மையமாக உருவெடுக்கும்.

    சர்வதேச அளவில் தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்திய இளைஞர்கள் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
    • கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை மனிதகுல சேவைக்கும் பயன்படுத்த வேண்டும்.

    சண்டிகர்:

    பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா சண்டிகரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: 

    இஸ்ரோ முன்னாள் தலைவர் சதீஷ் தவான், ஐஐடி டெல்லி இயக்குனர் ஆர்.என்.டோக்ரா, ஏவுகணை தொழில்நுட்ப நிபுணர் சதீஷ் குமார், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா ஆகியோர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் என்பது பெருமை அளிப்பதாகும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்கு அதிக உத்வேகம் அளிக்க தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு நல்ல கல்வி நிறுவனம் என்பது ஒவ்வொரு மாணவர் மீதும் கவனம் செலுத்தி, நல்ல உள்கட்டமைப்புடன், ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கமும் இதுதான்.

    வரம்புகள் இல்லாத வாய்ப்புகள் மற்றும் சாத்தியக் கூறுகள் நிறைந்த உலகில் நீங்கள் (மாணவர்கள்) அடியெடுத்து வைக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதைத் தேர்ந்தெடுத்தாலும் தாய்நாட்டிற்கான உங்கள் கடமைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம், நாளைய இந்தியாவை உருவாக்குபவர்கள் நீங்களே.

    இந்த சிறப்புமிக்க கல்வி நிறுவனத்தில் பெற்ற அறிவை நீங்கள் மனிதகுல சேவையிலும் பயன்படுத்துவீர்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். தேசத் தந்தை மகாத்மா காந்தியின் தத்துவங்களை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின், குறிப்பாக இளைஞர்களின் தார்மீகக் கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
    • சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்தி உருவப் படத்திற்கு அஞ்சலி.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். மேலும் கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுக மேம்பாட்டுப் பணியை, அவர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சிப் பணிகளில் குஜராத், முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்றார். வேளாண் வளர்ச்சிக்காக குஜராத் மாநிலத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நடைமுறைகள் தற்போது நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 


    சுகாதாரத்துறையில் குஜராத் மாநிலம் மிகப் பெரிய சாதனைப் படைத்துள்ளதாகவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அட்டை வழங்கிய முதல் மாநிலம் குஜராத் என்றும் அவர் குறிப்பிட்டார். 


    முன்னதாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்குள்ள ராட்டையில் அவர் நூல் நூற்று மகிழ்ந்தார்.

    • க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
    • தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை இந்தியா ஈர்த்துள்ளது

    பெங்களூருவில், இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த க்ரயோஜெனிக் எஞ்சின் உற்பத்தி வசதியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றி அவர், கூறியுள்ளதாவது: 


    இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனமும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும் (இஸ்ரோ) இணைந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்த உதவும் பல்வேறு கருவிகள் மற்றும் திட்டங்களை மேம்படுத்துவதில் இந்த இரண்டு நிறுவனங்களும் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

    பாதுகாப்பு தொடர்பாக கருவிகளை உற்பத்தி செய்யும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனம் நம் நாட்டின் விலை மதிப்பற்ற சொத்து. நாடு முழுமைக்கும் க்ரயோஜெனிக் மற்றும் செமி க்ரயோஜெனிக் எஞ்சின்கள் உற்பத்திக்கான அதிநவீன வசதியை அந்த நிறுவனம் கொண்டிருப்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாகும். 


    நாட்டின் பெருமைகளில் ஒன்றான இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் வேகமான வளர்ச்சி காரணமாக க்ரயோஜெனிக் உற்பத்தி திறன் கொண்ட உலகின் ஆறாவது நாடாக இந்தியா மாற்றியுள்ளது. இது தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி பெற்ற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் திகழ்கிறது.
    • இந்திய கலாச்சாரத்திற்கு மைசூரு தசரா விழா பெருமை சேர்க்கிறது.

    ஹூப்ளி:

    கர்நாடகா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மக்கள், பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை ஒருங்கிணைத்துள்ளதாக தெரிவித்தார். தெய்வீக திருவிழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமை உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழா என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர், ஹூப்ளியில் நடைபெற்ற பூர சன்மனா பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு 900 கிராம் எடை கொண்ட ஸ்ரீசித்தரோட சாமி சிலையை முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பரிசளித்தார். 


    விழாவில் பேசிய திரவுபதி முர்மு கூறியுள்ளதாவது:- நீங்கள் பாராட்டியது இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியுள்ளீர்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம் இது. அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும். 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    கணினி ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்ததுள்ளது. இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.

    • குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக கர்நாடகா பயணம்.
    • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவன நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, இன்று தொடங்கி 2 நாட்கள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறை.

    முதல் நிகழ்ச்சியாக மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை இன்று குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார். மேலும் ஹூபாலியில் பவுர சன்மனா விழாவில் கலந்து கொள்கிறார். தார்வாடில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

    செப்டம்பர் 27ந் தேதி, பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார். அதன் தென் மண்டல நிறுவனத்திற்கு காணொலி மூலம் அவர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழக தொடக்க விழாவில் அவர்கலந்து கொள்கிறார். 28ந் தேதி குடியரசுத் தலைவர் புது தில்லி திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் பயணம்.
    • ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டுள்ளனர். இரவு பொழுதிலும் நீண்ட வரிசையில் சுமார் 25 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருந்த மக்களுடன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் கைகுலுக்கி உரையாடினர். 


    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியாகவும், நட்பாகவும் இருந்தார், மிகவும் மென்மையாக இருந்தார் என்று மன்னர் சார்லசுடன் உரையாடிய ஜெரால்டின் பாட்ஸ் தெரிவித்தார். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. 


    இந்நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். ராணி இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனை ஜில் பிடன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • சிரியா அரபு குடியரசு தூதராக பாசாம் அல்கத்தீப் நியமனம்.
    • சவுதி அரேபியா தூதராக சாலிஹ் ஈத் அல் ஹூசைனி நியமனம்.

    இந்தியாவுக்கான சிரியா அரபு குடியரசு தூதராக டாக்டர் பாசாம் அல்கத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார். 


    இதேபோல் செக் குடியரசு தூதராக டாக்டர் எலிஸ்கா சிக்கோவா நியமனம் செய்யப்பட்டார்.   


    காங்கோ குடியரசின் தூதராக ரெயிமண்ட் செர்ஜி பாலேவும், நவ்ரு நாட்டின் துணைத் தூதராக மார்லன் இனம்வின் மோசஸ் நியமினம் செய்யப்பட்டார்.


    இந்தியாவுக்கான சவுதி அரேபியா றாட்டின் தூதராக சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி நியமிக்கப்பட்டார்.


    குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமன பத்திரங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முர்முவிடம் வழங்கினர். அவற்றை அவர் ஏற்றுக் கொண்டார்.

    • காசநோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
    • காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது.

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் அனைவரும் இதற்கு முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு உள்ளது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும்.நோய் தாக்கத்திற்கு முன்பாகவே அதில் இருந்து காப்பது சாத்தியமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்நோயிலிருந்து மக்களை காப்பதற்கும், இலவசமாக மருத்துவ வசதி அளிப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

    காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காச நோய் ஏற்படுகிறது. சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தம்மை கைது செய்து கொள்ளுமாறு மணிஷ் சிசோடியா வேண்டுகோள்.
    • சிபிஐ பதிவு செய்த எப்.ஐ.ஆரில் மணீஷ் சிசோடியா பெயர்.

    தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி அரசு, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநரின் பரிந்துரையின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிபிஐ, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் டெல்லி அரசின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரின் இல்லங்கள் உள்பட 31 இடங்களில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படையில் இந்த வழக்கில் 15 போ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மணீஷ் சிசோடியா பெயர் முதல் இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளனர். அப்போது தங்கள் கோரிக்கை தொடர்பான மனுவை அவர்கள் அளிக்க உள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தம்மீது பொய் வழக்கு போடுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை தர வேண்டாம் என்றும் வேண்டுமானால் தம்மை கைது செய்து கொள்ளுங்கள் என்றும் மத்திய அரசுக்கு டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.
    • நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளன.

    ஐஐடி டெல்லியின் வைர விழாக் கொண்டாட்ட நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐஐடிக்கள் உலகிற்கு நிருபித்துள்ளன. ஐஐடியின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐஐடிக்கள் பெரும் பங்காற்றியுள்ளன. 


    ஐஐடி டெல்லியிலும் மற்ற ஐஐடிக்களிலும் படித்தவர்களில் சிலர் இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டிஜிட்டல் புரட்சியில் முன்னணியில் உள்ளனர். ஐஐடிக்களின் தாக்கம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தாண்டியுள்ளது.

    கல்வி, தொழில், தொழில்முனைவு, சமூகம், செயல்பாடு, இதழியல், இலக்கியம் மற்றும் அரசியல் என வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் ஐஐடியில் படித்தவர்கள் முன்னணியில் உள்ளனர்.இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் நாட்டிற்கு பெருமை. அவற்றின் கதைதான் சுதந்திர இந்தியாவின் கதை.

    எதிர்காலத்திற்கு ஏற்றவாறு நமது கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும். வரும் ஆண்டுகளில், சுற்றுச்சூழல் சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளை உலகம் எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவின் இளம் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மனிதகுலம் ஒரு திருப்புமுனையை அடைய உதவுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×